சினிமா செய்திகள்
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு செல்வபுரம் பகுதியில் இறுதியுத்தத்தின் போது தாயினைனயும் பின்னர் தந்தையினையும் இழந்த இரண்டு சிறுமிகள் வசித்து வந்த வீட்டிலிருந்து கிராமஅலுவலர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் த

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் கிராம அலுவலர் பிரிவில் வசித்து வரும் தாய் தந்தையரை இழந்த இரண்டு சிறுமிகள் அவர்களது பேத்தியாருடன் வசித்து வந்த நிலையில் இரண்டு சிறுமிகளும் அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்து கிராமஅலுவலர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் தாயை இழந்த நிலையில் அவர்களது தந்தை மற்றும் பேத்தியாருடன் வசித்து வந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு அரசினால் அவர்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டது.

தந்தை கடந்த 2015ம் ஆண்டு இரண்டாவது தாரமாக திருமணம் ஒன்றை செய்து குறித்த வீட்டிலேயே வசித்து வந்த நிலையில் தந்தை நோய்வாய்ப்பட்டு கடந்த ஆண்டு இறுதியில் உயிரிழந்த நிலையில் இரண்டு சிறுமிகளும் சிறிய தாயினால் தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வந்ததாவும் பாதிக்கப்பட்ட சிறுமி மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளது தொடர்பில் ஏற்கனவே மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு நீதிமன்ற வழக்கொன்று நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் அன்மையில் குறித்த வீட்டிலிருந்து கிராம அலுவலரால் இரண்டு சிறுமிகளும் அவர்களது பேத்தியாரும் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பிரதேச செயலாளரிடம் பாதிக்கப்பட்ட சிறுமிகளால் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் தீர்வெதுவும் கிடைக்காத நிலையில் வட மாகாண காணி திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ததையடுத்து கடந்த வாரம் மாகான காணித்திணைக்களத்தின் கட்டளைக்கு அமைவாக பிரதேச செயலர் மற்றும் கிராம அலுவலர் காணி உத்தியோகத்தர் ஆகியோரால் செல்வபுரம் பொது நோக்கு மண்டபத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்ட போதும் வீட்டை குறித்த சிறுமிகளுக்கு வழங்க முடியாது என்றும் குறித்த வீட்டிலிருந்து வெளியேற தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிராம அலுவலர் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் சிலரும் இதில் உடந்தையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளடன் குறித்த வீட்டடில் வசிக்கும் சிறிய தாய்க்கு கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முகாவில் கிராம அலுவலர் பிரில் சுமார் ஐந்தரை லட்சம் ரூபாய் செலவில் அரச வீட்டுத் திட்டத்தை பெற்றுள்ளதுடன் இவ்வாறு இரண்டு வீடுகளையும் கையப்படுத்தும் நோக்கில் இரு சிறுமிகளையும் பிரதேச செயலக அதிகாரிகளின் துணையுடன் வெளியேற்றியுள்ளமை தொடர்பில் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 559
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads