சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  7519 news
  •  ·  5 friends
  • I

    9 followers

அரசாங்கம் மேற்கொண்டு வரும் புதிய பொருளாதார சீர்திருத்தங்களின் பிரதிபலன்கள் இன்னும் சில வருடங்களில் மக்களுக்கு கிடைக்கும் - ஜனாதிபதி

புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றும், கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் போல எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

ஏனைய அரசியல்வாதிகள் பொறுப்பேற்கத் தயங்கிய நாட்டையே தான் பொறுப்பேற்றதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சிலர் தமது அரசியல் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்தித்த போதும், தான் நாட்டின் எதிர்காலத்தை பற்றியே சிந்தித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

பொலன்னறுவையில் நேற்று (23) நடைபெற்ற “யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம்” உடனான சிநேகபூர்வ கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

“ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்” என்ற இச்சந்திப்பில் நாட்டின் எதிர்காலம் மற்றும் தூரநோக்குக் குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, இளையோரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கம் மேற்கொண்டு வரும் புதிய பொருளாதார சீர்திருத்தங்களின் பிரதிபலன்கள் இன்னும் சில வருடங்களில் மக்களுக்கு கிடைக்கும் என்றும் எனவே, தங்களினதும் நாட்டினதும் எதிர்காலத்திற்கான சிறந்த வழி எதுவென்பதை நாட்டின் இளைஞர்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“சரிவடைந்திருந்த நாட்டையே நான் பொறுப்பேற்றேன். அவ்வாறான நிலையில் அரசியல்வாதிகள் நாட்டைப் பொறுப்பேற்கத் தயங்கினர். நான் பொறுப்பேற்காவிட்டால் நாட்டின் நிலைமை என்னவாகும் என்பதை சிந்தித்தேன். அந்த நேரத்தில் நாட்டை பொறுப்பேற்றால் அரசியல் நலன்களை இழக்க நேரிடுமென பலரும் நினைத்தனர். அவர்கள் தங்களைப் பற்றி மட்டும் சிந்தித்தனர். நான் நாட்டை பொறுப்பேற்காவிடின் எமக்கான நாடொன்று எஞ்சியிருக்குமா என்பதையே நான் சிந்தித்தேன்.

பாராளுமன்றத்தில் தனியொரு ஆசனம் மட்டுமே இருந்தது. எனக்கு இருந்த ஒரே பிரச்சினை அதுவாகவே இருந்தது. அதற்கு முன்னதாக நான் டிசம்பர் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் கலந்துரையாடியிருந்தேன். உலக வங்கியுடனும் கலந்தாலோசித்தேன்.

அதுபற்றி முன்னாள் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப் படுத்துமாறு கூறினேன். அத்துடன் கடந்த தேர்தல் சமயத்தில் நாட்டில் பணமில்லை என்பதை ஐ.தே.க அறவித்தது. குறைந்தபட்சம் 3000 மில்லியன் டொலர்களையாவது கையிருப்பில் வைத்திருக்க வேண்டியது அவசியமென கூறியது. அப்போது மக்கள் எமக்கு வாக்களிக்க வில்லை. ஆனால் 2021 ஆம் ஆண்டில் நாம் கூறியவை உண்மையாக நிகழ்ந்தன.

அத்தகைய நிலையில் நான் நாட்டைக் பொறுப்பேற்றேன். நான் நாட்டைக் பொறுப் பேற்றுக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? நாட்டின் பொருளாதாரம் முழுமையாக முடங்கிப் போயிருக்கும். சரிவடைந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை நாடினோம். தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ள நிலையில், எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம்.

இந்தக் கலந்துரையாடல்களின் பின்னர் எமது நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு அந்த நாடுகளின் உதவிகள் கிட்டும். அதனால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடாது. நாம் இன்னும் இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தையே கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு வருடத்திலும் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக காணப்படுகிறது. அந்த இடைவௌியை சரிசெய்ய மீண்டும் கடன்களைப் பெறுகிறோம். இந்நிலை தொடர்ந்தால் இன்னும் 10 வருடங்களில் மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிவிடுவோம்.

நீங்கள் 27 வயது இளைஞராக இருந்தால் உங்களுக்கு 37 வயதாகும் போது மீண்டும் இதே போன்ற பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நீங்கள் தயாரா என்று கேட்க விரும்புகிறேன். எரிபொருள் கொள்வனவு செய்ய பணம் இல்லாத, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நாட்டை ஏற்க அன்று யாராவது இருந்தார்களா? இந்த பொருளாதார நெருக்கடியை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுச் செல்லாமல் இருப்பது அனைவரினதும் பொறுப்பாகும். அதற்காக அர்பணிக்க வேண்டும். விரைவில் நாம் பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தில் இருந்து ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு நாம் செல்ல வேண்டும்.

அதற்கு நகரங்களில் மாத்திரமின்றி கிராமங்களினதும் பொருளாதாரத்தைப் பலப்படுத்த வேண்டும். வரவு செலவு திட்டத்தை சரியாக வரையறுக்க வேண்டும். அரசாங்கத்தின் திட்டங்கள் சரியாக செயற்படுத்தப்பட்டால் 2035 ஆம் ஆண்டுக்குள் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கி நகர முடியும். அதன் பின்னர் துரித பொருளாதார அபிவிருத்தியை எட்ட முடியும்.

அத்துடன் வருடாந்தம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 25 – 50 இலட்சம் வரையில் அதிகரிக்க வேண்டும். மேலும், அதிக பணம் செலவிடும் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர வேண்டும்.

பொலன்னறுவை வரலாற்று முக்கியமான நகரத்தை சுற்றுலாப் பயணிகளுக்காக இரவும் பகலும் திறந்துவிடலாம். நமது கலாச்சார அழகுகளையும் நவீன நடனங்கள் மற்றும் உள்ளூர் உணவு மற்றும் பானங்களுடன் இணைத்து சுற்றுலாத் திட்டங்களைத் தயாரிக்க முடியும். இந்தச் செயற்பாடுகள் அனைத்தையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

எனவே, நாடு எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை இளைஞர்கள் தீர்மானிக்க வேண்டும். உங்கள் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். உங்கள் எதிர்காலம் தொடர்பில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

  • 488
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads