சினிமா செய்திகள்
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
Ads
 ·   ·  1406 news
  •  ·  0 friends
  • 1 followers

புதிய சட்டமா அதிபர் நியமனம் தொடர்பாக பதில் கடிதம் - மூத்த அதிகாரியை மூப்பு அடிப்படையில் நியமிக்க அவசியம் கிடையாது என தெரிவிப்பு

முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஓய்வு பெற்றதையடுத்து புதிய சட்டமா அதிபர் நியமனம் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவுக்கு அனுப்பியிருந்த கடிதமொன்றுக்கு, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பதில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அரசியலமைப்புப் பேரவையின் அங்கீகாரத்துடன் சட்டமா அதிபரை நியமிக்க அரசியலமைப்பின் 41 சீ பிரகாரம் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு ரீதியான அதிகாரம் உள்ளதாகவும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மிக மூத்த அதிகாரியை இந்தப் பதவிக்கு சேவை மூப்பு அடிப்படையில் நியமிக்க அரசியலமைப்பு ரீதியான அவசியம் கிடையாது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மிகவும் சிரேஷ்ட அதிகாரிக்கு சட்டமா அதிபர் பதவி வழங்கும் முறை இலங்கை வரலாற்றில் பின்பற்றப்படவில்லை எனவும், ஜனாதிபதி சட்டத்தரணி சரத் என். சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் பீரிஸ் போன்றோரின் நியமனங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சேவை மூப்பிற்குப் புறம்பாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபர் பதவிக்காக பலரது பெயர்களை சிபாரிசு செய்ததோடு, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜெயசூரியவை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம் வழங்கியதையும் ஜனாதிபதி செயலாளர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் அமைச்சவையின் நம்பிக்கையைப் பெறுவதற்கு சாத்தியமான சகல நபர்கள் குறித்தும் விரிவாகப் பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சட்டமா அதிபர் பதவிக்கு தகுதியான வேறு நபர்கள் இருக்கையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒருவரை மாத்திரம் ஆதரிக்கக் கூடாது எனவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் ஓய்வு பெற்றதையடுத்து வெற்றிடமான சட்டமா அதிபர் பதவிக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றின் ஊடாக கோரியிருந்தது. இந்தச் செயற்பாட்டின் ஊடாக சேவை மூப்பை மதித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் தொடர்ச்சி நிலை மற்றும் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படுவதாகவும், அது சட்டமா அதிபர் திணைக்களத்தில் நிறுவப்பட்ட படிநிலைக்கு இணங்குவதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியிருந்தது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சதுர ஏ. கல்ஹேனவினால் கையொப்பமிடப்பட்ட இந்தக் கடிதத்தில், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கும் நீதியை உறுதிப்படுத்துவதற்கும் சட்டமா அதிபரின் முக்கிய வகிபாகத்தை வலியுறுத்தியதுடன், அவர்களின் கோரிக்கையை சாதகமாகப் பரிசீலிக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

  • 451
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads