சினிமா செய்திகள்
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
Ads
 ·   ·  2864 news
  •  ·  1 friends
  • 2 followers

பாலஸ்தீனத்திற்கு அமைதிப்படையை அனுப்ப தயார் - மலேசியா பிரதமர் அறிவிப்பு!

ஐக்கிய நாட்டு நிறுவனம் அனுமதி வழங்கினால் பாலஸ்தீனத்திற்கு அமைதிப்படையை அனுப்புவது தொடர்பில் இந்தோனீசியாவுடன் ஒத்துழைக்க மலேசியா தயாராக இருப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

இந்தோனீசியாவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாந்தோவுடன் நேற்றுமுன்தினம் ஜூலை 1ஆம் திகதி, அன்வார் தொலைபேசி வழியாகப் பேசினார்.

இரு தலைவர்களின் கலந்துரையாடலில் பாலஸ்தீனம் குறித்த பேச்சு முக்கிய பங்கு வகித்தது.

மலேசியா - இந்தோனீசியா அனைத்துலக அமைதிப்படையில் ஒத்துழைப்பு எனும் யோசனையையும் இந்த ஒத்துழைப்பை ஆசியான் வட்டாரம் முழுமைக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தையும் தாம் வரவேற்பதாக மலேசியப் பிரதமர் கூறினார்.

தொலைபேசி வழியான கலந்துரையாடலில் தாங்கள் நடப்பு விவகாரங்கள் குறித்துப் பேசியதாக அவர் சொன்னார்.

குறிப்பாக, வட்டார, அனைத்துலக ஒத்துழைப்பு, அமைதி ஆகியவை பற்றிய திரு பிரபோவோவின் கண்ணோட்டம் பற்றித் தாங்கள் பேசியதாகப் பிரதமர் அன்வார் கூறினார்.

பாலஸ்தீனத்தில் நிலவும் மனிதநேய நிலவரம் குறித்துப் பேசுகையில், மலேசியா ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியதாக அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் நீடித்த தொலைபேசி உரையாடலில், சென்ற வாரம் பெரிய அளவிலான அறுவை சிகிச்சை செய்துகொண்ட திரு பிரபோவோ விரைவில் நலம்பெற வாழ்த்துத் தெரிவித்ததாகவும் மலேசியப் பிரதமர் கூறினார். ராணுவச் சேவையின்போது ஏற்பட்ட காயங்களிலிருந்து நலம்பெற திரு பிரபோவோ அந்த அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டார்.

மலேசியா, இந்தோனீசியா இரண்டுக்குமே அமைதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்ட அனுபவம் உண்டு.

ஏப்ரல் மாத இறுதி நிலவரப்படி ஐக்கிய நாட்டு நிறுவன (ஐநா) அமைதிப்படை நடவடிக்கைகளில் மலேசிய ராணுவத்தினர் 862 பேர் ஈடுபட்டிருப்பதாக ஐநா கூறியது. அவர்களில் கிட்டத்தட்ட 825 பேர் துருப்பினர் என்று அது தன் அறிக்கையில் குறிப்பிட்டது.

1960ஆம் ஆண்டு முதல், 38க்கும் மேற்பட்ட அமைதிப்படை நடவடிக்கைகளில் மலேசியா பங்கெடுத்துள்ளது. லெபனானில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும் அதில் அடங்கும் என்று ஐநாவுக்கான மலேசியாவின் நிரந்தர படைக்குழுவின் ராணுவ ஆலோசகர் கர்னல் ஷம்சுரி நூருதின் பிப்ரவரி மாதம் ஆற்றிய உரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

ஐநா அறிக்கையில், ஏப்ரல் மாத இறுதி நிலவரப்படி ஐநா அமைதிப்படை நடவடிக்கைகளில் இந்தோனீசிய ராணுவத்தினர் 2,715 பேர் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

மலேசியப் பிரதமர் அன்வார், பாலஸ்தீனத்திற்கு வலுவான ஆதரவுக் குரல் எழுப்புவர். ஹமாஸ் தரப்புடனான மலேசியாவின் உறவுகளைத் தற்காத்துப் பேசுபவர் என்பதை சிஎன்ஏ சுட்டிக்காட்டியது.

காஸா போர் தொடர்பில் இஸ்‌ரேலுக்கு நெருக்குதல் தர அமெரிக்காவும் இதர மேலை நாடுகளும் தயங்குவது குறித்துத் திரு அன்வார் ஏற்கெனவே கவலை தெரிவித்ததையும் அது குறிப்பிட்டது.

000

  • 500
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads