சினிமா செய்திகள்
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

எங்களுக்கான ஒரு அடிப்படை உரிமைகளை கூட பெற்றுத்தர முடியாத ஒரு சிங்களத் தலைமைகளுடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு எப்போதும் தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்

இன்று (01-05-2022)பிற்பகல் கிளிநொச்சி பசுமைப் புங்கா வளாகததில் நடைபெற்ற தமிழ்தேசிய கூட்டு மேதின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்சிங்கள இளைஞர்களே யுவதிகளே உங்களுடைய பொருளாதாரம் பற்றி தான் போராடுகிறீர்கள்.

நாங்கள் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது நாங்கள் இன்று இந்த கூட்டத்தை நடத்துகின்ற இடம் நாங்கள் பேசுகின்ற இந்த இடம் ஒரு தமிழர்களின் அடையாளத்தை நிலை நிறுத்திய இடம் எங்களுக்கு முன்னால் சந்திரன் பூங்காவில் எங்களது இதயத்தைத் துளைக்கும் ஒரு துப்பாக்கி ரவை காணப்படுகின்றது இதுபோன்று நமது மண்ணில் இராணுவச் சின்னங்கள் அடக்குமுறைகள் எங்கள் மண்ணிலேய இப்போதும் கானப்படுகின்றன.

இராணுவ அடையாளங்கள் இவற்றுக்கு மத்தியில் தான் நாங்கள் வாழ்கின்றோம் தென் பகுதியில் இருக்கின்ற சிங்கள இளைஞர்கள் யுவதிகள் போராடுகிறீர்கள் உங்களுடைய போராட்டத்தில் நாங்கள் எவ்வாறு பங்கு கொள்ளலாம் என்று சிந்திக்கின்றோம்.

எங்களது இளைஞர்கள் யுவதிகள் சிந்திக்கின்றார்கள் ஒரு சிங்கக் கொடிக்கு கீழ் நாங்கள் நிற்கக்கடிய தகுதியைத் தராதரத்தைஇந்த நாடு இவ்வளவு காலமும் எங்களுக்கு தந்து இருக்கின்றதா? என்பதை நாங்கள் திரும்பி பார்க்க வேண்டும் ஒரு சிங்கக் கொடியை இறக்குவதற்காக அந்த கம்பத்தில் ஏறிய நடராஜன் இலங்கை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் மலையகத்தில் ஒரு லக்ஷ்மன் கொல்லப்பட்டார் இந்த கொடியை எதிர்த்து நாங்கள் எவ்வளவு தியாகங்களைச் செய்திருக்கின்றோம்.

அதே சிங்க கொடியோடு தான் இது ஒரு பௌத்த சிங்கள நாடு என்று பேரினவாத கொள்கையோடு போராடிக் கொண்டிருக்கின்ற சிங்கள தம்பிமார்களை சிங்களத் தலைவர்களே உங்களோடு நாங்கள் வந்து கை கோர்ப்பததென்றால் வடக்கு கிழக்கை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.

உங்களில் யாரோடு நாங்கள் பேசுவது இதில் நீங்கள் யார் எங்களுடன்  பேசக்கூடிய பேச்சாளராக இருக்கிறீர்கள் வடக்கும் கிழக்கும் தமிழர்களுடைய பூர்வீக தாயகம் என்பதை உங்களால் அறிவிக்க முடியுமா? அல்லது இந்த மண்ணில் இரண்டு தேசிய இனங்கள் உள்ளது.

அதாவது ஒன்று  தமிழ் தேசிய இனம் மற்றையது  சிங்கள தேசிய இனம்  தமிழ் தேசிய இனம் தனக்கே உரித்தான மொழியுரிமை களோடும்  நில அடையாளங்களோடும் இந்த மண்ணிலேயே வாழுகின்ற தகுதியை கொண்டவர்கள் அவர்கள் இந்த மண்ணினுடைய மூத்த குடிகள் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?  அல்லது போராடுகின்ற உங்களால் சொல்ல முடியுமா? நாங்கள் பொருளாதாரத் தடைகளை யும்  சவால்களையும்  எதிர் கொண்டு வாழ்ந்தவர்கள் இன்று எரிபொருள் விலையேற்றம் எரிவாயு அத்தியாவசிய பொருட்கள் இவற்றினுடைய பிரச்சினைக்கு தான் உங்களது   போராட்டம் போராட்டத்திற்கான தீர்வு கிடைத்துவிடும்.

 ஆனால் எங்களுக்கு எங்களுடைய வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் தமிழர் சுயாட்சி உரிமை இறைமை என்ற அங்கீகாரத்தை  வழங்குவதற்கு சிங்கள தேசம் தயாராக இருக்கின்றதா? அரசியல் கைதிகளின்  விடுதலை பற்றிப் பேசுகின்றீர்களா? அல்லது காணாமல் போனவர்கள் பற்றிய அவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க தயாரா? எந்த ஒரு அடிப்படை உரிமைகளை கூட  பெற்றுத்தர முடியாத ஒரு சிங்களத் தலைமைகளுடன்  ஒன்றிணைந்து போராடுவதற்கு எப்போதும்  நாங்கள்  தயாராக இல்லை.

 நாங்கள் இந்தப் பொருளாதாரத் தடைகளுக்கு எல்லாம் முகம் கொடுத்துவாழ்ந்தவர்கள் இந்த நாட்டில் யாரும் இறக்கவில்லை யாரும் காணாமல் ஆக்கப்படவில்லை யாரும் அரசியல் கைதிகளாக இருக்கவில்லை.  ஆனால் இன்று நீங்கள் உங்களுடைய பொருளாதாரம் பற்றி தான் போராடுகிறீர்கள்  நாங்கள் உங்கள் பொருளாதாரத்தை கட்டி தருகின்றோம் இரண்டு வருடங்கள் ஒரு வடக்கு-கிழக்கு ஒரு ஆட்சியை தாருங்கள் நாங்கள் பொருளாதாரத்தில் உங்களுக்கும் உதவி செய்கின்றோம் அதற்கு தயாராக இருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • 475
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads