Ads
கிளிநொச்சி முரசுமோட்டை பழைய கமத்திலிருந்து கானாமல் போன குடும்பஸ்தர் தொடர்பில் இதுவரை எந்த விமான தகவல்களும் கிடைக்காத நிலையில் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முரசுமோட்டை பழைய கமம் பகுதியில் அவரது குடும்பத்துடன் வசித்து வந்த முருகர் கனகசிங்கம்( வயது- 75) என்பவர் வீட்டிலிருந்து 04ம் திகதி கானாமல் போன நிலையில்; அவரது மனைவியால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடந்த 08ம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டதுடன் குறித்த நபரை அவரது உறவினர்கள் மற்றும் பொலிசார் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றபோதும் இவர்பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்பற்றிய தகவல் அறிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 0771128127 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு குடும்பத்தினர் கோரியுள்ளனர்.
Attachments
Info
Ads
Latest News
Ads