சினிமா செய்திகள்
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இடம்பெற்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த குழப்பகரமான சூழலிற்கு பின்னர் நேற்று குறித்த கூட்டம் இடம்பெற்றது. ஆயினும் ஊடகங்களிற்கு குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. குறித்த கூட்டத்தில் சிரேஷ்ட தலைவராக சட்டத்தரணி ப. சிறிதரனும், செயலாளர் நாயகமாக மீண்டும் வீ ஆனந்தசங்கரியும் ஏகமனதாக தெரிவானார்கள்.நிர்வாகச் செயலாளராக க. பூலோகரட்ணமும், பொருளாளராக தி.சஞ்சயனும், இணைப்பொருளாளராக வேதாரணியனும் தெரிவாகினர். இளைஞர் பேரவை தலைவராக க.சபேசனும், மகளீர் பேரவை தலைவராக சூரியபிரதீபா வாசவனும், சட்டம் மற்றும் ஒழுங்கு தலைவராக ஐயம்பிளை யசோதரனும், தொழிற்சங்கத் தலைவராக சி.தயாபரனும் தெரிவாகியுள்ளனர்.கூட்டத்தின் நிறைவில் ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிதத் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த செயலாளர்நாயகம் வீ. ஆனந்தசங்கரி குறிப்பிடுகையில்,நீண்ட காலத்தின் பின்னர் மீண்டும் உதய சூரியன் உதிக்கவுள்ளது. சிறந்த கட்சி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதன் ஊடாக எதிர்வரும் காலங்களில் தமிழர் விடுதலை கூட்டணி மீண்டும் பிரகாசிக்க உள்ளதுஎன தெரிவித்தார்.கருத்து தெரிவித்த கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான சிறிதரன் தெரிவிக்கையில்,தமிழர் விடுதலைக்கூட்டணிக்குள் கடந்த நாட்களாக இருந்த குழப்பகரமான நிலை மாற்றப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கூட்டத்தில் ஏகமனாதாக புதியவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணி 1979ம் ஆண்டுகளில் கொண்ட கொள்கையில் பயணிக்கம். தனி நாடல்ல. தமிழர்களிற்கான தனி அரசை பெற்று கொடுப்பதில் உறுதியுடன் செயற்படும் என அவர் தெரிவித்தார்.ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த மகளீர் பேரவை தலைவி கருத்து தெரிவிக்கையில்,தமழர் விடுதலைக் கூட்டணியில் நிர்வாக செயற்பாடுகளிற் பங்கெடுத்துள்ள நாம் எதிர்வரும் மே 18ம் திகதி தமிழர் விடுதலை கூட்டணி முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய பின்னர் மக்களிற்கான அரசியல் பணியை முன்னெடுத்த செல்லவுள்ளதாக அவர் தெரிவித்தார்

  • 571
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads