சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8225 news
  •  ·  5 friends
  • I

    9 followers

பிரதமரின் சர்வதேச தாதியர் தின வாழ்த்து

தாதியர் சேவையின் நிறுவுனரான ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் ஜனன தினத்தில் ஆண்டுதோறும் மே மாதம் 12 ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்வதில் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தாதியர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து செய்தி ஒன்றை வௌியிட்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய சுகாதார செயலணியாக தாதியர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் உலகெங்கிலும் உள்ள மக்களுக்காக செய்யும் தனித்துவமான சேவையை விசேடமாக நினைவுகூர வேண்டும்.

´எதிர்கால சுகாதார சேவை நோக்கிற்காக தாதியர்களாக குரல் கொடுப்போம்´ எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச தாதியர் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்காக பங்களிக்கும் இலங்கையின் தாதியர்களுக்கு பலமாக திகழ்வதற்கு ஒரு அரசாங்கமாக நாம் எப்போதும் தயார் என்பதையும் நினைவுபடுத்துகின்றேன்.

தாதியர் சேவையின் மதிப்பை உணர்ந்து மூன்றாண்டு தாதியர் டிப்ளோமா கல்வியை, நான்கு வருட பட்டப்படிப்பாக தரம் உயர்த்த தீர்மானித்துள்ள அரசாங்கம், தாதியர்களை சர்வதேச பயிற்சி முறைகளைத் தழுவி ஆங்கில மொழித் திறனை வளர்ப்பதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குத் தயாராவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நமது தாய்நாடு கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட தருணம் முதல் இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் முப்பத்து ஆறாயிரத்திற்கும் அதிகமான தாதி அதிகாரிகள், சிறப்பு தர தாதியர்கள், பொது சுகாதார தாதியர்கள், பொது சுகாதார தாதி அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் அனைவரதும் அதிவிசேட சேவை காரணமாக ஏராளமான மக்களுக்கு இன்று வாழ்க்கை கிடைத்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.

மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக தங்களது வாழ்க்கையின் அவதானத்தையும் பொருட்படுத்தாது கொவிட் வைரஸுடன் நேருக்கு நேர் போராடும் நீங்கள் அனைவரும் மக்களின் நெஞசங்களில் நீங்கா இடம்பிடிப்பீர்கள் என்பதில் ஐயமில்லை.

இத்தொற்று நிலைமைக்கு மத்தியில் தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளின் அர்ப்பணிப்பு வீண்போகாது இருக்க வேண்டுமாயின் நாம் எப்போதும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றேன்.

இலங்கை உள்ளிட்ட உலகம் முழுவதுமுள்ள வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தொற்றாளர்கள் மற்றும் பிற அனைத்து நோயாளர்களுக்காக அவர்கள் மேற்கொள்ளும் சேவையை முன்னரிலும் பார்க்க மேலும் சிறப்பாக முன்னெடுத்து செல்வதற்கான பலமும் தைரியமும் கிடைக்க பிரார்த்திக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

  • 499
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads