சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  2949 news
  •  ·  1 friends
  • 2 followers

தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் ஆட்சியை அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து நிர்வகிக்க வேண்டும் - சுரேஸ் பிறேமச்சந்திரன்

தமிழர் நிலத்தை தமிழரே ஆட்சி செய்ய வேண்டும் என்ற தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் ஆட்சியை அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து நிர்வகிக்க வேண்டும் என்ற தீர்ப்பையே தமிழ் மக்கள் உள்ளூர் அதிகார சபை தேர்தலின் மூலம் வழங்கியுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்பாணத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில் -

மக்கள் வழங்கிய தீர்ப்பின்படி ஆட்சி அதிகாரத்தை தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக ஓரணியில் இணைந்து செயற்படுத்துவது அவசியம்.

இதேநேரம் தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களை எடுத்துக் கொண்டாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை அவர்களுக்கு இருக்கவில்லை.

இதனால் தமிழ் மக்களின் நலன்கருதி ஏனைய தரப்பினருக்கும் விட்டுக்கொடுப்புகளுடன்செயற்பட தமிழ் தரப்புகள் தயாராக வேண்டும்.

இதுவே மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.

இதேநேரம் தற்போது  பெரிய, சிறிய என்ற நிலையில் எந்தவொரு கட்சியும் இல்லை.

அனைத்தும் சமமான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன.

தவறுகள் இனிமேல் இழைக்கப்படகூடாது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, போன்ற கட்சிகள் தேசியத்தை வைத்தே தேர்தலை எதிர்கொண்டனர். இந்த கட்சிகள் அதிகபடியான ஆசனங்களை பெற்று இருக்கின்றன.

இலங்கை தமிழரசுக் கட்சி வடக்கு,கிழக்கு மாகாணத்தில் 307 ஆசனங்களையும்,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 106 ஆசனங்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி 80 ஆசனங்களும் பெற்றுள்ளது. எனவே ஏறத்தாழ 500 ஆசனங்களை கூட்டாக பெற்றுள்ளனர்.

மக்களிடம் வைத்தகோரிக்கை மக்கள் ஏற்றுக்கொண்டு

ஒவ்வொரு கட்சிக்கும் அதிக படியான ஆசனங்களை வழங்கியிருக்கின்றனர்.

மக்கள் கொடுத்த ஆணைக்கு ஏற்ப இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஆகிய கட்சியினர் கூட்டாக பேசி ஆட்சி அதிகாரங்களை தமிழ் மக்கள் நிர்வாகத் திறனைகளை ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்பது எமது நிலைப்பாடு.

மாகாண சபையினை நடத்தமுடியாதவர்கள், நிதியினை திருப்பி அனுப்பியவர்கள்,நிர்வாகத்தினை செயற்படுத்த முடியாதவர்கள் என பல்வேறுபட்ட எதிர்ப் பிரசாரங்கள்

பல்வேறு தமிழ் தரப்பினர்களிடம் இருக்கின்றது.

தேசிய மக்கள் சக்தி வடக்கு,கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கமுடியாத சூழ் நிலையில் தான் உள்ளனர்.

எனவே தமிழ் மக்களின் அதிகாரம், எதிர்காலம், உரிமைகள் என்பவற்றை புறம்தள்ளி நடக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

மக்கள் ஆசனங்களை அனைவருக்கும் பகிர்ந்தளித்துள்ளனர். பேச்சு வார்த்தைகள் சரியாக நடைபெறுமாக இருந்தால் ஓர் அணியில் நின்று ஆட்சி அதிகாரங்களில் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் இருக்காது சிறப்பாக அமையும் என்றார்

000

  • 115
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads