சினிமா செய்திகள்
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
Ads
 ·   ·  1410 news
  •  ·  0 friends
  • 1 followers

போஷாக்கு குறைபாடு, வேலையின்மை வறுமையை நிவர்த்திக்கவே அஸ்வெசும, உறுமய திட்டங்கள் முன்னெடுப்பு - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

போஷாக்கு குறைப்பாடு, வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை நிவர்த்திக்கவே இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான தொழிற்சாலைகள் மற்றும் அஸ்வெசும, உறுமய போன்ற திட்டங்கள் செயற்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் போஷாக்கு குறைபாடு, வறுமை, வேலையின்மை என்பன நாட்டுக்கு நற்செய்தியா? துயர் செய்தியா? என்று சாடாளுமன்றத்தில் நேற்று (02) எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அத்துடன் நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்து மக்கள் சிரமப்படும் வேளையில், ​​பிரதமர் பதவியை ஏற்காமல், பயந்து ஓடுவது நற்செய்தியா? துயர் செய்தியா? என்று பதில் கேள்வி கேட்ட ஜனாதிபதி மேலும் கூறுகையில்,

போஷாக்கு குறைபாட்டினால் பிள்ளைகள் பாதிக்கப்படுவது நல்லதா கெட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். இது கெட்டதாகும். அதனால்தான், அஸ்வெசும திட்டத்தை செயல்படுத்தினோம்.

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு பத்து கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது.

வறுமை நல்லதா கெட்டதா என்று கேட்கிறார்கள்.வறுமை கெட்டது! அதனால்தான் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இரண்டரை இலட்சம் பேருக்கு அந்த வீடுகளின் உரிமை வழங்கப்படுகிறது. வேறு என்ன வழங்க வேண்டும்?

வேலையின்மை நல்லதா கெட்டதா என்றும் கேள்வி எழுப்பினார். வேலையின்மை நல்லத்தல்ல என்பதாலேயே புதிய தொழிற்சாலைகளை ஆரம்பிக்கிறோம். புதிய முதலீடுகளையும் கொண்டு வருகிறோம்.

அதேபோல் நான், இன்னும் ஒரு விடயத்தை கேட்க விரும்புகிறேன். நாட்டின் பொருளாதாரம் சரிந்து மக்கள் சிரமப்படும் போது, ​​பிரதமர் பதவியை ஏற்காமல் பயந்து ஓடுவது நல்லதா? கெட்டதா?

கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்கனவே 200 பில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி உங்களுக்கு வருத்தம் அளிக்கிறதா?

மீண்டும் வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும் போது கண்டி அதிவேகப் நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வோம். அது வருத்தமளிக்கும் செய்தியா? அது தொடர்பான அறிக்கைகளை கபீர் ஹசீம், ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறோம்.

இப்போது தனியார் பிணை முறி வழங்குநர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. Clifford Chance நிறுவனம் இது பற்றிய தகவல்களை இப்போதைக்கு வெளியிட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து ஏனைய தரப்புக்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் தெரியவரும் என்பதைாலேயே அவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் மூன்று ஒப்பந்தங்களையும் ஒரே நேரத்தில் சமர்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் போன்றே கானாவும் இவ்வாறான ஒப்பந்தங்களில் கைசாத்திட்டுள்ளது. ஆனாலும் கானா அந்த விடயங்களை இன்று வரையில் வெளியிடவில்லை.

குறிப்பாக, இந்த விடயங்கள் அனைத்தும் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரச நிதி தொடர்பான செயற்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளன. குழுவில் இருப்போர் அதனை ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பர். ஹர்ஷ டி சில்வாவைக் கண்டு உங்களுக்கு பொறாமை ஏற்படுகிறதா? அதனை செய்வதை நீங்கள் விரும்பவில்லையா? இப்போது இவ்வாறு பேசுவதன் அர்த்தம் என்ன? ஹர்ஷ டி சில்வாவின் குழு இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தக் குழு எந்த மாதிரியான அறிக்கையைத் தயாரிக்கும் என்பது எமக்குத் தெரியாது. அந்த அறிக்கை சாதகமாக வருமா, எதிராகத் தயாரிக்கப்படுமா என்பதும் எமக்குத் தெரியாது.

இப்போது விவாதிப்பதை விடுத்து அறிக்கையின் படி செயல்படுவோம். கலாநிதி ஹர்ஷ டி சில்வா பற்றி கேள்வி எழுந்தால் அது குறித்த விவாதமொன்று தேவைப்படுமா? இல்லாவிட்டால், நாலக கொடஹேவாவை எதிர்க் கட்சியின் ஆலோசகராக நியமித்து ஒரு தடவை வீழ்ந்த குழியில், மறுமுறை விழ முயற்சிக்கிறார்களாக என்ற கேள்விக்குறியும் உள்ளது. ” என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

00

  • 390
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads