·   ·  3 videos
  •  ·  0 friends
  • 1371
  • More

Beautiful birds

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். வெளியூர் வர்த்தக செயல்களில் ஆர்வம் ஏற்படும். புதுமையான செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். கற்பனை துறைகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பூர்விக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். மாற்றம் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

ரிஷபம்

உயர் பொறுப்பில் இருப்பவர்களால் புதிய அனுபவம் ஏற்படும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறப்புகளை பற்றி புரிந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். சுப காரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

மிதுனம்

உத்தியோக முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார போட்டிகளில் விவேகத்துடன் செயல்படவும். நிதானமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். கடன்கள் சார்ந்த பிரச்சனைகள் குறையும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கடகம்

திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். பெரியோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

சிம்மம்

பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் பிறக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். உத்தியோக பணிகளில் அலைச்சல் ஏற்படலாம். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கன்னி

சுப முயற்சிகள் கைக்கூடி வரும். இசை துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் கைகூடிவரும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய தொழில்நுட்பக் கருவிகள் மீது ஆர்வம் ஏற்படும். போட்டி மனப்பான்மை குறைத்து கொள்வது நல்லது. வேலையாட்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

துலாம்

ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளை துரிதத்துடன் முடிப்பீர்கள். வாக்குறுதிகள் அளிப்பதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். திடீர் பயணங்களால் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வருத்தம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

விருச்சிகம்

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். நிதி தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார இடமாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

தனுசு

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பழக்க வழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உருவாகும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மகரம்

மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். வேலை ஆட்களின் ஆதரவுகள் மேம்படும். சுப காரியங்களை முன் நின்று செய்து முடிப்பீர்கள். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். விவசாய பணிகளில் ஆலோசனை பெற்று முடிவுகளை எடுக்கவும். உடல் அளவில் இருந்த சோர்வுகள் நீங்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கும்பம்

வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும். பேச்சு வன்மையால் அனுகூலம் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். எதிர் பாலின மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். பணிபுரியும் இடத்தில் ஒற்றுமை மேம்படும். பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

மீனம்

எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். உயரதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலை காணப்படும். தன வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்வி பணிகளில் மேன்மையான சூழல் காணப்படும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

  • 57
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 5.4.2026.

இன்று காலை 11.51 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று இரவு 11.49 வரை விசாகம். பின்னர் அனுஷம்.

இன்று பிற்பகல் 02.25 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.

இன்று காலை 11.51 வரை பத்திரை. பின்னர் பவம்

இன்று காலை 06.08 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=473&dpx=2&t=1775364735

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 63

சிந்திப்போமா?

முன்பதிவு தேவையின்றி

ஒருநாள்

நம் பயணம் முடிவுறும்

நாம் செய்யும் தர்மங்களே

நம் luggage...

நாம் பெற்ற மரியாதையே

Passport...

நம்மை சுற்றி இருப்பவர்க்கு

நாம் காட்டிய அன்பே

Visa

பயணத்தை

இனியதாக்குவோம்

இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

  • 62

Good Morning....

  • 64
  • 408
  • 407
  • 409
  • 1
  • 410
·
Added a post

ஒரு முதியவர் நர்ஸிடம்,

“எனக்கு கொஞ்சம் அவசரம் இருக்கிறது… தயவு செய்து என்னை சீக்கிரம் பார்த்து டாக்டரிடம் அனுப்ப முடியுமா?” என்றார்.

அதை கேட்ட நர்ஸ் கொஞ்சம் கோபமாக, “அங்கே உட்காருங்கள்,” என்று சொன்னாள்.

சிறிது நேரம் கழித்து டாக்டர் வந்தபோது, அந்த முதியவர் கதவின் அருகில் இருந்து வேண்டிக் கொண்டார்.

நர்ஸ் எதிர்த்தாலும், டாக்டருக்கு கருணை வந்ததால் அவரை உள்ளே அழைத்தார்.

அவரை பரிசோதிக்கும் போது, விழுந்ததும், காயம் ஏற்பட்டதும், ரத்தம் வந்ததும் எல்லாம் அவர் சொன்னார்.

டாக்டர் காயத்தை சுத்தம் செய்து தையல் போட்டார்.

போகும் நேரத்தில் டாக்டர் கேட்டார்:

“ஏன் இவ்வளவு அவசரம்?”

முதியவர் சொன்னார்:

“என் மனைவிக்கு உடல் நலம் இல்லை… அவளுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட வருவேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறேன்.”

டாக்டர் கேட்டார்:

“என்ன நோய்?”

“அல்சைமர்…” என்று அவர் பதிலளித்தார்.

சிறிது ஆச்சரியத்துடன் டாக்டர் மீண்டும் கேட்டார்:

“அல்சைமர் இருந்தால், நீங்கள் போகவில்லை என்றால் அவங்களுக்கு நினைவில் இருக்குமா?”

அப்போது முதியவர் சிரித்துக் கொண்டு சொன்னார்:

“வாக்கு கொடுத்தது நான்தானே… அதை நினைவில் வைத்துக்கொண்டு நிறைவேற்ற வேண்டியது நான்தானே…

அவளுக்கு நோய் இல்லாத காலத்திலும், நான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற அவள் என்னை பின்தொடர வேண்டிய அவசியம் இருந்ததில்லை…

நீங்கள் நினைவைக் குறித்து கேட்டீர்கள் அல்லவா…

கடந்த ஐந்து வருடங்களாக அவள் என்னை அடையாளம் காணவில்லை…

ஆனால், அவள் யார் என்று எனக்குத் தெரியும்… அதனால் நான் தானே போக வேண்டும்.” என்றாராம்.

  • 472
·
Added a post

வெளியில் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்புகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து என் தெரு முழுக்கவும் ரோஜா சாமந்தி பூக்களின் இதழ்கள் சிதறிக்கிடந்தன. தூரத்தில் எங்கோ பறையொலி, கேட்டது.

யாராயிருக்கும்? என்று யோசித்துக் கொண்ட தெருவில் மெல்ல நுழைந்தேன்.

பக்கத்து வீட்டு வாசலில் நிறைய மலர்களின் இதழ்கள்... ஒரு வேளை அந்த வீட்டின் பெரியவர்..? ச்சே இருக்காது. அப்படி இருந்திருந்தால் எனக்கு தகவல் வந்திருக்குமே. அப்போ அவர் வீட்டில் குடியிருக்கும் யாராவது...!

வாசலில் வண்டி நிறுத்தும் போதுதான் கவனித்தேன் தெருவின் எல்லா பகுதியிலுமே பூவிதழ்கள்.

புரியாமல் வீட்டிற்குள் நுழைந்தேன். சோபாவில் சப்பணமிட்டு அமர்ந்திருந்த மகள் , "ஹாய்..! அப்பா" என்று சொல்லிவிட்டு மடியிலிருந்த புத்தகத்தில் மீண்டும் கண் செலுத்தினாள்.

மனைவியிடம் கேட்டேன்.

"யாரு"?

"யாருன்னா"?

"தெருவெல்லாம் பூவா இருக்கே, அதான் யாருன்னு கேட்டேன்".

மனைவி சிரிக்க....

மகள் சொன்னாள் "அப்பா ...கட்சி வேட்பாளரு ஓட்டுக் கேட்க வந்தாரு. நம்ம தெருவுல உள்ள அந்த கட்சிக்காரர்கள் எல்லாம் மலர் தூவி பண்ணின ஆர்ப்பாட்டம் தான் அது... அப்புறம் அவர் நம்ம வீட்டுக்கு வந்து ஓட்டு கேட்டாருப்பா" என்று அதை ஒரு நம்ப முடியாத அதிசயமாக சொன்னாள்.

சமையலறை உள்ளே போய் வந்த மனைவி ஒரு கவரை என்னிடம் நீட்டினாள்.

"என்னது"?

"பிரிச்சிப் பாருங்க".

உள்ளே புத்தம் புதிய ஐநூறு ரூபாய் தாள் இரண்டு இருந்தது.

"ஏது"...?

"அந்தக் கட்சிகாரங்கதான் கொடுத்தாங்க".

"ஏன் வாங்கின".

"ம்ம்ம்...எல்லாரும் வாங்கும் போது நாம மட்டும் வாங்காம இருக்க முடியுமா".

"எல்லாரும்"...என்று மனதில் நினைத்ததை கேட்காமல் வாயடைத்தேன்.

காந்தி ஐநூறில் சிரித்துக் கொண்டிருந்தார்.

தெருவைப் பார்த்தேன். ரோஜா பூவிதழ்கள் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தன.

பறையொலியையும் பூச்சிதறல்களையும் கண்டு யாரோ இறந்துவிட்டார்கள் என்று முதலில் நான் எண்ணியது உண்மை என்றே இப்போது தோன்றுகிறது.

ஆம் செத்தது... நம் ஜனநாயகம்....,

  • 421
  • 411
·
Added a post

தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. தர்ப்பைப் புல் வளர தண்ணீர் தேவையில்லை. தண்ணீர் இல்லாமலும் வளரும் இது, பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாத தன்மை கொண்டது. சூரிய கிரகணத்தின் போது இதற்கு வலிமை அதிகம். இதன் காற்றுப்படும் இடங்களில் தொற்றுநோய்கள் அண்டாது. அதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்ப்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், குடிநீர்களில் போட்டு வைக்கின்றோம். இந்த புல்லில் காரமும், புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அதன் ஓசை திறன் குறையாமல் இருக்குமாம். தர்ப்பைப்புல் சுவையில் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடையது. குளிர்ச்சியான வீரியமுடையது. சீரணத்தின் இறுதியில் இனிப்புச் சுவையாக நிற்க்கக் கூடியது.

மூவகை தோஷங்களாகிய வாதபித்தகபங்களை அவற்றின் சீற்றத்திலிருந்து கீழிறக்கி சமநிலைப் படுத்துவதனால் தர்ப்பை ஒரு அருமருந்தாக நாம் குறிப்பிடலாம்.

சில சர்க்கரை உபாதை நோயாளிகளுக்கு உடலில் எரிச்சலுடன் மஞ்சள் நிறம் கலந்த சிறுநீர் காணப்படும். இதற்கு ஹாரித்ரமேஹம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் சிலருக்கு துர்நாற்றமுள்ளதாகவும், மஞ்சிட்டை (மஞ்சள்நிறம்) கலக்கிய நீர் போன்றதுமாக சிறுநீர் வெளியேறும் நிலையில் அதற்கு மாஞ்சிஷ்டமேஹம் என்றும் துர்நாற்றம், சூடு, இரத்தம் போன்றும் சிறுநீர் வெளியேறுவதும் இரக்தமேஹமென்றும் கூறப்படுகிறது. இந்த மூன்று வகையான சிறுநீர் உபாதைகள் அனைத்தும் பித்ததோஷத்தினுடைய சீற்றத்தின் விளைவாக ஏற்படுவதால் அதுபோன்ற நிலைகளில் தர்ப்பைக் குடிநீர் அருந்துவது பித்தத்தினால் ஏற்படக் கூடிய சர்க்கரை உபாதையை குறைப்பதுடன் சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று உபாதைகளையும் குணப்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு குடிநீர் ஆகும்.

சுமார் 15 கிராம் தர்ப்பைப்புல்லை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை லிட்டர் ஆகும்வரை குறுக்கிக் காய்ச்சி குளிர்ந்தபிறகு வடிகட்டி அந்த தண்ணீரை ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருகிவர மேற்குறிப்பிட்ட உபாதைகள் நீங்கிவிடும். சிலருக்கு தர்ப்பை நீரைக் காய்ச்சுவதற்கான நேரம் இல்லாமல் இருப்பதால் தர்ப்பைப் புல்லை நன்றாக இடித்து இரவு முழுவதும் பானைத் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதைப் பருகுவதன் மூலம் அந்த நீருக்கான மருத்துவகுணங்களை நம்மால் பெற இயலும். இதற்கு "ஹிமகஷாயம்" என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது.

சர்க்கரை உபாதையின் தாக்கத்தையும் நாம் குறைத்துக்கொள்ள முடியும்.

தர்ப்பைப்புல்லுக்கு மேலும் சில நல்ல மருத்துவகுணங்கள் இருக்கின்றன.

தர்ப்பைப்புல் உடலுக்கு குளுமையை ஏற்படுத்துவதால் தர்ப்பைப்புல் குடிநீர் வெயில் காலத்தில் அருந்தவேண்டிய ஒரு அற்புதமான பானமாகும்.

தர்ப்பையிலுள்ள நெய்ப்பு, இனிப்பு மற்றும் குளிர்ச்சியின் காரணமாக தாய்ப்பாலையும், சிறுநீரையும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.

சிறுநீரகத்தில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை சீராக்கக் கூடிய தர்ப்பைக் குடிநீரின் உபயோகத்தின் மூலம் இரத்தத்தில் தேங்கும் யூரியா, க்ரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது. சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை தர்ப்பைப்புல்லுக்கு இருக்கிறது.

தண்ணீர் தாகத்தைப் போக்கும்.

சிறுநீரகப்பையில் ஏற்படும் வலி மற்றும் அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்குள்ள பெண்களுக்கும் தர்ப்பைக் குடிநீர் மிகவும் நல்லது என்று பாவப்ரகாசர் எனும் ஆயுர்வேதமுனிவர் குறிப்பிடுகிறார்.

மஞ்சள் காமாலை உபாதையில் கல்லீரலில் உள்ள கிருமித்தொற்று மற்றும் அதிகமான பித்தஊறல் ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது.

இரத்தத்தில் ஏற்படும் காந்தல் மற்றும் அதன்மூலமாக ஏற்படும் இரத்தமூலம், இரத்தக்கசிவு, வாய்ப்புண் சிறுநீரக எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும். நாவிற்கு நல்ல ருசியை ஏற்படுத்தித் தரும்.

Herpes zoster எனப்படும் நரம்பு தொடர்தோல் எழுச்சியில் தர்ப்பைப் புல் தண்ணீரை வெளிப்புறம் மற்றும் உட்புற உபயோகத்தால் அதில் ஏற்படும் எரிச்சல் மற்றும் குத்தல் வலியை நம்மால் போக்கிக் கொள்ள முடியும் என்று நிகண்டுரத்னாகரம் மற்றும் ராஜநிகண்டு எனும் ஆயுர்வேத புத்தகங்களில் குறிப்புகளாக காணப்படுகின்றன.

இத்தனை சிறப்பு வாய்ந்த தர்ப்பை நீரை தமிழகத்தில் கோடைகாலத்தில் பயன்படுத்தி அதன் நிறைவான பலனை அனைவரும் பெற முயற்சிப்பது ஆரோக்கியத்திற்கான ஒரு திறவுகோலாக அமைத்துக் கொள்வோம்.

  • 420
  • 411
  • 415
  • 413
  • 414
·
Added a post

1950 வருடம் ஏப்ரல் மாதத்தில் கிருஷ்ண பக்ஷ திரயோதசி திதியில் பிரதோஷ தினத்தில் ரமண மகாிஷி மகா சமாதி அடைந்த தினம். அன்று மிகவும் சிரமப்பட்டுத்தான் பாா்வையாளா்கள் அறைக்கு வந்து கொண்டிருந்தாா். அதுபோல் மகாிஷியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பாா்வையாளா் நேரமும் குறைக்கப்பட்டது. 14.04.1950 அன்று மகாிஷியின் உதவியாளா் சுவாமி சத்யானந்தா., மகாிஷியின் கால்களுக்கு மசாஜ் செய்வித்துக் கொண்டிருந்தாா். சாயங்காலம் சுமாா் 05.00 மணியளவில் தன்னை நிமிர்த்தி உட்கார வைக்குமாறு சுவாமி சத்யானந்தாவிடம் மகாிஷி கூறினார். அதே நேரத்தில் அங்கு குழுமியிருந்த பக்தா்கள் “அருணாசல சிவ., அருணாசல சிவ” என்று பக்தி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அதுவரை சோர்வாக இருந்த மகாிஷியின் முகம் தனது தந்தையின் பெயரிலான சரண கோஷங்களை கேட்டவுடன் பிரகாசமடைந்தது. நீண்ட நேரமாக அவரது கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்து. சுவாமி சத்யானந்தாவும் தொடா்ச்சியாக அவரது கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு கொதிக்க வைத்த இஞ்சி தண்ணீரை மகாிஷிக்கு புகட்டி கொண்டிருந்தாா்.

மருத்துவா் மகாிஷிக்கு செயற்கை சுவாசம் பொறுத்த நினைத்தாா். ஆனால் மகாிஷி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. மகாிஷியின் சுவாசம் படிப்படியாக குறைந்து வந்து சாியாக இரவு 08.47க்கு ஆடல்வல்லானின் கமல பாதங்களில் சரணடைந்தாா்.

அவா் கடைசி நேரத்தில் கூறியது :

“நான் இறந்து கொண்டிருப்பதாக எல்லோரும் கூறுகிறீர்களே., நான் எங்கும் செல்லவில்லை. நான் எங்கு செல்வது..? இங்கேயே தான் இருக்கிறேன்”

பக்தா்கள் தங்களை தவிக்கவிட்டு மகாிஷி செல்வதாக கதறிய போது மகாிஷி கூறியது:

“நீங்கள் இந்த உடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறீர்கள். குருவிற்கு உடல் வடிவம் கிடையாது. அதனால் இந்த பூத உடலை விட நேர்ந்தாலும் குருவுடனா பந்தம் நீடிக்கும். ஒருவருக்கு குரு அருள் கிடைத்து விட்டால் அவா்கள் கைவிடப் படுவதில்லை”

மகாிஷி எங்கேயும் போய்விடவில்லை. அவா் இங்கேதான் இருக்கிறாா்.

மகாிஷியின் பூத உடல் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது நினைவுகளும் போதனைகளும் ஆத்ம விசாரமும் என்றென்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அருணா சலம்என அகமே நினைப்பவா் அகத்தை வேர்அறுப்பாய் அருணாசலா..! - அருணாசல அஷரமணமாலை.

அருணா சலசிவ அருணா சலசிவ அருணா சலசிவ அருணாசலா!

அருணா சலசிவ அருணா சலசிவ அருணா சலசிவ அருணாசலா!

  • 422
·
Added a post

எங்கு திரும்பினாலும் தோல்வி என்ன வாழ்க்கை இது?

வாழ்வோடு போராடி சலித்த ஒருவன் ஞானி ஒருவரை சந்தித்தான்.

"குருவே, எனக்கு ஏன் இந்த நிலைமை? வெள்ளம்போல பிரச்னைகள் என்னை மூழ்கடிக்கின்றன. இனி என்னால் ஒருபோதும் ஊருக்குத் திரும்பவே முடியாது'' என்று குரு முன் நின்று புலம்பினான் அவன்.

குரு அவனைக் கனிவோடு பார்த்தார். தன் அறைக்கு அழைத்துச் சென்று ஆசுவாசப்படுத்தினார்.

அலமாரியில் இருந்த அலங்காரமான ஒரு பெட்டியை எடுத்து வெளியே வைத்தார்.

"மகனே, இது சாதாரணப் பெட்டியல்ல. சகல பிரச்னைகளையும் தீர்க்கும் மந்திரப்பெட்டி. நீ உன் பிரச்னைகள் ஒவ்வொன்றாகச் சொல். அவற்றை இந்தப் பெட்டியில் போட்டுப் பூட்டிவிடுகிறேன். அதன் பின் நீ நிம்மதியாக வாழலாம்'' என்றார்.

குருவின் மீது நம்பிக்கை வைத்துத் தன் பிரச்னைகளை சொல்லத் தொடங்கினான்.

"நான் தொழில் செய்து கொண்டிருந்தேன். அது பெரும் நஷ்டம் அடைந்துவிட்டது. தொழிலுக்காகக் கடன் கொடுத்தவர்கள் எல்லோரும் என்னை நெருக்குகிறார்கள். அவகாசம் கேட்டால்கூடத் தரமறுக்கிறார்கள்.''

குரு, அவன் சொல்லிமுடித்ததும் காற்றில் எதையோ பற்றுவதுபோல் சைகை செய்து அதைப் பெட்டியில் போடுவதைப்போலப் பாவனை செய்தார்.

"ம், அடுத்து...'' என்றார்.

"என் மனைவிக்கு இவை எல்லாம் பிடிக்கவேயில்லை. வீட்டில் அடிக்கடி சண்டை. நிம்மதியாக ஒருநாள் போகமாட்டேன் என்கிறது'' என்றான்.

மீண்டும் அவர் அதேபோலச் செய்தார்.

"ம், அடுத்து...''

"என் பிள்ளைகள் என்னை மதிப்பதேயில்லை. இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டுமா என்றிருக்கிறது.''

குரு மீண்டும் காற்றில் எதையோ பிடித்துப் பெட்டியில் அடைத்தார். பின்பு,

"உன் பிரச்னைகள் எல்லாம் இந்தப் பெட்டியில் அடைக்கப்பட்டுவிட்டன. இனி இவை உன்னைத் தொடராது. எனவே நீ, இங்கு ஒருநாள் தங்கியிருந்துவிட்டு மறுநாள் உன் ஊருக்கே போகலாம்'' என்றார்.

அவனும் அப்படியே ஒருநாள் ஆசிரமத்தில் தங்கி, பின் தன் ஊருக்குப் புறப்பட்டான். இந்த ஒரு நாளில் அவன் மனம் கொஞ்சம் தெளிவடைந்திருந்தது. உண்மையிலேயே, குரு தன் பிரச்னைகளை அந்தப் பெட்டியில் அடைத்துவிட்டார் என்று நம்பினான்.

ஊருக்குத் திரும்பினான். ஊரின் எல்லையிலேயே நின்றிருந்த ஓர் உறவுக்காரர், அவனைக் கண்டதும்

ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டார்.

நல்லா இருக்கியா, எங்கப்பா போன? உன்னைக் காணாம தவிச்சுப் போயிட்டோம்'' என்றார்.

அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

'அட, இவர் நம்மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பவரா? இத்தனை நாள்களில் ஒருநாள்கூட இதை அவர் வெளிப்படுத்தியதே இல்லையே? அதுசரி, நானும்தான் வெளிப்படுத்தியதில்லை. எல்லாம் அந்த மந்திரப் பெட்டியின் மகிமை' என்று நினைத்துக்கொண்டான்.

கொஞ்சம் தூரம் நடந்ததுமே, அவனுக்குக் கடன்கொடுத்த நபர் ஒருவர் எதிர்ப்பட்டார். வழக்கமாக அவரைக் கண்டதும் பயந்து மறைந்து ஓடும் அவன், இந்தமுறை பயப்படவில்லை. அதுதான் குரு அவன் பிரச்னைகளை அடைத்துவிட்டாரே, நேருக்கு நேராக அவரைச் சந்தித்தான்.

கடன்கொடுத்தவரும், அவன் நேருக்கு நேராக வந்து நிற்பதுகண்டு ஆச்சரியப்பட்டார். நேற்றெல்லாம் அவன் ஊரைவிட்டு ஓடிவிட்டான் என்று கேள்விப்பட்டு, அவன் வீட்டுக்குப் போய் விசாரித்து உறுதி செய்துகொண்டார். 'மொத்த பணமும் போச்சே' என்கிற கவலை. மற்றொருபக்கம், 'ஒரு குடும்பத்தையே தெருவில் நிறுத்திவிட்டானே ' என்கிற வருத்தமும் நிறைந்திருந்தது. அவனை மீண்டும் கண்டது அவருக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது.

"என்னப்பா நீ? பணம் கொடுக்காமலும், பதில் சொல்லாமலும் நழுவி ஓடிக்கொண்டிருந்தாயே என்று நினைத்து கொஞ்சம் கறாராய்ப் பேசினேனே தவிர வேறு ஒன்றும் இல்லை. மனதில் வைத்துக்கொள்ளாதே. உன் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திருப்பிக் கொடு" என்று சொன்னார்.

இதைக் கேட்டதும் அவன் மனம் நெகிழ்ந்தது.

"ஐயா,மன்னித்துவிடுங்கள். நான் செய்த சில தவறுகளால் தொழிலில் பணத்தை இழந்துவிட்டேன். கூடிய சீக்கிரம் நல்ல முறையில் தொழில் செய்து, உங்கள் கடனை அடைந்துவிடுகிறேன்" என்றான். அவரும் 'சரி' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

மந்திரப் பெட்டியின் மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கை இப்போது இரட்டிப்பாகிவிட்டது. ஆனாலும், 'சும்மாவே சண்டையிடும் மனைவி என்ன சொல்வாளோ' என்று பயந்தான். வீட்டை நோக்கிப் போனான்.

அவனைக் கண்டதும் அவன் மனைவி ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தாள். அவனை உபசரித்து," சாதாரணப் பணப்பிரச்னைக்காக நீங்கள் இப்படி வருந்தலாமா? இனி எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் உணவு உண்ண வாருங்கள்" என்றாள்.

பிள்ளைகளும், அப்பா வந்துவிட்டதை அறிந்து வீடு திரும்பி அவரைக் கட்டிக்கொண்டன. அவனுக்கு எல்லாம் புதியதாக இருந்தது. அன்றைய இரவில் தீர்க்கமாக ஆலோசித்து மறுநாள், மீண்டும் தொழில் தொடங்கினான்.

எதிர்பார்த்ததைவிடத் தொழில் சிறப்பாக நடந்தது. கடனை அடைத்து முடித்தான். கொஞ்சம் பணமும் சேர்ந்தது.

இவற்றுக்கெல்லாம் காரணமான குருவைச் சந்தித்து நன்றிகூற விரும்பினான்.

ஒருநாள் காணிக்கைகளை எடுத்து கொண்டு குருவினைக் காணச் சென்றான். காணிக்கைகளை குருவிடம் சமர்ப்பித்து வணங்கினான்.

"குருவே, அன்று நீங்கள் மட்டும் என் பிரச்னைகளை அந்தப் பெட்டியில் அடைக்காவிட்டால், நான் இந்த நேரம் என்ன ஆகியிருப்பேன் என்றே தெரியவில்லை. உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்..." என்று நெகிழ்ச்சியோடு கூறினான்.

குரு சிரித்துக்கொண்டே, "மகனே, அந்தப் பெட்டியில் உண்மையில் நான் எதையும் அடைக்கவில்லை. உன் பிரச்னைகளைக் கேட்டுக்கொண்டேன், அவ்வளவுதான். நீ பெருங்குழப்பத்தில் இருந்தாய். குழப்பத்தில் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருக்காது. மேலும், நீ பிரச்னைகளில் இருந்து தப்பிப் போக நினைத்தாய்.

அது தவறு. மாறாக, பிரச்னைகளில் இருந்து விலகி நின்று யோசித்தால் மட்டுமே அதைத் தீர்க்கமுடியும்.

உன் பிரச்னைகள் உன்னைவிட்டு நீங்கிவிட்டன என்று நான் சொன்னதை நம்பி, நீ முற்றிலும் அதிலிருந்து விலகி நின்று அவற்றைப் பார்த்தாய்.

அவற்றின் தன்மைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு தீர்க்க முனைந்தாய், அதில் வெற்றியும் பெற்றாய். இதில் என் மாயம் எதுவும் இல்லை" என்றார் குரு.

அவன் கண்ணீரோடு குருவைப் பணிந்தான்.

துன்பங்கள் சூழ்ந்து அழுத்தும்போது இது சுமையே அல்ல என்று துணிச்சலுடன் சொல்லுங்கள்.

துன்பம் சிதறி ஓடுவதை உங்கள் அறிவால் உணர்வீர்கள். துன்பத்தில் இருந்து நிரந்தர விடுதலை பெறுவீர்கள்.

  • 476
  • 412

ஏப்ரல் மாத நல்வாழ்த்துகள்.

  • 425
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உருவாகும். பழகும் தன்மையில் மாற்றங்கள் காணப்படும். புதிய முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். செயல்பாடுகளில் இருந்த எதிர்ப்புகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

ரிஷபம்

பயணம் தொடர்பான செயல்களில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மனை வாங்குதல் மற்றும் விற்றல் பணிகளில் மேன்மை ஏற்படும். பணி புரியும் இடத்தில் நன்மைகள் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மதிப்புகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மிதுனம்

பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். தனவரவு தாராளமாக இருக்கும். வாகனங்களால் முன்னேற்றம் ஏற்படும். பெரியோர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நிர்வாக துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்த தயக்கங்கள் குறையும். லாபம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கடகம்

வியாபாரத்தில் சாதகமான சூழல்கள் ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். கால்நடை செயல்களில் சிந்தித்து செயல்படவும். வீடு மாற்ற சிந்தனைகள் மேம்படும். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் குறையும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

சிம்மம்

குடும்ப உறுப்பினர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழல்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த ஆதரவுகள் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கிய விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். அக்கம்பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கன்னி

குடும்பத்தில் புதிய நபர்களினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். அரசு சார்ந்த நிலைபாடுகளை புரிந்து கொள்வீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவீர்கள். வியாபார பணிகளில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

துலாம்

மனதில் ஒரு விதமான குழப்பமும் அமைதியின்மைக்கான சூழ்நிலையும் உருவாகும். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். உடல் தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

விருச்சிகம்

காது தொடர்பான இன்னல்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ரகசியமான சில முதலீடுகள் மேம்படும். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் நயமான பேச்சுக்களால் நன்மைகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

தனுசு

வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மகரம்

நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களால் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரம் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கும்பம்

செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புதிய துறை சார்ந்த தேடல்கள் ஏற்படும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். மாமியார் உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். சமூகப் பணிகளில் அலைச்சல் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மீனம்

எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். திட்டமிட்ட சில காரியங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில்நுட்ப கருவிகளால் விரயங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

  • 483
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 3.4.2026.

இன்று காலை 08.51 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று இரவு 07.25 வரை சித்திரை. பின்னர் சுவாதி.

இன்று பிற்பகல் 02.06 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம்.

இன்று காலை 08.51 வரை கௌலவம். பின்னர் இரவு 09.30 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=472&dpx=2&t=1775187744

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 488
·
Added article
  • நடிகை நதியா அக்டோபர் 24, 1966-இல் பிறந்தார்.
  • நடிகை நதியாவின் இயற்பெயர் ஜெரினா மொய்டு.
  • இவர் முதல் முதலாக 1984 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான நோக்கேத தூரத்து கண்ணும் நாடு என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி அந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதையும் வென்றிருக்கிறார்.
  • 1985-ல் தமிழில் பூவே பூச்சூடவா திரைப்படம் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலமானார்.
  • 80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.
  • பிரபு, சத்யராஜ், ரஜினி, விஜயகாந்த், சுரேஷ், மோகன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
  • இவரது ஸ்டைலான தோற்றமும், தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களும் இன்றும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
  • திரையுலகில் நல்ல மார்க்கெட் இருக்கும் போதே தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறியா நடிகை நதியா, பல வருடம் கழித்து 2004-ம் ஆண்டு ஜெயம் ரவியின் கியூட் அம்மாவாக எம்.குமரன் சன் ஆஃப் மஹாலக்ஷ்மி படத்தின் மூலம் ஸ்ட்ராங் ரீ என்ட்ரி கம்பேக் கொடுத்தார்.
  • 80ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது 2கே கிட்ஸ்களும் ரசிக்கும் நடிகையாக இருந்து வருகிறார்.
  • நடிகை நதியா 1988 இல் ஷிரிஷ் காட்போல் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
  • நடிகை நதியாவிற்கு சனம் மற்றும் ஜனா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
  • திருமணத்திற்கு பிறகு தனது கணவர் மற்றும் மகள்களுடன் அமெரிக்காவில் வசித்து வந்த நடிகை நதியா 2008 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பி வந்தார். தற்போது இவர் மும்பையில் வசித்து வருகிறார்.
  • 548

Good Morning...

  • 481