சினிமா செய்திகள்
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

யாழில், வயோதிபப்பெண் ஒருவருக்கு ஒரே நாளில் இரு கைகளிலும் கொரோனா தடுப்பூசி

சென்.ஜோன்ஸ் கல்லூரியில் அமைக்கப்பட்ட தடுப்பூசி மையத்தில் எனக்கு இரண்டு கைகளிலும் ஒரே நாளில் தடுப்பூசி போட்டார்கள் என தடுப்பூசியைப் பெற்ற வயோதிபப் பெண் தெரிவித்தார்.

சனிக்கிழமை அவரது வீட்டில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே தனக்கு இரண்டு தடுப்பூசிகள்மாறி-மாறி இரு கைகளிலும் போடப்பட்டதாக அவர் கூறினார்.

தடுப்பூசி மையத்தில் எனக்கு ஒரு கையில் தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில் எனக்கு ஊசி போட்டவர் அதன் பின்னர் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். நான் போகலாமா ? என அவரிடம் இரண்டு தடவைகளுக்கு மேல் கேட்டேன். அவர் பதில் சொல்லாமல் தொலைபேசியில் பேசிக்கொண்டே சென்றார்.

நான் அவ்விடத்திலேயே இருக்க அங்கு வந்த இன்னொரு உத்தியோகத்தர் அம்மா கையை காட்டுங்கள் என்று கூறியபடி இன்னுமோர் தடுப்பூசியை மறுகையில் போட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.

ஊசி போட்ட சிறு நேரத்தில் எனக்கு தலை சுற்றுவது போல் உணர்வு ஏற்பட்டது . அங்கிருந்த வைத்தியர்களிடம் இதனைச் சொன்னேன். சற்று அமர்ந்து ஓய்வெடுத்துவிட்டுச் செல்லுமாறு அவர்கள் கூறினார்கள்.

எனது மகளுடன் வீடு செல்லும்போது எனக்கு இரண்டு கைகளிலும் ஊசி போடப்பட்டது எனக் கூறினேன். அதிர்ச்சயடைந்த மகள், அவ்வாறு இரண்டு ஊசி ஒரே நேரத்தில் போடக் கூடாது எனக்கூறி நடந்த சம்பவத்தை எனது மகனிடம் தெரிவித்தார்.

தடுப்பூசி ஒன்றா? இரண்டா? ஏற்றுவது என்ற விடயம் எனக்குத் தெரியாது. மகனை அழைத்துக்கொண்டு தடுப்பூசி வழங்கப்பட்ட விதம் தொடர்பில் அறிவதற்காக சென்றேன்.முதலில் உள்ளே விட மறுத்து விட்டார்கள். பின்னர் வைத்தியரை சந்திக்க அனுமதித்தார்கள். நடந்த சம்பவத்தை வைத்தியரிடம் எனது மகன் விவரமாகச் சொன்னார்.

எங்கள் முன்னிலையில் அங்கு கடமையிலிருந்த வைத்தியர் கையடக்க தொலைபேசிகளை கடமையின் போது பாவிக்காதீர்கள் என அறிவுரை வழங்கினார்.ஏதேனும் வித்தியாசமான உணர்வுகள் ஏற்பட்டால் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு அவர்கள் அறிவுறுத்தி என்னை அனுப்பிவைத்தனர்.

மறுநாள் எனது வீடு தேடி வைத்தியர் ஒருவர் வந்து எனது உடல் நலம் குறித்து விசாரித்துச் சென்றார் எனவும் அப்பெண் கூறினார்.இதேவேளை, இரண்டு தடுப்பூசி போட்டப்பட்ட சம்பவம் குறித்து வெளியான செய்தியை வட மாகாண சுகாதார சேவைகள் படைப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மறுத்திருந்தார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ் பண்ணையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனை தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 870
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads