·   ·  3 videos
  •  ·  0 friends
  • 994
  • More

Beautiful birds

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

திரு.சுகி சிவம் ஐயா சொன்ன, மேடை பேச்சு செய்தி.

ஒருவர் ஒரு ஊருக்கு சில வேலையா போனார். அங்கு அவருடைய நண்பர் இருப்பது நினைவுக்கு வந்தது. அவரை பார்த்து விட்டு போகலாம்னு தோணித்து. உடனே ஏதாவது பழம் வாங்கிகிட்டு போகலாம்னு கைவண்டில பழம் விக்கிறவர் கிட்ட போனாரு.

ஆப்பிள் பழம் நல்லா இருந்தது. என்ன விலைன்னு கேட்டாரு. கடைக்காரர் ₹200.00 ஒரு கிலோன்னு சொன்னாரு. கொஞ்சம் விலை குறைச்சு கொடுப்பீர்களா? ₹180.00 க்கு தரேன். வாங்கிகிட்டு ₹200.00 தாளை கொடுத்தார். கடைக்காரர் சரியாய் மீதி ₹20.00 கொடுக்கும் போது ஒருவர் பிச்சை போடுங்கன்னு கையை நீட்டினார்.

கையில் ₹20.00 நோட்டு என்ன செய்ய. வேற வழி இல்லை அப்படியே அந்த மீதி காசை பிச்சை காரருக்கு கொடுத்துவிட்டார்.

அப்பறம் நடந்தது தான் சுவாரசியம். அப்பபார்த்து அந்த கடைக்காரர் ஒரு நமுட்டு சிரிப்பு சிரிச்சார். ஏன் சிரிக்கிறீங்க?

எங்கிட்ட பேரம் பேசினீங்க.எனக்கு வர வேண்டிய காசு, அவருக்கு பிச்சை. ஆனா இதில் என்ன விஷயம் என்றால், என் கடை அவரு கிட்ட கடன் வாங்கி தான் நடக்குது.

  • 44
·
Added a post

ஒரு வயதானவர் அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பார்.பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுவார். பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறு குறுப்பு…!

அந்தக் கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது..!!? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! 'ஒருவேளை மாயாஜாலக் கண்ணாடியோ..!!?’

அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை...

பெரியவரை நெருங்கினான்.

ஐயா…!

என்ன தம்பி?

உங்கள் கையில் இருப்பது கண்ணாடி தானே..?

ஆமாம்..!

அதில் என்ன தெரிகிறது..?

நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்..!

அப்படியானால் சாதாரணக் கண்ணாடி தானே அது..?

ஆமாம்..!

பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்..?

பெரியவர் புன்னகைத்தார்.

சாதாரணக் கண்ணாடி தான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய..!

பாடமா… ??? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்..?

அப்படிக் கேள். உங்களில் ஒவ்வொருவரும் மற்றவருக்குக் கண்ணாடி போன்றவர்கள்..

எனக்கு ஒன்றும் புரியவில்லை..!

ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக் காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இது தெளிவுபடுத்துகிறது...

எப்படி..?”

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா..?

ஆமாம்..

அதே போல் உன் சகோதரனிடம் - நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் அதனைச் சுட்டிக் காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்.!

அடுத்து…?

கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போது தான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும். இல்லையா..?

ஆமாம்!

அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக் காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக் கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்..!

அப்புறம்..?

ஒருவருடைய முகக்கறையை கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா..?

இல்லையே…! மாறாக அந்தக் கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்..!

சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக் கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்..!

ஐயா…! அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா…! அப்பப்பா..!யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்...!” என்று அந்த பெரியவரிடம் சொல்லி விட்டு அவரை வணங்கிச் சென்றான்

  • 46
·
Added article

நடிகை பூஜா ஹெக்டே பேசியதாக இன்று காலை முதல் சமூக வலைதளத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது. பான் இந்திய படத்தில் நடித்துவந்தபோது அந்த படத்தின் நடிகர் தனது காரவானில் அனுமதி இன்று நுழைந்ததாகவும். தன்னிடம் அத்துமீற முயன்ற அவரை தான் கன்னத்தில் அறைந்ததாகவும் பூஜா அதன் பின் அந்த நடிகர் தன்னுடன் நடிக்கவில்லை என நடிகை பூஜா ஹெக்டே சொன்னதாக இணையத்தில் தகவல் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் , சமூக வலைதள பிரபலங்கள் உள்ளிட்டோர் இன்று காலை முதல் இந்த தகவலை பகிர்ந்து வருகிறார்கள். இன்னும் சிலர் பூஜா ஹெக்டேவிடம் அத்துமீறிய அந்த நடிகர் இவர் தான் என சிலரது பெயரை குறிப்பிட்டு வருகிறார்கள்.

இந்த தகவல் உண்மையில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. பூஜா ஹெக்டே அப்படி பேசியதாக எந்த ஒரு ஆதாராமும் இல்லை என்று இது திட்டமிட்டு பரப்பப்பட்ட போலியான தகவல் என்று தெரியவந்துள்ளது.

  • 47
·
Added a post

காபி, தேநீர் போன்ற பானங்கள் வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல் மனித உணர்வுகளோடு நெருங்கி நிற்கும் துணையாக வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளது அதன் மீது மக்கள் கொண்டுள்ள தீராத காதலும் அதனை அருந்துவோரின் எண்ணிக்கையும் எத்தனைக் காலங்கள் கடந்தாலும் குறையாது என்பதை கடைகளில் அலைமோதும் கூட்டமே சாட்சியாக அமைந்து விடுகிறது.

மகிழ்ச்சியைச் சேர்த்து சோகத்தைக் தொலைக்கும் தருணங்களில் மனிதன் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள காபி தேநீரைத் தேடுவது வழக்கம் என்பதை மறுக்க முடியாது. எதுவும் அளவோடு இருப்பதே உடல் நலத்திற்கு நல்லது என்று சொல்லலாம்.

காபி காபி கொட்டைகளின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது (கொட்டை), தேநீர் தேயிலை இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இரண்டும் காஃபின் கொண்டவை, ஆனால் வேறுபட்ட சுவை மற்றும் நன்மைகளைக் கொண்டுள்ளன இந்த இரண்டு பானங்களும் புத்துணர்ச்சி தரும் பானங்களாகும்.அவற்றில் மனிதனின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி உற்சாகப்படுத்தும் வேதிப் பொருட்கள் இருப்பதால் அப்பானங்களை அருந்தியதும் நாம் உற்சாகமாக உணர்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு முறை தேநீரோ அல்லது காபியோ குடிப்பது உடல்நலத்துக்குப் பெரிதாகக் தீங்கு விளைவிக்காது.அதுவே எல்லை மீறினால் அந்த அமிர்தம் நாளடைவில் நஞ்சாக மாறிவிடும் என்கிறார் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மூத்த ஆலோசகர் பேராசிரியர் டத்தோ டாக்டர் ரிஷா மாணிக்கம்.

அதிக அளவில் காபி-டீ அருந்துவது இதயத் துடிப்பை வேகப்படுத்துவதோடு உடல் வியர்த்தல், கை கால் நடுக்கம் மற்றும் தூக்கமின்மை போன்ற பல உடல்நலப் பாதிப்புகளை உண்டாக்கும். ஆதலால், தினசரி காபி-டீ குடிப்பவர்கள் அதன் அளவை ஒரு கப்பாகக் குறைத்து பின்னர் அந்த ஒரு கப்பையும் நண்பர்களுடன் பகிர்ந்து குடிப்பதன் மூலம் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாவதை சுலபமாக தவிர்க்கலாம் என்கிறார் பேராசிரியர் டத்தோ டாக்டர் ரிஷா மாணிக்கம்.

சத்தான உணவு, தேவையான உடற்பயிற்சி, போதிய அளவு நீர், குறைந்த அளவு உப்பு மற்றும் இனிப்பு ஆகியவற்றுடன் கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையே புத்துணர்விற்கான சிறந்த வழி என்பதால் அவ்விரு பானங்களையும் முடிந்த வரையில் தவிர்ப்பதே விவேகமானது என்றும் டாக்டர் ரிஷா ஆலோசனை கூறினார்.

  • 57
  • 147
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

ரிஷபம்

நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனை விற்பனையால் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் கவனம் வேண்டும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேம்படும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். தந்தை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத பொருள் வரவுகள் சிலருக்கு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

மிதுனம்

புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணம் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். கால்நடை சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

கடகம்

எதிலும் புத்துணச்சியுடன் ஈடுபடுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் லாபம் மேம்படும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் குறையும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் வருமான உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த ஆர்வமின்மை விலகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

சிம்மம்

எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். உயரதிகாரிகள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்கள் வழியில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கலை பணிகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். வாகன பயணங்களின்போது விவேகம் அவசியமாகும். அரசு காரியங்களில் இருந்து வந்த இழுபறி குறையும். தேர்வுகள் பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கன்னி

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த இலக்குகள் பிறக்கும். உயர் கல்வியில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். நெருக்கம்வர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். பொழுது போக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பு மேம்படுத்துவீர்கள். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

துலாம்

குடும்ப பெரியவர்ளிடத்தில் அனுசரித்து செல்லவும். ஆரோக்கியம் குறித்த ஆலோசனை கிடைக்கும். எடுத்து செல்லும் உடமைகளில் கவனம். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். சுபகாரிய பேச்சுக்கள் சாதகமாக முடியும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

விருச்சிகம்

புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழுவீர்கள். சமூக பணிகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தடைப்பட்டு வந்த சொத்து விற்பனை சாதகமாக முடியும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளால் வியாபார சரக்குகளை விற்று லாபம் அடைவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

தனுசு

பழக்கவழக்கங்களில் சில மாற்றம் காணப்படும். பொன் பொருள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். வாக்கு சாதுர்த்தியம் மூலம் ஆதாயமடைவீர்கள். பெருந்தன்மையான பேச்சுக்கள் மூலம் புதிய அறிமுகமும் செல்வாக்கும் அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மகரம்

தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உடல் தோற்றத்தில் சில மாற்றம் ஏற்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. நண்பர்களிடத்தில் சூழ்நிலையறிந்து செயல்படவும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆவண சார்ந்த பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

கும்பம்

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வியாபர போட்டிகள் ஓரளவு குறையும். அலுவல் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

மீனம்

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொதுவாழ்வில் செல்வாக்கு மேம்படும். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். பணிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 321
·
Added a post

விசுவாவசு வருடம் தை மாதம் 5 ஆம் தேதி திங்கட்கிழமை 19.1.2026

இன்று அதிகாலை 02.31 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.

இன்று பிற்பகல் 01.04 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.

இன்று இரவு 10.02 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.

இன்று அதிகாலை 02.31 வரை நாகவம். பின்னர் பிற்பகல் 02.51 வரை கிமிஸ்துக்கினம். பிறகு பவம்.

இன்று காலை 06.34 வரை அமிர்த யோகம். பிறகு பிற்பகல் 01.04 வரை மரண யோகம். பிறகு அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=393&dpx=2&t=1768797267

நல்ல நேரம்:

காலை : 06.30.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 320

Good Morning...

  • 268
·
Added a post

பொதுவாக நாம் தரிசிக்கும் முருகப்பெருமான் திருவுருவங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் ஒரு அபூர்வமான காட்சியைக் காணலாம்.

✨ பாதரட்சை அணிந்த பரமன்!

இந்தத் தலத்தின் ஆகச்சிறந்த விசேஷமே, முருகப்பெருமான் தனது திருவடிகளில் பாதரட்சை (காலணி) அணிந்த நிலையில் அருள்பாலிப்பதுதான்.

🦶 வலது பாதம் முன்னே வைத்த கோலம்:

சுவாமி தாமரைப் பீடத்தின் மீது நின்றிருந்தாலும், அவர் சும்மா நிற்கவில்லை! தனது வலது பாதத்தை ஒரு அடி முன்னெடுத்து வைத்து, "உனக்காக நான் வருகிறேன்" என்று அபயம் அளிப்பது போலவும், பக்தர்களுக்கு அருளை வாரி வழங்க விரைந்து வருவது போலவும் இந்தக் கோலம் அமைந்துள்ளது.

🌟 ஏன் வடபழநிக்குச் செல்ல வேண்டும்?

பழநிக்கு நிகரான தலம்: பழநி வரை செல்ல முடியாதவர்கள், சென்னையில் உள்ள வடபழநி ஆண்டவரைத் தரிசித்தால் அதே பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.

தொழில் வெற்றி: புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் மற்றும் வியாபாரம் விருத்தியடைய வேண்டுபவர்களுக்கு வடபழநி முருகன் ஒரு பெரும் வழிகாட்டி.

அங்காரக தோஷ நிவர்த்தி: முருகனுக்கு மிகவும் பிடித்த செவ்வாய் (அங்காரகன்) பகவானுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது ஒரு தனிச்சிறப்பு.

📜 பக்தியின் தொடக்கம்:

அண்ணாசாமி தம்பிரான் என்ற பக்தர், பழநியிலிருந்து முருகனின் படத்தை வாங்கி வந்து சிறிய கொட்டகையில் வைத்து வழிபடத் தொடங்கியதுதான் இன்று சென்னை மாநகரின் அடையாளமாகத் திகழும் இந்த பிரம்மாண்ட ஆலயம்.

நேரம்: 📍 காலை 5:00 மணி முதல் 12:00 மணி வரை 📍 மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

முருகனின் இந்தப் பாதரட்சை தரிசனம் காண்போம்; வாழ்வில் சகல தடைகளும் நீங்கி வெற்றி பெறுவோம்!

  • 415
·
Added a post

இருபடங்கள்

ஒன்று வெனிசுலா அதிபராக உணவுமேசை முன்

மற்றொன்று கைதியாக உணவுமேசை முன்

காலம் நம்கையில் இல்லை

காலம் யாரை வேண்டுமானாலும்

எப்போது வேண்டுமானாலும்

சுழற்றி அடிக்கலாம்

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ஆட்டம் போடுவோருக்கு காலம் கற்பிக்கும் பாடம்

நடப்பது தர்மமா? அதர்மமா? என்ற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும்

கால சுழற்சி யாரையும் விடுவதில்லை என்பதுதான் உண்மை.

  • 427
  • 434
  • 459
·
Added article

கொஞ்சம் எச்சரிக்கையுடன் நிமிர்ந்து அமர்ந்தார் பாலச்சந்தர்.

அவருக்கு எதிரே ஒரு பத்திரிகை நிருபர்.

இதுவரை அந்த நிருபர் கேட்ட கேள்விகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது அவர் கேட்ட கேள்வி கொஞ்சம் தர்மசங்கடமானது.

இதற்கு பதில் சொன்னால்,

தான் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என்பது பாலச்சந்தருக்கு தெள்ளத்தெளிவாக புரிந்து போயிற்று. அதனால்தான் அவர் கொஞ்சம் உஷார் ஆனார்.

அந்த நிருபர் கேட்ட கேள்வி இதுதான்.

“ரஜினி, கமலிடம் நீங்கள் கண்டு வியந்த விஷயங்கள் பல இருக்கும்.

ஆனால் அவர்களின் குருவான உங்களுக்கு, அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன ?”

எடக்கு மடக்கான இப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, இதற்கு பாலச்சந்தர் என்ன பதில் கூறப் போகிறார், அதைத் தனது பத்திரிகையில் எப்படி தலைப்பு வைத்து வெளியிடலாம், எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தலாம் என ஆவலோடும் பரபரப்போடும் எதிர்பார்த்துக் காத்திருந்தார் அந்த பத்திரிகை நிருபர்.

ஆனால் இதற்கு பாலச்சந்தர் சொன்ன பதில் என்ன தெரியுமா ?

"நான் இயக்கிய 'நூற்றுக்கு நூறு' படம் பார்த்திருப்பீர்கள். அதில் எல்லோருமே ஜெய்சங்கரை பெண் சபலம் உள்ளவராக பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லட்சுமியும் அதை நம்ப ஆரம்பித்துவிடுவார்.

ஒரு காட்சியில் நாகேஷ் வெள்ளைத்தாளில் பேனாவால் ஒரு புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். லட்சுமி கறுப்புப் புள்ளி என்பார். நாகேஷ், ஏன் இவ்வளவு வெள்ளை இருக்கிறதே இது கண்ணுக்குத் தெரியவில்லையா என்பார். எங்கேயோ படித்திருந்தேன்.

அதை அந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தேன்.

அப்படித்தான். மனிதன் என்றால் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. ரஜினி, கமலிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.

அதைத்தான் நான் பார்க்கிறேன்.”

இப்படி ஒரு பக்குவமான பதிலை கொஞ்சமும் எதிர்பார்த்திராத அந்த பத்திரிகை நிருபர், பணிவோடு எழுந்து பாலச்சந்தரை வணங்கி விட்டு புறப்பட்டுப் போனார்.

பாலச்சந்தர் நினைத்திருந்தால்

அந்த நிருபரின் கேள்விக்கு என்ன பதில் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம். அதற்கான முழு உரிமையும், தகுதியும் அவருக்கு இருக்கிறது.

ஆனால் தனக்கு என்று ஒரு இமேஜ் இருக்கிறது. அதைவிட மிகப்பெரிய இமேஜ் கமலுக்கும் ரஜினிக்கும் இருக்கிறது. அந்த இமேஜ் கெடுவதற்கு, தான் பேசும் வார்த்தைகள் காரணமாகி விடக்கூடாது.

தான் பேசும் எந்த ஒரு வார்த்தையும், எந்த ஒரு மனிதரையும் காயப்படுத்தி விடக்கூடாது, எவர் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் பாலச்சந்தர்.

பாலச்சந்தர் தன் வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடைந்ததற்கான காரணம் என்ன என்பதை இந்த ஒரு சம்பவமே நமக்கு புரிய வைக்கிறது.

“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.”

பாலச்சந்தர் நினைவு தினம் 23 டிசம்பர் 2014.

  • 471
·
Added a post

மார்ஷ்மெல்லோ தியரி

ஒரு ஆசிரியர் வகுப்பின் அனைத்து குழந்தைகளுக்கும் அழகான டோஃபி கொடுத்து பின்னர் ஒரு விசித்திரமான விஷயத்தைச் சொன்னார்

கேள், குழந்தைகளே! நீங்கள் அனைவரும் உங்கள் டாஃபியை பத்து நிமிடங்கள் சாப்பிட வேண்டாம் என்று கூறிவிட்டு அவர் வகுப்பறைக்கு வெளியே சென்றார்.

வகுப்பறையில் சில நிமிடங்கள் அமைதி நிலவியது, ஒவ்வொரு குழந்தையும் தங்களுக்கு முன்னால் இருந்த டோஃபியைப் பார்த்துக் கொண்டிருந்தது, ஒவ்வொரு கணமும் தங்களைத் தடுத்து நிறுத்துவது கடினம். பத்து நிமிடங்கள் முடிந்து ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மதிப்பாய்வு செய்யப்பட்டது. முழு வகுப்பிலும் ஏழு குழந்தைகள் இருந்தனர், அவர்களுடைய டோஃபிகள் அப்படியே இருந்தன, மற்ற எல்லா குழந்தைகளும் டோஃபி சாப்பிட்டு அதன் நிறம் மற்றும் சுவை பற்றி கருத்து தெரிவித்தனர். இந்த ஏழு குழந்தைகளின் பெயர்களை ஆசிரியர் தனது நாட்குறிப்பில் ரகசியமாகப் பதிவு செய்து, குறிப்பெடுத்த பிறகு படிக்கத் தொடங்கினார்.

இந்த ஆசிரியரின் பெயர் பேராசிரியர் வால்டர் மிஷல். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில்-

சில வருடங்களுக்குப் பிறகு, பேராசிரியர் வால்டர் தனது சொந்த நாட்குறிப்பைத் திறந்து ஏழு குழந்தைகளின் பெயர்களை அகற்றி அவர்களை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்.

ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, ஏழு குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் பல வெற்றிகளை அடைந்துள்ளனர் மற்றும் அவர்களின் சொந்த வயதினரிடையே மிகவும் வெற்றிகரமானவர்கள் என்பதை அவர் அறிந்து கொண்டார். பேராசிரியர் வால்டர் தனது மீதமுள்ள வகுப்பு மாணவர்களை மதிப்பாய்வு செய்தார், அவர்களில் பெரும்பாலோர் ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்று கண்டறியப்பட்டது, அதே நேரத்தில் கடுமையான பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை எதிர்கொண்ட சிலர் இருந்தனர்.

இந்த முயற்சியும் ஆராய்ச்சியும் பேராசிரியர் வால்டரின் ஒரு வாக்கியத்தை விளைவித்தது.

"பத்து நிமிடங்கள் பொறுமையாக இருக்க முடியாத ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற முடியாது"

பேராசிரியர் வால்டர் குழந்தைகளுக்கு கொடுத்த டோஃபிக்கு "மார்ஷ்மெல்லோ" என்று பெயரிடப்பட்டதால் இந்த ஆராய்ச்சி உலக அளவில் முக்கியத்துவம் பெற்றது மற்றும் "மார்ஷ்மெல்லோ தியரி" என்று பெயரிடப்பட்டது. அது நுரை போல மென்மையாக இருந்தது.

இந்த கோட்பாட்டின் படி, உலகின் மிக வெற்றிகரமான நபர்களில் ஒருவர் 'பொறுமை' சிறப்புத் தகுதியுடன் காணப்படுகிறார், ஏனென்றால் இந்த தரம் மனிதனின் வலிமையை அதிகரிக்கிறது, இதன் காரணமாக மனிதன் கடினமான சூழ்நிலைகளில் ஏமாற்றமடையவில்லை, அவன் அசாதாரண ஆளுமை.

  • 476
·
Added a post

மூளையின் ஆரோக்கிய செயல்பாட்டிற்கு இது மூளைக்கான சிறப்பு உணவாகும். ஒமேகா-3 குறைபாடு அதிக மன அழுத்தத்தையும், அறிவாற்றல் இழப்பினையும் ஏற்படுத்துகிறது.

இக்கொட்டையில் உள்ள ஒமேகா-3 அமிலமானது மன அழுத்தத்தைக் குறைத்து மூளையின் நினைவாற்றலை கூட்டுவதோடு சிந்தனை செயலாக்கத்தையும் அதிகரிக்கிறது.

இதனால் இதனை சீராக உணவில் சேர்த்துக் கொண்டு மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

ஆரோக்கியமான இதயத்திற்கு :

இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம், லினோலிக் அமிலம், ஆல்பா லினோலெனிக் அமிலம், அராச்சிடோனிக் அமிலம் ஆகியவை இதயநோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.

இதனை சீராக உணவில் உட்கொள்ளும்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் நரம்புகளில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது.

மேலும் இது இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எண்டோடெலியல் செல் செயல்பாடுகளை பாதுகாக்கிறது. ஆரோக்கிய இதயத்திற்கு இதனை அளவோடு உண்ணலாம்.

எலும்புகளின் பலத்திற்கு :

வால்நட்டில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் பலத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதிபடுத்துகிறது. இது உடலானது கால்சியம் உறிதலை ஊக்குவிக்கிறது.

உடலின் எடையை பராமரிக்க :

இதனை உட்கொள்ளும்போது வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது.

ஊட்டச்சத்து மிகுந்த இதனை உட்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுஉப்புகள், கொழுப்புகள் கிடைப்பதால் இடைவேளை உணவாகவும் உட்கொள்ளலாம்.

இதனை அதிகமாக உட்கொண்டால் இதில் உள்ள ஊட்டச்சத்துகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். ஆதலால் இதனை அளவோடு உட்கொள்வது அவசியம்.

ஆன்டி ஆக்ஸிஜென்ட் மையம் :

ஆன்டி ஆக்ஸிஜென்ட் அதிகமுள்ள உணவுப்பொருட்களின் பட்டியலில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது.

மிகவும் அரிதான ஆன்டி ஆக்ஸிஜென்டுகளான குயினோன் ஜுக்லோன், டானின் டெல்லிமாக்ராண்டின் மற்றும் ஃபிளாவனோல் மோரின் ஆகியவை இக்கொட்டையில் உள்ளன.

இந்த ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் வேதிப்பொருட்களால் கல்லீரல் பாதிப்படைவதை தடுக்கிறது.

உடல் வளர்சிதை மாற்றம் மேம்பாடடைய :

இதில் உள்ள பாலி நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் மற்றும் மாங்கனீஸ், காப்பர், இரும்புச்சத்து, செம்புச்சத்து, துத்தநாகச்சத்து போன்றவை உடலின் சீரான வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன.

செரிமானம், நியூகிளிக் அமில தொகுப்பு உள்ளிட்ட சீரான உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு வால்நட்டினை உண்ணலாம்.

உணவுப் பாதையின் ஆரோக்கியத்திற்கு :

இது உட்புற செரிமான மண்டலத்தின் நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய உதவுகிறது.

இதனை சீராக உட்கொள்ளும்போது லாக்டோபாசில்லஸ், ரூமினோகாக்கஸ் மற்றும் ரோஸ்புரியா போன்ற குடலின் ஆரோக்கியத்திற்கு காரணமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து உணவுப்பாதையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

சரும பாதுகாப்பிற்கு :

இதில் உள்ள விட்டமின் இ ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகளிலிருந்து சருமத்தினைப் பாதுகாக்கிறது. மேலும் இதனை உண்ணும் போது சருமச் சுருக்கங்கள் மற்றும் வறண்ட சருமம் உண்டாவது தடுக்கப்படுகிறது.

கண்களுக்கு அடியில் கருவளையத்தை நீக்க வால்நட் உள்ள பொருட்களைப் பயன்படுத்தவும். பளபளக்கும் இளமையான சருமத்தைப் பெற இக்கொட்டையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியமான கூந்தலைப் பெற :

இக்கொட்டையில் உள்ள விட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் மயிற்கால்களை வலிமையடையச் செய்து பொடுகு உள்ளிட்ட சருமப் பிரச்சினைகளை போக்குகிறது. மேலும் அடர்த்தியான, நீளமான, வலிமையான கூந்தலையும் வழங்குகிறது.

முறையான உறக்கத்திற்கு :

இக்கொட்டையினை உண்ணும்போது மெலாட்டானின் என்னும் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. மெலாட்டனின் தூக்கத்தைத் தூண்டுவதோடு அதனை முறைப்படுத்துகிறது.

முறையான ஆழ்ந்த தூக்கத்திற்கு இக்கொட்டையினை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

வால்நட்டினைப் பற்றிய எச்சரிக்கை :

ஒருநாளைக்கு ஏழு முதல் ஒன்பது வால்நட்டுகளை உண்ணலாம். இதனை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது வயிறு வலி, வயிற்றுப்போக்கு, வயிற்று பொருமல், நெஞ்சு எரிச்சல் ஆகியவை உண்டாகும். அளவுக்கு அதிகமாக உண்ணும் போது உடலின் எடை அதிகரிக்கும்.

  • 478
·
Added article

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வரான பவன் கல்யாண் ஒரு அபூர்வமான சாதனையை பெற்றுள்ளார் . அவர் வெறும் அரசியல்வாதியோ அல்லது திரைப்பட நடிகரோ மட்டுமல்ல; போர்க்கலைகளிலும் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர் என்பதைக் இந்த சாதனை நிரூபிக்கிறது.

ஜப்பானின் பண்டைய வாள்ப்பயிற்சி கலையான ‘கென்ஜுட்ஸு’ (Kenjutsu) எனும் பயிற்சியை கற்றுக்கொண்டு, இந்தியாவுக்கு வெளியே முதல் ‘இந்தியன் சமுராய்’ என்ற சிறப்புப் பெயரையும் அவர் பெற்றுள்ளார்.

சமுராய் என்றால் என்ன என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். பண்டைய கால ஜப்பானில் வாழ்ந்த வீரர்களே சமுராய்கள் என அழைக்கப்பட்டனர். அவர்கள் வெறும் போராளிகள் மட்டுமல்ல; நேர்மை, தைரியம், ஒழுக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ‘புஷிடோ’ என்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றியவர்கள். அவர்களுக்கான மரியாதையாக வழங்கப்படும் இந்த பட்டத்தை பெறுவது எளிதான விஷயம் அல்ல.

இதற்கு பல ஆண்டுகள் நீடிக்கும் கடினமான பயிற்சியும், ஆழ்ந்த மன ஒருமுகப்படுத்தலும் அவசியமாகும்.

இந்த சாதனையை அடைவதற்காக பவன் கல்யாண் ஜப்பானில் உள்ள புகழ்பெற்ற குருக்களின் கீழ் பயிற்சி பெற்றார். கென்ஜுட்ஸு என்பது ஜப்பானிய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகும். அது வெறும் வாள் சண்டை மட்டும் அல்ல; உடலையும் மனதையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்த கற்றுத்தரும் ஒரு கலை.

வெளிநாடுகளுக்குச் சென்று இத்தகைய கடினமான பாரம்பரியக் கலைகளை கற்றுக்கொள்வது நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

அவரைப் பற்றி சொல்வதானால், தெலுங்கு திரைப்பட உலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக பவன் கல்யாண் திகழ்கிறார். அங்குள்ள மக்கள் அவரை அன்புடன் ‘பவர் ஸ்டார்’ என்று அழைக்கின்றனர். பின்னர் அவர் ‘ஜனசேனா’ என்ற அரசியல் கட்சியை தொடங்கி, மக்கள் சேவைக்காக அரசியலில் களமிறங்கினார். தற்போது அவர் நிர்வாகத் துறையிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

பெரும் பணிநெருக்கடிகளுக்கிடையிலும், தனது விருப்பங்களுக்கும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கும் நேரம் ஒதுக்குவது நமக்கு ஒரு முன்மாதிரியாகும்.

  • 478
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

விவசாய தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகம் தொடர்பான நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். அரசு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் காணப்படும். நண்பர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

ரிஷபம்

வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனை போக்கில் மாற்றம் ஏற்படும். வர்த்தக பணிகளில் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். உடன் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தெய்வ சிந்தனை மனதளவில் மேம்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வரவுகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

மிதுனம்

நகைச்சுவையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் தாமதமாக நிறைவு பெறும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் கவனம் வேண்டும். புதிய நபர்களிடம் அனுசரித்து செல்லவும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. போட்டி சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். எதிர்காலம் குறித்த சிந்தனைகளால் தடுமாற்றம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கடகம்

புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வீடு மற்றும் மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேம்படும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சுப காரியம் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். முயற்சிக்கு ஏற்ப சாதகமான சூழல் அமையும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை

 

சிம்மம்

நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகளின் வருகையால் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழி உறவுகள் இடத்தில் மதிப்புகள் மேம்படும். புதிய ஒப்பந்தங்களால் லாபம் மேம்படும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

கன்னி

குடும்ப பிரச்சனைகள் அகலும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் ஏற்படும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் ஏற்படும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். வருமானத்தை அதிகப்படுத்துவதற்கான எண்ணங்கள் உருவாகும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

துலாம்

எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய வேலை செயல்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். சமூக பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நேர்மை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

விருச்சிகம்

மனதில் புதுவிதமான செயல் திட்டம் பிறக்கும். கல்வி பணிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். தந்திரமான சில விஷயங்கள் மூலம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான செயல்களில் விவேகம் வேண்டும். நம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

தனுசு

குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். தன வருவாயிலிருந்து வந்த இழுபறிகள் குறையும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். புதுவிதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். சுபகாரிய பணிகளில் பொறுமை வேண்டும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

மகரம்

செயல்களில் திட்டமிட்டு செயல்படவும். துணைவர் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். கோப உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். தாமதம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

கும்பம்

வீட்டின் தேவைகள் நிறைவேறும். கடன் பிரச்சனைகள் குறையும். பொன்பொருள் சேர்க்கை பற்றிய எண்ணம் மேம்படும். பிறரை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தேவைக்கேற்ப வரவுகள் இருக்கும். சுபகாரிய பணிகளில் விவேகம் வேண்டும். மறதியால் சில செயல்களில் தாமதம் ஏற்படும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மீனம்

நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொன் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். இசை சார்ந்த துறைகளில் ஆதாயம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

  • 556
·
Added a post

விசுவாவசு வருடம் தை மாதம் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 18.1.2026.

இன்று அதிகாலை 1.19 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.

இன்று காலை 11.35 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.

இன்று இரவு 10.38 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம்.

இன்று அதிகாலை 01.19 வரை சகுனி. பின்னர் பிற்பகல் 1.55 வரை சதுஸ்பாதம். பிறகு நாகவம்.

இன்று காலை 11.35 வரை சித்த யோகம். பிறகு அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=392&dpx=2&t=1768713402

நல்ல நேரம்:

காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 597

Good Morning....

  • 595
·
Added article

அமரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவை விட பாலிவுட்டில் அதிக பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார் நடிகை சாய் பல்லவி. எப்படி ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் டாப் நடிகையாக மாறினாரோ அதே போல சாய் பல்லவிக்கும் பெரிய பெரிய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

ரன்பீர் கபூர், யஷ் உடன் இணைந்து ராமாயணா படத்தின் மூலம் இந்த ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமாவார் சாய் பல்லவி என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்விஸ்ட்டாக அமீர்கான் தயாரிப்பில் அதற்கு முன்னதாக வரும் மே 1ம் தேதியே பாலிவுட்டில் சாய் பல்லவி அறிமுகமாகிறார் என்கிற அறிவிப்பு டீசருடன் வெளியாகி விட்டது.

அமீர்கான் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள 'ஏக் தின்' (Ek Din) எனும் காதல் படம் வரும் மே 1ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தின் டீசர் வெளியான நிலையில், சாய் பல்லவி ஜுனைத் கானுக்கு லிப் லாக் அடித்தது போன்ற போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் பரவி வருகின்றன. உண்மையாகவே சாய் பல்லவி லிப் லாக் கொடுத்தாரா? இல்லையா?

அமரன் படத்தின் வெற்றி: கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்த்தின் வீர மரணம் மற்றும் அவரது மனைவியின் தியாகம் திரையில் ரத்தமும் சதையுமாக காட்டப்பட்ட நிலையில், அந்த படம் 300 கோடி வசூலை ஈட்டியது. அஜித் குமாரையே பாக்ஸ் ஆபிஸில் சிவகார்த்திகேயன் பின்னுக்குத்தள்ளினார். அந்த படத்தின் வெற்றிக்கு பெரும் பலமாக சாய் பல்லவியின் நடிப்பு இருந்தது.

2000 கோடி பட்ஜெட்டில் ராமாயணா படத்தை பிரம்மாண்டமாக 2 பாகங்களாக எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் பாகம் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தில் சீதையாக நடிக்க சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டு நடித்து வருகிறார். பாலிவுட் நடிகைகள் பலருக்கும் கிடைக்காத வாய்ப்பு சாய் பல்லவிக்கு கிடைத்துள்ளது. அமரன் படத்துக்குப் பிறகு இந்த ஒரு படம் மட்டும் தானா? என நினைத்த ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸாக அமீர்கான் மகன் ஜுனைத் கான் உடன் ஒரு படத்தில் நடித்தே முடித்து விட்டார் சாய் பல்லவி என்பது தெரிய வந்துள்ளது.

ஆனால், பாலிவுட்டில் உள்ள சில விஷமிகள் ஜுனைத் கான் உடன் அருகே அமர்ந்து இருக்கும் போட்டோவை அப்படியே ஏஐ உதவியுடன் சாய் பல்லவி அவருக்கு லிப் லாக் அடிப்பது போல எடிட் செய்து மாற்றி அதை சோஷியல் மீடியாவில் அதிகம் பரப்பி வருகின்றனர். ஏற்கனவே சாய் பல்லவி தனது தங்கையுடன் பீச்சில் இருந்த போட்டோக்களை வைத்து அவர் பிகினியுடன் சுற்றுகிறார் என்று பரப்பியது குறிப்பிடத்தக்கது. சாய் பல்லவியின் வளர்ச்சி பிடிக்காத சில நடிகைகளின் பிஆர்கள் தான் இந்த வேலையை தீயாக பார்க்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.

  • 736
  • 739
·
Added a post

"வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துதல்" (Water on Empty Stomach)

மருத்துவ உலகம் இதை "Water Therapy" என்கிறது. ஜப்பானியர்கள் இதை "Water Cure" என்கிறார்கள். ஆனால் நம் சித்தர்களும், ஆயுர்வேத ரிஷிகளும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதை "உஷத் பானம்" (Usha Paana) என்று அழைத்து, ஒரு தவமாகவே கடைபிடித்து வந்துள்ளனர்.

"தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்?" என்ற கேள்விக்கு, வெறும் மருத்துவ பதில் மட்டும் போதாது. அதற்குள் ஒரு ஆன்மீக விஞ்ஞானம் இருக்கிறது.

தண்ணீர் - இது வெறும் H2O அல்ல! (Water is Prana)

தண்ணீர் என்பது தாகத்தை தீர்க்கும் திரவம் மட்டுமல்ல. அது "உயிர் சக்தி" (Prana).

இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் ஆனது. அதில் மிகவும் முக்கியமானது "நீர்" (Jala Tattva). உங்கள் உடலும் ஏறக்குறைய 70% நீரால் ஆனது.

உங்கள் ரத்தம், உங்கள் மூளை, உங்கள் தசைகள் எல்லாமே நீரின் வடிவம்தான்.

நீங்கள் எப்போது காலையில் கண் விழிக்கிறீர்களோ, அப்போது உங்கள் உடல் ஒரு வறண்ட நிலத்தில் இருக்கிறது. இரவு முழுவதும் நடந்த பழுதுபார்க்கும் பணியில் (Repair work), உங்கள் உடல் பல கழிவுகளை தேக்கி வைத்திருக்கிறது. அந்த நேரத்தில் நீங்கள் கொடுக்கும் அந்த முதல் டம்ளர் தண்ணீர்... அது அமிர்தத்திற்கு சமம்!

"காலையில் நீங்கள் அருந்தும் நீர், உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லையும் தட்டி எழுப்பி, 'விடிந்துவிட்டது... புது வாழ்வு பிறந்துவிட்டது' என்று சொல்லும் மந்திரம்!"

மருத்துவ ரீதியாகப் பார்த்தால், காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும்போது உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன தெரியுமா?

1. குடலை கழுவும் புனித நீராடல் (Colon Cleansing)

நீங்கள் காலையில் தண்ணீர் குடித்தவுடன், அது நேராக உங்கள் குடலுக்குச் செல்கிறது. இரவு முழுவதும் சேர்ந்த கழிவுகளை மலமாக வெளியேற்றத் தூண்டுகிறது. குடல் சுத்தமானால், மனம் சுத்தமாகும். மலச்சிக்கல் (Constipation) என்ற வார்த்தையே உங்கள் அகராதியில் இருக்காது. குடல் சுத்தமாக இருக்கும்போது, நீங்கள் உண்ணும் உணவின் சத்துக்களை உடல் முழுமையாக உறிஞ்சிக்கொள்ளும்.

2. நச்சுக்களை வெளியேற்றும் யாகம் (Detoxification)

இரவில் உங்கள் உடல் உறுப்புகள் கடினமாக உழைத்து, மெட்டபாலிக் கழிவுகளை (Metabolic Waste) உண்டாக்கியிருக்கும். காலையில் நீங்கள் குடிக்கும் நீர், இந்த நச்சுக்களை சிறுநீர் மூலமாகவும், வியர்வை மூலமாகவும் அடித்துக்கொண்டு வெளியேறுகிறது. இது உங்கள் இரத்தத்தை சுத்திகரிக்கிறது.

3. பசியைத் தூண்டும் அக்னி (Igniting Digestive Fire)

பலருக்கு காலையில் பசிப்பதே இல்லை. ஆனால் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துப் பாருங்கள். அது உங்கள் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து, ஜீரண மண்டலத்தை தயார் செய்கிறது. ஆரோக்கியமான பசி எடுக்கும். ஆரோக்கியமான பசி என்பது ஆரோக்கியமான உடலின் அடையாளம்.

4. தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு

நம்மில் பலருக்கு இருக்கும் தலைவலிக்கு முக்கிய காரணம் "நீர்ச்சத்து குறைபாடு" (Dehydration). காலையில் தண்ணீர் குடிப்பது, மூளைக்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்கி, நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும், தலைவலி இல்லாமலும் வைத்திருக்கும்.

அழகு மற்றும் இளமையின் ரகசியம் (Beauty & Anti-agening

சரும பொலிவு: வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும்போது, ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, புதிய ரத்த அணுக்கள் உற்பத்தியாகின்றன. இது உங்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, ஒரு இயற்கையான பொலிவை (Natural Glow) தருகிறது. முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மாயமாய் மறையும்.

கூந்தல் வளர்ச்சி: உங்கள் முடியின் வேர்களுக்கு உயிர் கொடுப்பது நீர்ச்சத்துதான். தினமும் காலையில் தண்ணீர் குடிப்பது, முடி உதிர்வதைத் தடுத்து, அடர்த்தியான முடி வளர உதவும்.

உடல் எடை குறைய... ஒரு எளிய வழி!

உடல் எடையைக் குறைக்க எத்தனையோ டயட் இருக்கின்றன. ஆனால், தண்ணீர் குடிப்பதுதான் உலகிலேயே எளிமையான "வெயிட் லாஸ் டயட்".

காலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் (அல்லது மிதமான வெந்நீர்) குடிக்கும்போது, உங்கள் உடலின் Metabolism (வளர்சிதை மாற்றம்) 24% முதல் 30% வரை அதிகரிக்கிறது. இது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. பசியைக் கட்டுப்படுத்துகிறது. எனவே, தொப்பை குறைய நினைப்பவர்கள், நாளை காலை முதலே இதைத் தொடங்குங்கள்

நவீன அறிவியல் இப்போதுதான் "Water Memory" பற்றி பேசுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் இதை அன்றே உணர்ந்திருந்தார்கள். தண்ணீருக்கு நினைவாற்றல் உண்டு. நீங்கள் எந்த உணர்வோடு தண்ணீரைப் பருகுகிறீர்களோ, அந்த உணர்வை அது உங்கள் உடலுக்குள் கடத்தும்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

காலையில் எழுந்ததும், பல் துலக்குவதற்கு முன் (அல்லது வாய் கொப்பளித்த பிறகு), ஒரு செம்பு பாத்திரத்திலோ அல்லது மண் பானையிலோ வைத்த நீரை எடுங்கள்.

அதை கையில் வைத்துக்கொண்டு, "இந்த நீர் என் உடலை குணப்படுத்தும் அமிர்தம். நன்றி இறைவா!" என்று மனதிற்குள் சொல்லுங்கள்.

பிறகு அதை மடக் மடக் என்று குடிக்காமல், ஒவ்வொரு வாய் நீராக, அதை ரசித்து, உமிழ்நீரோடு கலந்து பருகுங்கள்.

இந்த நேர்மறை எண்ணத்தோடு (Positive Affirmation) நீங்கள் குடிக்கும் நீர், உங்கள் டி.என்.ஏ (DNA) வரை சென்று மாற்றத்தை உண்டாக்கும் வல்லமை கொண்டது.

எப்படி குடிக்க வேண்டும்? (Do's and Don'ts)

எல்லாவற்றிற்கும் ஒரு முறை இருக்கிறது. தவறான முறையில் தண்ணீர் குடித்தால், அது நோயைக் கொண்டு வரும்.

நின்று கொண்டு குடிக்காதீர்கள்

நின்றுகொண்டு தண்ணீர் குடித்தால், அது நேரடியாக குடலைத் தாக்கி, சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தலாம் மற்றும் மூட்டு வலியை (Arthritis) உண்டாக்கும். எப்போதும் அமர்ந்து, நிதானமாக குடியுங்கள்.

பல் துலக்குவதற்கு முன்? பின்?: காலையில் எழுந்ததும் வாய் கொப்பளிக்காமல் நீர் அருந்துவது ஜப்பானிய முறை. வாயில் உள்ள உமிழ்நீரில் (Saliva) நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. இவை வயிற்றுக்குள் செல்வது நல்லது. ஆனால், இது பலருக்கு கூச்சத்தை தரலாம். எனவே, வாய் கொப்பளித்துவிட்டு குடிப்பதே சிறந்தது.

எவ்வளவு குடிக்க வேண்டும்?:

எடுத்த உடனே 1 லிட்டர் குடிக்காதீர்கள். முதலில் 1 அல்லது 2 டம்ளரில் (சுமார் 300-500 மி.லி) தொடங்குங்கள். படிப்படியாக அதிகரிக்கலாம்.

வெந்நீரா? குளிர்ந்த நீரா?:

ஆயுர்வேதத்தின் படி, காலையில் மிதமான சூட்டில் உள்ள வெந்நீர் (Warm Water) குடிப்பதே சிறந்தது. இது கபத்தை (Kapha) கரைக்கும், ஜீரணத்தை சீராக்கும். பிரிட்ஜ் வாட்டர் (Ice Water) காலையில் விஷத்திற்கு சமம்.

ஆரோக்கியம் என்பது மருத்துவமனையில் கிடைப்பதல்ல; அது உங்கள் தினசரி பழக்கவழக்கங்களில் இருக்கிறது. நாளை காலை சூரியன் உதிக்கும் முன் எழுங்கள். பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லுங்கள். அந்த அமிர்தமான தண்ணீரை, ஒரு தவம் போல பருகுங்கள்.

இதை ஒரு 21 நாட்கள் தொடர்ந்து செய்து பாருங்கள்.

உங்கள் முகம் மாறும்.

உங்கள் ஜீரணம் மாறும்.

உங்கள் மனத் தெளிவு மாறும்.

மொத்தத்தில், உங்களுக்கே தெரியாமல் நீங்கள் ஒரு "ஆரோக்கிய மனிதராக" மாறுவீர்கள்!

நோய் இல்லாத வாழ்வே, குறைவற்ற செல்வம்.

முக்கிய குறிப்புகள்

நேரம்: காலை எழுந்தவுடன், பல் துலக்கும் முன்/பின்.

அளவு: 2 முதல் 4 டம்ளர் (படிப்படியாக).

வெப்பநிலை: மிதமான வெந்நீர் (Warm Water) சிறந்தது.

முறை: அமர்ந்து, நிதானமாக (Sip by sip) குடிக்கவும்.

பாத்திரம்: செம்பு அல்லது மண் பானை சிறந்தது.

  • 741
  • 739
·
Added a post

ஒருவர் சுமார் 6 வருடங்களாக சக்கரை நோயினாள் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்த மருந்து எடுத்தும் 250 கிழ் வந்தது இல்லை.அவர் நண்பர் ஒருவர் அறிவுறத்தளின்படி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பன்னீர் பூ .விலையும் மிகமிக குறைவு.

இரவில் பத்து பூ ஒரு கப் தண்ணிரில் ஊர வைத்து காலையில் வெரும் வயிற்றில் வடி கட்டி பருக வேன்டும்.அவர் அப்படியே 20நாட்கள் செய்ததின் விளைவாக அவருக்கு 150கீழ் குறைந்து விட்டது

  • 745