
சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை மோதி போலீசாரின் உதவியுடன் தப்பிச்செல்ல இடம் அளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி குறித்த இடத்திலிருந்து டிப்பர் வாகனம் பொலிசாரின் உதவியுடன் தப்பிச் சென்றுள்ளதுகிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு 35 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுஇந்த விபத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த டிப்பர் வாகனம் கிளிநொச்சி போலீசாரின் உதவியுடன் NP LN 4676 இலக்கமுடைய குறித்த டிப்பர் வாகனம் தப்பிச்செல்ல இடம் அளிக்கப்பட்டுள்ளது குறித்த சம்பவ இடத்தில் கிளிநொச்சி பொலிசார் கடமையில் இருந்த போதும் குறித்த டிப்பர் வாகனம் கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.