சினிமா செய்திகள்
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
Ads
 ·   ·  1406 news
  •  ·  0 friends
  • 1 followers

நீதிபதிகள் சிலரின் முறையற்ற செயற்பாடுகளால் நீதிக்கே இழுக்கு - அமைச்சர் விஜேதாச ராஜபக்ச சபையில் சிறப்புரிமை முன்வைப்பு

நீதிபதிகள் சிலரது முறையற்ற செயற்பாடுகளால் கௌரவமான பல நீதிபதிகளின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், நீதிச்சேவை கட்டமைப்பு பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளதாகவும் நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சபையில் தாம், ஆற்றிய உரை தொடர்பில் ஊடக அறிக்கைகளை வெளியிட்டுள்ள இரு நீதிபதிகளை அவசியமானால் நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு அழைத்து விசாரிக்க முடியும் என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை மீறல் பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலையே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சபையில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் -

நீதிச்சேவை கட்டமைப்பு தொடர்பில் சபையில் நான் ஆற்றிய உரை தற்போது பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது. எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். எனினும், நான் கேள்விகளை முன்வைப்பதற்கு முன்னர் நீதிச்சேவை ஆணைக்குழு அதற்குப் பதிலளித்துள்ளமை மகிழ்ச்சியானது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடந்த மாதம் 19 இல், நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்தபோது நான், பல விடயங்களை சபையில் குறிப்பிட்டேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிச் சேவைகள் சம்பந்தமாக நீதிமன்றத்திடம் கேட்க முடியாத விடயங்களை, நீதியமைச்சரான என்னிடமே கேட்கின்றனர். நான் அவற்றுக்குப் பதிலளித்துள்ளேன்.

கல்கிசை நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு சட்டவிரோதமாக மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் பெறப்பட்டுள்ளது. இந்நீதிபதி தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிடம் நான், வலியுறுத்தினேன். ஆனால் இது தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பொருளாக வைக்கப்பட்டிருந்த 20 கோடி பெறுமதியான விஸ்கி போத்தல்கள் காணாமலாகியிருந்தன. இது தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

நீதிமன்றத்தின் களஞ்சியசாலையின் கதவின் பூட்டை உடைத்து போத்தல்கள் திருடப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. எனினும் பூட்டுக்கான வழமையான திறப்பினைக் கொண்டே கதவு திறக்கப்பட்டுள்ளதாக அரச பகுப்பாய்வாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். விஸ்கி போத்தல்கள் திருடப்பட்ட விவகாரத்தை மூடி மறைக்க நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் முயற்சிப்பதாக, ஆணைக்குழுவின் பெரும்பாலானவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இவ்விடயத்தை நான் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய பின்னர் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு, பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஹெரோயின்,கஞ்சா ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பில் குறிப்பிடப்பட்டது.

அபாயகரமான போதைப்பொருட்களுக்கு 1000 ரூபா தண்டப்பணம் அல்லது பிற்பகல் 2 மணி அல்லது 3 மணிக்குப் பின்னர் விடுதலை என்ற நிலையே காணப்பட்டது என்றும் தெரிவித்திரந்தமை குறிப்பிடத்தக்கது.

000

  • 452
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads