Category:
Created:
Updated:
வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சை பொறுப்பேற்றுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வரும் விஜயதாச ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்ததால் அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சு பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
அரசியலமைப்பின் 44 (3) ஆவது சரத்தின் பிரகாரம், பிரதமருடனான ஆலோசனைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உறுதிப்படுத்தினார்.
000