சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கிளிநொச்சி மாவட்டத்தின் கனகபுரம் தொடக்கம் கணேசபுரம் வரையிலான நகர்ப்பகுதிகளில் மழைகாரணமாக ஏற்படுகின்ற வெள்ள பாதிப்புகளை முகாமை செய்வதற்கான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் நகர்ப்பகுதிகளில் வெள்ள பாதிப்பு நிலைமைகள் அவற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டன.

வருடம்தோறும் மழை வீழ்ச்சியின் காரணமாக கிராமங்களில் பொதுமக்கள் எதிர்கொள்கின்ற வெள்ள பாதிப்பிற்கான தீர்வுகள் மற்றும் பாதிப்புக்கு உள்ளான தனிநபர்களது முறைப்பாடுகளுக்கு அமைய தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அந்த வகையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிலைமைகளை ஆராயும் வகையில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்,நீர்ப்பாசன பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டகிளிநொச்சி மேற்கு பகுதியில் கனகபுரம் முதல் கணேசபுரம் வரையிலான பகுதிகள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகின்ற நிலமைகள் அவதானிக்கப்பட்டன.

வெள்ளம் வழிந்தோடக்கூடியவகையில் செயற்பாடுகளை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் போதுதான் வெள்ள நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவே எல்லோரும் இணங்க கூடியதான பொதுவான முடிவு ஒன்றினை பெற்றுக்கொள்வது பொருத்தமானது என தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தனிப்பட்ட நபர்கள் பாதிக்காத வகையிலும் பொதுவான முறையில் கால்வாய்கள்,வடிகால்களை அமைப்பதன் ஊடாக வெள்ளம் வழிந்தோடும் கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட செயலக அதிகாரிகள்,பிரதேச சபை தவிசாளர்,கரைச்சி பிரதேச செயலாளர்,உதவி திட்ட பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர்,நில அளவை அத்தியட்சகர்,நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்,கிராம அலுவலர்கள்,கிராமங்களின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  • 404
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads