சினிமா செய்திகள்
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
Ads
 ·   ·  8179 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஒரே நபரை 12 முறை மணந்து, விவாகரத்து செய்த பெண்

ஆஸ்திரியா ரொம்பவே வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது அங்கே ஒரு பெண் 12 முறை ஒரே நபரைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார். கடைசியாக 2022ல் அந்த பெண்ணுக்கு விவாகரத்து வழங்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்த போது சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.

திருமண வாழ்க்கையில் எதாவது சிக்கல் இருந்து இருக்கும். அதனால் விவாகரத்து வாங்கி இருப்பார் என நீங்கள் சொல்லலாம். உண்மையில் இந்த 12 முறையும் ஒரே நபரைத் தான் திருமணம் செய்துள்ளார். இவருக்கும் இடையே அளவு கடந்த காதல் இருந்துள்ளது. ஆனாலும், இருவரும் 12 முறை விவாகரத்து பெற்றுள்ளனர். இதற்கான காரணம் உங்களுக்கு அதிர்ச்சி தரும்.. அரசின் உதவி தான் இந்த விவாகரத்துக்குக் காரணம் என்றால் நம்ப முடிகிறதா?

ஆஸ்திரியாவில் விதவை மற்றும் விவாகரத்து பெறும் பெண்களுக்கு உதவும் வகையில் அந்நாட்டு அரசு உதவித் தொகைகளை வழங்கி வருகிறது. இந்த உதவித் தொகையைப் பெறவே அவர்கள் இத்தனை முறை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றுள்ளனர். இதன் மூலம் 73 வயதான அந்த பெண், சுமார் 3.42 லட்சம் அமெரிக்க டாலர் (அதாவது சுமார் 2 கோடி ரூபாய்) அளவுக்கு உதவித் தொகையைப் பெற்றுள்ளார்.

இதெல்லாம் 1980களில் தொடங்கியுள்ளது. அதாவது அந்த பெண்ணின் முதல் கணவர் 1981ம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவருக்கு விதவைக்கான பென்ஷன் வழங்கப்பட்டது. இருப்பினும், 1982இல், அவர் லாரி டிரைவர் ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். இதனால் அவரது ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இருப்பினும், வேறு ஒரு திட்டத்தில் அவருக்கு சுமார் 28 ஆயிரம் டாலர் கிடைத்துள்ளது. இருவரும் 6 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். அதன் பிறகு, லாரி டிரைவரான கணவர் தன்னுடன் போதியளவு நேரத்தைச் செலவழிப்பதில்லை என்று சொல்லி அந்த பெண் விவாகரத்து வாங்கியுள்ளார். இதையடுத்து அவரது விதவை உதவித் தொகை நிறுத்தப்பட்டது. ஆனால், மீண்டும் வேறு திட்டத்தில் அவருக்கு சுமார் 27 ஆயிரம் டாலர் நிவாரணமாகத் தரப்பட்டது.

இப்படி விவாகரத்து பெறும் போது மாதாமாதம் உதவித் தொகையும், மறுமணத்திற்குப் பிறகு நிவாரண தொகையும் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொண்ட அந்த தம்பதி இதையே செய்யத் தொடக்கியுள்ளனர். கடந்த 35 ஆண்டுகளில் அந்த தம்பதி இப்படியே திருமணம்- விவாகரத்தை மாறி மாறி செய்துள்ளனர். சராசரியாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த விவாகரத்து செய்துள்ளனர். இப்படியே அந்த தம்பதிக்கு மொத்தம் 12 முறை திருமணம் நடந்துள்ளது. கடைசியாகக் கடந்த 2022ம் ஆண்டு அந்த தம்பதி மீண்டும் விவாகரத்து பெற்றனர். இருப்பினும், பென்ஷன் அதிகாரிகள் விதவை உதவித் தொகை வழங்க மறுத்துள்ளனர். இது தொடர்பாக நடந்த விசாரணையில் தான் அந்த தம்பதி செய்தது சட்டவிரோதமானது என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அந்த தம்பதி மீது விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

  • 779
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads