சினிமா செய்திகள்
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
Ads
 ·   ·  7924 news
  •  ·  5 friends
  • I

    9 followers

டிசம்பரில் போதைப்பொருள் பாவனையை 50% குறைக்க முடியும் - பொலிஸ் மா அதிபர் நம்பிக்கை

நாட்டில் இந்த வருடத்தின் டிசம்பர் மாதத்திற்குள் போதைப் பொருள் பாவனையை 50 வீதமாக குறைக்க முடியும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.

போதைப் பொருளற்ற நாட்டைக் கட்டி யெழுப்பும் நோக்கில், ஆரம்பிக்கப்பட்ட யுக்திய சுற்றி வளைப்பு நடவடிக்கைகளுக்கு ஆறு மாதம் நிறைவடைந்துள்ளது.

புலனாய்வுப் பிரிவினர் பொலிஸார் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்புடன் இதுவரை 5979 நபர்களை கைது செய்ய முடிந்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். யுத்திய நடவடிக்கைகளில் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள போதைப் பொருட்களின் பெறுமதி 19 ஆயிரத்து 75 மில்லியன் ரூபா என்றும் அவர் தெரிவித்தார். யுத்திய நடவடிக்கைகளின் போது பல்வேறு வகையிலும் தமக்கு அச்சுறுத்தல்கள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தாலும், இந்நடவடிக்கையை கைவிடப் போவதில்லை என தெரிவித்த அவர், நாட்டில் இறுதியான ஒரு போதைப் பொருள் வர்த்தகரை கைது செய்யும் வரை இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்தார்.

யுத்திய நடவடிக்கைக்கு ஆறு மாதங்கள் நிறைவு பெறும் நிலையில், இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வொன்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உட்பட துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் ; போதைப் பொருள் வர்த்தகத்தை மேற்கொள்வோர் பலர் சுமார் 40 வருடங்களாக இரண்டு மூன்று பரம்பரையாக இந்த போதைப் பொருள் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் சம்பாதித்த சொத்துக்கள், பங்களாக்கள், கார்கள் என அனைத்தையும் அரசுடமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்திலேயே உள்ளனர். அவர்களில் எஞ்சியுள்ளவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

  • 354
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads