சினிமா செய்திகள்
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
இணையத்தில் லீக் ஆன GOAT First Single பாடல்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) படம் உருவாகி வருகிறது.
நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருபவர் சாயாஜி ஷிண்டே. தமிழில் பாரதியார் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான ‘பாரதி’ படத்தில் நடித்தவர். மகார
மனிஷா கொய்ராலா பற்றி பலரும் அறிந்திடாத தகவல்
உச்சத்தில் இருந்து ஜீரோவான நேபாள ராணி மனிஷா கொய்ராலா.. மது தான் காரணமா?நடிகை மனிஷா கொய்ராலா நேபாள நாட்டின் ராஜகுமாரியாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில்
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தர
" உங்க வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில எழுதணும்” - பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தரத்திடம் ஒரு நிருபர் கேட்டாராம். பட்டுக்கோட்டையார் அந்த நிர
முன்னழகு எடுப்பாக தெரிய புகைப்படம் வெளியிட்டார் யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் எந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் அனைவரும் முன்னழகை முன்பு பார்க
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கிளிநொச்சி முட்கொம்பன் பாடசாலை மைதானத்தில் இருந்த பாலை மரம் வெட்டப்பட்டமை தொடர்பில் விசாரணை கல்வி அதிகாரி ஒருவர் யாழ்ப்பாணத்தில் அமைத்து வரும் வீட்டுத் தேவைக்காகவே இது வெட்டப்பட்டதாகவும் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முட்கொம்பன் பாடசாலை மைதானத்தில் இருந்த  பெறுமதிவாய்ந்த பாலை  மரம் வெட்டப்பட்டமை தொடர்பில்  பாடசாலை அதிபர் உள்ளிட்ட தரப்பினரிடம் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

                                                       

கிளிநொச்சி  கல்வி வலயத்துக்கு உட்பட்ட முட்கொம்பன் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இருந்த பெறுமதி  வாய்ந்த பாலைமரம் கடந்த வாரம் பிற்பகல் வெட்டப்பட்டு அதிபர் உள்ளிட்ட சிலரால்   எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பிரதேச மக்களின் எதிர்ப்பை அடுத்து வெட்டப்பட்ட மரம் கைவிடப்பட்டதுடன் அதனை  காற்றினால் முடிந்து விழுந்ததாக தெரிவித்து அதனை  அகற்றுவதற்கு மேலதிக அரசாங்க அதிபரிடம் அனுமதி கோரிய நிலையில் மேலதிக அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் ஊடாகவே இதற்கான அனுமதிகளை  பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டதையடுத்து பூநகரி பிரதேச செயலாளரிடம்  விசமிகளால் வெட்டப்பட்ட மரத்தை அகற்றுவதற்கென  அனுமதி கோரப்பட்டு குறித்த பாலை மரம் மரக்  கூட்டுத்தாபனத்தினால் எடுத்துச் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேற்படி பெறுமதி வாய்ந்த பாலை மரமானது எந்த அனுமதிகளுமில்லாது எந்தத் தேவைக்காக வெட்டப்பட்டது என்பதை மூடி மறைக்கின்ற செயற்பாடுகளில் பாடசாலை அதிபர் உள்ளிட்ட கல்வி உயர் அதிகாரிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி பாலை மரம் வெட்டப்பட்டமை தொடர்பில் பிரதேச மக்களால் மாகாண கல்விப் திணைக்களத்துக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதையடுத்து இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த மரமானது பாடசாலை வளாகத்திற்குள் இல்லை என்றும் பாடசாலை வளாகத்திற்கு வெளியே குறித்த மரம் இருந்ததாகவும் இது வெட்டப்பட்டது தவறான விடயம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இது பற்றி பூநகரி பிரதேச செயலாளர் அவர்களை தொடர்பு கொண்டு இந்த விடயம் பற்றி கேட்டபோது குறித்த மேற்படி வெட்டப்பட்ட பாதை மரமானது பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு சமுகத்தில் விழிப்புனர்வுகளை ஏற்படுத்த வேண்டிய கல்விச் சமூகம் இயற்கை வளங்களை அழிப்பதில் முனைப்பு காட்டி வருவதாகவும் மேற்படி வலயத்தைச் சேர்ந்த உயர்நிலை கல்வி அதிகாரி ஒருவர் யாழ்ப்பாணத்தில் அமைத்து வரும் வீட்டுத் தேவைக்காகவே இது வெட்டப்பட்டதாகவும் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  • 511
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads