சினிமா செய்திகள்
அஜித்குமாரின் விடாமுயற்சி முழுத் திரைப்படமும் இணையத்தில் கசிந்துள்ளது.
அஜித்குமாரின் சமீபத்திய படம் விடாமுயற்சி பைரசிக்கு இரையாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களில், முழு திரைப்படமும் பல திருட்டு வலைத்தளங்
நாகேஷ்
தன் முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லை நாகேஷ்.நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்கத்திற்குப் போய்விட்
" கவியரசரின் " பதிவு
சமீபத்தில் நண்பர்கள் சந்திப்பில் அருமை நண்பர் கேள்வி கேட்கநான் அளித்த பதில் உங்கள் முன் இதோ...வீரம் என்றால் என்ன என்று நண்பன் ஒருநாள் கேட்டான்..கட்டபொ
கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித
விசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்
விசுவின் படங்களை பொறுத்தவரைக்கும் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற் போல் தன் படங்களில் காட்டியிருப்பார் விசு. மிடில் கிளாஸ் வாழ்க
தலை குனிந்து வணங்கினார் கமல்ஹாசன்
இந்தியத் திரைத் துறையில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களை இயக்கிய இவர், தமிழ், இந்தி, மலை
நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீர
வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்ட
Ads
 ·   ·  8119 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ரஷ்ய படையினரின் தாக்குதலில் உக்ரைன் இராணுவத்தில் கடமையாற்றிய 3 இலங்கையர்கள் பலி

உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றிய மூன்று இலங்கையர்கள் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நேற்று நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் மற்றும் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இலங்கையை சேர்ந்த கூலிப்படை உறுப்பினரான கெப்டன் ரென்டீஸ் எனப்படும் அன்ரூ ரனிஸ் ஹேவகே தமது தாக்குதலின்போது கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய இராணுவ உறுப்பினர்களின் Telegram கணக்கில் இன்று முற்பகல் தகவல் பகிரப்பட்டிருந்தது.

உக்ரைனுக்காக போரிட்ட மேலும் இரண்டு இலங்கை கூலிப்படை உறுப்பினர்களும் தமது தாக்குதலில் கொல்லப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. உயிரிழந்த உக்ரைன் சிப்பாய்களின் சடலங்களை வௌியில் எடுத்துச்செல்ல இவர்கள் மூவரும் முயற்சித்தபோது, தாம் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்ததாக ரஷ்ய இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

உக்ரைனில் உள்ள பக்முத் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கெப்டன் டென்டீஸ் என்ற பெயரில் உக்ரைனுக்குள் பிரபலமடைந்திருந்த அன்ரூ ரனிஸ் ஹேவகே இலங்கை காலாற்படையின் அதிகாரியாக செயற்பட்டுள்ளதை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியது.

இவர் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி லெப்டினன்டாக இராணுவ சேவையில் இருந்து விலகியுள்ளதுடன், அன்றைய நாளில் அவர் உத்தியோகபூர்வ பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொழிலுக்கு சென்ற அவர் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உக்ரைனின் சர்வதேச இராணுவ லீக் எனும் பிரிவில் இணைந்து செயற்படத் தொடங்கியிருந்தார்.

ரஷ்யாவுடன் நடைபெறுகின்ற யுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy வௌிநாட்டவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததுடன், அவர்கள் அதற்காக சர்வதேச இராணுவ லீக்கை ஸ்தாபித்தனர். உக்ரைன் - ரஷ்ய யுத்தத்தில் முன்னரங்க பாதுகாப்பு வலய கட்டளை அதிகாரியாக ரனீஸ் சேவையாற்றியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ரனீஸ் ஹேவகே உக்ரைனில் வௌிப்படுத்திய திறமைகள் காரணமாக உக்ரைன் ஜனாதிபதி அவருக்கு இராணுவ பதவி நிலை அதிகாரியாக பதவி உயர்வு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த, உக்ரைன் இராணுவத்தில் இணைந்து செயற்பட்டிருந்த ஏனைய இரண்டு இலங்கையர்கள் தொடர்பாகவும் இன்று (06) மாலை வரை தகவல்கள் வௌியாகவில்லை.

  • 391
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads