Beautiful birds
பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள்.
முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.
கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும்.
இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
முருங்கை கீரை கால்சியம் , இரும்பு , வைட்டமின் ஏ , சி சத்துக்கள் நிறைய உள்ளன . அரைக்கிலோ வெண்ணெய் மற்றும் 80 கோப்பை பாலில் உள்ள வைட்டமின் ஏ சத்து ஆகியவற்றை , ஒரு கோப்பை முருங்கை இலை சூப் மூலம் நாம் பெறலாம் . கொதிக்கும் நீரில் கீரையை முருங்கை போட்டு , ஐந்து நிமிடத்திற்கு பிறகு , உப்பு , மிளகு . தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து , பாத்திரத்தை மூடி வைக்க பின்னர் வேண்டும் . வடிகட்டி கிடைத்த சூப்பை , தினமும் காலையில் பருகி வந்தால் , அனீமியா , ஜலதோஷம் , ஆஸ்துமா குறைவதை காணலாம் .
சத்தில்லாத குழந்தைகள் , முருங்கை சூப் தினமும் அருந்தினால் பலம் பெற்று ஆரோக்கியம் பெறுவது உறுதி . மேலும் , ஆண்மை விருத்திக்கு முருங்கை சூப் உதவும் .சத்தில்லாத குழந்தைகள் , முருங்கை சூப் தினமும் அருந்தினால் பலம் பெற்று ஆரோக்கியம் பெறுவது உறுதி .
மேலும் , ஆண்மை விருத்திக்கு முருங்கை சூப் உதவும் . சுத்தமான புதிய முருங்கை இலைகளை மிக்சியில் சுற்றி சாறு எடுத்து , அதை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கும் நீரில் மிதக்க விடவும் . சிறிது நேரம் கழித்து முருங்கை சாற்றின் தெளிவை மட்டும் வடிகட்டி , பால் , சர்க்கரை சேர்த்து கலக்கவும் . குழந்தைகளுக்கு தினமும் ஒருமுறை கொடுத்து வர , எலும்பு நன்கு வளர்ச்சி பெற்று திடமாகும் .
பாலுாட்டும் பெண்கள் , தினமும் முருங்கை கீரையை சாப்பிட்டால் , அதிகமாக பால் ஊறும் . மேலும் , அலர்ஜியால் துன்பப்படுவோருக்கு , முருங்கை கீரை உன்னத மருந்து . முருங்கை சாறுடன் , எலுமிச்சம் பழ சாற்றை கலந்து , முகத்தில் பூசி உலர்ந்த பின் , நீரில் கழுவி வந்தால் , பருக்கள் மறைந்து , முகம் பொலிவு பெறும் .
மாலைக்கண் நோய்க்கு இதன் சாற்றை தேனுடன் சேர்த்து பருகி , பயன் பெறலாம் . காயங்களின் மேல் வறுத்த முருங்கை இலையின் பொடியை பூசினால் , வலி குறையும் .
கற்பூரவள்ளி இலையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.
கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
தோல் அரிப்பு, சொறி போன்றவற்றிற்கு கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நன்கு கசக்கி அந்த இலைகளின் துளிகளை
பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த சாறை குடித்தால் மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். அந்த இலை சொட்டுகளை தொண்டையில் படுமாறு அருந்த தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும்.
கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி சாறு எடுத்து தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்புச்சளி குணமடையும்.
கற்பூரவள்ளி செடியின் இலை சாற்றின் சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல்
குணமாகும். கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது.
இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது.
தினமும் கற்பூரவள்ளி இலையினை சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும். கற்பூரவள்ளி இலை வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
*1. நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது.*
*2. செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது.*
*3. தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறியலாகாது.*
*4. நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது. .*
*5. செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. காளானைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது.*
*6. பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது.*
*7. கர்ப்பிணி பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது.*
*8. மருந்து மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது.*
*9. பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும்.*
*10. இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது.*
*11. நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது.*
*12. வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது.*
*13. விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது.*
*14. விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.*
*15. வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது கூடாது.* *மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது.*
இதெல்லாம் ஒரு 80 வருடங்களுக்கு முன்பு மிகச் சரியாக கடைபிடித்து வந்தார்கள். அதனால் தான் அவர்களின் ஆயுள் 120 வயது வரை திடகாத்திரமாக இருந்தது. ஆனால் இப்போது பல வகையான நோய்கள் சிறுவயதிலேயே தொற்றிக் கொள்கிறது.
முடிந்த வரை வெளி உணவுகளை தவிர்த்து விடுங்கள். ஆரோக்கியம் உங்கள் கையில் இருக்கிறது.
இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்கியமாக அமைய வாழ்த்துகள்
*1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது*
*2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம் .அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது.*
*3. அன்னத்தால் பிராணனையும் பிராணனால் பலத்தையும் பலத்தால் தவத்தையும் தவத்தால் சிரத்தையையும் சிரத்தையால் புத்தியையும் மனத்தால் சாந்தியால் சித்தத்தையும் சித்தத்தால் நினைவால் ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னத்தைக் கொடுப்பது இவை எல்லாவற்றையும் கொடுத்தாகிறது. என தைத்ரீயோபநிஷ்த் கூறுகிறது. எனவே முடிந்த போது முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள்.*
*4. அளவிற்து அதிகமாக உண்டால் நோய்வரும் . ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.*
*5. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.*
*6. மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.*
*7. உணவில் சீரகம் (சீர் அகம்) சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.*
*8. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.*
*9. கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. .*
*10. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம் தலை சுற்றல் வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.*
*11. உணவு உண்பதற்கு முன்பு கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.*
*12. காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.*
*13. உணவு உண்ணும் போது பேசக் கூடாது. படிக்கக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது*
*14. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.*
*15. காலணி அணிந்துக் கொண்டு உண்ணக் கூடாது.*
*16. சூரிய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.*
*17. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.*
*18. நிலவின் ஒளியில் உண்ணக் கூடாது. பௌர்ணமியில் நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடக் கூடாது. பலருடன் சேர்ந்து சாப்பிடலாம்.*
*19. இருட்டிலோ நிழற்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.*
*20. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது.*
*21. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.*
*22. சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.*
*23. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்;.*
*24. வெங்கலம் அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.*
*25. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.*
*26. வெள்ளித் தட்டில் இலையில் சாப்பிட்டால் நல்ல அழகு அறிவு மன ஒருமைப்பாடு குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.*
*27. நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவுப் பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.*
*28. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ;ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.*
*29. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ அப்பளமோ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.*
*30. அதே போல் முதலில் கீரையோ வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.*
குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள்.
இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும்., குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும்.
பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.
அது சரி.... குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்..?
இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.
முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள்.
அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும்., அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் கொள்ளை ஆசை.
அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து., நன்கு அலம்பி., துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள்.
ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் பயணம் புறப்பட்டாள். அவள்தான்., வசதி படைத்தவள் அல்லவே..! அதனால் நடந்தே செல்லத் தீர்மானித்தாள். தொலை தூரம். வயது வேறு ஆகிவிட்டது. நடுநடுவே இளைப்பாறிக் கொள்வாள்.
ஸ்ரமமாக இருப்பினும் "கண்ணனைக் காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்கவும் வேண்டுமே" என்று தொடர்ந்து பயணம் செய்தாள். ஒரு மண்டல காலம் பயணம் செய்து குருவாயூரை அடைந்தாள்.
கோவிலையும்அடைந்தாள். அவள் சென்ற நாள் அந்த மாதத்தின் முதல் நாள். அவள் கோவிலை அடைந்த சமயம்., கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏதோ விசேஷம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன்., அவன் பக்தியை வெளிப்படுத்த., கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அதனால்தான் அந்த பரபரப்பு. சேவகர்கள்., அரசன் வருவதால் வழியை விலக்கிக் கொண்டிருந்தனர்.
இந்த வயதான பெண்மணி., தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. கிழவியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது.
அதே சமயம்., கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் "என்ன ஆயிற்று..?" என்று பதறினர். கோவில் பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை.
கலங்கிய மன்னனும் மற்றவர்களும் குருவாயூரப்பனிடமே ப்ரஸ்னம் கேட்டனர். அப்பொழுது கர்ப்பக்ருஹத்திலிருந்து "நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள்.
என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும்" என்று அசரீரி கேட்டது.
உடனே அங்கிருந்த அனைவரும் கீழே சிதறிக் கிடந்த குண்டுமணிகளை., பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயோதிகப் பெண்மணியிடம் கொடுத்து., அவளிடம் மன்னிப்பும் கேட்டனர். அவளை ஸகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர்.
அவள் ஆசையுடன் குண்டுமணிகளை அப்பனிடம் சமர்ப்பித்ததும்., யானையின் மதம் அடங்கியது.
அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது.
பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
கலகலப்பான பேச்சுக்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்துவீர்கள். வரவுகள் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பழக்கவழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் உருவாகும். எதிலும் உணர்வுபூர்வமாக செயல்படுவீர்கள். இலக்கிய பணிகளில் கற்பனை வளம் மேம்படும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
குடும்ப உறுப்பினரிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். மனை விற்பனையில் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் உற்சாகமாக காணப்படுவீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். பாதியில் நின்ற பணிகளை முடிப்பீர்கள். தொழில் தொடர்பான சிந்தனைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆக்கபூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வி பணிகளில் மாணவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை உருவாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
சுபகாரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். உத்தியோக பணிகளில் உங்கள் மீதான மதிப்புகள் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தினை ஏற்படுத்தும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உருவாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதலும் தெளிவும் உண்டாகும். வியாபார முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சிம்மம்
தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் ஏற்படும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையின் மூலம் தீர்வு காண்பீர்கள். தந்தைவழி உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
கன்னி
பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். விவசாய பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த பணிகளை மேற்கொள்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
துலாம்
உயர் அதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலை உண்டாகும். வியாபார தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். போட்டி பந்தயங்களில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். எதிர்பாராத சிலரின் நட்புகள் மாற்றத்தை உருவாக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி
விருச்சிகம்
அரசியல்வாதிகளுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். உயர் கல்வியில் இருந்த குழப்பம் விலகும். வியாபார பணிகளில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கற்பித்தல் பணிகளில் சில மாற்றமான சூழல் நிலவும். சமூக பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியான சூழல் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
தனுசு
செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். சுப காரியங்களில் கலந்து கொண்டு மன மகிழ்வீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாலின மக்களுடன் பொறுமையுடன் செயல்பட வேண்டும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மகரம்
உயரதிகாரிகளால் சாதகமான சூழ்நிலைகள் அமையும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த இந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கிய செயல்களில் சிந்தித்து செயல்படவும். ஞாபக மறதி பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சிந்தனைகள் மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உருவாகும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
உத்தியோக பணிகளில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழல் அமையும். எதிர்பாராத தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வாதத் திறமைகள் மூலம் இழுபறியான காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பாக பிரிவினை தொடர்பான செயல்களில் விவேகம் வேண்டும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விசுவாவசு வருடம் தை மாதம் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 8.2.2026.
இன்று அதிகாலை 05.13 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று அதிகாலை 04.53 வரை சித்திரை. பின்னர் சுவாதி.
இன்று அதிகாலை 02.04 வரை சூலம். பின்னர் கண்டம்.
இன்று அதிகாலை 05.13 வரை வனிசை. பின்னர் மாலை 06.09 வரை பத்தரை. பின்பு பவம்.
இன்று அதிகாலை 04.53 வரை மரண யோகம். பின்னர் காலை 06.34 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
நடிகை சரண்யா பொன்வண்ணனின் இளைய மகள் சாந்தினி அக்டோபர் மாதம் டானி பிலிப் பாபு என்பவருடன் ஊட்டியில் தடபுடலாக நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து 2ந் தேதி கோபிசெட்டிபாளையத்திலுள்ள ஒரு சர்ச்சில் எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. ' இதையடுத்து, நேற்று சென்னை கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது துணைவியாருடன் கலந்து கொண்டார்.
நடிகர் சூர்யா, கார்த்தி, சசிகுமார், தனுஷ், சசிகுமார், அருண்குமார்,ஜீவா, விஜய்சேதுபதி, சத்யராஜ், விஜயகுமார், சினேகா, பிரசன்னா, பிரபு, விக்ரம் பிரபு, எம்.எஸ்.பாஸ்கர், பார்த்திபன், நாசர், சரத்குமார், பாக்யராஜ், இளவரசு, தலைவாசல் விஜய், இயக்குநர்கள் மணிரத்னம், சேரன், கேஎஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இரண்டு மகள்களுக்குமே திருமணத்தையும் முடித்திருக்கும் மகிழ்ச்சிகள் இருக்கும் சரண்யா பொன்வண்ணனுக்கு இணையத்தில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருமணம் குறித்து சரண்யா, பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், உங்கள் கணவர் என்ன படித்து இருக்கிறார் ? உங்கள் கணவருக்கு என்னென்ன மொழி தெரியும்? எவ்வளவு சொத்து இருக்கு? என பலர் கேட்பார்கள். இவை எல்லாம் தேவையில்லாத ஒன்று, என் கணவர் நல்ல மனிதரா என்று தான் பார்க்க வேண்டும்.
இந்த காலத்தில் ஒரு பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை துணை வேண்டும் என்றால், இதையெல்லாம் பார்க்காமல் ஒரு நல்ல மனிதரா, நல்ல மனுஷனா? நமக்கு மரியாதை கொடுப்பாரா? மற்றவர்களின் முன்பு உன்னை அழகாக நடத்துவாரா? உனக்கு அவமானம் வரும் படி நடந்து கொள்ளமாட்டாரா? அவர் தான் நல்ல மனுஷன்... அவர் தான் நல்ல புருஷன் இப்படி பட்டவர்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயம் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்று சரண்யா பொன்வண்ணன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.
ஆவாரம் பூக்களையும், இலையையும் காய வைத்து பொடி செய்து, காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தம் அடையும். ஈரல் சம்மந்தமான நோய்கள் குணமாகும்.
ஆவாரம் பூக்களை காயவைத்து காலையில் ஆவரம் டீ தயாரித்து அருந்தலாம். இதுவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். இதனுடன் நாகப்பழத்தின் கொட்டையையும் சேர்த்து பயன்படுத்தலாம் .அதிக பயன் தரும்.
ஆவாரம் மூலிகையின் அனைத்து பாகங்களும் நீரிழிவு, எலும்புருக்கி, கண், மூலம், நாள்பட்ட புண்கள், சிறுநீரகக் கோளாறுகள், வெள்ளை வேட்டை நோய்களையும் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணெய் போன்றவைகளை சேர்த்து ஆவாரைத் தைலம் காய்ச்சி, அதை தோலில் தடவி வந்தால் தோல் வெடிப்பு, வறட்சி, எரிச்சல் போன்றவை குணமாகும்.
ஆவாரம் பூக்களை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களில் நிறைந்திருக்கும் நச்சுக்கள் முழுவதும் வெளியேறும். அதோடு வயிறு சம்மந்தமான நோய்களும் குணமாகும்.
ஆவாரம்பூ நீரிழிவு, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகியவை நீரிழிவு, வெள்ளை, உட்கரு, புண், எலும்பைப் பற்றிய சுரம், நீர் வேட்கை போன்றவற்றை நீக்கும்.
கனகதாசர் என்ற பெரியவர் கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் இளமையில் ஒரு குருநாதரை அணுகித் தமக்கு உபதேசம் பண்ண வேண்டுமென்று கேட்டார். அந்தக் குருநாதர் கனக தாசரின் தகுதியை உணர்வதற்காக அவருடைய கையில் ஒரு கனியைக் கொடுத்து, "இதை யாரும் இல்லாத இடத்தில் நீ போய்ச் சாப்பிடு" என்று சொன்னார்.
அதை வாங்கிக் கொண்ட கனகதாசர் இரண்டு நாள் வரையில் அதைத் தம் கையிலே வைத்திருந்தார். பிறகு அதைக் கொண்டு வந்து குருநாதரின் திருவடியிலே வைத்து, "இதை என்னால் சாப்பிட முடியவில்லையே! தேவரீர் நான் இதை யாரும் இல்லாத இடத் தில் உண்ண வேண்டுமென்று கட்டளையிட்டீர்கள். அப்படி ஓர் இடம் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லையே!" என்றார்.
""யாரும் இல்லாத இடமே உனக்குக் கிடைக்கவில்லையா? ஏதேனும் ஓர் அறைக்குள் தனியாகச் சென்று உண்ணக் கூடாதா? என்று கேட்டார் குருநாதர்.
“எங்கும் ஒருவன் இருக்கிறானே; அவன் இல்லாத இடம் எதுவும் இல்லை. யாரும் இல்லாத இடத்தில் அல்லவா நான் இதை உண்ண வேண்டும் என்றீர்கள்? அவன் ஒருவன் இல்லாத இடமே இல்லாத போது உங்கள் கட்டளைப்படி நான் எப்படி நடப்பது?” என்று சொன்னாராம் கனகதாசர்.
அதனைக் கேட்டுப் புன்னகை பூத்து, "அப்பா, உனக்கு இந்தப் பழம் வேண்டாம். ஞானப் பழம் தருகிறேன்” என்று உடனே அவனுக்கு உபதேசம் செய்தாராம் குருநாதர். கனகதாசருக்கு இறைவன் எங்கும் இருக்கிறான் என்ற உணர்வு இருந்தது. நமக்கு அந்த உணர்வு இல்லையே!
இறைவனை நாம் கோவிலில் கும்பிடுகிறோம். எங்கும் இறைவன் எழுந்தருளி இருக்கிறான். அவன் இல்லாத இடம் இல்லை. எள்ளுள் எண்ணெயைப் போலச் சர்வாந்தர்யாமியாக அவன் விளங்குகிறான். பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்றவன். 'அப்படி இருக்க அவனுக்கு என்று தனியே ஒரு கோவில் வைத்து அங்கே போய் நாம் கும்பிட வேண்டுமா?' என்று சிலர் எண்ணுவது உண்டு. உண்மையில் ஆண்டவன் எங்கும் இருக்கிறான் என்ற உணர்வு எல்லோருக்கும் இருப்பதில்லை. மிக பெரியவர்களே உணர்ச்சிபூர்வமாக அதை உணர்கிறார்கள்.
1.பாசிட்டிவாக (நேர்மறை எண்ணங்களோடு) இருப்பவர்களோடு பழகுங்கள்...
நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் (நேர்மறை எண்ணங்கள்) இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.
தெரியாது "நடக்காது" முடியாது "கிடைக்காது "என சொல்பவர்களை விரட்டி விடுங்கள்
2) உற்சாகமாக இருங்கள் :
சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள். இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.
3. பவர்ஃபுல்லாக உணருங்கள்:
உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம். உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை... உடனே சிரிக்காதீர்கள். இதுதான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை. உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்.
4. லவ் பண்ணுங்க:
உங்களை நீங்களே நேசியுங்கள். இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது. உங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள். உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு புரியவையுங்கள். உங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
5.பயணப்படுங்கள் :
வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது. இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும். அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள். வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும், உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்..
நீங்கள் ஜிகர்தண்டா குடித்திருக்கிறீர்களா…? ஆம் எனில், அதில் உடல் குளிர்ச்சிக்காகப் போடப்படும் சப்ஜா விதைகளை பார்த்திருப்பீர்கள்.அந்த சப்ஜா விதைகள் வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் தன்மை உடையவை.
சப்ஜா விதைகளை உற்பத்தி செய்யக்கூடிய திருநீற்றுப்பச்சிலை, மிகவும் வாசனை மிகுந்தது.துளசி இனத்தைச் சேர்ந்த இது, தெய்வீக மூலிகையாக விளங்குகிறது.
வெண்மை நிறத்தில் அதிகளவு பூக்களை உற்பத்தி செய்யும் இந்தச் செடி இருக்கும் இடங்களை நாடி தேனீக்கள் பறந்து வரும்.
பயன்கள்:
- இந்த இலையை கசக்கி முகர்ந்தால் தலைவலி, நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகும்.
- வாந்தியை நிறுத்துவதில் மிகச் சிறந்த மருந்து.
- ரத்த வாந்தியைக் கூட கட்டுப்படுத்தக் கூடியது.
- சத்துக்கள்:
- திருநீற்றுப்பச்சிலையில் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடென்ட், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் நிறைந்துள்ளன.
- இதில் மிகக் குறைந்த கலோரிகள் உள்ளன.
- பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புக்கள் உள்ளன.
- மேலும், சிட்ரால், சிட்ரோனெலால், ஜெரானியால் போன்ற ஏராளமான மூலப்பொருட்களும் உள்ளன.
மூலிகைகளின் அரசன் என்றும் திருநீற்றுப் பச்சிலை அழைக்கப்படுகிறது.
இதன் இலை கற்பூரத்தின் தன்மைஆ கொண்டது.
வியர்வையை பெருக்கச் செய்யும்.
மருத்துவ குணங்கள்:
பருவ வயதில் முகத்தில் தோன்றும் பருக்கள் , மற்றும் கரும்புள்ளிகள் , போன்ற பிரச்சினைகளுக்கு இந்த இலையைக் கசக்கி முகத்தில் தடவினால், பருக்கள் காணாமல் போகும்.
திருநீற்றுப்பச்சிலையின் விதையை கஷாயம் வைத்து குடித்தால் சுறுசுறுப்பு கிடைப்பதோடு சிறுநீரகக் கோளாறுகள் குணமாகும்.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல், உடல் உஷ்ணம் போன்றவற்றிற்கு இந்த இலை மிகச் சிறந்த மருந்தாகும்.
இலைச் சாற்றுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்பு வலி, இருமல், வாயுப் பிரச்சினைகள் சரியாகும்.
காது வலி, காதில் சீழ் வடிதல் ஆகியவற்றுக்கும் இந்த இலைச் சாறு கண் கண்ட மருந்து.
திருநீற்றுப்பச்சிலையின் இலைகள், பூக்கள், விதைகள் ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து ஆரோக்கிய மூலிகை குளியல் எடுக்கலாம். இதனால் படை, தேமல் போன்ற தோல் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
- தலையில் பேன் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் இந்த இலையின் சாற்றை தனியாகவே அல்லது எண்ணெய் கலந்தோ தேய்த்துக் குளித்தால் பேன், பொடுகுத் தொல்லைகள் போய்விடும்.
வெட்டி வேர் புல் இனத்தைச் சார்ந்தது. அனைத்து மண்ணிலும் வளரும்.
பெரும்பாலும் மணற் பாங்கான இடங்கள், ஆற்றுப் படுகையில் சிறப்பாக வளரும்.
நாணல் மற்றும் தர்ப்பைப் புற்கள் போல் வளரும். கொத்து கொத்தாக இருக்கும்.
பெயர்க் காரணம்::
இதன் வேரை வெட்டி எடுத்த பின், தாவரத்தின் வேர் மற்றும் புல் இரண்டையும் தனித்தனியாக வெட்டி எடுக்க வேண்டும். பிறகு நடுவில் உள்ள தண்டை மீண்டும் புதிதாக நட்டுப் பயிரிடுவதால் வெட்டி வேர் எனப்படுகிறது.
வேர் கருப்பு நிறத்தில் வாசனையுடன் இருக்கும்.ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம். குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் பூ ஊதா நிறம் உடையது. வேர் 2மீ முதல் 4மீ ஆழம் வரை செல்லும்.4முதல் 5 அடி உயரம் வரை வளரும்.
லெமன் கிராஸ்,பாம்பரோஸா புல் போன்று வளரும்.
மண் அரிப்பைத் தடுக்கும்.
மாடுகளுக்கு இதன் புல் உணவாகிறது.
மருத்துவ பயன்கள்:
அதிக நறுமணம் உடையது வெட்டி வேர்.இதை சுவாசிப்பதால் தலைவலி குணமாகும்.உடல் புத்துணர்ச்சி பெறும்.
இதிலிருந்து எடுக்கப்பட்டத் தைலம் அதிக வாசனை யுடன் இருப்பதால், சிறந்த மணமூட்டியாகத் தைலங்களிலும், குளியல் சோப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
இதன் எண்ணெயை கை, கால் பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
காய்ச்சல் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நா வறட்சி, தாகம் நீங்குவதுடன் , வாந்தி ,பேதிக்கு நல்ல மருந்தாகும்.
மண் பானைத் தண்ணீரில் வெட்டி வேரை போட்டு ஊற வைக்க, நீருக்குச் சுவையும், மணமும், பலன்களும் பல மடங்கு கிடைக்கும்.
காய்ச்சல்:
வெட்டி வேரை நன்கு உலர்த்தி பொடி செய்து 200மி.லி.முதல் 400மி.லி.அளவு எடுத்து நீரில் ஊற வைக்கவும்.ஊறல் நீரை 30முதல்65மி.லி. அளவு வீதம் அருந்தி வர காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்கள் கட்டுப்படும்.
விசிறி:
வெட்டி வேர் கொண்டு விசிறிகள் செய்யப் படுகிறது. இந்த விசிறி மூலம் வீசி வர உடல் எரிச்சல்,நா வறட்சி மற்றும் தாகம் தீர்க்கும்.
தட்டி::
விசிறி மட்டும் அல்லாமல் வீட்டின் ஜன்னல்களுக்குப் போடப்படும் தட்டிகளும் வெட்டி வேரைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.இவற்றை வீட்டின் ஜன்னல்களுக்குக் கட்டி வர அறையின் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியைத் தருகிறது.
கோடைக் கொடை:
கோடை காலத்தில் ஏற்படும் தேக எரிச்சல், கண் எரிச்சல்,வயிற்றுக் கடுப்பு முதலிய நோய்கள் குணமாக வெட்டி வேர் உதவுகிறது.
வெட்டி வேரை சுத்தம் செய்து, உலர்த்தி பொடி செய்து, அதனுடன் பெருஞ்சீரகம் பொடி சம அளவு எடுத்து, வெந்நீரில் அருந்தி வர குணம் கிடைக்கும்..
நன்றாக காய்ச்சிய சுடுநீரில் திருநீற்றுப்பச்சை விதைகளுடன் வெட்டி வேரை 2பிடி சேர்த்துஒரு மண் பாண்டத்தில் போட்டு, வெய்யில் நேரத்தில் குடித்தால், சூட்டினால் ஏற்படும் தேக எரிச்சல்,கழுத்து வலி, கோடைக் கொப்புளங்கள், சொட்டு சொட்டாக இறங்கும் சிறுநீர் போன்ற உஷ்ண வியாதிகள் யாவும் தணியும்.
பருக்கள், தழும்புகள்::
பருக்கள் அடிக்கடி முகம் முழுவதும் தோன்றி அவதிப்படுபவர்களுக்கு வெட்டி வேர் சிறந்த மருந்தாகும்.
சிறு துண்டுகளாக்கிய வெட்டி வேர் ஒரு டீஸ்பூன் மற்றும் கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்று, இரண்டையும் முன்னாள் இரவு கொதிநீரில் ஊறவைத்து அரைத்த விழுதை பருக்கள் மீது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பூசி வந்தால், பருக்கள் உதிர்ந்து,வடுவும் தெரியாது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
பருக்களால் ஏற்பட்டத் தழும்புகளால் சிலருக்கு முகம் கரடு முரடாக இருக்கும்.அதற்கு, ஒரு இரவு முழுவதும் வெந்நீரில் ஊற வைத்த வெட்டி வேர் துண்டுகளை, மறுநாள் வெட்டி வேரையும், தண்ணீரையும் தனித் தனியே பிரிக்க வேண்டும்.
மேலும், வெட்டி வேர் போட்டு கொதிக்க வைத்த நீரில் ஆவி பிடிக்க வேண்டும்.பின் முகத்தை தன் துடைத்தால், வெட்டி வேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியால் அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள்.
வாரம் இருமுறை இப்படிச் செய்தால் தழும்புகள் மறைந்து விடும்.
ஸ்பெஷல் பேஸ் பேக்:
வெட்டி வேர்,ரோஜா மொட்டு, மகிழம் பூ, செண்பகப் பூ, சம்பங்கி விதை இவற்றை சம அளவு எடுத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.(எவ்வளவு அரைத்தாலும் திப்பி திப்பியாக இருக்கும்), இதை நன்றாக சலித்து,நைசான பவுடரை மட்டும் நீரில் குழைத்து முகத்தில் பூசி, பிறகு கழுவ வேண்டும். வெட்டி வேர் எண்ணெய் பசையை எடுக்கும்.சம்பங்கி விதை முகத்திற்கு புத்துணர்ச்சி தரும்.ரோஜா மொட்டு சோர்வைப் போக்கி நிறத்தைத் தரும்.மகிழம் பூவும், செண்பகப் பூவும் வியர்வை நாற்றம் போக்கி, வாசனையைத் தருகிறது.
சருமம் மிருதுவாக:
சிலருக்குத் தோள் பட்டையிலும்,முதுகுப் புறத்திலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும்.இதற்குத் தீர்வு வெட்டி வேரிலுள்ளது.
பச்சை பயறு 100கிராம்,சிறு துண்டுகளாக்கிய வெட்டி வேர்-50கிராம் இரண்டையும் மிஷினில் கொடுத்து அரைத்து, அந்த பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்,சிறு கட்டிகள், வரிகள் ஓடிப் போகும்.சருமம் மிருதுவாகும்.
கூந்தல் மணக்க::
வெட்டி வேர் 100கிராம், வெந்தயம் 100கிராம் இரண்டையும் சீயக்காய் மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால், எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது சீயக்காய்க்கு பதில் இந்தப் பவுடரை பயன்படுத்தி தலைக்குக் குளித்தால், முகத்தில் எண்ணெய் வழியாது.அதோடு கூந்தலும் மணக்கும்.
சர்பத்-சம்மர் கூலர்:
வெட்டி வேரை கழுவி சுத்தம் செய்து 3நாட்கள் குடிநீரில் ஊறவைத்து வடிகட்ட வேண்டும். ஊறவைத்த வேரை வெயிலில் காய வைத்துமீண்டும் அந்த வேரைப் பயன் படுத்தி இதேபோல் மூன்று முறை பானம் தயாரிக்க முடியும்.
இப் பானம் தாகத்தைத் தணிப்பதோடு, நீரேற்றமாக வைக்கவும், ஆரோக்கியமான உணவாகும்.
செல் பிரிவு:
வெட்டி வேரில் 300க்கு மேற்பட்ட என்சைம் செயல் பாட்டிற்குக் காரணமான துத்தநாகச் சத்து உள்ளது.இது இயற்கை பாதுகாப்பு அமைப்பை ஆதரிக்கிறது.செல் பிரிவு, செல் வளர்ச்சி மற்றும் காயங்கள் குணப்படுத்த உதவுகிறது.
ஆன்டி ஆக்சிடென்ட் கள் நிறைந்துள்ளன.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
இரும்பு, மாங்கனீசு மற்றும் பி 6 வைட்டமின்கள் இருப்பதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.
குடிக்கும் நீரில் வெட்டி வேர் போட்டுக் குடிப்பதால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
இந்த கொரானாக் காலத்திலும் ஒரு சிறந்த பாதுகாப்பை அளிக்கும்.
இத்தகைய சிறப்புகள் பெற்றிருப்பதாலே தான் இது "வெற்றி வேர்"என்றும் அழைக்கப்படுகிறது.
ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான்.
கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம்,
அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான்.
ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும்.
அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும்.
ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான்.
ரயில் வருகிற நேரம்.....
ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான்.
பின், பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா? இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்.அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான். அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது... உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?...’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான்.
தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன்.
காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள்.
அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா. "அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான்.
ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.
முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் "இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக் கிறான்... நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..." என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்.
செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான், "அம்மா...! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்.நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...!" என கதறி அழுகிறான்.
ஆகவே நாம், நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கையின் அர்த்தம்!
எதை கற்றுக் கொண்டோம்..
எதை கற்றுக் கொடுத்தோம் .
--- ஜெயகாந்தன்.
”வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்ததும் சா*க வேண்டியதுதான்” என்று கிராமங்களில் விரக்தியாகச் சொல்வதை கேள்விப் பட்டிருக்கிறோம்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சில இடங்களில் அதை நடைமுறையிலும் பார்க்க முடிகிறது.
ஆனால் நம் முன்னோர்கள் உணவை மருந்தைப் போல அளவாகவும், பத்தியமாகவும் உண்டார்கள்.
மருந்தே உணவாக இருந்தது என்று கூடச் சொல்லலாம்.
அவர்களது சமையலறையில் மருத்துவ குணமுள்ள பொருட்களே அதிகம் இருந்தன.
மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி(தனியா) என்று பல மூலிகைப் பொருட்களை உணவில் பயன்படுத்தினர்.
இவைகளைப் பயன்படுத்தி குழம்பு, ரசம் எல்லாம் சமையல் செய்தனர்.
மஞ்சள் பொடி முக்கிய இடம் வகித்தது.
அது உணவுப் பொருள் வேகும்போது சத்துக்களை இழந்துவிடாமல் இருக்கவும், குடல் புண்ணை ஆற்றவும், கிருமி நாசினியாகவும் பயன்பட்டது.
துவரம் பருப்பை அவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளவில்லை.
பாசிப்பயிரையே அவர்கள் அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.
காரம் தேவைப்படும் போதெல்லாம் மிளகையே பயன்படுத்தியுள்ளனர்.
கறிவேப்பிலை கரைத்த நீர் மோர், சுக்கு பொடியிட்ட பானகம், கொத்துமல்லிக் காபி போன்றவற்றையே விருந்தினர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
உளுந்தை அவர்கள் குறைவாகவே உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்.
காலையில் நீராகாரத்தை உண்டனர்.
தயிரைவிட மோர் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
இரவு செப்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசியைப் போட்டு வைத்து, அதிகாலையே எழுந்து அந்த நீரைப் பருகிவிட்டு தியானத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.
மேலும் வாழையிலை, வாழை மரப்பட்டைகள் இணைந்த ஏடுகள், மந்தார இலை இவற்றையே உணவு உண்ண பயன்படுத்தி இருக்கிறார்கள்.
மற்ற உலோகங்களில் சூடான உணவை போடும் போது ஏற்படும் இரசாயன மாற்றம் இந்த இலைகளில் ஏற்படுவதில்லை.
மாறாக நன்மையே செய்கிறது என்று அறிந்து வைத்திருந்தார்கள்.
மதிய உணவுக்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே அவர்கள் வேறு எதையும் உட்கொள்ளமாட்டார்கள்.
உணவுக்கு முன் நீர் அருந்தினால் அது ஜடாராக்கினியை அவித்துவிடும் என்று உணவுக்கு முன் நீர் அருந்தமாட்டார்கள்.
எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுப் பண்டங்கள், கடின முயற்சியால் ஜீரணமாகும் உணவுப் பண்டங்கள் என்று அவர்கள் உணவு பிரிக்கப்பட்டிருந்தது.
பசியினால் சுருங்கியிருக்கும் உணவுக் குழாயில் சேதம் ஏற்பட்டு விடும் என்பதால் பரிமாறி முடிக்கும் வரை உணவை தொடமாட்டார்கள்.
உண்ணும்போது அந்தக் குழாயை சிறிதுசிறிதாக அகலப்படுத்தும் முறையாகவே அவர்கள் உணவுப் பழக்கம் இருந்தது.
இலையில் பதார்த்தங்கள் பரிமாறியதும் சாதம் வரும். அதற்கருகிலேயே பருப்பு வைக்கப்படும்.
நெய்யை சாதத்தின் மீது ஊற்றிய பின்னர் உண்ணத் துவங்குவார்கள்.
அதுவும் முதலில் சிறிதளவு நீரைக் கையில் எடுத்து இலையைச் சுற்றி ஊற்றிவிட்டு, மீதம் உள்ள துளிகளைப் பருகுவார்கள்.
இலையைச் சுற்றி ஊற்றுவதால் இலைக்கு சிறு பூச்சிகள் எறுப்புகள் வராது.
மீதமுள்ள துளிகளைப் பருகுவதால் அது சுருங்கிய உணவுக் குழாயில் ஈரப்பசையை உண்டாக்கி முன் செல்லும்.
இப்படி நீரால் சிறிது உணவுக் குழாய் விரிவடையும் போது, பருப்பு நெய் கலந்த சாதத்தை உண்ணுவார்கள்.
அது நெய்யினால் வழுக்கிக் கொண்டு போவதுடன் உணவுக் குழாயை மேலும் விரித்து விடும்.
பருப்பு ஜீரணமாக அதிக சக்தி தேவை என்பதால் உணவு உஷ்ணமாக இருக்கும் போதே பருப்பு மற்றும் சாம்பார் சாதத்தை சாப்பிட்டு விடுவார்கள்.
இந்த இரண்டு உணவுகளுக்குமே ஜீரண சக்தி அதிகம் தேவைப்படும் என்பதால் அடுத்ததாக எளிதில் ஜீரணமாகக் கூடிய மற்றும் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் மருத்துவ குணமுள்ள ரசம் சாதத்தை உண்பார்கள். அடுத்து மோர் சாதம்.
இது உணவைப் புளிக்க வைத்து எளிதில் ஜீரணமாக உதவும்.
அதற்க்குத் துணையான ஊறுகாய்களும், அதிலுள்ள அமிலத் தன்மை (எலுமிச்சை, நார்த்தை) உப்பு, மிளகு போன்றவைகளும் மேலும் ஜீரணத்திற்கு உதவும்.
பண்டைய காலங்களில் ஊறுகாய்க்கு கடுகு எண்ணெயும், மிளகுமே பயன்பாட்டில் இருந்திருக்கிறது.
இன்றோ நாகரீகம் என்ற பெயரில் மசாலா நாற்றத்துக்கு மயங்கி, கண்ட கண்ட வேளைகளில் கண்ட கண்ட உணவுகளை உள்ளே தள்ளி குடலையும், உடலையும் கெடுத்துக் கொள்கிறோம்.
இப்படி எல்லாம் நடக்காமல் இருக்க, திட்ட மிட்ட உணவுப் பழக்கங்களைக் கையாண்ட நம் முன்னோர்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
நாமும் இயன்றவரை முன்னோர் உணவுப் பழக்கங்களை கையாள முயற்ச்சிப்போம்.
















