சினிமா செய்திகள்
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

கிளிநொச்சி மாவட்டத்தில் வீடுகளுக்கான நிதி இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் குறித்த வீடுகள் யாவும் அரைகுறையாகவே காணப்படுகின்றது

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2018ம்  2019ம்  ஆண்டுகளில் வீடுகளற்ற குடும்பங்கள்  வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு 5147 குடும்பங்களுக்கான வீடுகள் வழங்கப்பட்டுள்ள போதும் அந்த வீடுகளை முழுமைப் படுத்துவதற்கான நிதி இதுவரை வழங்கப்படாத நிலையில் குறித்த குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள் குடியேறிய குடும்பங்களுக்கு பல்வேறு திட்டங்களின் ஊடாக கடந்த காலங்களில் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2018 2019 ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட சுமார் 5147 வீடுகளுக்கான நிதி இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் குறித்த வீடுகள் யாவும் அரைகுறையாகவே காணப்படுகின்றது.

அதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 2018 ஆம் ஆண்டு மாதிரி விட்டுவிட்டு திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக 637 வீடுகளும் 2019ஆம் ஆண்டு இரண்டாம் கட்டமாக 724 வீடுகளும் வழங்கப்பட்டன.

இதேவேளை கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 2438 குடும்பங்களுக்கான வீடுகள் வழங்கப்பட்டன சவட்ட செவன திட்டம் சம்ப செவன திட்டம் மற்றும் மானிய மற்றும் கடன் திட்டம் உள்ளடங்கலாக சுமார் 5147 வீடுகள் கடந்த 2018 2019 ஆம் ஆண்டுகளில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்தன.

இதற்கான முதற்கட்ட கொடுப்பனவு இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் மாத்திரம் வழங்கப்பட்ட நிலையில் ஏனைய கொடுப்பனவுகள் வழங்கப்படாததால் இந்த வீடுகளை அதன் பயனாளிகள் முழுமைப்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.

கிளிநாச்சி மாவட்டத்தில் வாழும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு இவ்வாறு இந்த வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன.  இந்த வீட்டு திட்டங்களுக்கான நிதி முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில் குறித்த வீடுகள் யாவும் பூர்த்தியாக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன.

குறித்த 5147 வீடுகளையும் கட்டி முடிப்பதற்கு 1958 மில்லியன் ரூபா நிதி தேவையெனவும் இந்த நிதி கிடைக்கும் பட்சத்தில் குறித்த வீடுகளை கட்டி முடிக்க முடியும் என்றும் மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திற்கு இந்த ஆண்டு 460  வீடுகளுக்கான ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 582
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads