சினிமா செய்திகள்
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
Ads
 ·   ·  1406 news
  •  ·  0 friends
  • 1 followers

முன்னேற்றப் பயணத்தை தொடர்வதா இல்லையா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் - ஜனாதிபதி ரணில்

நாட்டுக்குச் செய்ய வேண்டிய அனைத்தும் தம்மால் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, அந்தப் பயணத்தைத் தொடர்வதா? இல்லையா? என்பது குறித்து பொதுமக்களே தீர்மானிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் அல்லது ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயிக்கும் போது நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க மக்களுக்கு சந்தர்ப்பம் உண்டு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவினால் காலி உலுவிட்டகேயில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது -

நாட்டின் எதிர்காலம் என் கையில் உள்ளது என்று இங்கு பாடல் பாடிய இஷாக் மொஹிதீன் தனது பாடலில் கூறினார். உண்மையில், எதிர்காலம் என் கையில் இல்லை, மக்கள் கையில்தான் உள்ளது. இப்போது என்னால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டேன். எனது வீடும் தீப்பிடித்தது. அது பிரச்சினை இல்லை. தற்போது நாடு ஒரளவு சீரான நிலையை எட்டியுள்ளது.

எரிபொருள், மின்சாரம், உரம், பொருளாதாரம் இல்லாத நாட்டை நான் ஏற்றுக்கொண்டேன். யாரும் பொறுப்பேற்க முன்வரவில்லை, ஆனால் நான் ஏற்றுக்கொண்டேன்.  .

2021 ஆம் ஆண்டில் பொருளாதாரம் எதிர்மறையான நிலையில் இருந்தபோது, ​​​​பொருளாதாரம் பொறுப்பேற்கப்பட்டு கட்டமைக்கப்பட்டது. துறைமுகம், விமான நிலையம் மூடப்பட்ட போது நான் நாட்டை பொறுப்பேற்று சீர்செய்தேன். ஆனால் முன்னைய காலத்தில் அந்தப் பயணத்தை புலிகள் முறியடித்தனர்.

2015 இல் பொருளாதாரம் அதே வழியில் கட்டமைக்கப்பட்டது. 2019 இல் நான் நாட்டை ஒப்படைத்தபோது, ​​முதன்மை பட்ஜெட்டில் ஏழு பில்லியன் அந்நியச் செலாவணி இருந்தது.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அடுத்த தேர்தலில் போராட வேண்டும் என்று அன்று கூறினேன். ஆனால் அப்போது பல கட்சிகள் வாக்குறுதி அரசியலிலேயே ஈடுபட்டன. மூன்று பில்லியன் டொலர்களைக் கண்டுபிடிப்பது மட்டுமே எங்களின் பங்காக இருக்க வேண்டும் என்று மேற்கண்ட தேர்தலுக்கு முன்பே சொன்னேன். அன்றைய தேர்தல் அறிக்கையில் அந்த விஷயத்தையும் சேர்த்தோம். அந்த மூன்று பில்லியன் டொலர்கள் இருந்திருந்து நாணய நிதியத்துக்கு சென்றிருந்தால், நான் இன்று இங்கு இருந்திருக்க மாட்டேன்.

அன்றையதினம் எங்களில் ஒரு குழு ஒன்று கூடி மீண்டும் வாக்குறுதிகளை அளிக்கும் ஒரு அரசியல் குழுவை உருவாக்கினார்கள். சிறிகொத்தாவை கைப்பற்றுவோம் என்பதுதான் அவர்களின் கோஷம். நாட்டின் பிரச்சினை சிறிகொத்தவை கைப்பற்றுவதா, இல்லையா என்பதல்லவே. நாட்டின் நெருக்கடி குறித்து பேச கோட்டாபய ராஜபக்ஷ என்னை அழைத்த போது, நானும் தமிழ்க் கட்சிகளுமே சென்றிருந்தோம். இந்தப் பயணம் ஏப்ரல் மாதத்தில் முறியும் என்று எங்களுக்குத் தெரியும். எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்காமல் ஓடிவிட்டார். அவர் தங்களுக்கு வாக்களித்தவர்களுக்குத் துரோகம் செய்தார்.

ஜனதா விமுக்தி பெரமுனவைக் கண்டுபிடிக்கக் கூட முடியாதிருந்தது. தப்பியோடினார்களா? அல்லது வயிற்றுப்போக்கா? தெரியவில்லை. நான் நாட்டைப் பொறுப்பேற்று சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி மூன்றரை மில்லியன் எடுத்திருந்தார்.

எங்கள் விவசாய உற்பத்திகளுக்கு உரம் கிடைக்கவில்லை. இதை நான் அமெரிக்காவில் உள்ள சமந்தா பவரிடம் கூறியபோது, ​​அவர் உரத்தை அனுப்பினார். அங்கிருந்துதான் 2022_-23 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பருவத்திற்குத் தேவையான உரங்கள் வழங்கப்பட்டு விவசாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணி தொடங்கியது. அடுத்த பருவத்தில், பெரும்போகத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்தது. நாணய நிதியத்துடன் கலந்துரையாடியதன் பின்னர், இந்த நடவடிக்கைகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

  • 446
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads