சினிமா செய்திகள்
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
இணையத்தில் லீக் ஆன GOAT First Single பாடல்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) படம் உருவாகி வருகிறது.
நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருபவர் சாயாஜி ஷிண்டே. தமிழில் பாரதியார் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான ‘பாரதி’ படத்தில் நடித்தவர். மகார
மனிஷா கொய்ராலா பற்றி பலரும் அறிந்திடாத தகவல்
உச்சத்தில் இருந்து ஜீரோவான நேபாள ராணி மனிஷா கொய்ராலா.. மது தான் காரணமா?நடிகை மனிஷா கொய்ராலா நேபாள நாட்டின் ராஜகுமாரியாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில்
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தர
" உங்க வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில எழுதணும்” - பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தரத்திடம் ஒரு நிருபர் கேட்டாராம். பட்டுக்கோட்டையார் அந்த நிர
முன்னழகு எடுப்பாக தெரிய புகைப்படம் வெளியிட்டார் யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் எந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் அனைவரும் முன்னழகை முன்பு பார்க
ஈரம்சொட்டும் உடையில் மாங்காய் அடிக்கும் சிம்ரன்
சிம்ரன் நடிப்பில் வெளி வந்த நேருக்கு நேர், கண்ணெதிரே தோன்றினாள், அவள் வருவாளா, வாலி, ஜோடி, பிரியமானவளே, பார்த்தேன் ரசித்தேன், தமிழ், பஞ்சதந்திரம், நிய
இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் நடிகை தன்யா பாலகிருஷ்ணன்
நடிகை தன்யா பாலகிருஷ்ணா தமிழ், கன்னடம், மற்றும் மலையாளம் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தெலுங்கு படங்களில் அதிகமாக இவர் நடித்திருக்கிறார். இவர
சப்தம் படத்தின் டீசர் நாளை வெளியாகும்
2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஈரம். இப்படத்தில் ஆதி, ரம்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவ
விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் தி கோட்
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கோட் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதாவது, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். இப்படத்
Ads
 ·   ·  662 news
  •  ·  15 friends
  • S

    23 followers

ராஜபக்ச குடும்ப ஆட்சி இன்றும் பலமாக இருப்பதான செய்தியை நேற்றைய வாக்கெடுப்பு செய்தியொன்றை கூறுகின்றது

ராஜபக்ச குடும்ப ஆட்சி இன்றும் பலமாக இருப்பதான செய்தியை நேற்றைய வாக்கெடுப்பு செய்தியொன்றை கூறுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த வாக்கெடுப்பு தொடர்பில் ஊடகவியலாளர் வினவியபோது பதிலளிக்கையிலேயே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்க வேண்டுமா அல்லது அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டிருக்க வேண்டுமா என்ற வாத பிரதிவாதங்கள் எதிர் தரப்பிடமே இருக்கின்றது.ஆகவே எல்லோரும் இணைந்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொடுத்ததாக தெரியவில்லை. சஜித் பிரேமதாச தலைமையிலான மக்கள் சக்தி இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கான முன்னறிவித்தலை கொடுத்திருக்கின்றார்கள்.ஆனாலும்கூட அவர்களுடன் இணைந்து இருக்கக்கூடிய எதிர்த்தரப்புக்கள் அனைத்தும் அவர்களுடன் பேசி இது தொடர்பான முடிவுகளிற்கு வந்திருக்க வேண்டும். அரசாங்கம் உண்மையில் 3ல் இரண்டு பெரும்பாண்மையுடன் இருக்கின்றது.ஆகவே அவர்கள் தமது அமைச்சரை தோற்கடிப்பதற்கு இடமளிப்பார்களே என்பதற்கில்லை. இருந்தாலும்கூட ஒரு கட்சி இவ்வாறான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றபோது எதிர்த்தரப்பில் இருக்க கூடிய கட்சிகளுடன் பேசியிருக்க வேண்டும்.பெற்றோல் விலை உயர்வுக்கு அமைச்சரே பொறுப்பு என்ற வகையில்தான இந்த நம்பிக்கையில்லா பிரேரணை வந்தது. அது வெறுமனே அவர்தான் பொறுப்பு கூற வேண்டும் என்றார் நிச்சயமாக இல்லை. அதற்கு அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டும்.ஆனாலும் எதி்தரப்பிலே இருந்தவர்கள் முழுமையாக அதற்கு ஆதரவினை தெரிவித்திருந்தால் அரசாங்கம் அந்த எதிர்ப்பை பார்த்திருக்கும். ஆனால் இப்பொழுது அவர்களுக்கு இருந்த வாக்குகளைவிட அதாவது நான் அறிந்தவகையில் 149 வாக்குகள் ஆளும் கட்சி தரப்பில் இருக்கக்கூடியது.ஆனால் நான் அறிந்த வகையில் 152 வாக்குகளை பெற்றிருக்கின்றார்கள். அவ்வாறாக இருந்தால் எதிர்த்தரப்பில் இருந்த சிலரும் அவர்களிற்கு சார்பாக வாக்களித்திருக்கின்றார்கள் என்று கருத வேண்டும்.ஏற்கனவே 20ம் திருத்தத்திற்கும் அவ்வாறான வாக்களிப்பே இடம்பெற்றது. ஆகவே நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் முஸ்லிம் தரப்பினரா அல்லது ஏனைய தரப்பினரா ஆதரித்தனர் என்பது எனக்கு தெரியாது. அது தொடர்பாக எந்த விளக்கத்தையும் சொல்ல விரும்பவில்லை.இருந்தாலும்கூட இவ்வாறான விசயங்கள் முழுமையான எதிர்த்தரப்பின் பங்களிப்புடன் அதற்கேற்றவகையிலான நம்பிக்கையில்லா பிரேரணையாக செயற்படுத்தப்பட்டிருக்குமாக இருந்தால் அது ஆரோக்கியமாக இருந்திருக்கும்.மாறாக இப்பொழுது ராஜபக்ச குடும்ப ஆட்சி தொடர்பில் இந்த வாக்கெடுப்பு ஒரு செய்தியை சொல்லியிருக்கின்றது. ராஜபக்ச குடும்ப ஆட்சி என்பது இன்னும் பலமாகவும், அசைக்க முடியாதவாறும் இருக்கின்றது என்ற ஒரு செய்தியை நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பு காட்டி நிற்கின்றது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

  • 600
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads