சினிமா செய்திகள்
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
சிவாஜி கணேசனை பாராட்டிய சாவித்திரி
'பாசமலர்’ வெளியான தினத்தில் மாறுவேடத்தில் திரையரங்குக்கு சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்பிய சாவித்திரி, “படம் பார்த்து முடித்து பெண்கள் வெளியே போன
ரஜினிகாந்தின் கேளம்பாக்கம் பங்களா
ரஜினிகாந்த் எந்த ஒரு பின்புலனும் இல்லாமல் சினிமாவில் உயர்ந்தவர். ஆனால் அவருக்கு சொத்து எக்கசக்கமாக அதிகரித்தது. அப்படி ஒன்று தான் கேளம்பாக்கம் பங்களா.
நடிகர் சிவாஜி நடிப்பின் மேல் வைத்திருந்த தொழில்பக்தி
1972ல் ராஜா படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது பாலாஜியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று தெரியாமலே இருந்தது. 1972, மே 4ல் ராஜா ப
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

எங்களுக்கான ஒரு அடிப்படை உரிமைகளை கூட பெற்றுத்தர முடியாத ஒரு சிங்களத் தலைமைகளுடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு எப்போதும் தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்

இன்று (01-05-2022)பிற்பகல் கிளிநொச்சி பசுமைப் புங்கா வளாகததில் நடைபெற்ற தமிழ்தேசிய கூட்டு மேதின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்சிங்கள இளைஞர்களே யுவதிகளே உங்களுடைய பொருளாதாரம் பற்றி தான் போராடுகிறீர்கள்.

நாங்கள் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது நாங்கள் இன்று இந்த கூட்டத்தை நடத்துகின்ற இடம் நாங்கள் பேசுகின்ற இந்த இடம் ஒரு தமிழர்களின் அடையாளத்தை நிலை நிறுத்திய இடம் எங்களுக்கு முன்னால் சந்திரன் பூங்காவில் எங்களது இதயத்தைத் துளைக்கும் ஒரு துப்பாக்கி ரவை காணப்படுகின்றது இதுபோன்று நமது மண்ணில் இராணுவச் சின்னங்கள் அடக்குமுறைகள் எங்கள் மண்ணிலேய இப்போதும் கானப்படுகின்றன.

இராணுவ அடையாளங்கள் இவற்றுக்கு மத்தியில் தான் நாங்கள் வாழ்கின்றோம் தென் பகுதியில் இருக்கின்ற சிங்கள இளைஞர்கள் யுவதிகள் போராடுகிறீர்கள் உங்களுடைய போராட்டத்தில் நாங்கள் எவ்வாறு பங்கு கொள்ளலாம் என்று சிந்திக்கின்றோம்.

எங்களது இளைஞர்கள் யுவதிகள் சிந்திக்கின்றார்கள் ஒரு சிங்கக் கொடிக்கு கீழ் நாங்கள் நிற்கக்கடிய தகுதியைத் தராதரத்தைஇந்த நாடு இவ்வளவு காலமும் எங்களுக்கு தந்து இருக்கின்றதா? என்பதை நாங்கள் திரும்பி பார்க்க வேண்டும் ஒரு சிங்கக் கொடியை இறக்குவதற்காக அந்த கம்பத்தில் ஏறிய நடராஜன் இலங்கை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் மலையகத்தில் ஒரு லக்ஷ்மன் கொல்லப்பட்டார் இந்த கொடியை எதிர்த்து நாங்கள் எவ்வளவு தியாகங்களைச் செய்திருக்கின்றோம்.

அதே சிங்க கொடியோடு தான் இது ஒரு பௌத்த சிங்கள நாடு என்று பேரினவாத கொள்கையோடு போராடிக் கொண்டிருக்கின்ற சிங்கள தம்பிமார்களை சிங்களத் தலைவர்களே உங்களோடு நாங்கள் வந்து கை கோர்ப்பததென்றால் வடக்கு கிழக்கை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.

உங்களில் யாரோடு நாங்கள் பேசுவது இதில் நீங்கள் யார் எங்களுடன்  பேசக்கூடிய பேச்சாளராக இருக்கிறீர்கள் வடக்கும் கிழக்கும் தமிழர்களுடைய பூர்வீக தாயகம் என்பதை உங்களால் அறிவிக்க முடியுமா? அல்லது இந்த மண்ணில் இரண்டு தேசிய இனங்கள் உள்ளது.

அதாவது ஒன்று  தமிழ் தேசிய இனம் மற்றையது  சிங்கள தேசிய இனம்  தமிழ் தேசிய இனம் தனக்கே உரித்தான மொழியுரிமை களோடும்  நில அடையாளங்களோடும் இந்த மண்ணிலேயே வாழுகின்ற தகுதியை கொண்டவர்கள் அவர்கள் இந்த மண்ணினுடைய மூத்த குடிகள் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?  அல்லது போராடுகின்ற உங்களால் சொல்ல முடியுமா? நாங்கள் பொருளாதாரத் தடைகளை யும்  சவால்களையும்  எதிர் கொண்டு வாழ்ந்தவர்கள் இன்று எரிபொருள் விலையேற்றம் எரிவாயு அத்தியாவசிய பொருட்கள் இவற்றினுடைய பிரச்சினைக்கு தான் உங்களது   போராட்டம் போராட்டத்திற்கான தீர்வு கிடைத்துவிடும்.

 ஆனால் எங்களுக்கு எங்களுடைய வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் தமிழர் சுயாட்சி உரிமை இறைமை என்ற அங்கீகாரத்தை  வழங்குவதற்கு சிங்கள தேசம் தயாராக இருக்கின்றதா? அரசியல் கைதிகளின்  விடுதலை பற்றிப் பேசுகின்றீர்களா? அல்லது காணாமல் போனவர்கள் பற்றிய அவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க தயாரா? எந்த ஒரு அடிப்படை உரிமைகளை கூட  பெற்றுத்தர முடியாத ஒரு சிங்களத் தலைமைகளுடன்  ஒன்றிணைந்து போராடுவதற்கு எப்போதும்  நாங்கள்  தயாராக இல்லை.

 நாங்கள் இந்தப் பொருளாதாரத் தடைகளுக்கு எல்லாம் முகம் கொடுத்துவாழ்ந்தவர்கள் இந்த நாட்டில் யாரும் இறக்கவில்லை யாரும் காணாமல் ஆக்கப்படவில்லை யாரும் அரசியல் கைதிகளாக இருக்கவில்லை.  ஆனால் இன்று நீங்கள் உங்களுடைய பொருளாதாரம் பற்றி தான் போராடுகிறீர்கள்  நாங்கள் உங்கள் பொருளாதாரத்தை கட்டி தருகின்றோம் இரண்டு வருடங்கள் ஒரு வடக்கு-கிழக்கு ஒரு ஆட்சியை தாருங்கள் நாங்கள் பொருளாதாரத்தில் உங்களுக்கும் உதவி செய்கின்றோம் அதற்கு தயாராக இருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • 381
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads