Category:
Created:
Updated:
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத நபர்கள் நடாத்திய வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கயஸ்வாகனம் மற்றும் வீட்டுப் பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத நபர்கள் வீடோன்றுக்குள் புகுந்து அதே இடத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா யாதவராசா (43) என்பவரே படுகாயங்களுக்குள்ளான நிலையில் மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.