·   ·  3 videos
  •  ·  0 friends
  • 1252
  • More

Beautiful birds

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

பச்சை கற்பூரம் மற்றும் லவங்க பட்டை ஒரே அறிவியல் குடும்பத்தை சார்ந்தது. இதனை ஆங்கிலத்தில் Cinnamon Camphor என்று கூறுவார்கள். நம் முன்னோர்கள் இந்த கற்பூரத்தை உணவில், ஆன்மிகத்தில், அழகு குறிப்புகளில் மற்றும் மருத்துவத்திலும் பயன்படுத்தி உள்ளனர். சரி வாங்க இந்த பச்சை கற்பூரத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்….

  • பச்சை கற்பூரத்தை உணவில் பயன்படுத்துவதால் சாப்பாடு சீக்கிரம் கெடுவதற்கு காரணமான Fungus ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. இப்பொழுது நாம் உணவு கெடாமல் இருப்பதற்காக Refrigerator பயன்படுத்துகிறோம். ஆனால் முன்பு இந்த கற்பூரத்தை பயன்படுத்தி உள்ளனர்.
  • உணவில் இருக்கும் நோய் தொற்று ஏற்படாமலும் மற்றும் சாப்பாட்டில் சுவையை அதிகரிக்கவும், கிருமிகள் எதுவும் அண்டாமல் இருப்பதற்கும் இந்த பச்சை கற்பூரம் பயன்பட்டு வருகிறது.

பச்சை கற்பூரத்தின் மருத்துவ பயன்கள்:

  • கோயில்களில் கொடுக்கும் பிரசாதம் மற்றும் தீர்த்தத்தில் பச்சை கற்பூரம் மற்றும் கிராம்பு சேர்த்து தருவார்கள். எதற்காக என்றால் மருந்தாகவும் மற்றும் சுவை அதிகரிக்கவும் மற்றும் கடவுளின் ஆசி மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த முறையாகும்.
  • பச்சை கற்பூரத்தை தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் சளித்தொல்லை, சுவாச கோளாறு, சைனஸ், அலர்ஜி மற்றும் நோய் தோற்று ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது….
  • இரவு ஒரு செம்பு (copper) அல்லது மண் பாத்திரத்தில் இரவு படுக்கைக்கு முன்பு தண்ணீர் ஊற்றி அதில் துளசி, கிராம்பு, பச்சை கற்பூரம் மற்றும் தேன் கலந்து மறு நாள் காலை குடித்து வந்தால் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். மேலும் இந்த தண்ணீரை பேச்சு வராத குழந்தைகள் குடித்து வந்தால் பேச ஆரம்பிப்பார்கள்.
  • இந்த கற்பூரத்தை Cream-ஆக பாதத்தில் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

பச்சை கற்பூரம் பயன்கள் – செல்வம் செழிக்க உதவும் பச்சை கற்பூரம்:

  • பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் குணம் உள்ளது. பச்சை கற்பூரத்துடன் சோம்பு, கிராம்பு, மஞ்சள், கருமஞ்சள், சிறிய தேங்காய், புணுகு, கோரோசனை, ஜவ்வாது, குன்றின் மணி, கோமதி சக்கரம், சோலி மற்றும் சிறிய தர்பை துண்டு அனைத்தையும் ஒரு பாத்திரம் அல்லது துணியில் கட்டி பூஜை அறை மற்றும் காசோலை ஆகிய இடத்தில் வைத்து வந்தால் பண புழக்கம் அதிகரிக்கும் மற்றும் வீண் செலவு ஏற்படாது.
  • இதை ஏன் செய்ய வேண்டும் என்றால் இதில் தன ஆகர்சனம் கிடைப்பதற்காகவும், மனதில் நேர்மறை எண்ணங்கள் தோன்றுவதற்காகவும் மற்றும் பண வரவு அதிகரிக்கவும் வைக்க வேண்டும்.
  • பச்சை கற்பூரம் இயற்கையாகவே நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் என்பதற்காக திருப்பதியில் உள்ள பெருமாள் கோவிலில் சாமியின் தாடையில் இந்த கற்பூரத்தை வைத்திருப்பார்கள்.
  • வீட்டில் உள்ள கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் போன்றவை விலகுவதற்கும் இந்த பச்சை கற்பூரம் பயன்பட்டு வருகிறது. பச்சை கற்பூரம் நல்ல வாசனை உள்ளது வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடியேறுவாள். அதனால் தான் இந்த கற்பூரத்தை பயன்படுத்துவதால் செல்வம் செழிக்கும் என்று கூறப்படுகிறது.
  • 9

புருஷன்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு...

அதான் ஹோட்டல் இருக்கேனு திமிர்த்தனத்துல மனைவி கிட்ட யாரும் சண்டை போடாதீங்க!

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமா எல்லா ஊர்லயும் ஹோட்டல்களை மூடிட்டு வராங்க!

வாய மூடி பேசாம போடுற உப்புமாவை சாப்பிடுங்க.....

  • 16
·
Added a post

மகா பாரத போர் நடந்து கொண்டிருந்தநேரமது….பாண்டவர்களிடம்செல்வங்கள் குறைந்து கொண்டே வந்தன.. ஒருபோர் என்றாலே பொருட் செலவுகள் அதிகம் ஆகுமே…. என்ன செய்வது என்று தர்மன்கையைபிசைந்துகொண்டிருந்த நேரம்பார்த்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அங்கு வந்தார்…

என்ன தர்மரே….என்ன ஆலோசனை…என்று சிரித்து கொண்டே கூறவே, அதற்கு தர்மரோ,…..செல்வங்கள் குறைந்து விட்டது கிருஷ்ணா…..

…. இன்னும் போர் எத்தனை நாள் நீடிக்குமோ தெரியவில்லை நீதான்ஏதாவது யோசனை கூற வேண்டும்…. என்றார்…

தர்மரே….!…கவலை பட வேண்டாம்…. குபேரனிடம்….கடன் கேட்டு இருக்கிறேன்…. பீமசேனனைஅனுப்பி வாங்கி வர சொல் என்றார்…தருமனும் பீமனை அனுப்பி வாங்கி வர சொன்னார்…பீமனும்குபேரன் மாளிகையை தேடி புறப்பட்டான்…வாயில் காப்போனிடம் குபேரனை காண வேண்டும் என கூற…அவனும் வழிவிட, வீர நடை போட்டு கொண்டு மாளிகை உள்ளே நுழைந்து போய் அம்மாளிகையை நோட்டமிட்டான்பீமன்…..

அங்கே ஒருவரையும் காணோம்…ஒரு வயதான பெரியவர்அரிசியை கீழே கொட்டி கொண்டு யாரையும் கவனிக்காமல். .அரிசியில் உள்ள குருணிகளையும் கற்களையும் தீவிரமாய் ஆய்ந்துபொறுக்கி கொண்டிருந்தார்…. பீமசேனன்,அவரிடம் சென்று தான் குபேரன்ஐயாவை பார்க்க வேண்டும் என கூற…அந்த பெரியவர்அங்கிருக்கும் ஒரு நாற்காலியில் அவனை அமர சொல்லி விட்டுஉள்ளே சென்றார்.

அமர்ந்திருந்தபீமசேனனுக்கு…குபேரனிடம் செல்வம் பெறும் நம்பிக்கை போய்விட்டது.. குபேரன் மாளிகைஎன்றால் தங்கத்தாலும்வைரங்களாலும்…..இழைத்திருக்க வேண்டும்… இங்கே என்னடா ..என்றால் அரிசியைபொறுக்கி கொண்டு இருக்கிறார்கள்…. ஒரு பணியாளும் இல்லை…ஒன்றும்இல்லை…. இங்கிருந்து செல்வங்களை வாங்கி செல்வது கடினம்தான் என நினைத்து, கொண்டு நெடுநேரம் அமர்ந்திருந்தான்…. நேரம் செல்ல செல்ல பசிவேறு வயிற்றை கிள்ளியது….

ஒருவேளையாக,.பட்டுபீத்தாம்பரம் உடுத்தி கொண்டு, ஜவ்வாது மணம் வீச…… முக வதனம் தேஜேஸ்சுடன்அரிசியை பொறுக்கி கொண்டிருந்த அதே பெரியவர்பீமன்இருக்குமிடம்…. வந்து அவனருகில்அமர்ந்தார்…. பீமன் அப்போது தான் அவரை உற்று நோக்கினான்…. அரண்டுபோனான். அவர் குபேரர் தான்…. பீமன் எழுந்து நின்று அவரை வணங்க, அவர் அவனை விருந்து ண்ணும் அறைக்கு அழைத்து சென்றார்

அந்த அறை வைரங்களாலும்.. வைடூரியங்காளாலும்………அலங்கரிக்கபட்டு பீமனின்கண்களைபறித்தது……...அவன் பசியை கண்ணுற்ற குபேரன்,பணி பெண்களை அழைத்து விருந்தை எடுத்து வரும்படி கட்டளை இட்டார்…

கிட்டத்தட்ட இருபது பணிப்பெண்கள் அணி வகுத்துதங்கதாம்பூலத்தில் வாழைஇலையால்மூடி பீமன் முன் விருந்தை வைத்தனர்…. குபேரன் பீமனிடம்முதலில் விருந்தை சாப்பிட சொன்னார் …. நல்ல பசியில் இருந்தஅவன் அவசர அவசரமாக மூடியிருந்த வாழை இலையை எடுத்து தூர போட்டு விட்டு உணவைஆசை ஆசையாக தேடி பார்க்க, அங்கு தட்டுகளில் இருந்ததோ….பவளம்…. மாணிக்கம்…. வைரம்….. வைடூரியங்கள்…ரத்தினங்கள் தங்கபாளங்கள்மட்டுமே ….. சாப்பிட ஒன்றும் இல்லை..

பீமன் தன்வயிற்றை பிசைந்து கொண்டான்…நல்ல பசி அவனுக்கு…அவன் கண்கள் உணவை தேடியதை புரிந்து கொண்ட குபேரன்…. அவனை பார்த்து…. பீமா…முதலில் நமது செல்வம் நவ தானியங்கள் தான்…. அவற்றைஏளனம் செய்யாதே…. பின்பு தான்எல்லா செல்வங்கள்… .நவரத்தினங்ளைசாப்பிட முடியுமா…. ஆயிரம் செல்வங்கள், இருந்தாலும் அவைகள் பசி தீர்க்க பயன் படாது.. புரிந்து கொள்…. என கூறிய குபேரன்….மீண்டும் பணி பெண்களை உணவு பரிமாற கூற சொன்னார்….பீமன் தான் முன்பு எண்ணிய எண்ணங்களை எண்ணி குபேரனிடம் மனம் வருந்தினான்…..

அறு சுவை உணவுஉண்ட பின் பீமசேனனுக்குஅந்த செல்வங்களை மூட்டைகட்டி தூக்க முடியாத அளவிற்குஅளவில்லாத செல்வங்களை கொடுத்து அனுப்பினார் குபேரன்.

  • 17
·
Added a news

உலக சந்தையில் மசகு எண்ணெய் (Crude Oil) விலை அதிகரித்து வருவதால், அதன் தாக்கம் கனடிய விவசாய துறையிலும், அதனைத் தொடர்ந்து மளிகைப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதாக உணவுப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குயெல்ஃப் பல்கலைக்கழகத்தின் (University of Guelph) பேராசிரியர் மைக் வான் மாசோ (Mike von Massow) இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது விவசாயிகள் விதைப்புப் பணிகளில் ஈடுபடும் காலம் என்பதால், நிலங்களை உழுவதற்கும் விதைகளை இடுவதற்கும் அதிகப்படியான எரிபொருள் தேவைப்படுகிறது.

உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகளுக்கான எரிபொருள் செலவு கணிசமாக உயரும். இது அறுவடை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக, உலகிலேயே மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், குறிப்பாக மத்திய கிழக்கில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நைட்ரஜன் உரங்களின் விலை அதிகரித்துள்ளது. மேற்கு கனடாவை விட, இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் கிழக்கு கனடா (Eastern Canada) இந்த உர விலை உயர்வால் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

  • 19
·
Added a news

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) தெரிவித்துள்ளார். இத்தாலி பாராமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது, மத்திய கிழக்கிலிருந்து தனது நாட்டுப் படைகளை மீளப்பெறவுள்ளதாக அவர் (Giorgia Meloni) அறிவித்துள்ளார். அதோடு மத்திய கிழக்கிற்கு எதிரான போரில் இத்தாலி ஒருபோதும் பங்காளியாக இருக்காது எனவும், ஈரானுக்கு எதிரான போரில் இத்தாலி பங்கேற்காது எனவும் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

  • 23
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் பிறக்கும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் வேண்டும். அரசு பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். கல்விப் பணிகளில் ஆர்வம் இன்மை குறையும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

ரிஷபம்

கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தங்கள் நீங்கும். சுப காரியம் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மிதுனம்

பழைய நினைவுகளால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை குறைத்துக்கொள்ளவும். உயர் அதிகாரிகளின் தன்மையை அறிந்து செயல்படவும். சவாலான பணிகளில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

கடகம்

தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தவறிப்போன வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் நன்மை உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

சிம்மம்

எந்த காரியத்தையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். குறுகிய தூர பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணி ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த தடைகள் மறையும். கொடுத்த கடன்கள் வசூலாகும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கன்னி

புத்திரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கேளிக்கை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் பிறக்கும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். அறிவியல் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். மறைமுகமாக இருந்து வந்த இன்னல்கள் விலகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

துலாம்

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். புதிய கூட்டாளிகளை இணைப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்கு செயல்பாடுகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த இடைவெளிகள் குறையும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகளை அறிவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

விருச்சிகம்

முயற்சிக்கு உண்டான முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உருவாகும். பாகப்பிரிவினை விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதுமை ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

தனுசு

வாக்கு சாதுர்யம் மூலம் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். அனுபவப் பூர்வமான பேச்சுக்கள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

மகரம்

குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உணர்ச்சிபூர்வமாக செயல்படுவதை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கனிவான பேச்சுக்களை கடைபிடிக்கவும். ஆதரவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

கும்பம்

மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகள் தாமதமாக நிறைவேறும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். மற்றவர்களைப் பற்றிய கண்ணோட்டங்களில் மாற்றம் பிறக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சில அனுபவங்கள் மூலம் புதிய கண்ணோட்டம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

மீனம்

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விவசாய தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். புனித யாத்திரை தொடர்பான பயணங்கள் கைகூடும். உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 95
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 30 ஆம் தேதி சனிக்கிழமை 14.3.2026.

இன்று காலை 07.22 வரை தசமி. பின்னர் ஏகாதசி.

இன்று அதிகாலை 02.17 வரை பூராடம். பின்னர் உத்திராடம்

இன்று காலை 09.55 வரை வரீயான். பின்னர் பரிகம்.

இன்று காலை 07.22 வரை பத்திரை. பின்னர் இரவு 07.52 வரை பவம். பின்பு பாலவம்.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=452&dpx=2&t=1773458445

நல்ல நேரம்:

காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை

பகல் : 12.45 முதல் 01.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 104

Good Morning...

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 108
·
Added a news

கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), எதிர்வரும் மார்ச் 16-ஆம் திகதி பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸைச் சந்தித்துப் பேசவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

நோர்வே மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கான தனது உத்தியோகபூர்வ ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் இந்தச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.

2025-இல் பதவியேற்றது முதல் ஐரோப்பிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதில் பிரதமர் கார்னி அதிக ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆர்க்டிக் பிராந்தியம் மற்றும் நேட்டோ (NATO) அமைப்பில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

பிரதமர் தனது பயணத்தை நோர்வேயில் தொடங்குகிறார். அங்கு ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே நடைபெறும் "கோல்ட் ரெஸ்பான்ஸ்" (Cold Response) என்ற நேட்டோவின் இராணுவப் பயிற்சியைப் பார்வையிடவுள்ளார்.

அத்துடன் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரைச் சந்தித்து வர்த்தகம், தூய்மையான எரிசக்தி மற்றும் விண்வெளி ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளார்.

நோர்வேயைத் தொடர்ந்து லண்டன் செல்லும் பிரதமர், அங்கு பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மரைச் (Keir Starmer) சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்புத் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளார்.

  • 188
·
Added a post

1. ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.

2. முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.

3. தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.

4. பப்பாளிப் பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.

5. துளசி இலை சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்.

6. வாழைப்பழத்தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைக்க கருவளையம் குறையும்.

7. உதட்டில் வெண்ணெய் தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.

8. நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண்ணெயை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்

9. பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.

10. முட்டையின் வெள்ளைகரு, தேன், மாதுளை ஜூஸ் மூன்றையும் கலந்து அரை மணி நேரம் முகத்தில் பூசிவிட்டு முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.

  • 183
·
Added a post

காலையில் எழுந்ததும் முதல் முதலில் நம் வயிற்றுக்கு செல்லும் இந்த டீ ஆனது நல்ல ஆரோக்கியமான ஒன்றாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதற்குத்தான் இந்த மஞ்சள் டீ. இதை தினமும் காலையில் குடித்து வந்தால் உடலுக்கு அத்தனை நன்மைகளும் ஆரோக்கியமும் கிடைக்கும். பொதுவாகவே மஞ்சள் ஒரு கிருமி நாசினி. உடலுக்கு நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம். அது மட்டும் இல்லாமல் இதில் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, விட்டமின் ஈ, விட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, சிங்க் போன்று அத்தனை சத்துக்கள் அடங்கியுள்ளது.

இது மட்டுமில்லாமல் கேன்சரை உருவாக்கும் செல்களின் அளவை கூட இந்த மஞ்சள் குறைத்து விடும். இன்று வரைக்கும் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட நோய்க்கு கூட வருவதற்கு முன் காக்கும் மருந்தாகவும், வந்த பின் அதன் தாக்கத்தை குறைக்கவும் இந்த மஞ்சள் பயன்படுகிறது என்றால் நீங்களே நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருள்கள்: மஞ்சள் -1/2 டீஸ்பூன், மிளகு – 1/4 டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, சீரகம் – 1/4 டீஸ்பூன், நெய் அல்லது வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து விடுங்கள். அதில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு டீ கப்பில் மஞ்சள், மிளகு, சீரகம், உப்பு, நெய் அல்லது வெண்ணெய் இவை அனைத்தும் எடுத்து வைத்து கொள்ளுங்கள். பிறகு அதில் நன்றாக கொதித்து கொண்டிருக்கும் தண்ணீர் ஒரு கப் எடுத்து ஊற்றியவுடன், ஒரு சிறிய தட்டு வைத்து அந்த டீ கப்பை மூடி விடுங்கள். ஒரு நிமிடம் கழித்து திறந்ததும் அதில் நாம் சேர்த்திருக்கும் அனைத்தும் பொருட்களும் கரைந்து உருகி இருக்கும். இப்போது ஒரு ஸ்பூன் கொண்டு அடியில் தங்கியிருக்கும் மிளகு, சீரகம் இது எல்லாம் நன்றாக கலக்கும் படி கலந்து விட்டு மிதமான சூட்டிலே இதைக் குடித்து விடுங்கள். ஆறிய பிறகு இதை குடிக்கக்கூடாது.

இதை தினமும் ஒரு முறையாவது குடித்து வந்தால் தொண்டை சார்ந்த எந்த பிரச்சினையும் உங்களை நெருங்காது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த மஞ்சள் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் அவர்கள் இதை தவிர்த்து விடலாம்.

  • 188
·
Added a post

பழமையான இந்திய இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். இந்த மகாகாவியம் மனித வாழ்க்கையின் பல நுணுக்கமான உண்மைகளை கதைகளின் மூலம் எடுத்துரைக்கிறது. அத்தகைய ஒரு ஆழமான வாழ்க்கைப் பாடத்தை உணர்த்தும் சம்பவம் சல்லியன் சம்பந்தப்பட்டதாகும்.

“அவசியமில்லாமல் பிறர் வீட்டில் சாப்பிடக்கூடாது” என்ற பழமொழி போன்ற வாழ்க்கை நெறி எவ்வாறு உருவானது என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.

சல்லியன் யார்?

மகாபாரதத்தில் வரும் வீரர்களில் ஒருவர் சல்லியன். இவர் மாத்ரா நாட்டின் மன்னன்.

அவருக்கு நகுலன் மற்றும் சகாதேவன் இருவரும் மருமகன்கள். ஏனெனில் பாண்டவர்களின் தந்தையான பாண்டு மன்னனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர்:

குந்தி

மாத்ரி

குந்திக்கு பிறந்தவர்கள்:

தர்மர்

பீமன்

அர்ஜுனன்

மாத்ரிக்கு பிறந்தவர்கள்:

நகுலன்

சகாதேவன்

மாத்ரியின் சகோதரனாக இருந்ததால் சல்லியன் இவர்களின் தாய் மாமனாக விளங்கினார்.

சல்லியன் மிகுந்த வீரமும் திறமையும் கொண்டவன்.

வில்ல்வித்தையில் வல்லவன்

வாள் சண்டையில் வல்லவன்

தேரோட்டுவதிலும் அசாதாரண திறமை பெற்றவன்

ஆனால் அவனுக்கு ஒரு பெரிய பலவீனம் இருந்தது — பசி.

பசி வந்துவிட்டால் அவனால் எதையும் சிந்திக்க முடியாது. பசியை அடக்குவது அவனுக்குப் பெரிய சவாலாக இருந்தது.

துரியோதனன் செய்த திட்டம்

துரியோதனன் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் போர் நடக்கவிருக்கிறது என்பதை அறிந்திருந்தான்.

சல்லியன் தனது மருமகன்களான பாண்டவர்களுக்கு உதவப் பெரும் படைகளுடன் வருகிறார் என்ற செய்தி அவனுக்குக் கிடைத்தது.

அதை கேட்டதும் துரியோதனன் ஒரு சூழ்ச்சி செய்தான்.

சல்லியன் வரும் பாதையில்:

பெரிய கூடாரங்கள் அமைக்கப்பட்டன

அறுசுவை உணவுகள் தயாரிக்கப்பட்டன

படைகளுக்கும் சல்லியனுக்கும் விருந்து அளிக்கப்பட்டது.

அந்த விருந்து மிகவும் சிறப்பாக இருந்தது.

பசியால் தவித்திருந்த சல்லியன் அந்த உணவை வயிறு நிறைய உண்டான்.

உணவு முடிந்ததும் சற்றுநேரம் இளைப்பாறியபடி அவன் சிந்தித்தான்:

“இவ்வளவு பெரிய விருந்தை அளித்தவர் யார்?

அவருக்கு நான் என்ன கைமாறு செய்வேன்?”

என்று அறியாமலே உரக்கச் சொன்னான்.

அந்த நேரத்தில் மறைந்து நின்றிருந்த துரியோதனன் முன் வந்து,

“மாமா! சௌக்கியமா?”

என்று கேட்டான்.

அப்போது தான் சல்லியனுக்கு உண்மை புரிந்தது.

“அடடா! இது துரியோதனன் ஏற்பாடு செய்த விருந்தா? தெரியாமல் சாப்பிட்டுவிட்டேனே!” என்று அவன் வருந்தினான்.

ஆனால் துரியோதனன் சிரித்தபடி கூறினான்:

“வரப்போகும் போரில் எனக்கு துணையாக நின்றால் போதும்.

அதுவே எனக்கு நீங்கள் செய்யும் கைமாறு.”

ஒருமுறை விருந்தை ஏற்றுக்கொண்ட பிறகு மறுப்பது தர்மத்திற்கு எதிராக இருக்கும் என்று நினைத்த சல்லியன் வேறு வழியின்றி கௌரவர்களின் தரப்பில் போரிட ஒப்புக்கொண்டான்.

இது தான் “செஞ்சோற்றுக் கடன்” என்று சொல்லப்படும் நிலை.

கிருஷ்ணன் செய்த இன்னொரு சூழ்ச்சி

போர் தொடங்கியபோது பல நாட்கள் கடுமையாக நடைபெற்றது.

ஒருநாள் போர்க்களத்தில் மீண்டும் சல்லியனுக்கு கடும் பசி ஏற்பட்டது.

அப்போது அருகில் இருந்து நெய் மணம் வீசும் சுவையான உணவின் வாசனை வந்தது.

அவன் அந்த வாசனையைப் பின்தொடர்ந்து ஒரு சமையல் கூடத்துக்குச் சென்றான்.

அங்கு பலவிதமான உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தன.

பசி காரணமாக அவன் மீண்டும் வயிறு நிறைய சாப்பிட்டான்.

பிறகு அவன் எண்ணினான்:

“இவ்வளவு அற்புதமான உணவை செய்தவர் யார்? அவரை பாராட்ட வேண்டும்.”

என்று சமையல் கூடத்திற்குள் சென்றான்.

அங்கே என்ன ஆச்சரியம்!

முண்டாசு கட்டிக் கொண்டு கரண்டியுடன் சமையல் செய்து கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல —

கிருஷ்ணன்!

சல்லியன் மகிழ்ச்சியுடன் கூறினான்:

“இவ்வளவு சுவையான உணவை நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை.

உனக்கு நான் ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும்.

என்ன வேண்டும் கேள்!”

அப்போது கிருஷ்ணன் சிரித்தபடி கூறினான்:

“நீ தேரை ஓட்டும்போது ஒரு சக்கரம் பள்ளத்தில் இறங்கினாலும், அதை ஒரு நொடியில் மீண்டும் மேலே ஏற்றி தேரை ஓட்டுவாயாம்.

அந்த வித்தையை எனக்கு சொல்லிக் கொடு.”

சல்லியன் எந்த சந்தேகமும் இல்லாமல் அந்த ரகசியத்தை கிருஷ்ணனுக்கு கற்றுக் கொடுத்தான்.

கர்ணன் – அர்ஜுனன் யுத்தம்

மகாபாரதப் போரின் 17-வது நாள் மிக முக்கியமானது.

அன்று கர்ணன் மற்றும் அர்ஜுனன் நேருக்கு நேர் மோதினர்.

கர்ணனின் தேரை ஓட்டியது சல்லியன்

அர்ஜுனனின் தேரை ஓட்டியது கிருஷ்ணன்

போர் கடுமையாக நடந்தது.

அர்ஜுனனின் அம்புகள் மழைபோல் பொழிந்தன.

அந்த நேரத்தில் கர்ணன் தனது சக்திவாய்ந்த நாகாஸ்திரத்தை அர்ஜுனனின் தலையை நோக்கி செலுத்தினான்.

அப்போது கிருஷ்ணன் சல்லியனிடமிருந்து கற்ற வித்தையை பயன்படுத்தினான்.

ஒரு நொடியில் தேரின் சக்கரத்தை பள்ளத்தில் இறக்கி அர்ஜுனனின் தலையை கீழே குனியச் செய்தான்.

அந்த அம்பு அர்ஜுனனின் தலையைத் தாக்காமல் தப்பித்து விட்டது.

இதனால் அர்ஜுனன் உயிர் பிழைத்தான்.

இந்தக் கதையின் வாழ்க்கைப் பாடம்

இந்த சம்பவம் நமக்கு ஒரு பெரிய உண்மையை உணர்த்துகிறது.

அதாவது:

தேவையில்லாமல் பிறர் வீட்டில் சாப்பிடக்கூடாது

சாப்பிட்டால் அது ஒரு கடனாக மாறிவிடும்

அந்தக் கடன் சில நேரங்களில் நம்மை விரும்பாத பாதைக்கு இழுத்துச் செல்லலாம்.

இதனால் தான் பழங்காலத்தில் ஒரு நல்ல பழக்கம் இருந்தது.

ஒருவர்:

மருமகன் வீட்டிற்கு

உறவினர் வீட்டிற்கு

சென்றாலும் வெறும் கையுடன் செல்ல மாட்டார்கள்.

அரிசி, காய்கறி, பழங்கள் போன்றவற்றை எடுத்துச் சென்று கொடுத்து விட்டு தான் அங்கு உணவு உண்ணுவார்கள்.

“வெறும் கையை வீசிக் கொண்டு போய் சாப்பிடக்கூடாது” என்ற நெறி இந்தப் பழமையான வாழ்க்கை அறிவிலிருந்து வந்தது என்று கூறப்படுகிறது.

  • 185
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். உங்கள் மீதானே நம்பிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். இறை சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். திடம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

ரிஷபம்

உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பொறுமையை கடைபிடிக்கவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் அதிகரிக்கும். மறதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மிதுனம்

அரசு சார்ந்த பணிகளில் இருந்த இழுபறிகள் குறையும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு புத்துணர்ச்சியும் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் வழியில் ஆதாயம் ஏற்படும். வாகனம் தொடர்பான பழுதுகளை சீர் செய்வீர்கள். எதிர்ப்புகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கடகம்

உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தடைபட்ட பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் சேர்க்கைக்கான சிந்தனைகள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

சிம்மம்

வியாபார பணிகளில் போட்டிகள் மேம்படும். தடைகள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வேள்வி பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். நெருக்கமானவர்கள் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

கன்னி

கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருக்கவும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடலில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

துலாம்

திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். இசை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குறுகிய தூர பயணங்கள் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். ஆசைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

விருச்சிகம்

சுபகாரிய தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். பற்கள் சார்ந்த பிரச்சினைகள் குறையும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். தனிப்பட்ட செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். பொருளாதார தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொன் பொருள் சேர்க்கை சேரும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

தனுசு

முன்கோபத்தால் தர்மசங்கடமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். பொது இடங்களில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

மகரம்

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தொழில் நிமித்தமான முதலீடுகள் அதிகரிக்கும். புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சிந்தனைகள் மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். உடன் இருப்பவர்களால் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். வியாபார பணிகளில் எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

கும்பம்

உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். மனதிற்குப் பிடித்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபார செயல்களில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான சூழல் அமையும். பழக்கவழக்கங்களில் புதுமையும் உருவாகும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மீனம்

கல்வியில் இருந்த மந்த தன்மை குறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் ஏற்படும். பயணங்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். மருத்துவ சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். மனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பரிசுகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

  • 343
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 13.3.2026.

இன்று அதிகாலை 05.56 வரை நவமி. பின்னர் தசமி.

இன்று அதிகாலை 12.12 வரை மூலம். பின்னர் பூராடம்.

இன்று காலை 09.54 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.

இன்று அதிகாலை 05.56 வரை கரசை. பின்னர் மாலை 06.39 வரை வணிசை. பின்பு பத்திரை.

இன்று முழுவதும் சித்தயோகம்.

நல்ல நேரம்:

காலை : 09.00 முதல் 10.00 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 284

Good Morning.....

வெற்றி வெகுதூரத்தில் இல்லை. விரைந்து செயல்பட வாழ்த்துகள்.

  • 279
·
Added a news

 கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணம், நார்த் சிட்னி பகுதியில் பாடசாலை பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.

ஆர்ச்சிபால்ட் அவென்யூ மற்றும் பிளசன்ட் ஸ்ட்ரீட் சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் காரை ஓட்டிச் சென்றவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்துக்குள்ளான பேருந்தில் மெமோரியல் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 29 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். விபத்தைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

சில மாணவர்களுக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

  • 283
·
Added a news

கனடாவின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre), வர்த்தகம் மற்றும் எரிசக்தி தொடர்பான முக்கியப் பேச்சுவார்த்தைகளுக்காக இந்த வாரம் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்.

அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் விதிக்கப்படும் வரிகளை நீக்கி, தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்ய அவர் வலியுறுத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வட அமெரிக்காவின் ஒருங்கிணைந்த வாகனத் தொழில்துறையைப் பாதுகாப்பது குறித்து டெட்ராய்ட் (Detroit) பகுதியில் உள்ள வாகனத் துறைத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கனடாவின் எரிசக்தி வளங்களுக்கு அமெரிக்காவில் ஆதரவு திரட்டும் வகையில் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் மற்றும் ஆஸ்டின் நகரங்களுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

  • 358
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். பணவரவு மனநிறைவை தரும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

ரிஷபம்: சில காரியங்களை முடிப்பதில் தடைகள் வந்து போகும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் ஆலோசனைகளை கேட்டு செயல்படவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புது வேலை அமையும். பிள்ளைகளால் பெருமையடைவீர். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

கடகம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல் இருக்கும். முன்கோபம் தவிர்ப்பீர். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

சிம்மம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் தேடி வருவர். கையில் பணம் புரளும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். அலுவலகரீதியாக இருந்து வந்த குழப்பங்கள் தீரும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.

கன்னி: பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். உடன் பிறந்தவர்களின் ஆதரவுண்டு. வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

துலாம்: விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவுவர். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

விருச்சிகம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

தனுசு: பழைய கடன், பகையை நினைத்து பயம் வரும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்புவீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அலுவலகத்தில் போராட்டம் இருக்கும்.

மகரம்: எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு காரியம் விரைந்து முடியும். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை விலகும். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கும்பம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

மீனம்: நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவர். பேசாமல் இருந்த உறவினர் வலிய வந்து பேசுவார். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

  • 408
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 28 ஆம் தேதி வியாழக்கிழமை 12.3.2026

இன்று அதிகாலை 04.05 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று முழுவதும் மூலம்.

இன்று காலை 09.37 வரை சித்தி. பின்னர் வியதீபாதம்.

இன்று அதிகாலை 04.05 வரை கௌலவம். பின்னர் மாலை 05.00 வரை தைத்தூலம். பின்பு கரசை.

இன்று காலை 06.23 வரை மரணயோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=450&dpx=2&t=1773291723நல்ல நேரம்:

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 414

Good Morning....

  • 414
·
Added a post

1)பசியைத் தூண்டுவதற்கு :

காலையில் ஒரு வெற்று வயிற்றில் எலுமிச்சை தண்ணீரை குடிக்கவும். உணவுக்கு முன், அரைத்த இஞ்சியை பாறை உப்புடன் உட்கொள்ளுங்கள்.

2)இரத்த சுத்திகரிப்புக்கு :

எலுமிச்சை, கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், கீரை, ஆப்பிள், பசில், வேப்பம் மற்றும் பேல் இலைகளின் சாறு.

3)ஆஸ்துமாவுக்கு :

பூண்டு, இஞ்சி, துளசி, பீட்ரூட், முட்டைக்கோஸ், கேரட், இனிப்பு திராட்சை சாறு, பச்சை இலை காய்கறிகளின் சூப் அல்லது முங் பருப்பு சூப், மற்றும் தூய ஆடு பால் ஆகியவை நன்மை பயக்கும். நெய், எண்ணெய் மற்றும் வெண்ணெய் தவிர்க்கப்பட வேண்டும்.

4)உயர் இரத்த அழுத்தத்திற்கு :

கேரட், திராட்சை, இனிப்பு சுண்ணாம்பு (மொசம்பி) மற்றும் கோதுமை புல் ஆகியவற்றின் சாறு. மன மற்றும் உடல் ஓய்வு அவசியம்.

5)குறைந்த இரத்த அழுத்தத்திற்கு :

இனிப்பு பழங்களின் சாறுகளை உட்கொள்ளுங்கள், ஆனால் புளிப்பு பழங்களைத் தவிர்க்கவும். திராட்சை மற்றும் இனிப்பு சுண்ணாம்பு சாறு அல்லது பால் ஆகியவை நன்மை பயக்கும்.

6)மஞ்சள் காமாலை :

திராட்சை, ஆப்பிள், நெல்லிக்காய் மற்றும் இனிப்பு சுண்ணாம்பு.

திராட்சை கிடைக்கவில்லை என்றால், திராட்சையும் தண்ணீரில் ஊறவும், அந்த தண்ணீரை குடிக்கவும்.

கரும்பு சாற்றை குடிக்கவும்.

7)பருக்கள்/முகப்பரு:

கேரட், தர்பூசணி, வெங்காயம், துளசி மற்றும் கீரை சாறு.

8)கீழ்வாதத்திற்கு :

பூண்டு, இஞ்சி, கேரட், கீரை, வெள்ளரி, முட்டைக்கோஸ், புதிய கொத்தமல்லி, தேங்காய் நீர், ஆப்பிள்கள் மற்றும் கோதுமை கிராஸ் சாறு.

9)அமிலத்தன்மைக்கு :

கேரட், கீரை, வெள்ளரி, துளசி மற்றும் பிற பழங்களின் சாறு. திராட்சை, இனிப்பு சுண்ணாம்பு சாறு மற்றும் பால் ஆகியவை நன்மை பயக்கும்.

10புற்றுநோய்க்கு :

கோதுமை புல் சாறு, கேரட் சாறு மற்றும் திராட்சை சாறு.

11)அழகு மற்றும் ஒளிரும் சருமத்திற்கு :

தேங்காய் நீர் சாறு காலை மற்றும் பிற்பகலில் குடிக்கவும். தேங்காய் நீரால் உங்கள் முகத்தை சுத்தம் செய்யுங்கள்.

12)கொதி மற்றும் தோல் நோய்த்தொற்றுகளுக்கு :

கேரட், கீரை, வெள்ளரி, முட்டைக்கோஸ் மற்றும் தேங்காய் சாறு.

13)பெருங்குடல் அழற்சிக்கு :

கேரட், கீரை, முட்டைக்கோஸ் மற்றும் அன்னாசிப்பழம் சாறு. 70% கேரட் சாற்றை மற்ற பழச்சாறுகளுடன் இணைக்கவும். பீட்ரூட், தேங்காய், வெள்ளரி மற்றும் முட்டைக்கோஸ் சாறு ஆகியவற்றின் கலவையும் உதவியாக இருக்கும்.

14)புண்களுக்கு :

திராட்சை, கேரட் மற்றும் முட்டைக்கோஸ் சாறு. பால் மட்டுமே உணவில் இருப்பது முக்கியம்.

15)குளிர் மற்றும் இருமலுக்கு :

முள்ளங்கி, இஞ்சி, பூண்டு, துளசி மற்றும் கேரட் சாறு. மேலும், முங் பருப்பு அல்லது பச்சை காய்கறி சூப்.

16)மூச்சுக்குழாய் அழற்சிக்கு :

பப்பாளி, கேரட், இஞ்சி, துளசி, அன்னாசி சாறு.

  • 485
  • 482
  • 491
  • 489