சினிமா செய்திகள்
கவிஞர் கண்ணதாசன் விரும்பிய கார்; கிடைக்காமல் ஏமாந்தும் போனார்
கவியரசர் கண்ணதாசனிடம் ஏற்கனவே ஒரு அம்பாஸிடர் கார் இருந்தும், தன் நண்பர் வைத்திருந்த வெளிநாட்டு கார் மீது விருப்பம். அந்த நண்பரும் அதை விற்கப் போகிறார்
ரஜினிகாந்த் மனதில் எழுத்தாளர் பாலகுமாரன்
மே 15 - 2018.எழுத்தாளர் பாலகுமாரன் இறந்து போனார்.அஞ்சலி செலுத்தி விட்டு வந்த ரஜினி அன்றைய தினம் ஒரு முக்கிய முடிவையும் எடுத்தார்.- பாட்ஷா 2- இனி இல்லவ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் எஸ்தர் அனில்
கமல்ஹாசன் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள்
 ‘ராயன்’ திரைப்படம் குறித்த சில தகவல்
தனுஷ் நடித்து முடித்துள்ள ஐம்பதாவது திரைப்படம் ராயன் என்பதும் தனுஷ் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பண
வேட்டையன், கங்குவா ஒரே நாளில் ரிலீஸ்
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல் முறையாக பிரபல நடிகர் சூர்யா நடித்து முடித்திருக்கும் திரைப்படம் தான் "கங்குவா". இதுவரை தமிழ் திரையுலகம
குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது
அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்ப
சினிமாவில் திறமைலாம் தேவையில்ல- மனம் திறந்த பிரபல நடிகை
பெங்காலி மொழி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகையாக வளர்ந்தவர் ரிமி சென். இந்தியில் பிரபலமான தூம், தூம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர்
அபராதத் தொகை செலுத்தினார் எம்.ஜி.ஆர்.
1987.எம்ஜிஆர் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம். அப்போதுதான் 'ஆனந்த விகடன்' அட்டையில் அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்த அந்த ஜோக் வெளிவந்தது. அதை எடுத்துச்
ஸ்டராப்லெஸ் உள்ளாடையில் ஜான்வி கபூர்
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஜான்வி கபூர் அடிக்கடி போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.இவர் வ
புத்தம் புது லுக்கில் லெஜண்ட் சரவணன்
ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘தி லெஜண்ட்’. இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணன், விவேக், நாசர், சுமன் உள்ளிட்ட பலர் நடித்திருந
அந்தரத்தில் பறக்கும் அஜித் கார்
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு படமாக்கப்பட்ட கார் காட்சி ஒன்றின் வீட
சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்
இயக்குனர் ராம் பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் “ஏழுமலை ஏழு கடல்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இ
Ads
 ·   ·  620 news
  •  ·  0 friends
  • 1 followers

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நாளை விசேட நாடாளுமன்ற அமர்வு

நாடாளுமன்றம் நாளை 02 ஆம் திகதியும் நாளைமறுதினம் 03 ஆம் திகதியும் கூடுமென நாடாமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காகவே, நாளை 02 மற்றும் நாளைமறுதினம் 03 ஆம் திகதிகளில் விசேட நாடாளுமன்ற அமர்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இது தொடர்பில் கூறுகையில் –

இவ்விசேட நாடாளுமன்ற அமர்வை நாளை 02 செவ்வாய் மற்றும் புதன்கிழமை 03 ஆம் திகதிகளில் கூட்டுவதற்கு கடந்த வெள்ளிக்கிழமை கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் முழு நாட்டு மக்களினதும் கவனமும் நாளை நடக்கவிருக்கும் நிகழ்வில் குவிந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜூலை 02 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்திய பின்னர் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் தொடர்பிலான விவாதமும் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்த பின்னர், அமைச்சர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஆய்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படுமெனவும், தேவைப்பட்டால் நாளைமறுதினம் (03) வாக்கெடுப்பை நடத்த முடியுமெனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே புதன்கிழமை அமர்வில்,ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் கட்டாயம் நாடாளுமன்றத்துக்கு சமுகமளிக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் இலங்கை அரசாங்கமும், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவும் (OCC) கடந்த 2024.06.26 இல்,கைச்சாத்திட்ட இறுதி உடன்படிக்கை, இலங்கை அரசாங்கம் மற்றும் சீன ஏற்றுமதி - இறக்குமதி வங்கி (EXIM Bank) ஆகியவற்றுக்கிடையில் 2024.06.26 இல், கைச்சாத்திடப்பட்ட இறுதி உடன்படிக்கை ஆகியவற்றை நடைமுறைப் படுது்துவதற்குத் தேவையான அனுமதியை, நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருக்கு வழங்குவதற்காக இத்தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவிதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

 

  • 168
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads