Ads
மோட்டார் சைக்கிளில் மறைத்து எடுத்து சென்ற 40 லீற்றர் கசிப்பினை பொலிசார் மீட்டுள்ளதுடன் இருவரையும் கைது செய்துள்ளனர்
இரவு சுற்றுக்காவல் ஈடுபட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நெத்தலி ஆற்றுப் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேக நபர்கள் மறைத்து எடுத்து சென்ற 40 லீற்றர் கசிப்பினை பொலிசார் மீட்டுள்ளதுடன் இருவரையும் கைது செய்துள்ளனர்.புதுக்குடியிருப்பு நோக்கி கொண்டு சென்ற சமயம் இரவு காவல் கடமையிலிடுபட்ட போலீசாரின் வீதி சோதனையில் இவர்களிடம் இருந்து 40 லீட்டர் கசிப்பு மற்றும் எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் போலீசார் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம்பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.
Attachments
Info
Ads
Latest News
Ads