சினிமா செய்திகள்
ரஜினியின் கூலி படம் காலியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி (Coolie) படத்தின் வெளியீட்டு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்ட
நடிகர் ராமராஜனின் சாதனைகள்
ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது..அவரது சாதனைகளில் சில.......1. 43 படங்களில் தனி கதாநாயகனாகநடித்திருக்கிறார், எந்த படத்
சாதனை நாயகி கே.ஆர்.விஜயா
வறுமையான குடும்பத்தில் பிறந்து, வயிற்றுப்பாட்டிற்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.வ
ஓம் காளி ஜெய் காளி
இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் பலர் நடித்து மார்ச் 28 2025 அன்று Jiohotstar யில் வெளியிடப்பட்டுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' எனு
இசைஞானி இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்
இசைஞானி இளையராஜா சமீபத்திய ஒரு நேர்காணலில் தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் பற்றிய ஒரு சுவாரசியத்தை கூறியுள்ளார். ராக்கம்மா கையத்தட
மூத்த நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் காலமானார்
பழம்பெரும் நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித
நடிகர் மாதவனும் இயக்குநர்  கே எஸ் ரவிக்குமாரும்
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் எந்த கேள்வி கேட்டாலும் வித்தியாசமாக சுவாரசியமாக பதில் சொல்பவர், சமீபத்தில் மாதவன் குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பி
அரிய ஆவணம்
"7-9-1949"இடையபட்டி நேத்தாஜி பாடசாலை கட்டிட நிதிக்காககலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்களின்கிந்தனார்காலட்சேபம் 7-9-49 அன்று நடைபெற்றது
மனித வணக்கம்  -  கமல்ஹாசன் கவிதை
தாயே, என் தாயே!நான்உரித்த தோலேஅறுத்த கொடியேகுடித்த முதல் முலையே,என் மனையாளின்மானசீகச் சக்களத்தி, சரண்.தகப்பா, ஓ தகப்பா!நீ, என்றோ உதறிய மைபடர்ந்தது கவி
நடிகை மலைகா அரோரா பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலில் விழுந்தாரா?
நடிகை மலைகா அரோரா கவ்ஹாத்தியில் நடந்த ஐபிஎல் போட்டியை காண வந்ததிலிருந்து ஒரு பெரிய கிசுகிசு தொடங்கியது. முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்
விஜய் சேதுபதியை இயக்குகிறார் புரி ஜெகன்நாத்
பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத். இவர், போக்கிரி, பிசினஸ் மேன், டெம்பர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். 2022-ம் ஆண்டில், பான் இந்தியா படமாக ‘ல
 ‘எல் 2: எம்புரான்’ படத்தின் சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்பட்டது
மோகன்லால் நடித்து மார்ச் 27-ல் வெளியான படம், ‘எல் 2: எம்புரான்’. இதை நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில், 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கல
Ads
 ·   ·  2814 news
  •  ·  1 friends
  • 2 followers

2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் - பிரதமர் மோடி நம்பிக்கை

எதிர்வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இலக்கை எட்டுவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் தன்னார்வலர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்றுமுன்தினம் குஜராத் மாநிலம், அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி அரங்கத்தில் நடைபெற்ற மஹோத்சவ நிகழ்ச்சியின்போது காணொளி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா ஆன்மிக அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியிலேயே மோடி பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

“இந்திய கலாசாரத்தில் சேவை என்பது மிகப்பெரிய தர்மம். சேவை என்பது மிகப்பெரிய மதம். அந்த வகையில் பொதுச் சேவை என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கு சமம். இச் சேவையை திட்டமிட்டு செய்தால் அற்புத பலன் கிட்டும்.

2022 ஆம் ஆண்டு ரசிய, உக்ரெய்ன் போரின்போது அங்கு வசித்த இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு வர இந்த அமைப்பினர் உதவி செய்தனர். இந்த அமைப்பினர் சமூகத்தில் பின் தங்கியவர்களுக்கு அதிகாரம் அளிக்கின்றனர். தன்னலமற்ற சேவை வழங்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஒரு பொது நோக்கத்துடன் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணையும்போது அது மிகப்பெரிய சக்தியாக மாற்றம் பெறும். எதிர்வரும் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கை அடுத்த 20 வருடங்களில் எட்ட வேண்டும். இந்த இலக்கை நோக்கி நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது.

மேற்குறித்த அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் சுமார் 50 ஆண்டுகளாக தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் சமூக மற்றும் ஆன்மிக சேவை செய்து வருவதை பாராட்டும் வகையில் இந் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

000

  • 454
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads