Beautiful birds
கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், கடுமையான நெஞ்சு வலியுடன் சிகிச்சைக்காக சுமார் 8 மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்த இந்தியர் உயிரிழநண் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சை கிடைக்காத நிலையில் 44 வயதுடைய இந்திய வம்சாவளி நபர், மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.
பிரசாந்த் ஸ்ரீகுமார் என்ற குறித்த நபர் கடந்த 22 ஆம் திகதி பணியில் இருந்தபோது, அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் எட்மண்டனில் உள்ள 'கிரே நன்ஸ்' மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவின் காத்திருப்பு அறையில் அமர வைக்கப்பட்டார்.
அவர் தொடர்ந்தும் கடுமையான வலி இருப்பதாக கூறியபோதிலும் அவருக்கு இ.சி.ஜி (ECG) பரிசோதனை செய்த ஊழியர்கள், அதில் ஆபத்தான அறிகுறிகள் ஏதுமில்லை என்று கூறி மீண்டும் காத்திருக்கச் கூறியதாக அவரது குடும்பத்தார் கூறுகின்றனர்.
வலியால் துடித்த பிரசாந்திற்கு 'டைலனோல்' (Tylenol) மாத்திரைகள் மட்டுமே வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது இரத்த அழுத்தம் மிகக் கடுமையாக உயர்ந்தும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுமார் 8 மணிநேரத்திற்கும் மேலான நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, பிரசாந்த் சிகிச்சை அறைக்குள் அழைக்கப்பட்டார்.
அங்கு சென்ற 10 வினாடிகளிலேயே அவர் தனது நெஞ்சைப் பிடித்தபடி சரிந்து விழுந்துள்ளார். அவருக்கு முதலுதவி அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவருக்கு ஏற்பட்ட 'மாரடைப்பு' (Cardiac Arrest) மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்த பிரசாந்த் ஸ்ரீகுமாருக்கு 3, 10 மற்றும் 14 வயதுகளில் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், நோயாளியின் தனிப்பட்ட விபரங்களை வெளியிட முடியாது எனத் தெரிவித்துள்ள போதிலும், உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
ஆஞ்சநேயர் கோவிலுக்கு நாம் செல்லும் போது அங்குள்ள சுவற்றில் "அஞ்சிலே ஒன்றை" என்ற பாடல் இருக்கும்...
அதன் அர்த்தம் எவ்வளவு அழகாக தமிழில் கவிச் சக்கரவர்த்தி கம்பர் எழுதியிருக்கிறார் என்பதை காண்போம்!!!.
ராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன். அவரைப் பற்றிய தமிழ் ஜால கம்பரின் அருமையான பாடல்.
அஞ்சிலே ஒன்று பெற்றான்!!! அஞ்சிலே ஒன்றைத் தாவி!!!
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி!!!
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்!!!
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்!!!
அழகு தமிழின் பொருள்:-
(அஞ்சி =ஐந்து)
அஞ்சிலே ஒன்று பெற்றான் (ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் இவற்றில் காற்றுதன்மையாகிய வாயு பகவான் பெற்றெடுத்த பிள்ளை)
அஞ்சிலே ஒன்றைத் தாவி (ஐம்பூதங்களில் ஒன்றான நீர் தன்மையாகிய சமுத்திரத்தை தாண்டி ஆகாய மார்க்கமாக )
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர்காக்க ஏகி (ராமன்,இலக்குவன்,பரதன், சத்ருக்ணன் சகோதரர்கள் நான்கு பேர் இருக்க இராமரால் கட்டி தழுவப் பட்ட குகன் ஐந்தாம் சகோதரனாகி, அந்த ஐந்து சகோதரர்களுக்கு ஆறாவதாக சேர்ந்தவர் இவர். இவர் தனது உயிருனும் மேலான இராம பிரானின் உயிர் காக்க சீதையை தேடி சென்றவர்)
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு (ஐம்பூதங்களில் ஒன்றான நிலதன்மையாகிய பூமித் தாய் பெற்றெடுத்த பெண் சீதை, அணங்கு: பெண் அந்த சீதையை கண்டுபிடித்து வந்தவன்)
அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் (அயலார்: மற்றவர்; ) இலங்கையில் ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பு தன்மையாகிய அக்கினியை வைத்து அந்த ஊரையே தீக்கிரையாக்கியவர்)
அவன் எம்மை அளித்துக் காப்பான் இத்தகு பெருமைகள் உடையவர்.
பாடலில் யார் இவர் என்று குறிப்பிடவில்லை என்றாலும், இது அனுமரே!.
அந்த அனுமர் பெருமான் நமக்கு வாழ்வு அளித்து காப்பார்.ஆஞ்சநேயர் கோவிலுக்கு நாம் செல்லும் போது இந்த பாடலை பாடியவாறு வலம் வருவோம்.
திரிபலா என்றால் என்ன?
திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.
திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?
திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி:
ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ‘ஆன்டிபாடி’ (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.
ஆன்டி_ஆக்ஸிடன்ட்:
உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான “கட்டற்ற காரணிகளை” (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.
செரிமானமின்மை:
செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.
மலச்சிக்கல்:
திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்:
வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.
இரத்தசோகை:
இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).
சர்க்கரை நோய்:
திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.
உடல்பருமன்:
இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.
சருமப் பிரச்சனைகள்:
இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.
சுவாசக் கோளாறுகள்:
சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.
தலைவலி:
தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.
புற்று நோய்:
புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் வந்து சேரும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் ஆலோசனை கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
ரிஷபம்
சிறு வாய்ப்புகளிலும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களின் தேவைகளுக்காக சிலரின் உதவிகளை தேடுவீர்கள். அரசு சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்த வேறுபாடுகள் படிப்படியாக குறையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மிதுனம்
எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன் பாக்கிகளை கனிவாக பேசி வசூலிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் வந்து போகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். சொத்து சம்பந்தப்பட்ட செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
கடகம்
பேச்சுக்களில் நிதானம் வேண்டும். பிறமொழி மக்கள் பற்றிய புரிதல் ஏற்படும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். மற்றவர்களை எதிர்பார்க்காமல் செயல்படுவது நல்லது. உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். உதவி செய்யும் பொழுது கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
சிம்மம்
சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். குழந்தைகளால் மதிப்புகள் உயரும். துணைவர் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருக்கும். வேலையாட்களின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
கன்னி
நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் அக்கறை வேண்டும். சேமிப்பை மேம்படுத்தும் எண்ணம் அதிகரிக்கும்.சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியான பயணங்களில் அறிமுகங்கள் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
துலாம்
எதிர்காலம் சார்ந்த சில முயற்சிகள் கைகூடி வரும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வாடிக்கையாளர்கள் இடத்தில் கனிவு வேண்டும். உத்தியோகத்தில் எதிர்பாராத பொறுப்புகளால் அலைச்சல்கள் உண்டாகும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். தெளிவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
வெளியூர் பயணங்களாலும் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். மாற்றமான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். வாகன விரயம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் மனவருத்தம் தோன்றி மறையும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
தன்னம்பிக்கையோடு சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் தொடர்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன் வகையில் ஆதாயம் உண்டாகும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
வியாபாரம் ரீதியான ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். இறை சார்ந்த வழிபாடுகளில் ஆர்வம் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
கும்பம்
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் அலைச்சல் ஏற்படும்.கணவன் - மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
விடாப்படியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் சில விரயம் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுகமான சில போட்டிகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் சார்ந்த பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 10 ஆம் தேதி வியாழக்கிழமை 25.12.2025.
இன்று காலை 11.24 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.
காலை 06.40 வரை அவிட்டம். பின்னர் சதயம்.
இன்று பிற்பகல் 01.29 வரை வஜ்ரம். பிறகு சித்தி.
இன்று காலை 11.24 வரை கௌலவம். பின்னர் இரவு 11.01 வரை பவம். பிறகு தைத்தூலம்.
இன்று காலை 06.25 வரை மரண யோகம். பின்னர் காலை 06.40 வரை சித்தயோகம். பிறகு மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.00 முதல் 01.00 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
திரையுலகின் சரித்திர எதிர்பார்ப்பு: தமிழ் திரையுலகமே இதுவரை பார்த்திராத ஒரு பிரம்மாண்ட எதிர்பார்ப்பு 'ஜனநாயகன்' படத்தின் மீது நிலவி வருகிறது. இது நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால், ரசிகர்கள் இதனை ஒரு சாதாரணத் திரைப்படமாகப் பார்க்காமல், ஒரு உணர்ச்சிகரமான பிரியாவிடை நிகழ்வாகக் கொண்டாடி வருகின்றனர். வரும் 2026, ஜனவரி 9-ம் தேதியை எதிர்நோக்கி ஒட்டுமொத்த கோலிவுட்டும் காத்திருக்கிறது.
முன்பதிவில் புதிய சாதனை: விஜய் படங்களுக்கு எப்போதும் நிலவும் 'அட்வான்ஸ் புக்கிங்' மோகம், இந்தப் படத்தில் உச்சத்தைத் தொட்டுள்ளது. திரையரங்குகளில் படம் வெளியாவதற்கு முன்பே டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர். குறிப்பாக, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கப்பட்டு, அமோகமாக நடைபெற்று வருகிறது.
சர்வதேச அளவில் மாஸ் ஓப்பனிங்: பொதுவாக ஒரு படத்தின் முன்பதிவு ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன்புதான் சூடுபிடிக்கும். ஆனால், 'ஜனநாயகன்' படத்தின் முன்பதிவு பல வாரங்களுக்கு முன்பே வெளிநாடுகளில் தொடங்கப்பட்டுவிட்டது. உலகம் முழுவதும் உள்ள விஜய்யின் ரசிகர்கள், தங்கள் தலைவனின் கடைசிப் படத்தை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதை இந்தப் புக்கிங் நிலவரம் காட்டுகிறது.
17 நாட்களுக்கு முன்பே வசூல் வேட்டை: திரைப்பட ரிலீசுக்கு இன்னும் 17 நாட்கள் இடைவெளி இருக்கும் சூழலிலேயே, வெளிநாட்டு முன்பதிவில் இப்படம் மலைக்க வைக்கும் தொகையை எட்டியுள்ளது. இதுவரை கிடைத்த தகவல்களின்படி, சர்வதேச சந்தையில் மட்டும் 'ஜனநாயகன்' திரைப்படம் சுமார் ரூ. 4.2 கோடிக்கும் அதிகமான வசூலை முன்பதிவு மூலமாகவே ஈட்டியுள்ளது. இது ஒரு மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
ஜனவரி 9-ல் உலகளாவிய கொண்டாட்டம்: தற்போது தொடங்கியுள்ள இந்த முன்பதிவு வேகம், படம் வெளியாகும் போது புதிய வசூல் சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகள் திருவிழாக் கோலம் உறுதி. தளபதியின் இந்த 'கடைசி யுத்தம்' பாக்ஸ் ஆபீஸில் பல பழைய சாதனைகளைத் தகர்த்து எறியும் என்பதில் சந்தேகமில்லை.
ஆன்மிகத்துறையில் ஈடுபடுபவர்கள் கூட சில சக்திகளும் சித்திகளும் வந்தவுடன் புகழையும் பணத்தையும் சம்பாதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்கு மேல் அவர்கள் வளர்வதில்லை. இதே கருத்தை ராமகிருஷ்ண பரமஹம்சர் மிக அழகாக விளக்கினார். அவர் ஊரில் உள்ள கோயிலில் இறைவனுக்கு இனிப்பான பிரசாதங்களை படைப்பார்கள். அதைச் சுவைக்க எறும்புக் கூட்டம் வந்துவிடும். அவற்றை விரட்ட இப்போது இருப்பது போல் ரசாயனப் பொடிகள் எல்லாம் இல்லை.
""எறும்புகளை எப்படி வரவிடாமல் தடுப்பது?'' என்று ராமகிருஷ்ணரிடம் கோயில் நிர்வாகத்தினர் கேட்டார்கள்.
""கோவில் வாசலில் கொஞ்சம் சர்க்கரையைத் தூவி விடுங்கள். அதைத் தாண்டி அவைகள் வராது.''
கொஞ்சமும் வன்முறையில்லாத அற்புதமான வழி. எறும்பிற்கு வேண்டியது ஒரு இனிப்புப் பொருள். அது கோவில் வாசலிலேயே சாதாரணச் சர்க்கரையில் கிடைக்கும் போது, எதற்காக உள்ளே வரவேண்டும்?
ராமகிருஷ்ணரின் யோசனை நல்ல பலனைக் கொடுத்தது. ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் அன்று அவர் தன் சீடர்களுக்குச் செய்த உபதேசம்.
""அந்த எறும்புகளின் நிலையில்தான் இன்று பலர் இருக்கிறார்கள். இறையருளைத் தேடி சன்னிதானத்திற்கு வருகிறார்கள். இறைவன் அவர்களுக்கு செல்வம், புகழ் போன்றவற்றைக் கொடுக்கிறான். இவை எல்லாம் கோயில் வாசலில் கொட்டிக்கிடக்கும் சாதாரணச் சர்க்கரை. உண்மையான ஆன்மிக இனிப்பு கோயில் கருவறையில் இருக்கிறது. ஆனால், சாதாரணச் சர்க்கரை போதும் என்று
அவர்கள் வாசலோடு திரும்பிப் போய்விடுகிறார்கள்.''
பெரிய லட்சியத்துடன் வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், நடுவிலேயே தங்கள் கனவுகளையும் லட்சியத்தையும் வந்த விலைக்கு விற்றுவிட்டு, சுக வாழ்க்கையில் முடங்கிப் போகிறார்கள்.
மஹாபாரதப்போர். 18 நாள் யுத்தம். வெற்றி பாண்டவர்களுக்கு.
ஆனால், ஒரு விஷயம். கெளரவர்கள் பக்கத்தில் எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள், துரியோதனன், பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல்...
இவர்களை எப்படிப் பாண்டவர்கள் வென்றார்கள்?
ஸ்ரீ கிருஷ்ணர் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.
1) ஜயத்ரதன் 2) பீஷ்மர் 3) துரோணர் 4) கர்ணன் 5) துரியோதனன் 6) விதுரர்
இவர்களின் வீழ்ச்சிக்காகக் ஸ்ரீகிருஷ்ணர் தீட்டிய திட்டம் தான் வெற்றியை தந்தது.
இதில் யாரை வீழ்த்த தீட்டிய திட்டம் சிறப்பு வாய்ந்தது தெரியுமா?
அநேகம் பேர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் ஸ்ரீகிருஷ்ணர் தீட்டிய யுக்தி தான் சிறப்பு வாய்ந்தது என்று நினைப்பார்கள்.
இன்னும் சிலபேர் ஜயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்தது தான் உயர்ந்தது என்றும் நினைக்கலாம்.
இதே மாதிரிதான் பீஷ்மர், துரோணர் இவர்களுக்கு எதிராக எடுத்த முயற்சிகள்.
ஆனால் சரியான விடை, விதுரருக்காக ஸ்ரீகிருஷ்ணர் தீட்டிய திட்டம் தான் சிறப்பு வாய்ந்தது.
'இது என்ன புது குழப்பம்?
விதுரர் எங்கே சண்டை போட்டார்?
அவரை வீழ்த்தக் ஸ்ரீகிருஷ்ணன் ஏன் திட்டம் போட வேண்டும்?' என்ற கேள்விக்கு விடை சொல்லும் முன்.
யார் இந்த விதுரர்?
விதுரர் திருதராஷ்டிரருக்கும்,
பாண்டுவுக்கும் தம்பி. அதாவது,
பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் சித்தப்பா.
விதுரரின் தாயார் ஒரு பணிப் பெண்ணாக இருந்தவர்.
விதுரர் மகா நீதிமான். தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர். தர்மராஜர்... அப்பழுக்கில்லாதவர்.
'பெண்களை தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக என எந்த நிலையிலும் அவர்களை உயர்வாக வைத்து போற்ற வேண்டியவர்கள்' என தர்ம சாஸ்திரம் சொல்கிறது.
திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும்போது விதுரர் ஒருவரை தவிர மற்ற பெரிய வீரர்கள் அனைவரும் வாய்
திறக்காமல் மெளனமாகத்தானே இருந்தார்கள்.
அதற்கான தண்டனை தான் விதுரரை தவிர மற்ற பெரிய வீரர்கள் அனைவருக்கும் யுத்தத்தில் மரணம் அடைய வேண்டும் என்பது தர்மத்தின் நியதி.
கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய பெரிய வீரர்களை வீழ்த்தக் ஸ்ரீகிருஷ்ணர் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை.
ஏனெனில், ஒவ்வொருவருக்கும் ஒரு பலஹீனம் இருந்தது. எனவே அவர்களை எளிதில் வீழ்த்த முடிந்தது.
ஆனால், மேற்கண்ட பண்புகளால் விதுரரை மட்டும் வீழ்த்தவே முடியாது...
விதுரர் 'வில்' எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது...
யுத்தம் என்று வந்தால், மற்ற பெரியவர்கள் : பீஷ்மர், துரோணர் போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக, கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற முடியாது.
மஹாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி ஆகி இருக்கும். அதனால் எல்லோரையும் விட மிக முக்கயமான நபர். 'விதுரர்' தான்.
அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போரிடக் கூடாது. மேலும், தர்மநெறி படி விதுரர் போரில் மரணமடைய கூடிய நியதியும் கிடையாது. விதுரரை போரிடாமல் எப்படி தடுப்பது?
ஸ்ரீகிருஷ்ணர் தர்ம வியூகம் அமைக்கிறார். அதன்படி, பாரதப் போரைத் தடுக்க, ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காகத் தூது செல்கிறார்.
'கிருஷ்ணர் வருகிறார்' என்று தெரிந்ததும். திருதராஷ்டிர மகாராஜா தடபுடல் வரவேற்பு எற்பாடு செய்திருந்தார்.
துரியோதனன் சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின இரவு, 'ஸ்ரீகிருஷ்ணர் யார் வீட்டில் தங்குவார்?' என்ற கேள்வி பிறந்தது.
நான், நீ என்று எல்லோரும் அவரை அழைத்தார்கள்.
ஸ்ரீகிருஷ்ணரோ, “நான் தூதுவன். என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன்.
இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்” என்றார். விதுரருக்கு மகா சந்தோஷம். தனக்கு பிரியமான கிருஷ்ணர் தன் விருந்தினராக வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார்.
விதுரர் வீட்டில் கிருஷ்ணர் இரவு பொழுதைக் கழித்தார். மறுநாள், அரச சபையில் ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காக வாதாடினார்.
துரியோதனன், "ஒரு ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது" என்று சொல்லி கிருஷ்ணரையும் அவமதித்துப் பேசினான்.
கிருஷ்ணரும், "யுத்தம் நிச்சயம்..." என்று சொல்லிவிட்டு, பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார்.
வழியில் கிருஷ்ணருடைய சாரதி, "சுவாமி! எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்?” என்றான்.
கிருஷ்ணா் சொன்னார், "அனைத்தும் நல்லதுக்கே. இதன் விளைவு இப்போது துரியோதனன் சபையில் நடந்து கொண்டிருக்கிறது” என்று சொல்லி சிரித்தார்.
அதே போன்று, அப்போது துரியோதனன் சபையில் எல்லோரும் துரியோதனனிடம் கெஞ்சி, 'கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும்' என்று வாதாடினார்கள்.
அதில் விதுரர் குரல் தான் ஓங்கி ஒலித்தது.
ஏற்கனவே துச்சாதனன் துயில் உறியும் போது விதுரர் தட்டி கேட்டது. பாண்டவ தூதரான கிருஷ்ணரை விதுரர் தன் வீட்டில் முதல் நாள் இரவு தங்கவைத்து உபசாரம் செய்தது என துரியோதனனுக்கு விதுரர் மேல் வெறுப்பு இருந்தது. இதன்மூலம் அவர் பாண்டவர்கள் கட்சி என்றும் ஒரு நினைப்பு.
இப்போதும் விதுரர், கிருஷ்ணர் பேச்சைக் கேட்டு கொண்டு போரை நிறுத்த வாதாடியதும், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது.
என்ன பேசுகிறோம் என்ற நினைப்பு இல்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப்படுத்திப் பேசினான்.
குறிப்பாக, அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான்.
இதனால், விதுரர் மிகுந்த அவமானம் அடைந்தார். ஆவேசமடைந்த விதுரர், சபையோர்கள் நடுங்க சபதமிட்டார். "உனக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது துரியோதனா. இனி உனக்காக நான், என் வில்லை எடுத்துப் போரிட மாட்டேன். அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்ல மாட்டேன். எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்து விட்டுச் சபையிலிருந்து வெளியேறினார்.
யுத்தம் முடியும் வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பவில்லை.
இப்பொழுது புரிந்து இருக்கும் ஸ்ரீகிருஷ்ணர், விதுரர் வீட்டில் ஏன் தங்கினாரென்று. தங்காமல் இருந்தால், விதுரர் வில்லை உடைத்து வெளியேறி இருப்பாரா?
துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் விதுரருக்கு வந்திருக்கும் அல்லவா?
விதுரர் வைத்திருந்த 'வில்' தர்ம சக்கரம் கொண்ட மஹாவிஷ்ணுவின் வில்.
'கோதண்டம்' எனப்படும் அந்த வில்லை எவராலும் வெல்ல முடியாது.
அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது. 'காண்டீபம்' என்பது அதன் பெயர்.
போரில் விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்று விட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது!
இதுவே பாண்டவர்களுடைய வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
தர்மராஜனான விதுரரை ஜெயிக்கவே முடியாது என்ற 'தர்மம்' உணர்ந்த ஸ்ரீகிருஷ்ணர் செய்த மஹா தர்ம யுக்தி தான் மஹாபாரத வெற்றி...
இந்த மனிதருக்கு நானும் நீங்களும் உட்பட முழு உலகமும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்....
நீங்கள் எந்த ஒன்றையும் தேடிப்படிக்க ஆர்வம் கொள்ளும் போதெல்லாம் கூகிளில் நுழைந்து ஒரு பட்டனைத் தட்டினால் புத்தக அலமாரி அப்படியே உங்கள் தலையில் வந்து விழுவது போல மொத்த அறிவுக் களஞ்சியமும் வந்து உங்கள் கண் முன் அடுக்கடுக்காக நிற்குமோ, அந்த இலவச கலைக்களஞ்சியமான Wikipediaவை வடிவமைத்தவர் இவர்தான்.
Wikipediaவின் நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் நினைத்திருந்தால் இந்த களஞ்சிய தளத்தை வைத்து பில்லியன் கணக்கான பணத்தை சம்பாதித்திருக்க முடியும், அவருக்கு வந்த விளம்பர ஆஃபர்களை பயன்படுத்தி பேஸ்புக் நிறுவனர் மார்க் போன்றவர்கள் போல இந்த உலகையே ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய பணக்காரர்களின் வரிசையில் நின்றிருக்கலாம். ஆனால் தனக்கு வந்த அனைத்து விளம்பரங்களையும் ஏற்க மறுத்தார், முழு உலகுமே பயன் பெரும் இந்த மாபெரும் கலைக்களஞ்சியம் என்றென்றும் இலாப நோக்கற்ற தளமாகவே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்த மண்ணில் வாழும் முன்மாதிரி மிக்க மனிதர்கள் தர வரிசையில் தானும் ஒருவராகவே இருக்க வேண்டும் என்பதிலும் விடாப்பிடியாக இருந்தார்.
கல்விக்கும் தேடலுக்குமான முதல் தர தளமாக விளங்கும் விக்கிபீடியாவை பணம் பார்க்கும் நிறுவனங்கள் மற்றும் விளம்பர ஏஜென்சிகளுக்கும் தாரை வார்க்க மறுத்தே வந்தார்.
சமீபத்தில் "Wikipedia Zero" என்ற விஷேட கலைக்களஞ்சியத்தை வடிவமைத்து ஆரம்பித்து வைத்த அவர், உலக மூலை முடுக்களிலெல்லாம் இன்டர்நெட் பேக்கேஜுக்கு பணம் செலுத்த முடியாத, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் சுமார் 400 மில்லியனுக்கும் அதிகமான உலக மக்களின் அறிவுப் பசியை போக்கவும் கலைத் தாகத்தை தீர்க்கவும் வசதியை ஏற்படுத்தி வைத்தார். இதன் மூலம் அவர்கள் உலகெங்கிலும் உள்ள மொபைல் நிறுவனங்களிடமிருந்து விக்கிபீடியாவிற்கான இலவச Accessகளை பெற்றுக்கொள்ளலாம்.
இன்னும் இந்த பூமிக்கிரகத்தில் நன்மையை மாத்திரம் நாடும் நல்லுள்ளம் கொண்ட மனிதர்கள் வாழுகிறார் ஜிம்மிவேல்ஸ் நிரூபித்துள்ளார்.
ஆகம சாஸ்திரத்தின் அற்புதம்
கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல.
கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள்.
சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற்சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது.
அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள்.
" சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது"
அதாவது 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும்.
ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும்.
இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம்.
இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும்.
அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.
48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள்.
அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்ய வாசம்.
இதுவும் 48 நாட்கள் தான்.
நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது.
ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்.
ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம்.
பின்னர் பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம்.
பின்னர் வஸ்திர வாசம்,
அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும்.
இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும்.
அதாவது ஹம்சதூளிகா மஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்கொள்ளப்படுகிறது.
எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.
சரி... ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள்.
நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும்.
நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும்.
தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும்.
அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும்.
அதைப்போல தான் ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெறும்.
அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.
6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகளின் கண்கள், பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும்..." என்றார்.
இன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப்பின்னர் அவை ஒரு நாளில் ஜலவாசம், தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான ஐதீகப்படி வைத்து குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வருவார்கள்.
இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. அதன்பிறகு, 7 நாட்கள் வரை புஷ்பாதி வாசத்தில் சிலையை வைக்கிறார்கள்.
பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை இருக்கும்போது, அந்த சிலைக்கு வாசம் மட்டுமில்லாது மலர்களின் சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறுகிறது.
புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது.
நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள்.
இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது.
தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது.
அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது.
பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது.
ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது.
இந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார். கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது" என்றார்.
கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை.
அதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது.
மனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன.
கல்லை வணங்குகிறார்கள் என்று கேலியும் கிண்டலும் செய்யும் அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்....
விக்ரம் பிரபு, புதுமுகம் அக்ஷய் குமார், அனிஷ்மா, ஆனந்தா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘சிறை’. ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ், இதன் கதையை எழுதியுள்ளார்.
வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படம் டிசம்பர் 25 வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ எஸ்.எஸ்.லலித் குமார், இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரிக்கு கார் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.
அமெரிக்காவில் கடந்த 2004-முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்களாக வெளியான சின்னத்திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்வைவல் கைடு’.
இதில் மார்ட்டின் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் டெய்லர் சேஸ். பின்னர் ‘எவ்ரிபடி ஹேட்ஸ் கிறிஸ்’ என்ற நகைச்சுவைத் தொடரிலும் தோன்றிய அவர், 2007-ம் ஆண்டு ஜேம்ஸ் பிராங்கோவின் ‘குட் டைம் மேக்ஸ்’ என்ற ஹாலிவுட் படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். அதில் யங் ஆடமாக நடித்திருந்தார். கடைசியாக ‘லா நோயர்’ என்ற வீடியோ கேமில் பணியாற்றினார்.
சின்னத்திரையில் புகழ்பெற்ற நடிகரான இவர், ஒருகட்டத்தில் நடிப்பதிலிருந்து விலகினார். பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை. இந்நிலையில் அவர் கலிபோர்னியாவில் வசிக்க வீடின்றி தெருவில் யாசகம் பெற்று வாழும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. 36 வயதான டெய்லர் சேஸ் அந்த வீடியோவில், கிழிந்த ஆடைகளை அணிந்தபடி பேச முடியாமல் தவிக்கிறார்.
தனது தளர்வான கால் சட்டையை, அவிழ்ந்து விடாமல் இருக்கப் பிடித்துக் கொண்டு நிற்பது பரிதாபமாக உள்ளது. ஒரு காலத்தில் பல கேமராக்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களுடன் நின்ற அவர், இப்போது கலிபோர்னியாவின் தெருக்களில் யாசகம் பெற்று வருவது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. புகழின் உச்சத்தில் இருந்த ஒருவர் எப்படி இப்படியானார்? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
காலம் மனிதர்களை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டு விடுகிறது...
இதற்கு பெயர் தான் குருட்டு அதிர்ஷ்டம் என்பது....
ஒரு ஊருல பொழப்பத்த ஒருத்தன் இருந்தான். அவனுக்கு 30 வயசு இருக்கும். ஏதாவது சொல்லிண்டிருப்பான். ஊர்ல அவனை திருவாழத்தான்னு கூப்பிடுவாங்க (அந்தப் பெயரில் ஒரு எழுத்தாளர் உண்டு.)
இந்தத் திருவாழத்தான் ஒரு நாள் அலைஞ்சு திரிச்சுட்டு ஊருக்கு வரும் போது இராத்திரி இருட்டி விட்டது. ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தான். அந்த வீட்டு அம்மாள் அதிரசம் பண்ணிக் கொண்டிருந்தாள். அதிரசத்தை எண்ணெயில் போடும் போது சொய்ய் ன்னு சத்தம் வரும். திருவாழத்தான் சொய்ய் சப்தங்களை எண்ணிக்கொண்டே வந்தான். மொத்தம் 64 சப்தம் வந்தது. வீட்டுக்கார அம்மா எல்லாம் முடிச்சுட்டு தூக்கில் எண்ணி அதிரசங்களைப் போட்டு மூடி மேலே மாட்டினாள். காத்து வாங்கறதுக்காக வாசல் திண்ணைக்கு வந்தாள். திருவாழத்தான் உட்கார்ந்து இருப்பதைக் கண்டாள்.
"யாரப்பா நீ?" என்றாள்.
"அம்மா ரொம்பப் பசிக்குதம்மா, ஏதாவது கொடுங்கம்மா" என்றான்.
"இந்த நேரத்தில ஒண்ணுமில்லை" என்றாள் அவள்.
"ஏம்மா.. நீ பண்ணி வச்சிருக்கிற 64 அதிரசத்தில ஒண்ணு குடேன்" என்றான்.
அந்தம்மாவுக்கு அதிசயமாகப் போச்சு...
அய்யோ இவன் மந்திரவாதி என்று நினைத்து "அடியே மீனாட்சி, காமாட்சி, சுப்பம்மா, குப்பம்மா எல்லாம் வாங்கடி... மந்திரவாதி வந்திருக்காரு" என்று சத்தம் போட்டாள். பெரிசில இருந்து குஞ்சு குளுவான் வரை திருவாழத்தானைப் பார்க்க ஒரே கூட்டம். விஷயம் ராஜா காதுக்குப் போச்சி. அவனும் ஒரு நல்ல மந்திரியா தேடிகிட்டு இருந்தான். உடனே திருவாழத்தானை மந்திரியாக்கி அவனுக்கு ஓரு அரண்மனையும் கொடுத்து, காவல்காரன், வேலைக்காரன், குதிரை, வண்டி எல்லாம் வழங்கப்பட்டன.
திருவாழத்தான் மந்திரியாக சுக போகத்தோடு வலம் வந்தான்.
ஒரு நாள் சலவைக்காரன் கழுதை காணாமல் போய் விட்டது. அரண்மனை முழுவதும் , ஊருக்குள்ளும் துணிகள் தரவேண்டும். ராஜாவிடம் புகார் கொடுக்க வந்திருந்தான். தலைமேல் பல துணி மூட்டைகள் வைத்திருந்தான். ராஜா உடனே மந்திரியைக் கூப்பிட்டார். ராஜாவின் அரண்மனைக்குப் பின் தான் திருவாழத்தான்.. தப்பு தப்பு மந்திரி வீடு.
மந்திரி வந்தார். அதிரசம் கணக்குப் பண்ணின மந்திரிக்கு சூழ்நிலை டக்கெனப் புரிந்தது. "மாமன்னரே இந்தச் சலவைக்காரன் விஷயமாகவும் இவன் கழுதை விஷயம் பற்றித் தானே என்னை அழைத்தீர்கள்? " என்றான்.
(மூட்டை மூட்டையாகத் துணியைப் பார்த்ததும் இவன் சலவைக்காரன், இவனே சுமக்கிறான், அதனால் கழுதையில்லை என்று நம்ம மந்திரி புரிந்து கொண்டார்.)
மன்னர் அசந்து விட்டார். சலவைக்காரனும் தான். "டேய் நீ கவலைப் படாதே.. என் மந்திரி உன் கழுதையை ஒரு வாரத்தில் கண்டு பிடித்துத் தருவார், நீ போய் வா" என்றார் ராஜா.
மந்திரி என்னடா செய்வது என்று எண்ணினார். 100 தங்க நாணயங்களை எடுத்துக் கொண்டு பக்கத்து ஊர் சலவைக்காரனிடம் இரவு சாதாரண உடையில் சென்றார். அவனிடம் ஐந்து கழுதைகள் இருந்தன. கதவைத் தட்டினார். அவனும் திறந்தான். "நான் போன ஜன்மத்தில் உன் அண்ணனாக இருந்தேன். இப்ப உன்னைப் பார்க்க வந்தேன்" என்றார். "வாங்கண்ணா" என்று அவனும், அவன் மனைவியும் அழைத்தனர். "இந்த வழியாகப் போனேன். முன் ஜன்ம வாசனை வந்தது. அதுதான் வந்தேன். இந்தா என் சொத்தில் பாதி 50 தங்க நாணயங்கள். வாங்கிக் கொள். எனக்கு ஒரு நல்ல கழுதையாகக் கொடு" என்றார்.
கழுதைக்கு 50 பொற்காசா?
மனசுக்குள் அவனுக்கு மகிழ்ச்சிப் பிரவாகம். நல்ல கொழுத்த கழுதையாகத் தந்தான். இரவோடு இரவாக நம்ம மந்திரி கழுதையை ஓட்டி வந்து அரண்மனைக்குப் பின்னால் மரத்தில் கட்டினார். மறுநாள் ராஜாவிடம் போய் கழுதை கிடைத்து விட்டது என்றார்.
ராஜா சலவைக்காரனை ஆளனுப்பி வரச்சொன்னான். அவனும் வந்தான். கழுதையைப் பார்த்தான். அவன் தொலைத்த கழுதை நோஞ்சான் கழுதை. இது கொழு கொழு கழுதை. யாருக்குத் தெரியப் போகிறது ? "என் கண்ணே கிடச்சுட்டியா" என்று கழுதையைக் கட்டிக் கொண்டான். ராஜாவையும், மந்திரியையும் பல முறை வணங்கி கழுதையை ஓட்டிச் சென்றான். அன்றே அரசவையில் நமது மந்திரி பிரதம மந்திரியாகப் பிரகடணம் பண்ணப்பட்டார்.
50 பொற்காசில் தலைமை அமைச்சர்... இன்னும் கூடுதல் வசதி, வாய்ப்புக்கள்.
சில நாட்கள் கழிந்தன.
ராஜாவின் தங்க எண்ணெய் கிண்ணத்தைக் காணோம்.
"மந்திரியாரே அந்தக் கிண்ணம் மூன்று தலைமுறையாக அரண்மனையில் உள்ளது. இரண்டு நாட்களில் கண்டு பிடித்துத் தர வேண்டும், இல்லையேல் உம் கண்ணை நோண்டி மூக்கை அறுத்து விடுவேன்" என்றார் ராஜா.
முக்கிய மந்திரி புலம்பிக் கொண்டே பின் புறம் உள்ள தன் அரண்மனைக்குப் போனார். போச்சு போச்சு கண்ணுக்கும், மூக்குக்கும் ஆபத்து வரப்போகிறது என்று சொல்லிக் கொண்டே போனார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த வேலைக்காரிகளில் ஒருத்தி பெயர் கண்ணாத்தா, இன்னொருத்தி பெயர் மூக்காயி. இருவரும் ஓடிவந்து மந்திரி காலில் விழுந்து "சாமி.. நாங்கதான் தங்கக் கிண்ணத்தைத் திருடி இந்தக் கிணத்துக்குள் போட்டிருக்கிறோம், காப்பாத்துங்க என்று காலை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். பிறகு என்ன? நாளை காலை மந்திரி ராஜகுருவாக பதவி ஏற்கிறார்.
பதவி ஏற்புக்கு அனைவரும் வருக...
- துளசி இலைச் சாறு சாப்பிட்டால், ரத்தத்தில் விஷத் தன்மை வெளியேறும்.
- அருகம்புல் சாப்பிட்டால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்; தோல் வியாதிகளுக்கும் இது அருமருந்தாகும்.
- வாழைத்தண்டு சாறை மருத்துவர் ஆலோசனைப்படி, உரிய இடைவெளியில் சாப்பிட்டால், சிறுநீரகத்தை சுத்தம் செய்யும்.
- கொத்துமல்லிச் சாறு பசியைத் தூண்டும்; வாதம், நரம்புத்தளர்ச்சியை குணமாக்கும்.
- புதினாச் சாறு சிறந்த மலமிளக்கி; ஜீரணக் கோளாறை சரிசெய்யும்.
- வல்லாரைச் சாறு, மஞ்சள் காமாலை, நரம்புத்தளர்ச்சி, ஞாபகத்திற்கு அருமருந்தாகும்.
- தூதுவளைச் சாறு நரம்புத்தளர்ச்சியைப் போக்கும்; சளியை விரட்டும்.
- மணத்தக்காளிச் சாறு வாயுத்தொல்லையை தீர்க்கும்.
- தும்பைச் சாறு, இருமல், மார்புச்சளிக்கு அருமருந்தாகும்.
- வெங்காயம், பூண்டு கலந்த சாறு கெட்டக் கொழுப்பைக் குறைக்கும்.
- காய்கறி சாறு சாப்பிட்ட, 20 நிமிடங்களில் ஜீரணமாகி, சக்தியாக மாறும்.
- இஞ்சியை அரைத்து சாறு எடுத்து சிறிது நேரம் வைத்திருந்தால், சுண்ணாம்பு மாதிரி அடியில் தங்கும்.இதை அகற்றி, தெளிந்ததை தேன் கலந்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
உலகின் மிகவும் பேசப்படும் நிறுவனங்களில் ஒன்றிற்கு தலைமை தாங்கிய இந்தியர்... திடீரென்று ஒரு நாள் அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கும் போது நடந்த இந்த சம்பவம், பராக் அகர்வாலின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக கருதப்பட்டது. ஆனால் தோல்வி சிலரைத் தோல்வியடையச் செய்வதில்லை - அது திசையை மாற்றுகிறது. பராக் அந்த வகையில் இருக்கிறார்.
ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆன சில மாதங்களுக்குப் பிறகு, எலோன் மஸ்க் அந்த நிறுவனத்தை வாங்கினார், முதல் நாளிலேயே பராக் வெளியேறினார். விமர்சனங்கள், மீம்ஸ்கள், ஊடகங்கள் - அனைத்தும் அவரைப் பின்தொடர்ந்தன. ஆனால் இந்தக் குழப்பத்திலும் கூட, பராக் அமைதியாக இருந்தார். ஏனென்றால், தனது உண்மையான சக்தி இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார்.
பின்னர் பேரலல் வெப் சிஸ்டம்ஸ் பயணம் தொடங்கியது. அமைதியான அலுவலக அறையில், கையில் ஒரு மடிக்கணினி மற்றும் மனதில் ஒரு பிடிவாதமான கனவோடு - AI க்காக ஒரு புதிய இணையத்தை உருவாக்குவது.
இன்று நாம் நம்பியிருக்கும் வலைத்தளங்கள், தேடுபொறிகள் மற்றும் தகவல்கள்... எதிர்கால உலகம் AI-ஐச் சார்ந்திருக்கும். மேலும் அந்த AI எவ்வாறு உலகின் தகவல்களை அணுகும், புரிந்துகொள்ளும் மற்றும் பயன்படுத்தும் - இவை அனைத்தையும் மாற்றும் நிறுவனம் Parallel Web Systems ஆகும்.
இது வெறும் யோசனை மட்டுமல்ல, செயல்படுத்தலும் கூட. தொடங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நிறுவனம் அதன் முதல் நிதிச் சுற்றில் கிட்டத்தட்ட $30 மில்லியன் (INR தோராயமாக ₹250–260 கோடி) திரட்டியது. கூகிள், ஓபன்ஏஐ மற்றும் அமேசானுடன் பணிபுரிந்த பராக் மீது நம்பிக்கை கொண்ட உலகம் முழுவதிலுமிருந்து முக்கிய முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்துடன் இணைந்தனர்.
ஆனால் உண்மையான திருப்புமுனை 2025 இல் வந்தது. பேரலல் வெப் சிஸ்டம்ஸ் தொடர் A இல் $100 மில்லியனை (INR தோராயமாக ₹830–850 கோடி) திரட்டியது, மேலும் நிறுவனத்தின் மதிப்பீடு $740 மில்லியனாக அல்லது இந்திய ரூபாயில் தோராயமாக ₹6,000 கோடியாக உயர்ந்தது.
ஒரு கணம் யோசித்துப் பாருங்கள் - பணிநீக்கம் செய்யப்பட்ட அதே நபர் இரண்டு ஆண்டுகளில் ஆறாயிரம் கோடி மதிப்புள்ள ஒரு நிறுவனத்தைக் கட்டினார்!
இன்று, இணையத்திலிருந்து நிகழ்நேர, கட்டமைக்கப்பட்ட மற்றும் துல்லியமான தகவல்களை இணையத்தில் இருந்து உலகெங்கிலும் உள்ள தொடக்க நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் AI நிறுவனங்களுக்கு பேரலல் வழங்குகிறது. எளிமையாகச் சொன்னால் - இணையத்தைப் புரிந்துகொள்ள AIக்குத் தேவையான புதிய "மொழியை" பேரலல் உருவாக்குகிறது.
பராக்கின் கதை தொழில்நுட்ப உலகத்தைப் பற்றியது மட்டுமல்ல - இது ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு பாடமாகும்.
சில நேரங்களில் வாழ்க்கை உங்கள் கைகளிலிருந்து நாற்காலியைப் பறித்துவிடும். ஆனால் அடுத்த நாற்காலியை நீங்களே உருவாக்க வேண்டும்.
பராக் அதையே செய்தார்.
இன்று, உலகம் அவரை "முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி" என்று அறியவில்லை, மாறாக AI மற்றும் இணையத்தின் எதிர்காலத்தை வடிவமைத்த இந்தியராகவே அறியப்படுகிறது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பொது காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். பெற்றோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார இடமாற்றம் சார்ந்த சிந்தனை உண்டாகும். உத்தியோகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் ஆதரவுகள் மேம்படும். நற்செய்தி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
ரிஷபம்
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடன் இருப்பவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலகி இருந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மிதுனம்
நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் முடியும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் உண்டாகும். உறவினர்களால் மதிப்புகள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கடகம்
முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். நினைத்த காரியங்கள் இழுபறியாகி நிறைவு பெரும். பெற்றோருடன் வீண் வாக்குவாதங்கள் வரக்கூடும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான அலைச்சல் மேம்படும். மனதளவில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம்
விரும்பிய காரித்தை நினைத்த படியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். பண விஷயத்தில் கவனம் வேண்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கன்னி
தந்திரமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். எதிர்பாராத சில திடீர் யோகங்கள் உருவாகும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
துலாம்
வருமானத்தை உயர்த்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் பெருகும். நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபார தொடர்புகளில் கவனம் வேண்டும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்
குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். பெரியோர்கள் ஆதரவு கிடைக்கும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் செழிப்பான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
தனுசு
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சுபகாரிய பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதி மேம்படும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் மதிப்புகள் மேம்படும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மகரம்
தம்பதிகளுக்கு மனம் விட்டு பேசுவது நல்லது. பொருளாதாரம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய ஆடைகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் உத்வேகம் ஏற்படும். நவீன மின்னணு சாதனங்களில் கவனம் வேண்டும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் இழுபறியான சூழல் உண்டாகும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும்.சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது சிந்தனைகள் அதிகரிக்கும். ஊடக துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
பொறுப்புகளால் உடலில் சோர்வுகள் ஏற்படும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் அலைச்சல்களுக்கு பின்பே ஆதாயம் உண்டாகும். எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 9 ஆம் தேதி புதன்கிழமை 24.12.2025.
இன்று காலை 11.41 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.
இன்று காலை 06.25 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.
இன்று மாலை 02.56 வரை ஹர்ஷணம். பிறகு வஜ்ரம்.
இன்று காலை 11.41 வரை பத்தரை. பின்னர் இரவு 11.33 வரை பவம் . பிறகு பாலவம்.
இன்று காலை 06.24 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.00 முதல் 10.00 மணி வரை
பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.46 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும்போது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான்.
அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது ”சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக்கொள்.. சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய்” என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான்.
இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல், பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான்.
ஒருநாள் திடீரெனப் பெய்த மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது.
" சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யச் சாம்பல் இல்லையே " என வருந்திய அவனும் வறட்டிகளை அடுக்கித் தீயை மூட்டி விட்டுத் தனது மனைவியிடம் ” நான் இந்தத் தீயில் விழுகிறேன். என் உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்” என்று கூறினான்.
ஆனால் மனைவியோ ”நீங்கள் அப்படி இறந்து விட்டால் இங்கு வரும் பிணங்கள் சீரழிந்துவிடும், நானே தீயில் குதிக்கின்றேன் ” என்று கூறிக்கொண்டே தீயில்வீழ்ந்தாள்.
இருவரது பக்தியிலும் திளைத்த பரமசிவன் பார்வதியுடன் பிரத்தியட்சமாகி மனைவியை உயிர்ப்பித்து இருவரையும் முக்தியடைய வைத்தார்.
இதைக் கேட்ட அரசனும் "தங்கத்தால் ஆன சிவலிங்கத்திற்குப் பன்னீர், பஞ்சாமிர்தம் என்றும் வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்த எனக்குக் காட்சி தராத இறைவன், சுடுகாட்டுச் சாம்பலையும், பழைய சோற்றையும் கொடுத்தவனுக்கு மோட்சம் அளித்துள்ளாரே " என்று வருந்தினாலும் ’பக்தி’ என்பது ஆடம்பரத்தில் இல்லை.. அன்பினால் மட்டுமே மலரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டான்.















