Category:
Created:
Updated:
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 269பேர் பாதிக்கப்பட்டதோடு 33பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 33ஆயிரத்து 785பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 676பேர் உயிரிழந்துள்ளனர். 35ஆயிரத்து 009பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 586பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை எட்டு இலட்சத்து 76ஆயிரத்து 100பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.