சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8225 news
  •  ·  5 friends
  • I

    9 followers

நாளை முதல் 2 வாரம் முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து நாளை (10-ந் தேதி) முதல் 24-ந் தேதி வரை 2 வாரம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவை தமிழக அரசு நேற்று காலையில் பிறப்பித்தது. அப்போது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறந்து வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதற்கு முன்பு வரை அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளை மட்டும் திறந்திருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழக அரசின் உத்தரவை அடுத்து நேற்று காலை 10 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் அவசரம் அவசரமாக திறக்கப்பட்டன.

குறிப்பாக பல மாடிகளை கொண்ட ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளும் முழுமையாக செயல்படத் தொடங்கின.

முதலில் காலை 11 மணி வரையில் மட்டுமே திறப்பதற்கு முடிவு செய்திருந்த கடை உரிமையாளர்கள் முழு நாளும் கடைகளை திறந்து வைக்க ஊழியர்களை அறிவுறுத்தினார்கள்.

அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு இருப்பதால் மொத்தமாக ஒவ்வொரு வாரமும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குபவர்கள் நேற்று பெரிய மளிகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் அதிக அளவில் கூடினார்கள்.

வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை அதிக அளவில் வாங்கினார்கள். இதனால் சூப்பர்மார்க்கெட்டுகள் போன்ற பெரிய கடைகளில் மளிகை பொருட்கள் அதிக அளவில் விற்று தீர்ந்தன. இதனால் நேற்று மாலையில் அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கடந்த சில வாரங்களாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் இன்று ஞாயிற்றுக் கிழமை அனைத்து கடைகளையும் இரவ 9 மணிவரையில் அனைத்து கடைகளையும் திறந்து வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து இன்று அனைத்து வணிக பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

முழு ஊரடங்கு காலத்தில் இறைச்சிக்கடைகள் தினமும் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் அனைத்து இறைச்சிக் கடைகளிலும், மீன் மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சூப்பர் மார்க்கெட்டுகள், பெரிய ஜவுளிக்கடைகள் ஆகியவற்றிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

தங்களது வீடுகளில் அடுத்த 2 வாரங்களில் நடைபெற உள்ள பிறந்தநாள் மற்றும் திருமண விழாக்களுக்கு தேவையான பொருட்களை பொது மக்கள் நேற்றும் இன்றும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கியதை காண முடிந்தது.

இதனால் கடைகளில் பரிசுப்பொருட்கள், துணிவகைகள் ஆகியவையும் அதிக அளவில் விற்பனையானது.

தமிழக அரசு அறிவித்த தளர்வு காரணமாக சில வாரங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை களைகட்டியது. சென்னை உள்பட அனைத்து மாவட் டங்களிலும் வார சந்தைகள், மார்க்கெட்டுகளிலும் மக்கள் அதிகளவில் திரண்டனர்.

இதனால் ஞாயிற்றுக் கிழமைகளில் எப்போதும் போல மக்கள் அதிகளவில் வெளியில் வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.

சலூன் கடைகளும் நாளை முதல் 2 வாரங்களுக்கு மூடப்ப ட்டிருக்கும் என்பதால் அங்கும் கூட்டம் அதிகமாக இருந்தது. பல இடங்களில் முடிவு வெட்டுவதற்காக நீண்ட வரிசையில் இளைஞர்கள் காத்திருந்ததை காண முடிந்தது.

  • 543
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads