சினிமா செய்திகள்
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
Ads
 ·   ·  8178 news
  •  ·  5 friends
  • I

    9 followers

சரத்குமார் மீது அதிக கோபத்தில் இருக்கும் கமல்ஹாசன்

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், அன்றைய தினமே திமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய ஜனநாயகக் கட்சியுடன் கைகோர்த்தார். டிடிவி தினகரன், கமல்ஹாசன் தலைமையில் 3வது அணியும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், சரத்குமார் புதியதாக 3வது அணி உருவாகும் என அறிவித்தார். இந்தக் கூட்டணிக்கு தேமுதிக, கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு நேரடியாக அழைப்பும் விடுத்தார். கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசிய சரத்குமார், நல்ல கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்று கூறினார்.

அதோடு, சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர்களையும் அவர் அறிவித்தார். அதன்படி, வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். மேலும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் நமது கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் என்றும், சமத்துவ மக்கள் கட்சி தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என சரத்குமார் அறிவித்தார். மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் முதல்கட்ட பேச்சுவார்ததை முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் 3வது அணி கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இணைந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால், சரத்குமாரின் கூட்டணி முடிவை நிராகரிப்பதை போல, கமல்ஹாசன் பதிலளித்தது சமத்துவ மக்கள் கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

“கை குலுக்கிச் சென்றுவிட்டால் கூட்டணி அமைந்து விட்டதாக அர்த்தம் இல்லை,” எனக் கமல்ஹாசன் கூறியது சரத்குமாரை கூட்டணியில் சேர்க்க முடியாது அல்லது இன்னும் பல்வேறு நிபந்தனைகள் இருக்கிறது, அதன்பிறகுதான் கூட்டணியை இறுதி செய்ய முடியும் என பல்வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகிறது.

உண்மையில், மற்றுமொரு காரணம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக, கூட்டணி அமைத்து போட்டியிடும் போது, சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே, வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். ஆனால், அதனை கடைப்பிடிக்காமல் சரத்குமாரின் செயல் இருப்பதாக கமல்ஹாசன் உணர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

  • 860
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads