சினிமா செய்திகள்
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

தொடர்பாடலை மேம்படுத்தும் இணைப்பு செயலி ஒன்றை வடிவமைத்த கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளியின் மகனான சுபாஸ்சந்திரபோஸ் சுகிர்தன்

தொடர்பாடலை மேம்படுத்தும் இணைப்பு செயலி ஒன்றை வடிவமைத்த கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளியின் மகனான சுகிர்தனை இன்றைய தினம் நாங்கள் சந்தித்தோம்.கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் கிராமத்தில் உள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் மகனான சுபாஸ்சந்திரபோஸ் சுகிர்தன் என்ற கலைப்பிரிவு மாணவன் இணைப்பு செயலி ஒன்றை வடிவமைத்துள்ளார்.யாழ்ப்பாண மாணவன் வடிவமைத்ததாக கூறப்படும் செயலியை போன்று வடிவமைத்துள்ள குறித்த மாணவனை இன்று நாங்கள் சந்தித்தோம்.இதன்போது குறித்த மாணவன் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியான சுபாஸ்சந்திரபோஸின் முத்த மகன் சுகர்தன் தொடர்பாடல் இலகுபடுத்தலிற்காக இணைப்பு செயலியை வடிவமைத்துள்ளார்.குறித்த செயலியை வடிவமைக்க ஆரம்பித்தபோது, அதற்கான பெயரிடலை திட்டமிடாமையால் தனது பெயரை அதற்கு சூட்டியுள்ளார்.குறித்த செயலி ஊடாக பயன்பாட்டில் உள்ள ஏனைய செயலிகள் போன்று, தரவுகளை பரிமாறுதல், காணொளி தொடர்பாடல் உள்ளிட்டவிடயங்களை அதில் உள்ளடக்கியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிவபாதகலையகம் பாடசாலையில் சாதாரணதரம் வரை கல்வி கற்று தற்போது கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கலைப்பிரிவில் உயர் கல்வியை தொடர்ந்து வரும் சுகிர்தன், தாம் ஆரம்ப கல்வியை பயின்ற பாடசாலையில் பல்வேறு வள குறைபாடுகள் காணப்பட்டதாகவும், உயர்தரம் வரை இல்லாது சாதாரண தரம் வரை உள்ள நிலையில் வளக் குறைபாடுகள் குறித்த பாடசாலையில் காணப்பட்டதகவும் தெரிவித்தார்.தற்போது உயர் தர கல்விக்காக கிளிநொச்சி நகரில் உள்ள கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.இவ்வாறு பின்தங்கிய பிரதேசங்களிலிருந்து தொழில்நுட்ப வளர்ச்சி நோக்கி பயணிக்கும் இவ்வாறான மாணவர்களை தட்டிக்கொடுக்க முன்வருவதில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.இவ்வாறான தொழில்நுட்ப விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு கணணி வசதியோ பொருளாதார வசதியோ தமக்கு இல்லை எனவும், அவ்வாறான உதவிகள் கிடைக்குமிடத்து தொழில்நுட்ப விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்லலாம் எனவும் அந்த மாணவன் தெரிவிக்கின்றார்.செயலி உருவாக்குவதற்கான ஆப் ஒன்றின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ள குறித்த தொடர்பாடல் செயலி போன்று, தொழில்நுட்ப ஆலோசனை மற்றும், பொருளாதார ரீதியிலான உதவிகளை செய்யுமிடத்து இவ்வாறான மாணவர்களை தொழில்நுட்ப ரீதியில் வளர்க்கவும், அதன் ஊடாக நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னுாக்கிய பாதைக்குள் அழைத்து செல்லவும் முடியும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

  • 577
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads