சினிமா செய்திகள்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
Ads
 ·   ·  666 news
  •  ·  15 friends
  • S

    23 followers

பூநகரி கௌதாரிமுனை கிராமத்தில் இயற்கையாக காணப்படும் மணல் திட்டு சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கனியவள திணைக்களம் இழுத்தடிப்பு

பூநகரி கௌதாரிமுனையில் அமைந்துள்ள மணல் திட்டினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை சீர் செய்வதற்கான  அனுமதியை கனியவள திணைக்களம் இழுத்தடிப்பதனால் கிராமத்திற்குள்ளேயை மணலை விற்பனை செய்து பிரதேச சபைக்கு நிதியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பூநகரி பிரதேச சபை தவிசாளர் ஐயம்பிள்ளை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்ட குழுவினர் குறித்த நடவடிக்கைக்கு ஒருவாரத்திற்குள் தீர்வு எட்டப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கௌதாரிமுனை கிராமத்தில் இயற்கையாக காணப்படும் மணல் திட்டு சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்திற்கான ஒரேயொரு போக்குவரத்து பாதையாக காணப்படும் குறித்த வீதியில் மண் திட்டு காணப்படுகின்றது. குறித்த மண் திட்டு வருடம் தோறும் சரிந்து போக்குவரத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தி வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.இந்த நிலயைில் 2 வருடமாக குறித்த மண்திட்டு சரிந்து விழுந்துள்ள நிலயைில் அதனை அகற்றுவதற்கு திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், பூநகரி பிரதேச சபையிடம் பல தடவைகள் கோரிய புாதிலும், அவர்கள் இழுத்தடிப்பு செய்ததாகவும் பிரதேச மக்களால் குற்றம் சாட்டப்பட்டது.இந்த நிலயைில் பிரதேச மக்களின் தனிநபர் வருமானத்திலிருந்து நிதி சேகரிக்கப்பட்டு கனரக இயந்திரம் கொண்டு போக்குவரத்து மேற்கொள்ளக்கூடிய வகையில் மணல் கடல் பகுதிக்குள் தள்ளி விடப்பட்டதாகவும், தற்போது ஏற்பட்டுள்ள காற்றினால் மீண்டும் மண் திட்டு அதிகரித்து சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.இவ்வாறான நிலயைில் பிரதேச சபையிடம் மீண்டும் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஏற்பாடுகள் செய்து தரவில்லை எனவும் தெரிவித்தனர். இதனால் பேருந்து சேவையை முன்னெடுக்க முடியாத நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.இவ்வாறான நிலயைில் குறித்த பகுதிக்கு இன்றைய தினம் வருகை தந்திருந்த பூநகரி பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர், மற்றும் வருமானவரி பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் பகுதியை ஆராய்ந்தனர். தொடர்ந்து குறித்த மண் திட்டினை அகற்றுவதற்கு தாம் பல்வே நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.குறித்த மண்திட்டினை அகற்றி பிரதேசத்தின் போக்குவரத்தினை சீர் செய்வதற்கும், அதன் ஊடாக பிரதேச சபைக்க வருவாய் ஒன்றினை திரட்டுவதற்கும் பல்வேறு முயற்சிகளை தாம் மேற்கொண்டதாகவும், அதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளபோதிலும், கனியவள திணைக்களம் இழுத்தடிப்பு செய்து வருவதாலேயே இவ்வாறான நிலை தொடர்ந்தும் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.எனினும் பிரதேசத்தின் தற்போதைய நிலை மற்றும் பிரதேச சபையின் வருவாயினை கருத்தில் கொண்டு இந்த வாரமளவில் உள்ளுரிற்குள் மணலினை விற்பனை செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த மணலினை விற்பனை செய்து பிரதேச சபை ஊடாக வருமானத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதுடன், அவ்வருமானத்தை பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.எனினும், குறித்த மணலை விற்பனை செய்து பெற்றுக்கொள்ளும் வருமானத்திலிருந்து கௌதாரிமுனை கிராமத்தினையே அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பிரதேச மக்கள் இன்றைய தினம் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

  • 806
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads