Category:
Created:
Updated:
சீன கப்பல் இலங்கை வருவதற்கான அனுமதியை இலங்கை வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஏஎன்ஐக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சீனாவின் கப்பல் இலங்கையில் தரித்துநிற்பதற்கு இலங்கை அனுமதிவழங்கவில்லை என தெரிவித்துள்ள அலிசப்ரி இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகள் இலங்கையின் பாதுகாப்பு கரிசனைகள் என மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதி சியான் ஆறு என்ற சீனா கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வரவுள்ளமை மற்றும் இந்தியாவின் கரிசனைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அலி சப்ரி வெளிநாட்டு கப்பல்கள் விமானங்கள் இலங்கை வருவது குறித்து இலங்கையிடம் நிலையான இயக்க முறை உள்ளது இது குறித்து இந்தியா உட்பட நேசநாடுகளுடன் கலந்தாலோசித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.