சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கிளிநொச்சி மாவட்டத்தின் கனகபுரம் தொடக்கம் கணேசபுரம் வரையிலான நகர்ப்பகுதிகளில் மழைகாரணமாக ஏற்படுகின்ற வெள்ள பாதிப்புகளை முகாமை செய்வதற்கான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் நகர்ப்பகுதிகளில் வெள்ள பாதிப்பு நிலைமைகள் அவற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டன.

வருடம்தோறும் மழை வீழ்ச்சியின் காரணமாக கிராமங்களில் பொதுமக்கள் எதிர்கொள்கின்ற வெள்ள பாதிப்பிற்கான தீர்வுகள் மற்றும் பாதிப்புக்கு உள்ளான தனிநபர்களது முறைப்பாடுகளுக்கு அமைய தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அந்த வகையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிலைமைகளை ஆராயும் வகையில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்,நீர்ப்பாசன பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டகிளிநொச்சி மேற்கு பகுதியில் கனகபுரம் முதல் கணேசபுரம் வரையிலான பகுதிகள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகின்ற நிலமைகள் அவதானிக்கப்பட்டன.

வெள்ளம் வழிந்தோடக்கூடியவகையில் செயற்பாடுகளை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் போதுதான் வெள்ள நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவே எல்லோரும் இணங்க கூடியதான பொதுவான முடிவு ஒன்றினை பெற்றுக்கொள்வது பொருத்தமானது என தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தனிப்பட்ட நபர்கள் பாதிக்காத வகையிலும் பொதுவான முறையில் கால்வாய்கள்,வடிகால்களை அமைப்பதன் ஊடாக வெள்ளம் வழிந்தோடும் கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட செயலக அதிகாரிகள்,பிரதேச சபை தவிசாளர்,கரைச்சி பிரதேச செயலாளர்,உதவி திட்ட பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர்,நில அளவை அத்தியட்சகர்,நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்,கிராம அலுவலர்கள்,கிராமங்களின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  • 378
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads