சினிமா செய்திகள்
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

ஒருஇரவில் இரசாயன உரப் பாவனையை தடை செய்து மக்களை பட்டினியின் விளிம்பிற்கு கொண்டு சென்று விடும் நிலை சிவஞானம் சிறிதரன் தெரிவிப்பு

சேதனப் பசளை பயன்பாடு தொடர்பில் விவசாயிகளுக்கு அறிவுரைகளை வழங்கி  இரசாயன பசளை பயன்பாட்டை குறைத்துக் கொள்ளவேண்டிய வழிமுறையை விடுத்து ஒருஇரவில் இரசாயன உரப் பாவனையை தடை செய்தது என்பது இந்த அரசாங்கம் மக்களை பட்டினியின் விளிம்பிற்கு கொண்டு சென்று விடும் நிலைப்பாடாகும்   என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இரசாயன உர பயன்பாட்டை தடை செய்து சேதன பசளைக்கு மாற்றும் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியமை தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள்

சேதன முறையிலான விவசாயத்தையே நாங்கள் விரும்புகின்றோம் அதனை கடந்த காலங்களில் பயன்படுத்தி விவசாயிகள் வெற்றி கண்டிருக்கிறார்கள். குறிப்பாக விடுதலைப் புலிகளுடைய காலத்திலேயே இரசாயனப் பசளைகளுக்கான தடைகள் இருந்தபோது சேதனப் பசளையை பயன்படுத்தி விவசாயிகள் அதிக விளைச்சலை பெற்றிருந்தனர்.

விவசாயிகள் பலர் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தில் பாராட்டுகளைப் பெற்றுகௌரவிக்கப்பட்டனர். அதேபோல இந்த விடயத்தை மக்களுக்கு படிப்படியாக தொகுதி அடிப்படையில் பல்வேறுபட்ட இடங்களை தெரிவு செய்து அது தொடர்பில் விவசாயிகளுக்கு அறிவூட்டி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் ஒரே இரவில் இரசாயன உர இறக்குமதியை தடை செய்து உடனடியாக சோதனை முறையிலான விவசாயத்தை செய்யுமாறு குறிப்பிடுவதென்பது தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களினுடைய தொழில்வாய்ப்பு இன்மை என்பவற்றால் பட்டினியின் விளிம்புக்குச் சென்று இருக்கின்ற மக்களை மேலும் வறுமைக்குள் தள்ளிவிடும் நிலைமையாகவே இது அமைந்துவிடும் என்றும் தெரிவித்த அவர் இந்த அரசாங்கம் தோற்றுப் போயிருக்கிறது என்று சொல்ல வேண்டும்.

குறிப்பாக தற்போதைய காலத்தில் இந்த மக்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதாக கூறி கொண்டுஅதனை கூட இன்னமும் முழுமையாக வழங்கவில்லை.  கொள்ளை நோய்கள்  தொடர்பில் சுகாதார துறையே பொறுப்புக்கூற வேண்டும். அதை விடுத்து ராணுவத்திடம் இந்த பொறுப்பை வழங்கிவிட்டு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கின்ற கருத்து  ஒரு வேடிக்கையாக உள்ளது இந்த அரசாங்கம் தோற்றுப் போய் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

  • 584
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads