சினிமா செய்திகள்
அஜித்குமாரின் விடாமுயற்சி முழுத் திரைப்படமும் இணையத்தில் கசிந்துள்ளது.
அஜித்குமாரின் சமீபத்திய படம் விடாமுயற்சி பைரசிக்கு இரையாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களில், முழு திரைப்படமும் பல திருட்டு வலைத்தளங்
நாகேஷ்
தன் முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லை நாகேஷ்.நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்கத்திற்குப் போய்விட்
" கவியரசரின் " பதிவு
சமீபத்தில் நண்பர்கள் சந்திப்பில் அருமை நண்பர் கேள்வி கேட்கநான் அளித்த பதில் உங்கள் முன் இதோ...வீரம் என்றால் என்ன என்று நண்பன் ஒருநாள் கேட்டான்..கட்டபொ
கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித
விசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்
விசுவின் படங்களை பொறுத்தவரைக்கும் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற் போல் தன் படங்களில் காட்டியிருப்பார் விசு. மிடில் கிளாஸ் வாழ்க
தலை குனிந்து வணங்கினார் கமல்ஹாசன்
இந்தியத் திரைத் துறையில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களை இயக்கிய இவர், தமிழ், இந்தி, மலை
நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீர
வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்ட
Ads
 ·   ·  2486 news
  •  ·  1 friends
  • 1 followers

முன்னேற்றப் பயணத்தை தொடர்வதா இல்லையா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் - ஜனாதிபதி ரணில்

நாட்டுக்குச் செய்ய வேண்டிய அனைத்தும் தம்மால் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, அந்தப் பயணத்தைத் தொடர்வதா? இல்லையா? என்பது குறித்து பொதுமக்களே தீர்மானிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் அல்லது ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயிக்கும் போது நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க மக்களுக்கு சந்தர்ப்பம் உண்டு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவினால் காலி உலுவிட்டகேயில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது -

நாட்டின் எதிர்காலம் என் கையில் உள்ளது என்று இங்கு பாடல் பாடிய இஷாக் மொஹிதீன் தனது பாடலில் கூறினார். உண்மையில், எதிர்காலம் என் கையில் இல்லை, மக்கள் கையில்தான் உள்ளது. இப்போது என்னால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டேன். எனது வீடும் தீப்பிடித்தது. அது பிரச்சினை இல்லை. தற்போது நாடு ஒரளவு சீரான நிலையை எட்டியுள்ளது.

எரிபொருள், மின்சாரம், உரம், பொருளாதாரம் இல்லாத நாட்டை நான் ஏற்றுக்கொண்டேன். யாரும் பொறுப்பேற்க முன்வரவில்லை, ஆனால் நான் ஏற்றுக்கொண்டேன்.  .

2021 ஆம் ஆண்டில் பொருளாதாரம் எதிர்மறையான நிலையில் இருந்தபோது, ​​​​பொருளாதாரம் பொறுப்பேற்கப்பட்டு கட்டமைக்கப்பட்டது. துறைமுகம், விமான நிலையம் மூடப்பட்ட போது நான் நாட்டை பொறுப்பேற்று சீர்செய்தேன். ஆனால் முன்னைய காலத்தில் அந்தப் பயணத்தை புலிகள் முறியடித்தனர்.

2015 இல் பொருளாதாரம் அதே வழியில் கட்டமைக்கப்பட்டது. 2019 இல் நான் நாட்டை ஒப்படைத்தபோது, ​​முதன்மை பட்ஜெட்டில் ஏழு பில்லியன் அந்நியச் செலாவணி இருந்தது.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அடுத்த தேர்தலில் போராட வேண்டும் என்று அன்று கூறினேன். ஆனால் அப்போது பல கட்சிகள் வாக்குறுதி அரசியலிலேயே ஈடுபட்டன. மூன்று பில்லியன் டொலர்களைக் கண்டுபிடிப்பது மட்டுமே எங்களின் பங்காக இருக்க வேண்டும் என்று மேற்கண்ட தேர்தலுக்கு முன்பே சொன்னேன். அன்றைய தேர்தல் அறிக்கையில் அந்த விஷயத்தையும் சேர்த்தோம். அந்த மூன்று பில்லியன் டொலர்கள் இருந்திருந்து நாணய நிதியத்துக்கு சென்றிருந்தால், நான் இன்று இங்கு இருந்திருக்க மாட்டேன்.

அன்றையதினம் எங்களில் ஒரு குழு ஒன்று கூடி மீண்டும் வாக்குறுதிகளை அளிக்கும் ஒரு அரசியல் குழுவை உருவாக்கினார்கள். சிறிகொத்தாவை கைப்பற்றுவோம் என்பதுதான் அவர்களின் கோஷம். நாட்டின் பிரச்சினை சிறிகொத்தவை கைப்பற்றுவதா, இல்லையா என்பதல்லவே. நாட்டின் நெருக்கடி குறித்து பேச கோட்டாபய ராஜபக்ஷ என்னை அழைத்த போது, நானும் தமிழ்க் கட்சிகளுமே சென்றிருந்தோம். இந்தப் பயணம் ஏப்ரல் மாதத்தில் முறியும் என்று எங்களுக்குத் தெரியும். எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்காமல் ஓடிவிட்டார். அவர் தங்களுக்கு வாக்களித்தவர்களுக்குத் துரோகம் செய்தார்.

ஜனதா விமுக்தி பெரமுனவைக் கண்டுபிடிக்கக் கூட முடியாதிருந்தது. தப்பியோடினார்களா? அல்லது வயிற்றுப்போக்கா? தெரியவில்லை. நான் நாட்டைப் பொறுப்பேற்று சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி மூன்றரை மில்லியன் எடுத்திருந்தார்.

எங்கள் விவசாய உற்பத்திகளுக்கு உரம் கிடைக்கவில்லை. இதை நான் அமெரிக்காவில் உள்ள சமந்தா பவரிடம் கூறியபோது, ​​அவர் உரத்தை அனுப்பினார். அங்கிருந்துதான் 2022_-23 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பருவத்திற்குத் தேவையான உரங்கள் வழங்கப்பட்டு விவசாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணி தொடங்கியது. அடுத்த பருவத்தில், பெரும்போகத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்தது. நாணய நிதியத்துடன் கலந்துரையாடியதன் பின்னர், இந்த நடவடிக்கைகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

  • 531
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads