சினிமா செய்திகள்
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
Ads
 ·   ·  2864 news
  •  ·  1 friends
  • 2 followers

தேசியப்பட்டியலுக்கு 500 மில்லியன் இலஞ்சம் - சிக்கலில் மாட்டித் தவிக்கும் சஜித்

நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, கடுமையான உள் நெருக்கடியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மீது சுமத்தப்பட்டுள்ள 500 மில்லியன் ரூபா இலஞ்சம் தொடர்பிலான குற்றச்சாட்டே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, கட்சியின் அநேகமான உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 11 ஆம் திகதி நடத்தப்பட்ட கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் சஜித் பிரேமதாச, 500 மில்லியன் ரூபா இலஞ்சம் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தத் தவறிவிட்டார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, கட்சி மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான அவதூறிலிருந்து விடுபட பல்வேறு முறையில் எதிர்ப்பை நடத்த எம்.பி.க்கள் குழு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்பதைத் தவிர்ப்பது, தொலைக்காட்சி நேர்காணல்களில் பங்கேற்பதைத் தவிர்ப்பது, வெகுஜன ஊடகங்களில் கட்சி சார்பாகப் பேசுவதைத் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, கட்சியின் தேர்தல் நிதிக்கு எந்த நபரிடமிருந்தும் 500 மில்லியன் ரூபா பெறப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்துவதே தனது முதன்மை நோக்கம் என்று ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.

பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பிரபல அரிசி தொழிலதிபர் ஒருவர் தேசியப் பட்டியல் பதவிக்கு 500 மில்லியன் கொடுத்ததாக குறித்த குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவரது பெயர் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும், பதவி கிடைக்காததால் இந்தத் தகவலை வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதா சில தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தவிர, களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஒருவரும் பதவிக்காக அதிக பணம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்த இந்த தொழிலதிபர், மருத்துவத் துறையில் ஒரு அமைப்பின் தலைவராக பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த ரஞ்சித் மத்தும பண்டார, “தேசியப் பட்டியலில் உள்ள 29 நபர்களிடம் இருந்து கட்சித் தலைவரோ அல்லது கட்சியோ அத்தகைய நிதியைப் பெறவில்லை.

இருப்பினும், அந்தப் பணத்தை கட்சியின் ஆலோசகர் ஒருவர் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தக் கோரி கட்சியின் ஒரு வலுவான பிரிவு தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் அனுப்பத் தயாராகி வருகிறது’’ என்றார்.

000

  • 974
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads