சினிமா செய்திகள்
என்.எஸ்.கிருஷ்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி
படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போன என்.எஸ்.கிருஷ்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. என்.எஸ்.கே-வை ஆச்சர்யப்படுத்தயது எஸ்.எஸ்.வாசன் இந்திய சினிமாவ
பாடகி வாணி ஜெயராம்
தமிழ் சினிமாவின் பின்னணி பாடகிகளுள் மிகவும் முக்கியமானவர் பாடகி வாணி ஜெயராம்; இவரது இயற்பெயர் கலைவாணி. 1945 நவம்பர் 30 அன்று வேலூரில் துரைசாமி ஐயங்கார
அஜீத்துக்கு பாடிய பாட்டால் எஸ்.பி.பி-க்கு வந்த சிக்கல்
அமர்க்களம் ஷுட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்இன்று திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜீத்தை முதன் முதலில் பிரேம புஸ்தகம் தெலுங்குப் படத்திற்காக சிபா
ஹிட் பாடல்கள் கொடுத்தும் கொண்டாடப்படாத பாடகி
ஹிட் பாடல்கள் கொடுத்தும் கொண்டாடப்படாத பாடகி... பி.எஸ்.சசிரேகா பற்றி தெரியுமா?1978-ம் ஆண்டு வெளியான லட்சுமி என்ற படத்தில் மேளம் கொட்ட நேரம் வரும் என்ற
தூக்குதுரை ஓடிடியில் ரிலீஸ் ஆனது
ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத்,அரவிந்த் ஆகியோரது தயாரிப்பில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி யோகி பாபு நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியானது"த
சேலையில் கிளாமராக போஸ் கொடுத்த தமனனா
சமீபத்தில் தமன்னா , ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹிட்டானது.
வித்தியாசமான உடையில் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
 ‘எத்தனை காலம் தான்..’ பாடலை எம்.ஜி.ஆருக்கு எழுதித் தர மறுத்த கவிஞர்
எந்தக் காலத்துக்கும் பொருந்தும் ‘எத்தனை காலம் தான்..’ பாடலை எம்.ஜி.ஆருக்கு எழுதித் தர மறுத்த கவிஞர்.. காரணம் என்ன தெரியுமா?தமிழ் சினிமாவில் அதுவரை சிற
உதவிக் கேட்டு வந்தவர்களை வெறும் கையுடன் அனுப்பாத கலைவாணர்
தமிழகத்தின் கலைவாணர் என்றழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் ஏகப்பட்ட சொத்துகள் சம்பாதித்தவர் கடைசிகாலத்தில் அனைத்தையும் இழந்து படங்களில் சிறிய வேடங்களில்
ஒரே படத்துடன் திரையுலகில் இருந்து வெளியேறிய நடிகை
கடந்த 1991 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘குணா’ திரைப்படம் வெளியானபோது அனைத்து ஊடகங்களும் அந்த படத்தை பாராட்டினாலும் ரசிகர்கள் மத்தியில் அந்த படம் பெரிய
''தங்கலான்'' படம் ரிலீஸ் தள்ளிப்போக காரணம்?
பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்
பிரபல அரசியல்வாதி நிவேதா பெத்துராஜுக்கு துபாயில் வீடு வாங்கி கொடுத்தாரா?
பிரபல அரசியல்வாதி ஒருவர் நடிகை நிவேதா பெத்துராஜுக்கு துபாயில் ரூபாய் 50 கோடி மதிப்பில் வீடு வாங்கி கொடுத்ததாக அரசியல் விமர்சகர் ஒருவர் தனது யூடியூப் வ
Ads
 ·   ·  662 news
  •  ·  15 friends
  • S

    23 followers

வெற்றுப் பூச்சாண்டிகளினால் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது

வெற்றுப் பூச்சாண்டிகளினால் மக்களுக்கு  நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிவித்துள்ள  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியாயமான கருத்துக்கள் இருக்குமாயின் அவை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கௌதாரிமுனையில் இலங்கை சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்க்கும் நிலையத்தினை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்:கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதன் மூலம் எமது பிரதேச மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புக்களையும் பொருளாதார நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் ஆய்வு ரீதியாகப் பொருத்தமான இடங்களை தெரிவு செய்து பண்ணைகளை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடலட்டைப் பண்ணைகள் தொடர்பாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள புரிதல் காரணமாக ஏராளமானோர் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். கடந்த ஒன்றரை வருடங்களில் நூற்றுக்கணக்கான பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் ஆயிரக்கணக்கான பண்ணைகளை உருவாக்க திட்டமிடப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பண்ணைகளுக்கு இலட்சக்கணக்கான கடலட்டை குஞ்சுகளை இனப்பெருக்கம் செய்து வளர்க்க வேண்டிய தேவையுள்ளது.

இந்நிலையிலேயேஇ 2016இ 2017 காலப் பகுதியில் அப்போதைய அரசாங்கத்திடம் அனுமதிகளை பெற்றுஇ அரியாலையில் கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தினை அமைத்த இலங்கை சீனக் கூட்டு நிறுவனம்இ கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்தினை கௌதாரிமுனையில் அமைத்துள்ளனர். இதற்கு தேவையான சட்ட ரீதியான அனுமதிகளை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை.

கடலட்டைப் பண்ணையைப் பொறுத்தவரையில் அவசியமான அனுமதிகளைப் பெற்று செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டுமாயின் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியேற்படும்.எனவே   நாரா - நக்டா - கடற்றொழில் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஆலோசனைகளைப் பெற்று மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாது என்று அடையாளப்படுத்தப்படுகின்ற இடங்களில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு தழுவல் அடிப்படையிலான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை எமது மக்களின் பொருளாதார நலன்களையும் நாட்டிற்கான அந்நியச் செலாவணியையும் பெற்றுத் தரக்கூடிய முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறான ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக இந்தியா, மாலைதீவு, பங்களாதேஸ், நோர்வே, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் கலந்துரையாடி இருக்கின்றேன்.அண்மையில்கூட இந்தியத் தூதுவரை சந்தித்து எமது கடற்றொழிலாளர்களுக்கான வாழ்வாதார ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரியிருக்கின்றேன். அதேபோன்று முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் கோரியுள்ளேன்.

இவ்வாறான நிலையில்தான் கடந்த அரசாங்கத்தினால் நாட்டினுள் செயற்பட அனுமதி அளிக்கப்பட்ட குயிலான் நிறுவனம் கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்தினை கௌதாரிமுனையில் அமைத்திருக்கின்றது.இதுதொடர்பாக நேரடியாக நிலைமைகள் ஆராயப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கௌதாரிமுனை கடற்றொழிலாளர்களுடனும் கலந்துரையாடி எமது மக்களுக்கும் நாட்டிற்கும் பாதிப்பில்லாத தீர்மானம் மேற்கொள்ளப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கௌதாரிமுனை கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையம் தொடர்பாக அரசியல் நோக்கத்தோடு மக்களைக் குழப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் இவ்வாறான சுயநலப் பூச்சாண்டிகளினால் தன்னுடைய மக்கள் நலச் செயற்பாடுகளை தடுக்க முடியாது எனவும் மக்களுக்கு தேவையானதையும் சரியானதையும் செய்வதற்கு எதிராக எத்தகைய எதிர்ப்புக்கள் ஏற்பட்டாலும் எதிர்கொள்ளத் தயங்கப் போவதில்லை. கடந்த காலங்களில் இவ்வாறான பல சலசலப்புக்களையும் சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றமையை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 738
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads