சினிமா செய்திகள்
42 வயதில் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம்..?
பில்லா, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், சிங்கம் 2, லிங்கா, என்னை அறிந்தால் ருத்ரமா
கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக தன்னுடைய டீனேஜ் வயதிலேயே அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அத
ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் அசத்தும் அழகில் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், படு கிளாமரான உடையில் அசத்தும் நடிகை அமலா பால்
சமூக வலைத்தளங்களிலும் புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணத்தில் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வரும
கிளாமர் உடையில் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
இந்திய அளவில் தற்போது பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில்
பிரபாஸ் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் ராஜமௌலி
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட
அறியப்படாத படம் - இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்
1980 கால கட்டங்களில் வெளியான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் ஹிட் ஆயிருக்கும். அதற்கு காரணம் இசை, பாடியவரின் குரல் வளம் உள்ளிட்ட பல காரணங்கள
நடிகர் சூரி சமீப காலமாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் ’விடுதலை’ படத்தின் வெற்றியை அடுத்த அவர் ’விடுதலை 2’ ’கொட்டுக்காளி’ ’கருடன்’ உள்பட சில படங்க
நகைச்சுவை மன்னன் நாகேஷ்
அவர் காமெடி செய்யும் முன்பே நாம் சிரிக்க ஆரம்பித்து விடுவோம். அந்த அளவுக்கு நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தவர் தான் நாகேஷ். இவர் படத்தில் தான் இப்படி.
‘எலக்சன்’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியீடு
‘உறியடி’ புகழ் நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும
நீச்சல் உடையில் அசத்தும் அழகில் பிரணிதா சுபாஷ்
மிகவும் அழகான நடிகையாக, பார்த்தவுடன் மனதை கவரும் ஒரு வசீகரத் தோற்றத்தில் உள்ள பிரணிதா சுபாஷ், பெங்களூருவைச் சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி
உள்ளாடை அணியாமல் அழகு காட்டிய  ரெஜினா கசாண்ட்ரா
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ரெஜினா கசாண்ட்ரா, பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் போது, உடையில் தாராளமான கவர்ச்சி காட்டுகிறார். அவர் அணிந்திருக்கும் கவர
Ads
 ·   ·  666 news
  •  ·  15 friends
  • S

    23 followers

ஆடைத் தொழிற்சாலையில் தடுப்பூசி செலுத்தியதால் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என்றும் பதட்டம் காரணமாகவே 46 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையில் தடுப்பூசி செலுத்தியதால் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என்றும் பதட்டம் காரணமாகவே இந்த நிலைமைக்கு ஆளாகியதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற இரண்டு பாரிய ஆடைத் தொழிற்சாலைகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில் குறித்த தடுப்பூசிகள் ஒவ்வாமை காரணமாக 46 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்ற வகையில் அமைந்திருக்கின்ற இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளிலும் கொவிட் பரவல் காரணமாக குறித்த தொழிற்சாலையை மூடுமாறு தொடர்ச்சியாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இந்தநிலையில் ஆடைத் தொழிற்சாலைக்கு கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைக்கின்ற தடுப்பூசிகளின் முதற்கட்டமாக களப் பணிகளில் ஈடுபடுகின்ற மற்றும் ஆடை தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய தொழிற்சாலைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்குவதாக கடந்த வாரம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டது.இவ்வாறு தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பெருமளவானோருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 46பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களிற்கு நேற்றைய தினம் மற்றும் நேற்று முன் தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.அவர்களில் 25க்கும் அதிகமானோர் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் காலை அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதனை தொடர்ந்து தொழிற்சாலை பேருந்து மற்றும் வாகனங்களில் தொடர்ந்தும் வைத்தியசாலைக்கு மேலும் சிலர் அழைத்து வரப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்று காலை வழமை போன்று தொழிற்சாலைக்கு வருகைதந்த ஊழியர்கள் இவ்வாறு திடீர் சுகவீனம் அடைந்த நிலையியே இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.எனினும், குறித்த நோயாளர்களில் அபாயகரமான தாக்கத்தில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும், சாதாரண நோயாளர் விடுதிகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாங்கள் தெரிவிக்கின்றன.இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் அவர்களை தொடர்புகொண்டு வினவியது குறித்தஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற 46 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு இதில் பதினைந்து பேர் மாத்திரமே விடுதியில் தங்கியிருக்கின்றனர். ஏனையவர்கள் சிகிச்சை பெற்று திரும்பி இருக்கிறார்கள் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதால் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்ட வைத்திய வைத்தியர் அவர்கள் பதட்டம் காரணமாகவே இந்த நிலைமைக்கு ஆளாகிதாகவும் விடிதிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 15 பேருக்கும் எந்த விதமான பாதிப்புகள் இல்லை எனவும் இன்னும் சில மணி நேரங்களில் அவர்களும் விடுவிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • 494
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads