சினிமா செய்திகள்
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
ஆபாச நடிகை என்று கூறிய விவகாரம் - கங்கனா ரணாவத் விளக்கம்
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
Ads
 ·   ·  662 news
  •  ·  15 friends
  • S

    23 followers

கல்விசாரா ஊழியர்களின் சேவைக்காலத்தினை அடிப்படையாகக்கொண்டு பதவி உயர்வு வழங்குங்கள்

கல்விசாரா ஊழியர்களின் சேவைக்காலத்தினை அடிப்படையாகக்கொண்டு பதவி உயர்வு வழங்குங்கள் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் இணைத்தலைவர் ஆறுமுகம் புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் அதி உயர் பீடத்தில் உள்ள உறுப்பினர்கள் நேற்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர்.இதன்போது, வட கிழக்கு மாகாணங்களில் அரச திணைக்களங்களில் ஆளணி நீண்ட காலமாக நிரப்பப்படாது இருப்பது தொடர்பில் அவரிடம் எடுத்து கூறப்பட்டுள்ளது. அதனை வலியுறுத்தி கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்திருந்தோம்.அதனடிப்படையில் வட கிழக்கில் அரச திணைக்களங்களிலே வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் நீண்டகாலமாக இருந்துகொண்டிருக்கின்றது. அங்கு காணப்படும் வெற்றிடங்களிற்கு எவ்வளவு கூடிய விரைவில் நிரப்புமாறு கூறியிருந்தோம்.அந்த வகையில் வடக்கு மகாணத்தில் கல்விசாரா ஊழியர்கள் வருடமாக 2013ம் ஆண்டு நியமனம் வழங்கியிருந்தார்கள். கல்வி திணைக்களத்தினால் 8 வருடங்களாக அவர்களிற்கான பதவி உறுதிப்படுத்தப்படவில்லை.8ம் ஆண்டு கல்வி தகைமையுடன் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் சாதாரண தர சான்றிதழ்கள் கோரியுள்ளமையால் சிலருக்கு பணிநிலை உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை. அதனையும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.உள்ளுராட்சி மன்றங்களிலும் வெற்றிடங்கள் காணப்படுவதுடன், பதவி நிலைகள் உயர்த்தப்படாமலும் காணப்படுகின்றது. இந்த நிலையில் வீதி தொழிலாளர்கள், சுகாதார தொழிலாளர்களை மேற்பார்வை செய்வதற்கான பணிநிலை வெற்றிடத்திற்கு வெளியிலிருந்து ஆட்சேர்ப்புக்கு கோரியுள்ளனர்.நீண்ட காலமாக பணிபுரியும் அவர்களிற்கே குறித்த பணிநிலை வழங்கப்பட வேண்டும். அதற்கு கல்வி தராதரம் பார்க்காது அவர்களிற்கு பதவி உயர்வினை வழங்க வேண்டும். பணியில் உள்ளவர்களிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.அரச திணைக்களங்களிற்கான இடமாற்றங்களை மேற்கொள்வதற்கான கட்டமைப்பு உள்ளது. இடமாற்ற சபையில் 2019ம் ஆண்டு வரை அந்த இடமாற்ற சபைக்கு நாங்கள் போயிருக்கின்றோம். ஆனால் மீண்டும் சில வருடங்களாக எங்களை அங்கு கூப்பிடப்படவில்லை.தொழிற்சங்கங்களை வைத்துக்கொண்டுதான் இடமாற்ற சபை தீர்மானிக்க வேண்டும். அந்த விடயத்தினையும் அமைச்சரிடம் நாங்கள் வலியுறுத்தி கூறியிருக்கின்றோம்.குறித்த விடயங்களை நடைமுறைப்படுத்தல் வகையில் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம செயலாளருடன் எமது தொழிற்சங்கள் பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கும், பேச்சுவார்தை நடார்த்தவும் அமைச்சர் இணங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.உள்ளுராட்சி மன்றங்களில் பணி புரிபவர்களிற்கு அரச வேலை வாய்ப்பு திட்டத்தில் வழங்குவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெற்றிடத்திற்கு ஏற்ற வகையில் ஆளணி தரப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.ஆனாலும் 2018ம் ஆண்டுக்கு பின்னர் சேவையில் இணைந்தவர்கள் குறித்த வேலைவாய்ப்பிற்குள் இணைப்பதற்கான தீர்மானம் அவர்களிடம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஆனாலும் 2018ம் ஆண்டுக்கு பின்னர் இணைந்தவர்களையும் வேலைவாய்ப்புக்குள் இணைத்துக்கொள்ளுமாறும் நாங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளோம் எனவும் அவர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

  • 613
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads