சினிமா செய்திகள்
பிரபல சிங்கள நடிகை காலமானார்
இலங்கை திரைப்பட தாரகையான சிங்கள நடிகையான மாலினி பொன்சேகா (76 வயது) இன்று(24.5.25) அதிகாலை காலமானார். அவர் ஏழு சகாப்தமாக திரைதுறையில் மின்னியவர். மேலும
லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமானது சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். சமீப காலமாக லைகா ப்ரோடக்ஷன்ஸ் பல்வேறு சவால்கள
அட்லீ இயக்கும் புது படத்தில் இணைகிறார் தீபிகா படுகோனே
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான அட்லீ ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்ததால்
நடிகர் ஹம்சவிர்தனுக்கு இரண்டாவது திருமணம்
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவிர்தன். இவர், 'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்', 'மந்திரன்', 'பிறகு' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மணிரத்னத்துடன் அதிகம் பேசாமல் இருக்க காரணம் இதுதான்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இயக்குனர் மணிரத்னத்துடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்கும்
எனக்குத் திருப்புமுனை தந்த படம் - நடிகர் சார்லி
காமெடி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர் சார்லியின் இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர்.தமிழ்த் திரையுலகில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட
மும்பையில் புதுவீடு வாங்கினார் டாப்ஸி
பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகு
பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது
ஐரோப்பாவில் நடைபெறும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் மே 17ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. போர்ஷ்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
Ads
 ·   ·  3023 news
  •  ·  1 friends
  • 2 followers

பூநகரியில் அரச காணிகளை சூறையாடும் MP இளங்குமரன் குழு - தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல் முயற்சி

சட்டவிரோதமான முறையில் அரச காணிகளை அபகரிக்க முயன்ற அரச ஆதரவாளர் கும்பலோன்றை தடுக்க முற்பட்ட அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவமொன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்றுளன்ளது.

குறிப்பாக அரச அதிகாரிகளை தாக்க முற்பட்டவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உள்ளுர் தலைவர் தலைமையிலான குண்டர் குழுவென தெரியவந்துள்ளது.

பூநகரி முழங்காவில் பகுதியில் நாச்சிக்குடா சந்தியை அண்மித்து மன்னார் - யாழ்ப்பாணம் வீதியோரமாக நேற்றுமுன்தினமிரவு முதல் தடாலடியாக அரச காணிகளில் கடைகள் சில முளைத்துள்ளன. குறிப்பாக நிரந்தரமாக இரும்பினால் ஒட்டப்பட்டதும் தகரங்களால் வேயப்பட்டதுமானதாக அக்கடைகள் இருந்துள்ளன.

பொதுப் போக்குவரத்திற்கு அபாயத்தை தரக்கூடியதும் அனுமதியற்றதுமான கட்டுமானங்களை தயவு தாட்சணியமின்றி அகற்ற வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ள நிலையில் அவை தொடர்பில் பொதுமக்களால் முறைப்பாடுகள் பூநகரி பிரதேச சபைக்கு செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து செயலாளர் மற்றும் வருமான வரிபரிசோதகர் நிலைய பொறுப்பதிகாரி சகிதம் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். உரிமை கோரப்படாத நிரந்தர தகரக் கொட்டகைக்கு பகிரங்கமாக அகற்றுவதற்கான எச்சரிக்கை அறிவித்தல்களை ஒட்டிய அதிகாரிகள் அருகாக தொடர்ந்து நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்த மற்றைய வர்த்தக நிலையத்தினரிடம் அனுமதியை பெற்று வேலையை முன்னெடுக்க அறிவுறுத்தியிருந்தனர்..

இந்நிலையில் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் புகைப்படமெடுக்க முற்பட்டவர்களை தாக்க முற்பட்ட அங்கிருந்த கும்பலொன்று கைத்தொலைபேசியை பறிக்கவும் முற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை எச்சரித்த அதிகாரிகள் பொலிசாரிடம் முறையிட்டனர்.

அதனையடுத்து சம்பவ இடத்திலிருந்தவர்களை பொலிஸ் நிலையத்திற்க அழைத்த பொலிஸார் எச்சரிக்கை விடுத்ததுடன் கைது செய்ய முற்பட்டிருந்தனர். எனினும் அதனை மறுதலித்த பிரதேச சபை செயலர் சட்டவிரோத கட்டுமாணங்களை முன்னெடுக்க வேண்டாமெனவும் உரிய அனுமதியை பெற்ற பின்னர் பணிகளை முன்னெடுக்கலாமெனவும் தெரிவித்து வெளியேறியதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் அதிகாரிகளை தாக்க முற்பட்டவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உள்ளுர் தலைவர் தலைமையிலான குண்டர் குழுவென தெரியவந்துள்ளது.

அதேவேளை சட்டவிரோதமாக அரச காணிகளை இரவோடிரவாக பிடித்து கடைகளை நிர்மாணித்துவருபவர்களிற்கு எதிராக பூநகரி பிரதேசசெயலகம் சட்டநடவடிக்கைகளிற்கு தயாராவதாக பிரதேசசெயலர் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குண்டர்களால் எடுக்கப்பட்ட கைத்தொலைபேசி வீடியோக்களை தனது முகநூலில் பகிர்ந்து அதிகாரிகள் அடாவடியென பகிர்ந்து கொள்ள மறுபுறம் தாக்குதல் நடத்த முற்பட்ட குண்டர் கும்பலோ அதிகாரிகளை தாம் நையப்புடைத்து கலைத்தாக முகநூலில் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

ஒருபுறம் ஜனாதிபதி சட்டத்தின் ஆட்சியே நடப்பதாக தெரிவித்துக்கொள்ள மறுபுறம் அவரது கட்சி குண்டர்கள் ஆட்சிக்கு தயாராவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பூநகரி - முழங்காவில் பகுதியினில் சட்டவிரோதமாக அரச காணிகளை இரவோடிரவாக பிடித்து கடைகளை நிர்மாணித்து வருபவர்களிற்கு எதிராக பூநகரி பிரதேச செயலகம் சட்டநடவடிக்கைகளிற்கு தயாராகிவருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 258
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads