·   ·  3 videos
  •  ·  0 friends
  • 1220
  • More

Beautiful birds

Comments (0)
Login or Join to comment.
  • 44
  • 45
·
Added a post

நினைத்துப் பார்த்தாலே நெஞ்சு கொதிக்கிறது சாமி!

எத்தனை பேர் என்னை கேலி செய்து வசை பாடி இருக்கிறார்கள்!

எத்தனை பேர் என் முதுகில் குத்தி இருக்கிறார்கள்!

அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றாக பாடம் புகட்ட வேண்டும்." என்று சாமியார் முன் வந்து பொருமினான் ஒரு சீடன்.

சாமியார் யோசித்தார். நீ ஒன்று செய், என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி.

நீ யாரையெல்லாம் பழி வாங்க வேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக் கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக் கொண்டே வா, நீ எங்கு எல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போகவேண்டும்." என்றார்.

இவ்வளவுதானா?' என்று சீடன், அன்றிலிருந்து யார் மீதெல்லாம் ஆத்திரமோ பழிவாங்க வேண்டும் என்ற நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஓர் உருளைக்கிழங்கை எடுத்து பெயரை செதுக்கி கோணிப்பையில் போட்டுக்கொண்டே வந்தான்.

ஆரம்பத்தில் கோணியை தூக்கி கொண்டு திரிவது பெரிய சிரமமாக தெரியவில்லை.

நாளாக நாளாக அது சுமையாக தோன்றியது. இன்னும் கொஞ்சநாள் போனதும் தூக்குவதே சிரமமாகிவிட்டது.

சில நாட்களுக்கு பின் அந்த உரித்த உருளைக் கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது.

நாள் போக போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீச ஆரம்பித்தது.

பக்தவசலம் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, நெருங்கிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள்.

சீடன் மறுபடியும் சாமியாரிடம் வந்தான்.

என்ன புரிந்தது?" எனறு கேட்டார், சாமியார்.

பழி வாங்கும் குரோத உணர்வை சேகரித்துக் கொண்டே வந்தால் அது சுமையாகிவிடும்.

துர்நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள்" என்றான் சீடன்.

சரி. ஆனால் நீ இன்னும் முழுக்கிணற்றை தாண்டவில்லை". என்றார் சாமியார்.

உன் பிரச்னை சுமை கூடி போச்சே' என்பதும் 'நாற்றம் அடிக்கிறதே' என்பதும் தான்!

அந்த உருளைக்கிழங்குகளை அவ்வப்போது கொட்டி அந்த கோணியை காலி செய்து கொண்டே வந்தால் இந்த சுமைப் பிரச்னை, நாற்றப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறாய் இல்லையா?' என்று கேட்டார்.

ஆமாம்" என்றான் சீடன்.

மகனே, பிரச்சனை உருளைக் கிழங்கில் இல்லை.

கோணி இருப்பதால் தானே அதில் உருளைகிழங்கை சேர்க்க ஆரம்பித்தாய்?

எனவே உனக்கு சுமையில்லாமல் இருக்க வேண்டுமானால், அந்த சுமை நாற்றமெடுக்காமல் இருக்க

வேண்டுமானால் கோணியை முதலில் தூக்கி எறி.

அவரவர்கள் செய்த கர்மாக்களை அவரவர்கள் அனுபவித்தே தீருவார்கள்.

இதில் நாம் தனியாக தூக்கிக் கொண்டு திரிய ஒன்றுமில்லை.

நீ உன் வேலையில் கவனம் செலுத்தி, உன் கடமையை சரியாக செய்து வா".என்றார் சாமியார்.

உண்மை அது தான்!

நாம் கைவிட வேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டுமல்ல, பழி வாங்கும் மனத்தையும் கூடத்தான்.

இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு எல்லாம் காரணம் மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும் மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான்.

நம் மனதில் என்றும் நினைக்க வேண்டியது புத்தியில் எப்போதும் இறை சிந்தனையும், மனதில் எப்போதும் இறை உணர்வும், நாவில் எப்போதும் இறை நாமமுமே.

  • 48
  • 43
  • 42
  • 42
·
Added article

மகேஷ்​பாபு கதா​நாயக​னாக நடிக்​கும் ‘வாரணாசி’ படத்தை இயக்கி வரு​கிறார், ராஜமவுலி. இதில் பிரியங்கா சோப்ரா நாயகி​யாக​வும் பிருத்​வி​ராஜ் வில்​ல​னாக​வும் நடிக்கின்றனர். 2027-ம் ஆண்டு ஏப்​.7-ல் வெளி​யாக இருக்கும் இப்​படத்​தின் படப்​பிடிப்பு சில மாதங்​களுக்கு முன் கென்​யா​வில் நடை​பெற்​றது.

இந்​நிலை​யில் அங்கு நடந்த படப்​பிடிப்பு அனுபவங்களை நடிகை பிரி​யங்கா சோப்ரா பகிர்ந்​துள்​ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “‘வாரணாசி’ படத்​துக்​காக கென்​யா​வில் படப்​பிடிப்​பில் இருந்​தேன். அங்கு நாங்​கள் காட்​டெரு​மை​களுக்கு நடுவில் நின்று படப்​பிடிப்பு நடத்​தினோம்.

அவை ஓர் இடத்​திலிருந்து மற்​றொரு இடத்​துக்கு வலசை போகும் நேரத்​தில், அவற்​றின் கூட்​டத்​துக்கு நடு​விலேயே நானும் சக நடிகர் மகேஷ் பாபு​வும் நின்​றிருந்​தோம். நான் பார்த்​த​திலேயே மிக​வும் சிறந்த விஷ​யம் அது​தான். அவற்​றின் முகங்​களைப் பார்க்​கும்​போதும், எத்​தனை ஆண்​டு​களாக அவற்​றின் இனங்​கள் இங்கே வாழ்ந்து வரு​கின்றன என்​பதை நினைக்​கும்​போதும் ஒரு வித​மான பிரம்​மாண்​டத்தை உணர முடிந்​தது.

காட்​டில் இந்த விலங்​கு​களை நேரில் பார்க்​கும்​போது அந்த இடத்​தின் ஆழமான கனத்தை உணர முடி​யும். இது உண்​மை​யிலேயே ஓர் இனிமை​யான அனுபவம்” என்று அவர் கூறி​னார். இந்தப் படப்​பிடிப்பு பற்றி மகேஷ் பாபு ஏற்​கெனவே கூறி​யிருந்​தார்.

அவர் கூறும்​போது, “இந்த அனுப வத்தை என்​னால் ஒரு​போதும் மறக்கமுடி​யாது. விலங்​குகளுக்கு நடுவே இருப்பது முதலில் கொஞ்​சம் பயமாகத்​தான் இருந்​தது, ஆனால் 5 அல்​லது 10 நிமிடங்​களுக்​குப் பிறகு அங்கே கேம​ராக்​கள் இருப்​பதோ அல்​லது வேறு யாராவது இருப்​பதோ கண்​ணுக்​குத் தெரிய​வில்​லை. அந்​தப் பெருங்​காட்​டின் நடுவே நாங்​கள் மட்​டும் இருப்​பது போன்ற உணர்வு ஏற்பட்டது” என்று தெரி​வித்​துள்​ளார்.

  • 47
·
Added article

பிரபல பாப் பாடகி​யும் நடிகை​யு​மான பிரிட்னி ஸ்பியர்ஸ், மது​போதை​யில் வாக​னம் ஓட்​டிய​தாகக் கைது செய்யப்பட்​டார்.

அமெரிக்​கா​வின் கலி​போர்​னி​யா​வில் உள்ள வெஞ்​சுரா கவுண்​டி​யில் அவர் மது​போதை​யில் புதன்​கிழமை இரவு வாக​னம் ஓட்​டிய​தாகக் கூறப்​படு​கிறது. அந்த சந்​தேகத்​தின் பேரில் அவர் கைது செய்​யப்​பட்​டார். பின்​னர் விசா​ரணைக்​குப் பிறகு விடுவிக்​கப்​பட்டார்.

அவர் மீதான அதி​காரப்​பூர்வ குற்​றச்​சாட்​டு​கள் இன்​னும் இறுதி செய்​யப்​பட​வில்​லை. அவர் மே 4-ம் தேதி நீதி​மன்​றத்​தில் ஆஜராக உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், பிரிட்னி​யின் மேலா​ளர் கேட் ஹட்​சன் வெளி​யிட்​டுள்ள அறிக்கை​யில், “இது துர​திர்​ஷ்ட​வசமான மற்​றும் மன்​னிக்க முடி​யாத சம்​பவம். பிரிட்​னி, சட்​டத்​துக்கு முழு​மை​யாகக் கட்​டுப்​படு​வார்.

அவரது வாழ்க்​கை​யில் நீண்​ட​கால​மாகத் தேவைப்​படும் ஒரு மாற்​றத்​துக்கு இதுவே தொடக்​க​மாக அமை​யும் என்று நம்​பு​கிறோம். இந்த இக்​கட்​டான நேரத்​தில் அவருக்​குப் போதிய உதவி​யும் ஆதர​வும் தேவை” என்று தெரி​வித்​துள்​ளார்.

  • 50
·
Added a news

கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த தப்பியோடிய குற்றச்சாட்டுக்குட்பட்ட நபர் ஒருவர் மொன்றியலில் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதான பிரயன் பியுன்டன் க்ராமாஜோ என்ற நபருக்கு எதிராக நாடு தழுவிய அடிப்படையில் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த அடிப்படையில் மொன்றியல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் கடந்த 2025 ஜூலை 17 அன்று டொரண்டோவில் உள்ள யோர்க்டேல் ஷாப்பிங் மையத்தின் வாகன தரிப்பிடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக டொரண்டோ பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார். பின்னர் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்ட கனடாவின் மிகவும் தேடப்பட்ட 25 குற்றச்சாட்டு நபர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தில் இடம்பெற்றிருந்தார்.

  • 49
·
Added a post
  • சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை `ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு’ எனச் சொல்லிவிடுகிறது.
  • `Sorry’ என்பது மட்டுமல்ல... `சாப்பிட்டியா?’ என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!
  • `உன் இஷ்டம்’ என்பது பதிலாக வந்தால் `எனக்கு இஷ்டமில்லை’ என்று பொருள்!
  • கையில் பெப்சி, கோக், லேஸ் வைத்திருந்தால் இயல்பாகப் பார்க்கிறார்கள். ஒரு கொய்யாக்காய் வைத்திருந்தால் விநோதமாகப் பார்க்கிறார்கள். ஐடி பூங்காக்கள்.
  • டிவி-யில் சேனல் மாத்தாம ஒரே சேனலை ரொம்ப நேரம் பார்த்துட்டிருந்தா, ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கணும்... இல்லை மனசு சரியில்லாம இருக்கணும்.
  • மிடில் க்ளாஸ் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்! எதிர்வீட்டுக்காரன் பார்த்தால் பணக்காரனா நடிக்கணும். சொந்தக்காரன் கடன் கேட்டால் ஏழையா நடிக்கணும்.
  • பாகுபலி படத்தில் மட்டும்தான் பொண்டாட்டிகூட சேர்ந்து எதிரியோட சண்டை போடுறான். மத்தவனுக்கெல்லாம் பொண்டாட்டிகூட சண்டை போடவே நேரம் சரியாருக்கு.
  • `உனக்குக் கால் வலிக்கும், நான் தூக்கிக்குறேன்’ என்று சொல்லும்போது வேண்டாம் என்றும், `கை வலிக்குது கொஞ்சம் இறங்கு’ என்று சொல்லும்போது இறங்காததும் குழந்தையின் டிசைன்!
  • நூலகம் செல்வோரை வித்தியாசமாய் பார்க்கிறது சமூகம். குடிப்பவர்களை இயல்பாக பார்க்கிறது.
  • வசதியா இருக்கிறவன் தண்ணி அடிச்சா நல்லா வாழறான்னு சொல்றாங்க. வசதி இல்லாதவன் தண்ணி அடிச்சா கெட்டு ஒளிஞ்சிட்டான் அப்படின்னு சொல்றாங்க
  • 53

கடின உழைப்பு என்ற மதிப்பு மிக்க சொத்தைச்சளைக்காமல் தொடர்ந்து சம்பாதியுங்கள்...

அதைத் தவிர வெற்றிக்கு உத்தரவாதம் தருவது வேறு எதுவும் இல்லை..!!

நல்வாழ்த்துகள்.

  • 49
·
Added a post

கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பு...

பாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர். ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர். ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் மீது அன்பு கொண்டு அவனைப் பற்றிய பாடல்களைப் பாடியுள்ளார். சோழனைக் காணவேண்டும் என்னும் பேரவா கொண்டிருந்தார். ஆனால் பாண்டிய நாட்டிலுள்ள பிசிர் வெகு தொலைவு உள்ளதால் இவரால் சோழ நாட்டுக்குச் செல்ல இயலவில்லை.

இவரது புகழையும் தமிழையும் கேள்விப்பட்ட சோழனும் இவரைக் காணவேண்டும் என்னும் அவா கொண்டிருந்தான். எனவே இருவரும் உயிர் ஒன்றாகவும் உடல் வேறாகவும் வாழ்ந்து வந்தனர். இருவரும் தாம் ஒருவருக்கொருவர் சந்திக்கும் திருநாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

கோப்பெருஞ்சோழனின் தலைநகர் உறையூர். இம்மன்னன் பிசிராந்தையாரை நேரில் காணாமலேயே அவருடன் நட்புக் கொண்டவன். இவனது ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போதே இவனது இரண்டு புதல்வர்களும் சோழ ஆட்சிக் கட்டில் ஏறுவதற்காக தந்தையுடன் போரிடத் துணிந்தனர்.

இதை அறிந்த கோப்பெருஞ்சோழன் ஆட்சியை விட்டு வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான். அப்போது தன் மந்திரியிடமும் மற்றையோரிடமும் பிசிராந்தையார் என்னைக் காண வருவார். என்னுடன் வடக்கிருப்பார். அவருக்கும் ஓர் இடத்தைத் தயார் செய்யுங்கள் எனக் கூறினார். அதேபோல் பிசிராந்தையாருக்கும் ஒரு இடம் அமைக்கப்பட்டது. நாட்கள் கடந்தன. சோழன் பிசிரந்தையாரைக் காணாமலேயே வடக்கிருக்கத் துணிந்தான். எப்படியும் பிசிராந்தையார் வந்து விடுவார் எனக் கூறித் தன் தவத்தை மேற்கொண்டான்.

குறிப்பு: இவ்வுலக வாழ்வைத் துறக்க விரும்பும் மன்னவர் வடக்கிருந்து உயிர் விடுதல் அக்கால மரபு. வடக்கிருத்தல் என்பது தன்நாட்டில் உள்ள ஆறு குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று அதன் இடையே மணல் திட்டு ஒன்றை அமைத்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ணாநோன்பிருந்து உயிர் விடுதல். தன் மக்கள் மீது இருந்த மனக் கசப்பின் காரணமாக கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்தான்.

இதனைக் கேள்விப்பட்டார் பிசிராந்தையார். உடனே சோழ நாட்டை நோக்கி ஓடி வந்தார். வழியில் எதிர்ப் பட்டவர் இவரைப் பார்த்து மிகவும் ஆச்சரியப் பட்டனர்."புலவரே! நான் என் சிறுவயது முதலே தங்களைப் பற்றி என் தந்தையார் கூறக் கேட்டிருக்கிறேன். தாங்கள் மிகவும் வயதானவராக இருப்பீர்கள் என்று எண்ணியிருந்தோம். தாங்களோ மிகவும் இளமையாக இருக்கின்றீர்களே, அது எப்படி?"என்று வியந்து கேட்டனர். அதற்கு மறுமொழியாக ஆந்தையார் ஒரு பாடல் பாடினார். புறநானூற்றில் உள்ள இப்பாடல் நமது வாழ்வியலுக்கு மிகவும் தேவையான ஒன்று.

" யாண்டு பலவாக நரையில வாகுதல்

யாங்காகியர் என வினவுதிராயின்,

மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்

யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்

அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை

ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே."

என்று பாடிய பாடல் மூலம் " வயோதிகரானாலும் இளமையோடிருக்கும் காரணத்தைக் கேட்பீரானால் சிறந்த பண்புள்ள மனைவி, மக்கள் குறிப்பறிந்து பணி செய்யும் பணியாளர்கள் அறத்தையே நாடிச் செய்யும் மன்னன் இத்துணை பேருடன் நன்கு கற்று நல்ல பண்புகளுடன் விளங்கும் சான்றோர் பலரும் எம்மைச் சூழ்ந்து இருக்க நான் வாழ்வதால் எனக்கு நரை தோன்றவில்லை. மூப்பும் எம்மை அணுகவில்லை." என்று விளக்கினார்.

சோழனின் இறுதி நேரம் வந்துற்றபோது பிசிராந்தையார் ஓடிவந்தார். நண்பனைக் கண்டார் தனக்காகத் தயாராக அமைக்கப்பட்ட இடத்தில் வடக்கிருந்து சோழனுடன் தானும் தன் இன்னுயிர் விடுத்தார்.

இச்செய்தியை இக்காட்சியைக் கண்ட பொத்தியார் என்னும் புலவர் தன் பாடலில் இதனைக் கூறுகிறார்.

"இசைமரபு ஆக நட்பு கந்தாக

இனியதோர் காலை ஈங்கு வருதல்

வருவன் என்ற கோனது பெருமையும்

அது பழுதின்றி வந்தவன் அறிவும்

வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே."

பிசிராந்தையார் என்ற புலவரும் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனும் தம்முள் காணாமலேயே நட்புக் கொண்டு ஒன்றாக உயிர் நீத்த இச்சிறப்பினை இலக்கியங்கள் நமக்கு எடுத்து இயம்புகின்றன. இத்தகு நண்பர்களை நம்மால் மறக்க இயலுமா ?

இக்காலத்தில் இப்படியோர் நட்பு கிடைக்குமோ-?

  • 54
·
Added a post

1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.

2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.

3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.

4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.

6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள்.

7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.

9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!

10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள்.

11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,

14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.

15. பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் தினமும் ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.

16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.

17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.

18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.

19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,

20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.

21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.

22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.

24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.

25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.

26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.

27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும் உங்களை என்றென்றும் காப்பாற்றுவார் என்பதை மனதார உணருங்கள்.

28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.

29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.

30. உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்.

31. உங்கள் தேவைக்கு அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.

33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.

34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.

35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.

36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.

37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.

38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து இறங்குங்கள்.

39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!

40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

  • 58
·
Added a post

எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கதவு சிறியது தான்.

எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியது தான்.

எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சாவி சிறியது தான்.

இவ்வளவு சிறிய சாவியை வைத்து அவ்வளவு பெரிய வீட்டைத் திறந்து செல்கிறோம்.

வாழ்க்கையும் இதே மாதிரி தான்.

நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும்.

அதுவே அத்தனைப் பிரச்சினையைத் தீர்க்கும் சாவியாக அமைந்து விடும்.

சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை. தீர்வு இல்லாத பிரச்சினைகளை இறைவன் அனுமதிப்பதில்லை.

பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உணவு வழங்குகின்றார்.

உலகில் மனிதனாய்ப் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்.

இறைவன் சிலரை வறுமையால் சோதிக்கின்றார்,

இன்னும் சிலரை நோய் நொடிகளால் சோதிக்கின்றார்,

இன்னும் சிலரைக் கடன் தொல்லைகளால் சோதிக்கின்றார்.

ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள்.

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும் தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் புரிய வரும் மற்ற மனிதர்களும் நம்மைப் போன்றோ, நம்மை விட அதிகமாகவோ சோதனைக்குள்ளாக்கப் படுகிறார்கள் என்று.

எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருங்கள்.

  • 63
·
Added a post

மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளின் சாதனைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அண்டை அயலாருடன் இருந்து வந்த கருத்துமோதல் விலகும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

ரிஷபம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

மிதுனம்: பழைய பொன், பொருளை மாற்றிவிட்டு புதியன வாங்குவீர்கள். மனைவியின் சகோதரர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வந்து சேரும். சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

கடகம்: விலையுயர்ந்த கலை பொருட்கள் வாங்குவீர். மனைவிவழி உறவினர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனப் பழுது நீங்கும். வீடு, மனை, வாகனம் விற்பது, வாங்குவதில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் லாபமீட்டுவீர். உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: புது சிந்தனையால் மனக்குழப்பம் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. சேமிக்கும் அளவுக்கு பணம் வரும். புது வாகனம் வாங்குவீர். பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

கன்னி: வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். திடீர் யோகம் உண்டாகும். உறவினர் அனைவரும் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

துலாம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். மகனின் படிப்பு, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், டென்ஷன் வரக் கூடும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுக்க வேண்டாம். பயணங்கள் அலைச்சல் தரும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.

விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவர். உடன்பிறந்தவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

தனுசு: பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் முழு ஆதரவு தருவர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக்கையாள்வீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரி முக்கிய விஷயங்களை பகிரும் அளவுக்கு நெருக்கமாவீர்.

மகரம்: தாயாரின் மருத்துவச் செலவு குறையும். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம்: குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். மாணவர்களின் கவனம் படிப்பில் திரும்பும். தந்தைவழியில் நிம்மதியுண்டு. வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

மீனம்: வெளிவட்டாரத்தில் நிதானமாக பழகவும். தம்பதிக்குள் மனக்கசப்புகள் வரக்கூடும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.

  • 88
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 23 ஆம் தேதி சனிக்கிழமை 7.3.2026

இன்று இரவு 8.17 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று பிற்பகல் 12.10 வரை சித்திரை. பின்னர் சுவாதி.

இன்று காலை 07.43 வரை விருத்தி. பின்னர் துருவம்.

இன்று காலை 07.37 வரை பவம். பின்னர் இரவு 8.17 வரை பாலவம். பின்பு கௌலவம்.

இன்று காலை 06.25 வரை சித்த யோகம். பின்னர் பிற்பகல் 12.10 வரை மரண யோகம். பிறகு அமிர்த யோகம்.

நல்ல நேரம்:

காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

image_transcoder.php?o=sys_images_editor&h=445&dpx=2&t=1772851670

  • 92

Good Morning....

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்து, உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகள்.

  • 87
·
Added article

கமல்ஹாசன் நடித்த புகழ்பெற்ற திரைப்படமான 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' திரைப்படம் காமெடி அம்சத்துடன் கூடிய கதையுடன் மட்டுமல்ல, அனைத்து கதாபாத்திரங்களின் ஆக்கமும் ரசிகர்களுக்கு நன்கு ஞாபகத்தில் உள்ளது.

இந்த படத்தில் சுவாமிநாதன் எனும் கேரக்டரில் தோன்றிய ஒரு துணை நடிகர் குறித்து தற்போது பரவும் செய்தி, ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் கமல்ஹாசனின் அறை தோழனாக, மெடிக்கல் காலேஜில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார்.

சமீபத்தில், ரெடிட் தளத்தில் ஒரு பயனர், “இந்த நடிகர் இப்போது எங்கு இருக்கிறார்?” என கேள்வி எழுப்ப, ஒருவர் பதிலளிக்கையில், “இவர் என் சகோதரரின் நண்பர். அவருடைய பெயர் ரத்தின சபாபதி. இவர் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார்” என தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் உண்மை தானா என்று அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இதை படித்த ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

  • 272
·
Added a news

அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலுக்கு பதிலடி​யாக இஸ்​ரேல் மற்​றும் மத்​திய கிழக்​கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ச்​சி​யாக ஏவு​கணை​களை வீசி வரு​கிறது.

இந்த தாக்​குதல்​களால் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் விமான சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன. கடந்த 2-ம் தேதி முதல் துபாய் உள்ளிட்ட நகரங்​களில் இருந்து சிறப்பு விமானங்​கள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன. ஆனால் இவை போது​மான​தாக இல்​லை.

இந்​தி​யர்​கள் உட்பட ஆயிரக்​கணக்​கான வெளி​நாட்​டினர் துபா​யில் சிக்​கியுள்ளனர். அவர்​கள் சொந்த நாடு​களுக்கு திரும்ப ஏதுவாக எமிரேட்ஸ் நிறு​வனம் சார்​பில் மார்ச் 5, 6-ம் தேதி​களில் 100 சிறப்பு விமானங்​கள் இயக்​கப்​படு​கிறது.

ஈரான் ராணுவ தாக்​குதல்​களில் ஐக்​கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஏராள​மானோர் காயமடைந்​துள்​ளனர். அவர்​களுக்கு தேவையான அத்​தி​யா​வசிய மருந்​துகள் சிறப்பு விமானங்​களில் துபாய்க்கு கொண்டு வரப்​படும் என்று ஐக்​கிய அரபு அமீரக அதி​காரி​கள்​ தெரி​வித்​து உள்​ளனர்​.

  • 287
·
Added a news

ஈ​ரானின் அண்டை நாடான அஜர்​பைஜானின் நாக்​சை​வான் பகு​தி​யில் உள்ள விமான நிலை​யத்தை குறி​வைத்து நேற்று ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. அந்த நாட்​டில் அமெரிக்​கா​வின் ராணுவ தளம் இல்​லை. ஆனால் அமெரிக்​கா​வின் நெருங்​கிய நட்பு நாடாக அஜர்​பைஜைன் செயல்​படு​வ​தால் ஈரான் தாக்​குதல் நடத்​தி​யிருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இதற்கு தகுந்த பதிலடி தரு​வோம் என்று அஜர்​பைஜான் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

கத்​தார் தலைநகர் தோஹா​வில் உள்ள அமெரிக்க விமானப்​படைத் தளத்தை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை​களை வீசி​யது. ஐக்​கிய அரபு அமீரக தலைநகர் அபு​தாபி மற்​றும் இஸ்​ரேலின் பல்​வேறு பகு​தி​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை​களை வீசி​யது.

இஸ்​ரேல் ராணுவ வட்​டாரங்​கள் கூறும்​போது, “அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையி​லான போர் தீவிரமடைந்​துள்​ளது. ஈரானில் உள்ள குர்து கிளர்ச்​சிப் படைகளுக்கு ஆயுதங்​களை வழங்க அமெரிக்க ராணுவம் திட்​ட​மிட்டு உள்​ளது.

இதன்​மூலம் ஈரானுக்கு எதி​ரான போர் தீவிரமடை​யும். ஈரானில் ஆட்சி மாற்​றம் ஏற்​படும்​வரை தொடர்ந்து தாக்​குதல் நடத்​து​வோம். 2 வாரங்​கள் வரை போர் நீடிக்​கக்​கூடும்​" என்​று தெரி​வித்​தன.

  • 280
·
Added article

அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜனநாயகன் திரைப்படம், தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு வாரத்திற்க பிறகு திரைக்கு வரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடிப்பில் கடைசி படமாக உருவாகியுள்ளது ஜனநாயகன். விஜயுடன் பூஜே ஹெக்டே, மமிதா மைஜூ நாயகிகளாக நடித்துள்ளனர். ஹெச். வினோத் இயக்கியுள்ளார் இப்படத்தை. கடந்த பொங்கல் அன்றே வெளியாக இருந்தது இப்படம். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாவதில் தாமதம் ஆனது. பட தயாரிப்பு நிறுவனமும், சென்சர் போர்டும் நீதிமன்றத்தில் முறையிட்டன. ஆனாலும் முடிவு எட்டாமல் இருந்தது. ஒருவழியாக தயாரிப்பு நிறுவனம் வழக்குகளை வாபஸ் பெற்றது. இதையடுத்து படம் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பபட்டது. இதனால் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் ஜன நாயகன் தேர்தலுக்கு பின்பே வெளியாகும் என கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தை ரிவைசிங் கமிட்டி பார்த்த பிறகு படத்திற்கான சென்சார் சான்றிதழ் மார்ச் 17ஆம் தேதிக்கு முன்பு கிடைக்கும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால்  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் வர இருப்பதால் தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகு ஜனநாயகன் திரைப்படத்தை திரையிட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

  • 254
·
Added article

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இளையராஜா காம்போ என்றால் அப்படம் நிச்சயம் வெற்றி என்றே சொல்லலாம். ஆனால், இவர்கள் கூட்டணியில் வந்த ஒரு எவர்கிரீன் பாடலை ரஜினி வேண்டாம் என்று நிராகரித்திருக்கிறார். பலமுறை அப்பாடலைக் கேட்டும் ரஜினிக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆனால் இளையராஜா சொன்ன ஒற்றை வார்த்தையில் ரஜினி அப்பாடலை படத்தில் வைக்க சம்மதித்தார். ரஜினியின் கணக்கு தப்புக்கணக்காகி போனதால், அப்பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. அது என்ன பாடல் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோமா?

1992ல் 'மன்னன்' பட வேலைகள் நடந்தன. அப்போது இளையராஜா 'அம்மா என்றழைக்காத' பாடலின் ட்யூனை போட்டுக் காட்டினார். அந்த நேரத்தில் ரஜினி ஒரு மாஸ் ஹீரோவாக, ஆக்‌ஷன் படங்களில் பிஸியாக இருந்தார். பாடலைக் கேட்ட ரஜினி, 'ராஜா, இந்தப் பாடல் மெதுவாக உள்ளது, என் இமேஜுக்கு செட் ஆகுமா? ரசிகர்கள் ஏற்பார்களா? வேறு பாடல் செய்யலாமா?' எனக் கேட்டார். ரஜினி தயங்குவதைக் கண்ட இளையராஜா, 'இதுவரை நீங்கள் ஒரு கமர்ஷியல் ஹீரோ. இந்தப் பாடல் உங்களை ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கொண்டு செல்லும். இது உங்களை வேறு உயரத்திற்குக் கொண்டு செல்லும்' என்றார்.

இளையராஜாவின் அசைக்க முடியாத நம்பிக்கையை ரஜினி ஏற்றுக்கொண்டார். 'மன்னன்' வெளியானதும், இளையராஜா சொன்னது உண்மையானது. வாலியின் வரிகள், ஜேசுதாஸின் குரல், ரஜினியின் நடிப்பு அப்பாடலை காவியமாக்கியது. குடும்ப ரசிகர்கள் ரஜினியை தங்கள் வீட்டுப் பிள்ளையாக பார்க்க, அவரது 'பேமிலி ஆடியன்ஸ்' பல மடங்கு அதிகரித்தது. அன்று இளையராஜா சொன்னது வெறும் ஆறுதல் வார்த்தை அல்ல, அது ஒரு மகத்தான கலைஞனின் பார்வை.

  • 286
·
Added article

சூர்யாவின் ‘கருப்பு’ படம் ஏப்ரலில் வெளியாகும் என்று அதன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. இதன் வெளியீடு எப்போது என்பது தெரியாமல் இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட போது ‘கருப்பு’ வெளியீடு குறித்து பேசியிருக்கிறார்.

அதில் சாய் அபயங்கர், “ஏப்ரல் மாதத்தில் ‘கருப்பு’ வெளியாகும். இப்போது படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் வெறித்தனமாக போய்க் கொண்டிருக்கிறது. அப்படத்தில் கருப்பசாமி உள்ளிட்ட சில விஷயங்கள் இருக்கிறது. அதனை முன்வைத்து நிறைய விஷயங்களை செய்து வருகிறோம். தமிழ் கலாச்சாரத்தை உயர்த்து விதத்தில் எனது பின்னணி இசை இருக்கும் என கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் சூர்யா உடன் இப்படத்தில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

  • 292
·
Added a news

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நிலவிவரும் நிலையில், போரில் எங்கள் கூட்டாளர் நாடுகளுடன் இணைந்து நிற்போம் என கனடா பிரதமர் கூறியுள்ள விடயம் கவனம் ஈர்த்துள்ளது.

மத்திய கிழக்கில் போர்ச்சூழல் மும்முரமாகிவரும் நிலையில், போரில் தனது நாட்டின் ராணுவம் பங்கேற்கும் நிலை ஏற்படலாம் என கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் மார்க் கார்னி அவுஸ்திரேலியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர், அவுஸ்திரேலிய பிரதமரான அந்தோனி அல்பானீஸுடன் இணைந்து ஊடகவியலாளர்களை சந்தித்தார். அப்போது கனடா பிரதமர் கார்னியிடம், ஈரான் போரில் கனடா ஈடுபடும் சூழ்நிலை உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரதமர் கார்னி, இந்தக் கேள்வி ஒரு கருதுகோளாக (hypothetical question) இருக்கும் பட்சத்தில், போரில் பங்கேற்பதை ஒருபோதும் வெளிப்படையாக நிராகரிக்க முடியாது என்றார்.

மேலும், நாங்கள் எங்கள் கூட்டாளிகளுக்கு ஆதரவாக நிற்போம் என்றும், எப்போதும் கனடியர்களைப் பாதுகாப்போம் என்றும் கூறினார் பிரதமர் கார்னி.

இதில் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், கனடா பிரதமர் கார்னி அவுஸ்திரேலியா முதலான நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதே, அமெரிக்காவை சார்ந்திருப்பதை குறைக்கவேண்டும் என வலியுறுத்துவதற்காகத்தான்.

  • 298