
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் ஊடக சந்திப்பு
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த ஊடக சந்திப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் இம்பெற்றது. இதன் போது,
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பித்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்தும் தீர்வு இல்லை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், ஒன்பது ஆண்டுகளாக எங்களுடைய பிள்ளைகளை மீட்பதற்கு பல்வேறு வழிகளிலும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
இவ்வாறு போராடி சர்வதேசத்திற்கு உண்மை நிலைமைகளை எடுத்து கூறி வருகின்றோம். எமது பிள்ளைகளை தேடிய 300 ற்கு அதிகமாக தாய், தந்தையர் இறந்துள்ளனர்.
உள்ளூரில் எமக்கு தீர்வு கிடைக்காத நிலையில் ஜெனீவா கூட்டத்தொடரிலும் பிரச்சனைகளை முன்வைத்து வருகின்றோம். இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதாக சொல்லி கால இழுத்தடிப்பையே செய்கின்றனர்.
இந்த ஒன்பதாவது கூட்டத் தொடரிலாவது ஜனாதிபதி சர்வதேசத்தின் கோரிக்கையை ஏற்று நீதியை பெற்றுத்தருவதற்கு முன்வர வேண்டும்.
பல தலைவர்களை இந்த ஒன்பது வருடங்களில் கண்டுள்ளோம். இவர்கள் தெற்குக்கு ஒரு நீதியும் வடக்குக்கு ஒரு நீதியும் வழங்குகின்றனர்.
எனவே எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் கிளிநொச்சியில் நாம் தொடர் போராட்டத்தை ஆரம்பித்து ஒன்பது வருடம் நிறைவடைகின்ற .
இந்த நிலையில் நீதி வேண்டி போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளோம் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறும் அவர் தெரிவித்தார்.