சினிமா செய்திகள்
‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு சர்வேதச அங்கீகாரம்
தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் லண்டன் நேஷனல் ஃபிலிம் அகாடமி திரைப்பட விருது விழாவில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான விருதை வென்றுள்ளது.அர
பச்சை நிற உடையில் புகைப்படம் வெளியிட்டார் நடிகை மடோனா
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நட
கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு
இணையத்தில் வைரலாகும் நஸ்ரியாவின் புகைப்படம்
தமிழிலும் மலையாளத்தில் சில படங்களில் மட்டுமே நடித்த நடிகை நஸ்ரியா அனைவராலும் விரும்பப்படும் கதாநாயகியாக இருந்தார். இதையடுத்து அவர் 2014 ஆம் ஆண்டு பகத்
கவிஞர் கண்ணதாசன் விரும்பிய கார்; கிடைக்காமல் ஏமாந்தும் போனார்
கவியரசர் கண்ணதாசனிடம் ஏற்கனவே ஒரு அம்பாஸிடர் கார் இருந்தும், தன் நண்பர் வைத்திருந்த வெளிநாட்டு கார் மீது விருப்பம். அந்த நண்பரும் அதை விற்கப் போகிறார்
ரஜினிகாந்த் மனதில் எழுத்தாளர் பாலகுமாரன்
மே 15 - 2018.எழுத்தாளர் பாலகுமாரன் இறந்து போனார்.அஞ்சலி செலுத்தி விட்டு வந்த ரஜினி அன்றைய தினம் ஒரு முக்கிய முடிவையும் எடுத்தார்.- பாட்ஷா 2- இனி இல்லவ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் எஸ்தர் அனில்
கமல்ஹாசன் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள்
 ‘ராயன்’ திரைப்படம் குறித்த சில தகவல்
தனுஷ் நடித்து முடித்துள்ள ஐம்பதாவது திரைப்படம் ராயன் என்பதும் தனுஷ் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பண
வேட்டையன், கங்குவா ஒரே நாளில் ரிலீஸ்
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல் முறையாக பிரபல நடிகர் சூர்யா நடித்து முடித்திருக்கும் திரைப்படம் தான் "கங்குவா". இதுவரை தமிழ் திரையுலகம
குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது
அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்ப
சினிமாவில் திறமைலாம் தேவையில்ல- மனம் திறந்த பிரபல நடிகை
பெங்காலி மொழி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகையாக வளர்ந்தவர் ரிமி சென். இந்தியில் பிரபலமான தூம், தூம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர்
அபராதத் தொகை செலுத்தினார் எம்.ஜி.ஆர்.
1987.எம்ஜிஆர் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம். அப்போதுதான் 'ஆனந்த விகடன்' அட்டையில் அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்த அந்த ஜோக் வெளிவந்தது. அதை எடுத்துச்
Ads
 ·   ·  646 news
  •  ·  0 friends
  • 1 followers

நாட்டின் பொருளாதார மீட்சியில் ஜப்பானுக்கு மிகமுக்கிய வகிபாகம் உண்டு – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

இலங்கையின் பொருளாதார மீட்சியில் ஜப்பான் பரஸ்பர நன்மையளிக்கக்கூடிய மிகமுக்கிய வகிபாகத்தைக் கொண்டிருப்பதாக தாம் கருதுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவின் அழைப்பின்பேரில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இம்மாதம் 1 - 7 ஆம் திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவை சந்தித்துக் கலந்துரையாடிய அமைச்சர் அலி சப்ரி, அதனைத்தொடர்ந்து நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: எமது இரு நாடுகளும் பல்வேறு துறைகள் சார்ந்து இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதையும், விரிவுபடுத்துவதையும் முன்னிறுத்தி தொடர்ச்சியாக மிகநெருங்கிப் பணியாற்றி வந்திருக்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பானது பரஸ்பர மரியாதை மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. அதுமாத்திரமன்றி ஜனநாயகம், மனித உரிமைகள், திறந்த பொருளாதார செயற்பாடுகள் மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகள் என்பனவே எமது இருநாடுகளுக்கு இடையில் விசேட பிணைப்பை உருவாக்கியுள்ளது. அப்பிணைப்பு பரஸ்பர உயர்மட்ட விஜயங்களால் மேலும் வலுவடைந்துள்ளது. இலங்கை கடந்த ஆண்டு தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த தருணத்தில் ஜப்பான் வழங்கிய நிதி உள்ளிட்ட சகல உதவிகள் மற்றும் வெளிக்காட்டிய உடனிற்பு என்பவற்றை நாம் பெரிதும் வரவேற்கின்றோம். இலங்கை கடந்த மாதம் 26 ஆம் திகதி முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர்களுடன் கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

உத்தியோகபூர்வ கடன்வழங்குனர்கள் குழுவுக்கு உபதலைமை வகித்த ஜப்பான் எமது வெளியகக் கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி கூறுகின்றோம். எமது பொருளாதார மீட்சியில் ஜப்பான் பரஸ்பர நன்மையளிக்கக்கூடிய முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருப்பதாகவே நாம் கருதுகின்றோம். அடுத்ததாக ஏற்கனவே தீர்மானமாகியிருக்கும் ஜப்பானிய முதலீட்டுத் திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறும் நாம் ஜப்பானுக்கு அழைப்புவிடுக்க விரும்புகின்றோம். அதேபோன்று மின்சாரம், துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதி, பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஜப்பானின் புதிய முதலீடுகளை வரவேற்கின்றோம்.

ஜைக்கா நிறுவனத்தின் ஊடாக ஜப்பான் இலங்கையின் மிகமுக்கிய அபிவிருத்திப் பங்காளியாகத் திகழ்கின்றது. அதேவேளை தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றில் இலங்கையினால் அடையப்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பொறுத்தமட்டில், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான இடைக்கால செயலகத்தின் இயங்குகை உள்ளடங்கலாக இவ்விடயத்தில் அரசாங்கத்தினால் அண்மையகாலங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவுடனான சந்திப்பின்போது விளக்கமளித்தேன்.

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு ஜப்பானும் அதன் பாராட்டை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், இந்து சமுத்திர எல்லை நாடுகள் அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் நாடு என்ற ரீதியில், அவ்வமைப்பை இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கான களமாகப் பயன்படுத்துவதற்கே நாம் முன்னுரிமை அளிக்கின்றோம் எனவும் வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துரைத்தேன் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 161
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads