சினிமா செய்திகள்
எம். ஆர். ராதாவின் மனசு..
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகர் ரஞ்சித்தின் முன்னாள் மனைவி கூறிய உண்மை
90 ஆம் காலக்கட்டங்களில் பிரபல நடிகர் ரஞ்சித். இவர் இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் ரஞ்சித் 1999
ஷாலின் ஷோயா கட்டிய கனவு வீடு
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷாலின் ஷோயா. சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மலையாள
தாயின் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகர்
கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இறுதிச்
மூன்றாவது திருமணம் செய்ய போகும் நடிகர்
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா  தமிழில் அன்பு என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் சுமாராக ஓடிய போதும், இந்த படத்தில் வரும்
அமெரிக்காவில் ஷார்ட் உடையில் நடிகை அஞ்சலி
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலர் நடிகை அஞ்சலி. அவருக்கு ஏராளம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.தற்போது நியூயார்க்கில் இருக்கும் அஞ்சலி ஷார்ட் உடைய
கங்குவா படம் பற்றிய அப்டேட்
நடிகர் சூர்யா நடித்துள்ள படங்களில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக உள்ளது கங்குவா.சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த பட
கனிகாவிற்கு வளையல் அணியும் விழா
கடந்த சில நாட்களுக்கு முன் சினேகன்-கனிகா இருவரும் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷ செய்தி வெளியிட்டார்கள். இந்த நிலையில் கனிகாவின் 5வது மாத நிகழ்ச்சி அழகாக
9 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் மொத்த வசூல்
தனக்கு கிடைத்த வாய்ப்பை வேட்டையன் என்ற படத்தை இயக்கி தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார் ஞானவேல்.இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரி
நடிகை ரம்யா கிருஷ்ணன் விவகாரத்து செய்கிறாரா?
தமிழில் 1983ம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்கிற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.ஐட்டம் டான்ஸ், அம்மன் வேடம், போல்டான கதாபாத
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
Ads
 ·   ·  1653 news
  •  ·  0 friends
  • 1 followers

புதிய சட்டமா அதிபர் நியமனம் தொடர்பாக பதில் கடிதம் - மூத்த அதிகாரியை மூப்பு அடிப்படையில் நியமிக்க அவசியம் கிடையாது என தெரிவிப்பு

முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஓய்வு பெற்றதையடுத்து புதிய சட்டமா அதிபர் நியமனம் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவுக்கு அனுப்பியிருந்த கடிதமொன்றுக்கு, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பதில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அரசியலமைப்புப் பேரவையின் அங்கீகாரத்துடன் சட்டமா அதிபரை நியமிக்க அரசியலமைப்பின் 41 சீ பிரகாரம் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு ரீதியான அதிகாரம் உள்ளதாகவும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மிக மூத்த அதிகாரியை இந்தப் பதவிக்கு சேவை மூப்பு அடிப்படையில் நியமிக்க அரசியலமைப்பு ரீதியான அவசியம் கிடையாது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மிகவும் சிரேஷ்ட அதிகாரிக்கு சட்டமா அதிபர் பதவி வழங்கும் முறை இலங்கை வரலாற்றில் பின்பற்றப்படவில்லை எனவும், ஜனாதிபதி சட்டத்தரணி சரத் என். சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் பீரிஸ் போன்றோரின் நியமனங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சேவை மூப்பிற்குப் புறம்பாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபர் பதவிக்காக பலரது பெயர்களை சிபாரிசு செய்ததோடு, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜெயசூரியவை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம் வழங்கியதையும் ஜனாதிபதி செயலாளர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் அமைச்சவையின் நம்பிக்கையைப் பெறுவதற்கு சாத்தியமான சகல நபர்கள் குறித்தும் விரிவாகப் பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சட்டமா அதிபர் பதவிக்கு தகுதியான வேறு நபர்கள் இருக்கையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒருவரை மாத்திரம் ஆதரிக்கக் கூடாது எனவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் ஓய்வு பெற்றதையடுத்து வெற்றிடமான சட்டமா அதிபர் பதவிக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றின் ஊடாக கோரியிருந்தது. இந்தச் செயற்பாட்டின் ஊடாக சேவை மூப்பை மதித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் தொடர்ச்சி நிலை மற்றும் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படுவதாகவும், அது சட்டமா அதிபர் திணைக்களத்தில் நிறுவப்பட்ட படிநிலைக்கு இணங்குவதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியிருந்தது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சதுர ஏ. கல்ஹேனவினால் கையொப்பமிடப்பட்ட இந்தக் கடிதத்தில், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கும் நீதியை உறுதிப்படுத்துவதற்கும் சட்டமா அதிபரின் முக்கிய வகிபாகத்தை வலியுறுத்தியதுடன், அவர்களின் கோரிக்கையை சாதகமாகப் பரிசீலிக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

  • 478
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads