சினிமா செய்திகள்
கவிஞர் கண்ணதாசன் விரும்பிய கார்; கிடைக்காமல் ஏமாந்தும் போனார்
கவியரசர் கண்ணதாசனிடம் ஏற்கனவே ஒரு அம்பாஸிடர் கார் இருந்தும், தன் நண்பர் வைத்திருந்த வெளிநாட்டு கார் மீது விருப்பம். அந்த நண்பரும் அதை விற்கப் போகிறார்
ரஜினிகாந்த் மனதில் எழுத்தாளர் பாலகுமாரன்
மே 15 - 2018.எழுத்தாளர் பாலகுமாரன் இறந்து போனார்.அஞ்சலி செலுத்தி விட்டு வந்த ரஜினி அன்றைய தினம் ஒரு முக்கிய முடிவையும் எடுத்தார்.- பாட்ஷா 2- இனி இல்லவ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் எஸ்தர் அனில்
கமல்ஹாசன் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள்
 ‘ராயன்’ திரைப்படம் குறித்த சில தகவல்
தனுஷ் நடித்து முடித்துள்ள ஐம்பதாவது திரைப்படம் ராயன் என்பதும் தனுஷ் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பண
வேட்டையன், கங்குவா ஒரே நாளில் ரிலீஸ்
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல் முறையாக பிரபல நடிகர் சூர்யா நடித்து முடித்திருக்கும் திரைப்படம் தான் "கங்குவா". இதுவரை தமிழ் திரையுலகம
குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது
அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்ப
சினிமாவில் திறமைலாம் தேவையில்ல- மனம் திறந்த பிரபல நடிகை
பெங்காலி மொழி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகையாக வளர்ந்தவர் ரிமி சென். இந்தியில் பிரபலமான தூம், தூம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர்
அபராதத் தொகை செலுத்தினார் எம்.ஜி.ஆர்.
1987.எம்ஜிஆர் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம். அப்போதுதான் 'ஆனந்த விகடன்' அட்டையில் அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்த அந்த ஜோக் வெளிவந்தது. அதை எடுத்துச்
ஸ்டராப்லெஸ் உள்ளாடையில் ஜான்வி கபூர்
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஜான்வி கபூர் அடிக்கடி போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.இவர் வ
புத்தம் புது லுக்கில் லெஜண்ட் சரவணன்
ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘தி லெஜண்ட்’. இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணன், விவேக், நாசர், சுமன் உள்ளிட்ட பலர் நடித்திருந
அந்தரத்தில் பறக்கும் அஜித் கார்
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு படமாக்கப்பட்ட கார் காட்சி ஒன்றின் வீட
சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்
இயக்குனர் ராம் பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் “ஏழுமலை ஏழு கடல்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இ
Ads
 ·   ·  582 news
  •  ·  0 friends
  • 1 followers

10 பேருக்கு 400 ஏக்கர் காணியை கொடுக்க நினைக்கின்றனர் சிலர் - கமநல சேவை நிலையத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் வலியுறுத்து

அருவி தோட்டத்தில் 400 ஏக்கருக்கு மேற்பட்ட மத்திய வகுப்பு வயல்காணிகளை ஒரு சிலர் மட்டும் பயன்படுத்துவதை மீள் பரிசீலனை செய்து, காணியற்ற மக்களுக்கு ஒரு ஏக்கர் வீதம் குறித்த காணிகளை தற்காலிகமாக வழங்க வேண்டும் என்று அபிவிருத்திக் குழு கூட்ட தீர்மானம் உள்ளதாக தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர் குலசிங்கம் திலீபன் ஆனால், செட்டிகுளம் பிரதேச செயலகம் அதனை நடைமுறைப் படுத்தவில்லை. என குற்றம் சாட்டியுள்ளார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவர்களான குலசிங்கம் திலீபன் மற்றும் ஆளுநர் திருமதி சாள்ஸ் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மீண்டும்  குறித்த அருவித்தோட்டம் வயல்காணி விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் சுட்டிக் காட்டியிருந்தார்

குறிப்பாக ஆவணம் இருக்கக் கூடிய 75 ஏக்கர் காணியினை தவிர்த்து ஏனைய காணிகளை, வயல் காணியற்ற மக்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்க வேண்டும் என்றும், இக்காணிக்கு அருகில் தற்பொழுது பற்றைக் காடாக இருக்கக் கூடிய 300 ஏக்கர் காணியினையும் மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க வேண்டுமென்றும் எமது முன்மொழிவுக்கமைய முடிவு எடுக்கப்பட்டதோடு கட்டாயம் நடைமுறைப் படுத்த வேண்டுமென்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது

அத்துடன் அபிவிருத்திக் குழு தலைவர், அரசாங்க அதிபர், மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர் ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒன்றும் குறித்த விடயத்திற்காக ஆளுநரால் நியமிக்கப்பட்டது

மேலும்,

செட்டிகுளம் கமநல சேவை நிலையமும், அருவித் தோட்டம் வயல் காணியில் 250 ஏக்கர் காணியினை செய்து வந்ததென்றும், அதற்கான சரியான கணக்காய்வு செய்யப்படவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது,

கமநல சேவை உதவி ஆணையாளரும் அதனை ஏற்றுக் கொண்டு, மாவட்ட செயலகமே ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். விரைவில் ஆய்வு செய்வதாக அரசாங்க அதிபர் உறுதியளித்தார்.

இதனிடையே செட்டிகுளம் கமநல சேவை நிலையம் 80 ஏக்கர் காணியினை மேலதிகமாகவும் செய்கை செய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததும் இதன்போது சுட்ட்டப்பட்டது

குறிப்பாக வருட குத்தகை ஒரு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாவாக எழுதப்பட்டு, இருபது ஆயிரம் ரூபாய் வரை வேறு நபர்களுக்கு குத்தகைக்கு கொடுத்து லாபம் பெற்றதாக தகவல் கிடைக்கப் பெற்றது. ஆக மொத்தம் கோடிக்கணக்கான பணம் கிடைத்துள்ளது என்பது உண்மை. ஆனால் பயன் பெற்றவர்கள் யார்?...இதைவிட 80 ஏக்கரில் கிடைத்த பணம்? தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

  • 328
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads