Beautiful birds
தவறாக எழுதியது ‘பேனாவாக'
இருந்தாலும் எல்லோரும்
காகிதத்தைக்
கிழித்துப் போடுவதைப் போல.
தவறு செய்தவவரை விட்டுவிட்டு
இன்னொருத்தரிடம்,
குற்றம் கண்டுபிடிப்பதே இங்கு பலரின்வேலை..
பெரும்பாலான மனிதர்கள்
தன்னலம் மிக்கவர்களாக வலம் வருகிறார்கள்.
நேசித்தால் பிழைகளைப் பார்ப்பதில்லை,
வெறுத்தால்
நல்லதைப் பார்ப்பதில்லை.
விருப்பத்திற்கும், நேசத்திற்கும் வேறுபாடு உண்டு.
பூக்களை விரும்பும் அன்பர்கள் பறித்துச்சூடுகிறார்கள்,
பூக்களை நேசிப்பவர்கள்
செடிக்குத் தண்ணீர் ஊற்றுகிறார்கள்.
உங்களுக்கு யாரைப் பிடிக்கின்றதோ அவர்களுடன் மகிழ்ச்சியாகப் பழகுங்கள்.
உங்களை யாருக்குப் பிடிக்கவில்லையோ,
அவர்கள் மகிழ்ச்சிக்காக
அவரை விட்டு விலகுங்கள் அமைதியாக.
புரூஸ் லீ வெறும் தற்காப்புக் கலைஞர் மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த தத்துவவாதியும் கூட. அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஐந்து முக்கியமான பாடங்கள் இதோ:
- "நீராக இரு" (Be Water, My Friend):
- தண்ணீர் ஒரு பாத்திரத்தில் ஊற்றினால் அந்த பாத்திரத்தின் வடிவத்தை எடுக்கும். அது மென்மையாகவும் இருக்கும், அதே சமயம் பாறையை உடைக்கும் வலிமையும் கொண்டது. வாழ்க்கையில் பிடிவாதமாக இருக்காமல், சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு (Adaptability) முன்னேற வேண்டும் என்பதே இதன் பொருள்.
- தேவையற்றதை நீக்கு (Eliminate the Unessential):
- "தினமும் எதையாவது சேர்ப்பது அறிவல்ல, தினமும் தேவையற்றதை குறைப்பதே அறிவு" என்பார் லீ. ஒரு கலையிலோ அல்லது வேலையிலோ சிறந்து விளங்க, மிக முக்கியமானவற்றில் மட்டும் கவனம் செலுத்தி, மற்ற கவனச்சிதறல்களைத் தவிர்க்க வேண்டும்.
- தொடர் பயிற்சி (Consistency and Practice):
- "பத்தாயிரம் உத்திகளை ஒருமுறை பயிற்சி செய்தவனைப் பார்த்து நான் பயப்படமாட்டேன்; ஆனால், ஒரே ஒரு உத்தியை பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனைப் பார்த்து பயப்படுவேன்" என்பது அவரது புகழ்பெற்ற பொன்மொழி. ஒரு விஷயத்தில் நிபுணத்துவம் பெறத் தீவிரமான பயிற்சியும், ஒருமுகப்பட்ட கவனமும் அவசியம்.
- உன்னையே அறிந்துகொள் (Self-Knowledge):
- மற்றவர்களைப் போலப் போலியாக இருக்க முயலக்கூடாது. "எப்போதும் உன்னைப் போலவே இரு, உன்னையே வெளிப்படுத்து, உன்னையே நம்பு" என்று அவர் போதித்தார். ஒருவரின் தனித்துவமே அவருடைய மிகப்பெரிய பலம்.
- செயலில் இறங்கு (Taking Action):
- "தெரிந்து வைத்திருப்பது மட்டும் போதாது, அதைச் செயல்படுத்த வேண்டும். விரும்புவது மட்டும் போதாது, அதைச் செய்ய வேண்டும்." வெறும் கனவு காண்பது பயன்தராது; அந்தக் கனவை நனவாக்க உடனடியாகச் செயலில் இறங்குவதே வெற்றிக்கான வழி.
உங்கள் அன்புக்குரிய குழந்தைகளை இக்காலங்களில் படிப்பு எனும் உயரிய பண்பொழுக்கத்திலிருந்து விலகியிருக்க வழியமைக்காதீர்கள்.
குழந்தைகளை இக்காலங்களில் ஒவ்வொருநாளிலும்
அவர்கள் அறிந்த மொழிகளைக் (தாய்மொழியும்பிறமொழியும்)
குறைந்தபட்சம்
ஒருபக்கம்_படிக்கவேண்டும்
என்று கட்டாயப்படுத்துங்கள். நாளிதழ்களாகக்கூட இருக்கலாம்.
கட்டாயப்படுத்துதல் என்பது குழந்தைகள் மீதான வன்முறைதான்.
ஆனால் இந்த அனுமதிக்கப்பட்ட வன்முறை அவர்கள்
வளரிளம்_பருவங்களை அடையும்போதும்,
அப்பருவங்களைக்கடக்கும்போதும்
கடந்தபிறகும் ,
வன்முறையின்பால் சேராது
நன்முறையில் வாழ உதவும்.
தந்தையும் ஆறுவயது மகனும் மலைச்சாரலில் நடந்து கொண்டு இருந்தனர்..
மகனை ஒரு கல் தடக்கியது. "ஒழிந்து போ..!" என்று கோபத்தில் எட்டி உதைத்தான்..
"ஒழிந்து போ..!" என்று எங்கிருந்தோ பதில் குரல் வந்தது.
அப்பா இருக்கும் தைரியத்தில்..
"எதிரில் வந்தால் உன் முகத்தை பெயர்த்துடுவேன்..!"
என்று கத்தினான்..
அதே மிரட்டலாக பதில் வந்தது.
பையன் இந்த முறை மிரண்டான்..
அப்பாவின் கையைப் பற்றிக் கொண்டான்.
"என்னைக் கவனி..!"
என்றார் அப்பா.
"உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்றுகத்தினார்..
"உன்னை மிகவும் விரும்புகிறேன்..!" என்று அதே வார்த்தைகள் திரும்பி வந்தன.
அவர் அடுத்தடுத்து அன்பாகப் பேசிய வார்த்தைகள் அதேபோல் திரும்பி வந்தன.
மகனிடம் சொன்னார்.
"இதை எதிரொலி என்பார்கள்..! ஆனால் உண்மையில் இதுதான் வாழ்க்கை..!
அன்போ..,
கோபமோ..,
துரோகமோ..,
நீ மற்றவர்களுக்கு என்ன வழங்குகிறாயோ..,
அதுதான் உனக்கு திரும்பி வரும்..! உனக்கு என்ன வேண்டுமோ அதையே மற்றவர்களுக்கும்
வழங்க கற்றுக்கொள்..!" என்றார்.
என் பேரு தமிழரசன். ஊருக்கே நான் ‘அரசு வாத்தியார்’. அரசு பள்ளிக்கூடத்துல தமிழ் வாத்தியார். 35 வருஷ சர்வீஸ். கல்யாணம் ஆகல. ஏன் தெரியுமா? என் பசங்க தான் என் குடும்பம்
1989-ல வேலைக்கு சேர்ந்தேன். கிராமத்து பள்ளிக்கூடம். ஓலை கூரை. 40 பசங்க. செருப்பு இல்ல. சீருடை கிழிசல். சோத்துக்கு வழி இல்ல. ஆனா கண்ணுல கனவு இருந்துச்சு. "சார், நான் போலீஸ் ஆவேன்", "நான் டாக்டர்", "நான் கலெக்டர்". கேட்கும் போதே நெஞ்சு நிறையும்.
சம்பளம் 1200 ரூபாய். அதுல 800 ரூபாய்க்கு பசங்களுக்கு நோட்டு, பேனா, சாக்ஸ் வாங்குவேன். மதியம் சத்துணவு பத்தலன்னா என் வீட்டுல இருந்து தயிர் சாதம் கொண்டு வந்து கொடுப்பேன். "சார் நீங்க சாப்பிடலையா?"னு கேப்பாங்க. "நீங்க சாப்பிடுறத பார்த்தாலே எனக்கு வயிறு நிறையும்"னு சொல்வேன்.
என் கிட்ட படிச்ச பையன் பேரு முத்து. ரொம்ப சுட்டி. ஆனா படிப்புல புலி. "சார், நான் ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணி உங்கள கார்ல கூட்டிட்டு போவேன்"னு சொல்வான். நான் சிரிப்பேன். "முதல்ல 10-வது பாஸ் பண்ணுடா"னு.
10-வது ரிசல்ட். முத்து ஸ்கூல் ஃபர்ஸ்ட். ஆனா +1 சேர்க்க வழியில்ல. அப்பா குடிகாரன். "படிப்பெல்லாம் வேணாம். மாடு மேய்க்க போ"னு அடிச்சாரு. முத்து ராத்திரி 12 மணிக்கு என் வீட்டு கதவை தட்டினான். கண்ணெல்லாம் வீங்கி. "சார், என்னால படிக்காம இருக்க முடியாது சார்"னு அழுதான்.
அன்னைக்கு முடிவு பண்ணினேன். இவன படிக்க வைக்கணும். என் கல்யாணத்துக்காக சேர்த்து வச்சிருந்த 50,000 ரூபாய எடுத்தேன். அவன டவுன் ஸ்கூல்ல சேர்த்தேன். ஹாஸ்டல் ஃபீஸ் நான் கட்டினேன். மாசா மாசம் மணியார்டர் அனுப்பினேன்.
"சார், எதுக்கு எனக்காக இவ்வளவு பண்றீங்க?" லெட்டர் போட்டான்.
"நீ கலெக்டர் ஆனா தான்டா என் சம்பளத்துக்கு மரியாதை"னு பதில் எழுதினேன்
12 வருஷம் ஓடிடுச்சு. நான் ரிடையர் ஆகிட்டேன். யாருக்கும் சொல்லல. சின்ன வாடகை வீடு. பென்ஷன் 18,000. பாதி காசுல இப்பவும் ஸ்கூல் பசங்களுக்கு புக் வாங்கி கொடுப்பேன். தனியா தான் இருக்கேன். யாரும் இல்ல.
கடந்த மாசம். காலைல 6 மணி. வீட்டு வாசல்ல 3 கார் வந்து நின்னுச்சு. காக்கி சட்டை போட்ட போலீஸ் இறங்கினாங்க. பயந்துட்டேன். "என்ன ஆச்சு?"னு.
கார்ல இருந்து ஒருத்தர் இறங்கினாரு. வெள்ளை வேட்டி சட்டை. கம்பீரம். நேரா வந்து என் கால்ல விழுந்தாரு. "சார்"னு.
தூக்கி நிறுத்தினேன். யாருன்னு தெரியல. "தம்பி யாருப்பா நீ?"
அவர் கண்ணுல தண்ணி. "சார், என்ன தெரியலையா? நான் தான் சார் முத்து. உங்க முத்து."
உறைஞ்சு போய்டேன். என் முத்து. கிழிஞ்ச டவுசரோட வந்த பையன். இன்னைக்கு கலெக்டர். மாவட்ட ஆட்சியர். நம்ப முடியல.
"சார், 12 வருஷம் முன்னாடி நீங்க சொன்னீங்க. கலெக்டர் ஆகி கார்ல கூட்டிட்டு போவேன்னு. இன்னைக்கு வந்திருக்கேன் சார். ஏறுங்க"னான்.
ஊரே திரண்டு வந்துடுச்சு. நான் அழுதேன். 35 வருஷமா அழுததில்ல. அன்னைக்கு அழுதேன்
கார்ல ஏத்திக்கிட்டு போனான். எங்க தெரியுமா? நான் வேலை பார்த்த அதே ஓலை கூரை பள்ளிக்கூடத்துக்கு. இப்ப அது 3 மாடி கட்டிடம். பேரு என்ன தெரியுமா? "அரசு வாத்தியார் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி".
உள்ள போனேன். 1000 பசங்க. எல்லாரும் எழுந்து நின்னாங்க. "வணக்கம் ஐயா"னு. முத்து மைக் பிடிச்சான்.
"இவர் தான் என் வாத்தியார். இவர் இல்லனா நான் இல்ல. இன்னைக்கு இந்த மாவட்டத்துல ஒரு பையன் கூட படிக்காம இருக்க கூடாது. அதுக்கு என் சொந்த சம்பளத்துல இருந்து 50 லட்சம் நிதி. இதுக்கு பேரு 'அரசு வாத்தியார் கல்வி அறக்கட்டளை'."
நான் பேச முடியாம நின்னேன். பசங்க எல்லாரும் ஓடி வந்து என் கால்ல விழுந்தாங்க. "தாத்தா"னு.
சாயங்காலம் முத்து என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போனான். பெரிய பங்களா. "இனி இது தான் உங்க வீடு சார். நீங்க தனியா இருக்க கூடாது"னான்.
"வேணாம் தம்பி. எனக்கு என் வாடகை வீடு போதும்."
"அப்போ நானும் உங்க கூட அங்க வந்து இருக்கேன்"னான் பிடிவாதமா.
இன்னைக்கு என் வாடகை வீட்டுல நான், முத்து, அவன் மனைவி, 2 குழந்தைங்க. காலைல எழுந்தா "தாத்தா காபி"னு பேரன் கொண்டு வருவான்.
35 வருஷம் நான் விதைச்ச விதை. இன்னைக்கு மரமா நிக்குது. நிழல் கொடுக்குது. கனி கொடுக்குது
கல்யாணம் பண்ணலனு வருத்தப்பட்டேன். இன்னைக்கு 1000 பிள்ளைங்க என்ன "ஐயா"னு கூப்பிடுது. ஒரு கலெக்டர் என்ன "அப்பா"னு கூப்பிடுறான்.
வாத்தியார் வேலை சம்பளத்துக்கான வேலை இல்ல. அது சமூகத்துக்கான சேவை. நீ போடுற பிச்சை இல்ல. நீ கொடுக்குற பிச்சை தான் நாளைக்கு உனக்கு சோறு போடும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வங்கி தொடர்பான உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் நல்ல மாற்றம் உண்டாகும். உபரி வருமானம் குறித்த எண்ணம் மேம்படும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். சாந்தம் நிலவும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
வெளியூர் பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கிய தொடர்பான இன்னல்கள் குறையும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்த போட்டி குறையும். மனை சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். பொறுமை காக்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சாம்பல்
மிதுனம்
தொழில் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வியில் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் சார்ந்த விஷயங்கள் சாதகமாக நிறைவு பெறும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி உற்சாகம் உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். அரசு ரீதியிலான உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். அலைச்சல் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கடகம்
ஆராய்ச்சி சிந்தனைகள் மாணவர்களுக்கு மேம்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். சக ஊழியர்களின் மறைமுக ஆதரவு ஏற்படும். குருமார்களின் ஆசீர்வாதங்கள் மனதில் தெளிவை ஏற்படுத்தும். உங்கள் மீதான வதந்திகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். ஓய்வு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
சிம்மம்
செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தநிலை ஏற்படும். வெளியூர் வர்த்தகத்தில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். தந்தை வழி உறவுகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். பயம் அகலும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கன்னி
சுபகாரிய தொடர்பான பேச்சுகளில் பெரியோர்கள் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். செயல்பாடுகளில் அனுபவம் மேம்படும். வர்த்தக முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் குறையும். பேச்சு திறமையால் தொழிலில் ஆதாயம் அடைவீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை
துலாம்
வெளியூர் பயணம் சாதகமாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். அலுவலக பணிகளில் மரியாதைகள் அதிகரிக்கும். புதிய வேலைகளில் இருந்து வந்த தாமதங்கள் குறையும். அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகன தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். குழப்பம் தீரும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
விருச்சிகம்
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை மேம்படுத்துவீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய் மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். லாபம் பெருகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
தனுசு
உறவினர்கள் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். கால்நடை வளர்ப்பு பற்றிய எண்ணங்கள் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விவசாயத் துறைகளில் மேன்மை ஏற்படும். வெற்றி கிட்டும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
புதிய முயற்சிகளில் சூழ்நிலை அறிந்து சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படவும். சமூக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். நிறைவு தரும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
கும்பம்
குடும்பத்தில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். வாகன வசதிகள் மேம்படும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். விலை உயர்ந்த பொருள்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். சமூகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருந்து நெருக்கடிகள் குறையும். சினம் தவிர்க்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
கலை சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். பிள்ளைகளின் திறமைகளை அறிவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் அலைச்சலுக்கு பின்பு சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். நன்மை நடக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை 16.4.2026
இன்று இரவு 07.31 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.
இன்று பிற்பகல் 01.00 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.
இன்று காலை 09.31 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி.
இன்று காலை 08.13 வரை பத்திரை. பின்னர் இரவு 07.31 வரை சகுனி. பிறகு சதுஷ்பாதம்.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்..
காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
தூதுவளை இலைகளைப் பொடி செய்து அல்லது கஷாயமாகக் குடிப்பது ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறலைக் குணப்படுத்த உதவும்
இஞ்சி மற்றும் தேன்:
இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து குடிப்பது நுரையீரலில் உள்ள அடைப்புகளை நீக்கி சுவாசம் சீராக உதவுகிறது.
ஆவி பிடித்தல்:
சூடான நீரில் யூகலிப்டஸ் எண்ணெய் கலந்து ஆவி பிடிப்பது மூச்சுப்பாதையில் உள்ள சளியை நீக்கி சுவாசம் இலகுவாக வழிவகுக்கும்
யோகா மற்றும் தியானம்:
பிராணாயாமம் போன்ற சுவாசப் பயிற்சிகள் நுரையீரலை வலுப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கின்றன
உடல் பருமன் கட்டுப்பாடு:
உடல் எடையைக் குறைப்பது இதயத்தின் மீதான அழுத்தத்தைக் குறைத்து மூச்சு வாங்குவதைக் கட்டுப்படுத்தும்.
தூங்கும் நிலை: தலைக்கு உயரமாக தலையணை வைத்துப் படுப்பது மூச்சு விடுவதை எளிதாக்கும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுமக்கள் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுகொடுத்து செல்லவும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம்
எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். பேராசை தவிர்க்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
கனிவான பேச்சு மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். விவசாய பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். சுய தொழிலில் லாபகரமான சூழல் ஏற்படும். பொது காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தனம் சேரும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
எதிர்பார்த்த சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். இறை வழிபாடு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வாழ்க்கை துணைவருடன் சிறுதூர பயணங்கள் சென்று வருவீர்கள். தனம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பக்தி நிறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
பணிபுரியும் இடத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். மற்றவர்கள் நம்பி முடிவு எடுப்பதில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். முன் கோபத்தினை குறைத்துக் கொள்வது தேவையற்ற பகைமையை தவிர்க்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். தேவையற்ற வாக்குறுதிகளை தவிர்க்கவும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கன்னி
துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் ஆதாயமடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபசெய்திகள் மூலம் மனமகிழ்ச்சி அடைவீர்கள். அறப்பணிகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வு கிடைக்கும். குழப்பம் தீரும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை
துலாம்
வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வர்த்தகம் செயல்களில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
விருச்சிகம்
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். அறிவியல் சார்ந்த துறைகளில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உயர்வு தரும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
தனுசு
வாக்கு சாதுரியம் மூலம் லாபங்களைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தாய்வழி உறவுகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். சோர்வு நீங்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
பத்திரிகை துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகள் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். அண்டை அயலார் ஆதரவுடன் செயல்படுவார்கள். முதுநிலை கல்வி தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். சாந்தம் நிலவும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
கும்பம்
வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளின் தயக்கமும் கால தாமதமும் நேரிடும். நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சுக்கள் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். சிந்தனைபோக்கில் கவனம் வேண்டும். நன்மை நடக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
கோபத்தை கட்டுப்படுத்தி முன்னேறுவதற்கான சிந்தனைகள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். விற்பனை துறையில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வது நல்லது. செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்கள் உருவாகும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 2 ஆம் தேதி புதன்கிழமை 15.4.2026
இன்று இரவு 08.55 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.
இன்று பிற்பகல் 01.03 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.
இன்று காலை 11.35 வரை பிராம்யம். பின்னர் ஐந்திரம்.
இன்று காலை 09.25 வரை கரசை. பின்னர் இரவு 08.55 வரை வணிசை. பிறகு பத்திரை.
இன்று காலை 06.02 வரை மரணயோகம். பின்னர் பிற்பகல் 01.33 வரை அமிர்த யோகம். பிறகு சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
நடந்து முடிந்த கனடா இடைத்தேர்தல்கள், மார்க் கார்னி அரசுக்கு பெரும்பான்மையை பெற்றுத் தந்துள்ளன.
கனடாவின் ரொரன்றோவில் இரண்டு தொகுதிகளிலும், மொன்றியலில் ஒரு தொகுதியிலும் நேற்று இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.
இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். அதாவது, கனடா நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக இருக்கவேண்டுமானால், அக்கட்சிக்கு 172 இருக்கைகள் இருக்கவேண்டும்.
மார்க் கார்னியின் லிபரல் கட்சியிடம் 171 இருக்கைகள்தான் இருந்தன.
நாடாளுமன்றத்தில், ஏதாவது ஒரு வாக்கெடுப்பில் இரண்டு பிரிவினரும் ஒரே அளவில் வாக்களித்தால், கூடுதல் ஒரு வாக்குக்காக, சபாநாயகரின் உதவியை ஆளும் கட்சி நாடவேண்டியிருக்கும். ஆக, ஆளும் லிபரல் கட்சிக்கு 173 அல்லது 174 இருக்கைகள் கிடைத்துவிட்டால், யாருடைய உதவியையும் நாடாமலே மசோதாக்களை நிறைவேற்ற முடியும்.
அதனால்தான், இந்த இடைத்தேர்தல் கனடா அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், மார்க் கார்னியின் லிபரல் கட்சி, தேர்தல் நடைபெற்ற மூன்று தொகுதிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது. ஆக, ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலே பெரும்பான்மை கிடைத்துவிடும் என்றிருந்த நிலையில், தற்போது மூன்று தொகுதிகளிலுமே வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது மார்க் கார்னியின் லிபரல் கட்சி.
கனடா அரசியல் வரலாற்றில் 24 பிரதமர்கள் நாட்டை ஆண்டுள்ளார்கள். அவர்களில் இதுவரை 13 பேருக்குத்தான் பெரும்பான்மை கிடைத்திருந்த நிலையில், தற்போது மார்க் கார்னி கனடாவின் பெரும்பான்மை பெற்ற 14ஆவது பிரதமராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவையான தமிழ்
இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு...
உதாரணமாக,
"தேர் ஓடுவது எதனால்?
தெருவை மெழுகுவது எதனால்?" என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில்,
"அச்சாணியால்" என்பது.
தேர் ஓடுவது அச்சாணியால், தெருவை மெழுகுவது
அச் - சாணியால்
என்று பதிலில் விளக்கம் கிடைக்கும்.
"நீ வசிக்கும் ஊர் எது?
உன் காலில் காயம் வந்தது எப்படி?" என்ற இரு கேள்விகளுக்கான ஒரே பதில் "செங்கல்பட்டு" என்பது.
"சாம்பார் மணப்பதேன்?
உடல் நலிவதேன்?" என்ற இரு வினாக்களுக்கு ஒரே பதில்
"பெருங் காயத்தால்" என்பது.
1. ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து; ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும்.
2. வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.
3. செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
4. கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி, மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
5. கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.
6. வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.
7. ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
8. நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் வசம்பு பொடியை சிறிதளவு தேனில் குழைத்து குழந்தைகளுக்கு தர காய்ச்சல் குணமாகும்.
9. நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் காலை மாலை வேளைகளில் சிறிதளவு வசம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து வென்னீரில் கலந்து சாப்பிட்டுவர நரம்பு தளர்ச்சி கை, கால் நடுக்கம் குணமாகும்.
10. ஆடாதொடை பொடி, நிலவேம்பு பொடி, விஷ்ணுகரந்தை பொடி, இவைகளுடன் கிருந்தை நாயகம் இலை, குப்பைமேனி இலை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து காலை மாலை குடித்துவர எப்பேர்பட்ட காய்ச்சலும் 3 நாட்களில் சரியாகி விடும். மேலும் உடல்வலியும் தீரும்.
11. சர்பகந்தா பொடியை சிறிதளவு காலை, மாலை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் நீங்கி, இரவில் தூக்கம் நன்றாக வரும். மன சோர்வு நீங்கும்.
12. பீட்ரூட் சாறுடன் வெள்ளரி சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கி எலும்பிச்சை சாற்றில் ஊற வைத்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும்.
13. பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளது. பீட்ரூட்டை சாப்பிடும் போது நைட்ரேட்டுகள் நமது உடலில் உள்ள பார்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றப்பட்டு இரத்த நாளங்களை விரிவடய செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேன்படுத்தும். மேலும் ஆண்மை சக்தியை அதிகரித்து பாலுறவில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
14. அதிமதுரம், விதை நீக்கிய கடுக்காய் தோல், திப்பிலி, மிளகு இவற்றை வறுத்து பொடித்து, தினசரி காலை மாலை நெய்யுடன் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கி கண் ஒளி பெரும்.
ஐந்து வருடங்களுக்கு முன்னால், மெரினா கடற்கரை.
"விவேக், ஒரு நிமிஷம் நில்லு. நான் சொல்றதை கேளு," என்றாள் ரம்யா.
விவேக் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான். "என்ன கேட்கணும்? உன் ஐடி கம்பெனி ஆன்சைட் போறதுக்காக என் மூணு வருஷ காதலை தியாகம் பண்ண சொல்றியா? நீ போயிட்டா நம்ம உறவு என்ன ஆகும்?"
"டிஸ்டன்ஸ் ஒரு மேட்டர் இல்லை விவேக். நான் என் கரியருக்காகப் போறேன்."
"கரியரா? அப்போ நான் உனக்கு ரெண்டாவது பட்சம்தான். ஒண்ணு உன் வேலை, இல்ல நான். இப்போவே முடிவு பண்ணு."
ரம்யா அமைதியாக அவனைப் பார்த்தாள். "முடிவு பண்ணிட்டேன் விவேக். எனக்கு என் சுயமரியாதையும் உழைப்பும் முக்கியம். 'வேலையா, காதலா'ன்னு நீ கேட்ட அந்த நிமிஷமே நம் காதல் செத்துடுச்சு. பை."
அவள் அன்று அந்த இடத்தை விட்டு வெளியேறியபோது, விவேக் பின்னால் இருந்து கத்தினான், "பார்த்துக்கலாம் ரம்யா, ஒரு நாள் நீ என்கிட்ட வந்து நிப்ப!"
ஐந்து வருடங்களுக்குப் பின்...
அதே சென்னை. ஒரு உயர்தர உணவகத்தில் ஆடம்பர ஹால். இன்று ரம்யா அழைத்திருந்தாள். விவேக் கோட்-சூட் அணிந்து பந்தாவாக வந்து நின்றான்.
"என்ன ரம்யா, திடீர்னு கூப்பிட்டு இருக்க? அன்னைக்கு அப்படிப் போயிட்டு, இப்போ என்னைத் தேடி வந்திருக்க?" என்றான் ஒரு நக்கலான சிரிப்புடன்.
"உன்னைத் தேடி வரல விவேக். பிசினஸ் விஷயமா பேச வந்தேன்."
"பிசினஸா? ஓ... இப்போ நான் பெரிய ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி வச்சிருக்கேன்னு கேள்விப்பட்டு வந்தியா? அன்னைக்கு என்னை வேண்டாம்னு சொன்னியே, இப்போ என் உதவி தேவைப்படுதா?"
ரம்யா ஒரு ஃபைலை மேசை மேல் வைத்தாள். "உன் கம்பெனி இப்போ நஷ்டத்துல ஓடிட்டு இருக்குன்னு எனக்குத் தெரியும் விவேக். மூணு மாசமா ஸ்டாஃப்க்கு சம்பளம் கொடுக்கல."
விவேக்கின் முகம் சட்டென்று மாறியது. "அது... அது ஒரு தற்காலிகமான பிரச்சனை தான். சரி, இப்போ எதுக்கு இதை பேசுற?"
"உன் கம்பெனியை என்னோட குரூப் ஆஃப் கம்பெனிஸ் வாங்கப்போகுது. இது அக்ரிமெண்ட் காப்பி."
விவேக் அதிர்ச்சியில் உறைந்தான். "என்ன? நீ வாங்குறியா? அவ்வளவு பெரிய ஆளா நீ?"
"அன்னைக்கு நீ தடுத்த அந்த வேலைதான் இன்னைக்கு என்னை இந்த இடத்துல உட்கார வச்சிருக்கு விவேக். உனக்கு ஒரு ஆஃபர் தரேன். உன் கம்பெனிக்கு நீயே சி.இ.ஓ-வா இருக்கலாம். ஆனா, இனிமே நீ எனக்கு கீழ வேலை செய்யணும். ஓகேவா?"
விவேக் பேச்சற்று அந்த அக்ரிமெண்ட்டைப் பார்த்தான்.
"என்ன விவேக், யோசிக்கிற? அன்னைக்கு 'காதலா வேலையா'ன்னு கேட்ட. இன்னைக்கு 'தன்மானமா வேலையா'ன்னு கேட்குறேன். கையெழுத்து போடுவியா இல்ல கம்பெனியை மூடுவியா?"
விவேக் மெல்ல பேனாவை எடுத்தான். அவனுக்குத் தெரியும், இது காதலில் விழுந்த தோல்வியை விடப் பெரிய அடி என்று.
ரம்யா எழுந்து கண்ணாடி அணிந்து கொண்டாள். "குட். நாளைக்கு காலையில என் கேபினுக்கு வந்து ரிப்போர்ட் பண்ணு. அப்புறம் ஒண்ணு... அன்னைக்கு மெரினால 'ஒரு நாள் நீ என்கிட்ட வந்து நிப்ப'ன்னு சொன்னியே... இப்போ நான் உட்கார்ந்து இருக்கேன், நீ என் முன்னாடி வந்து நிக்கிற. டைம் ஈஸ் பவர்ஃபுல் விவேக்!"
அவள் கார் ஏறிச் செல்ல, விவேக் தன் முன்னாள் காதலிக்கு 'எம்ப்ளாய்' ஆக மாறிய அந்த நிமிஷத்தை ஜீரணிக்க முடியாமல் அமர்ந்திருந்தான்.
1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.
2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.
4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.
5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள். உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)
6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.
7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.
8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.
10. ஆப்ரகாம் லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் குறையும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வாகன தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் மதிப்புகள் மேம்படும். சுப காரியம் தொடர்பான நற்செய்திகள் கிடைக்கும். கவனம் தேவைப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
ரிஷபம்
உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபார தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் மதிப்புகள் கிடைக்கும். பொறாமை அகலும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மிதுனம்
புதியவர்களின் அறிமுகத்தால் மாற்றங்கள் பிறக்கும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். வாகன பழுதுகளால் தாமதம் உண்டாகும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படுவது நல்லது. தந்தை வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். வாழ்வு சிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
கடகம்
வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். மறைமுகமான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் தோன்றி மறையும். மற்றவர்களை எதிர்பார்க்காமல் நீங்களே பணிகளை செய்வது நல்லது. சில விஷயங்களுக்கு பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பழைய நினைவுகள் மூலம் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். மனதில் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்தாமல் இருக்கவும். சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். எண்ணிய காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் தன்மை அறிந்து நட்பு கொள்ளவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். ஆதாயம் தரும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கன்னி
புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலை கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். தடுமாற்றமான சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்குகள் அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருள்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈர்ப்புகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய தேடல்கள் உண்டாகும். நன்மை நடக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விருச்சிகம்
திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் அமையும். பழமையான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். சலனம் தீரும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
தனுசு
குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுப காரிய விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வாகனங்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பெரிய மனிதர்களின் அறிமுகங்கள் ஏற்படும். அசதி நீங்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மகரம்
எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் ஆதாயம் அதிகரிக்கும். புதுவிதமான பொருள்களில் ஆர்வம் உண்டாகும்.சொத்து விற்பனைகள் சாதகமாக முடியும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். கருத்துக்களுக்கு மதிப்புகள் கிடைக்கும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். இன்பம் பொங்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
குழப்பமான சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். வரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும். ஆர்வம் கூடும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
ரகசியமான சில செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பொறுப்புகள் குறையும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும். யாரையும் அலட்சியப்படுத்தி செயல்படுவதை தவிர்க்கவும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். சோர்வு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 14.4.2026
இன்று இரவு 09.55 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.
இன்று பிற்பகல் 01.42 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.
இன்று பிற்பகல் 01.20 வரை சுப்பிரம். பின்னர் பிராம்யம்.
இன்று காலை 10.10 வரை கௌலவம். பின்னர் இரவு 09.55 வரை தைத்தூலம். பிறகு கரசை.
இன்று காலை 06.03 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை


