சினிமா செய்திகள்
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

பூநகரி கௌதாரிமுனை கிராமத்தில் இயற்கையாக காணப்படும் மணல் திட்டு சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கனியவள திணைக்களம் இழுத்தடிப்பு

பூநகரி கௌதாரிமுனையில் அமைந்துள்ள மணல் திட்டினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை சீர் செய்வதற்கான  அனுமதியை கனியவள திணைக்களம் இழுத்தடிப்பதனால் கிராமத்திற்குள்ளேயை மணலை விற்பனை செய்து பிரதேச சபைக்கு நிதியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பூநகரி பிரதேச சபை தவிசாளர் ஐயம்பிள்ளை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்ட குழுவினர் குறித்த நடவடிக்கைக்கு ஒருவாரத்திற்குள் தீர்வு எட்டப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கௌதாரிமுனை கிராமத்தில் இயற்கையாக காணப்படும் மணல் திட்டு சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்திற்கான ஒரேயொரு போக்குவரத்து பாதையாக காணப்படும் குறித்த வீதியில் மண் திட்டு காணப்படுகின்றது. குறித்த மண் திட்டு வருடம் தோறும் சரிந்து போக்குவரத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தி வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.இந்த நிலயைில் 2 வருடமாக குறித்த மண்திட்டு சரிந்து விழுந்துள்ள நிலயைில் அதனை அகற்றுவதற்கு திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், பூநகரி பிரதேச சபையிடம் பல தடவைகள் கோரிய புாதிலும், அவர்கள் இழுத்தடிப்பு செய்ததாகவும் பிரதேச மக்களால் குற்றம் சாட்டப்பட்டது.இந்த நிலயைில் பிரதேச மக்களின் தனிநபர் வருமானத்திலிருந்து நிதி சேகரிக்கப்பட்டு கனரக இயந்திரம் கொண்டு போக்குவரத்து மேற்கொள்ளக்கூடிய வகையில் மணல் கடல் பகுதிக்குள் தள்ளி விடப்பட்டதாகவும், தற்போது ஏற்பட்டுள்ள காற்றினால் மீண்டும் மண் திட்டு அதிகரித்து சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.இவ்வாறான நிலயைில் பிரதேச சபையிடம் மீண்டும் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஏற்பாடுகள் செய்து தரவில்லை எனவும் தெரிவித்தனர். இதனால் பேருந்து சேவையை முன்னெடுக்க முடியாத நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.இவ்வாறான நிலயைில் குறித்த பகுதிக்கு இன்றைய தினம் வருகை தந்திருந்த பூநகரி பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர், மற்றும் வருமானவரி பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் பகுதியை ஆராய்ந்தனர். தொடர்ந்து குறித்த மண் திட்டினை அகற்றுவதற்கு தாம் பல்வே நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.குறித்த மண்திட்டினை அகற்றி பிரதேசத்தின் போக்குவரத்தினை சீர் செய்வதற்கும், அதன் ஊடாக பிரதேச சபைக்க வருவாய் ஒன்றினை திரட்டுவதற்கும் பல்வேறு முயற்சிகளை தாம் மேற்கொண்டதாகவும், அதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளபோதிலும், கனியவள திணைக்களம் இழுத்தடிப்பு செய்து வருவதாலேயே இவ்வாறான நிலை தொடர்ந்தும் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.எனினும் பிரதேசத்தின் தற்போதைய நிலை மற்றும் பிரதேச சபையின் வருவாயினை கருத்தில் கொண்டு இந்த வாரமளவில் உள்ளுரிற்குள் மணலினை விற்பனை செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த மணலினை விற்பனை செய்து பிரதேச சபை ஊடாக வருமானத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதுடன், அவ்வருமானத்தை பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.எனினும், குறித்த மணலை விற்பனை செய்து பெற்றுக்கொள்ளும் வருமானத்திலிருந்து கௌதாரிமுனை கிராமத்தினையே அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பிரதேச மக்கள் இன்றைய தினம் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

  • 965
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads