சினிமா செய்திகள்
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
மடோனா செபாஸ்டியனின் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நட
நடிகர் மயில்சாமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி பென்ஸ் காரை தொட்டு பார்த்ததற்காக “அந்த” ஆளு அடிச்சாரு.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர்மறைந்த மயில்சாமி நிகழ்ச்சி ஒன்றுக்கு
நடிகர் அரவிந்த்சாமி பெற்ற புத்தக அனுபவம்
அரவிந்த்சாமி ஒரு நிறுவனத்தின் இயக்குநர். சினிமா நடிகர். அவருடைய அனுபவத்திலிருந்து, பணம் குறித்து தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்தபோது, The Psychology O
வேட்டையன் படத்தில் நடிக்க ராணா வாங்கிய சம்பளம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தை லைகா தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் ரஜ
‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. 
பைக் ரைடில் சாதனைக்கு மேல் சாதனை செய்யும் தல அஜித்
அஜித்குமாருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபமாக பொறுமையாகவே படங்கள் நடித்து வருகிறார். அதேசமயம் அடிக்கடி உலகளாவிய பைக் பயணங்களையும் மேற
கைகோர்க்கும் ஜீவா - அர்ஜூன்
தமிழ் சினிமாவில் ஜீவா மற்றும் அர்ஜூன் இணைந்து அகத்தியா என்றதொரு புதிய படத்தில் நடிக்கின்றனர்.தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜ
'ஒன்ஸ்மோர்' படம் பற்றிய தகவல்
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப
இந்தியாவின் சுதந்திரத்தை முதல்முறை "ஆல் இந்தியா ரேடியோவில்" அறிவித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?
போராட்டக்காரர்கள் ஏராளம், வீழ்ந்தவர்கள் ஏராளம், தொடர்ந்து போரிட்டவர்கள் ஏராளம், எல்லாம் எதற்காக 'சுதந்திர இந்தியா' என்ற வார்த்தைகளுக்காக. அந்த வார்த்த
தொடங்கியது வேட்டையன் பட புக்கிங்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்
பா.ரஞ்சித், மாரி செல்வராஜின் கதைகள் சாதிய மோதலை ஏற்படுத்துகின்றன"- பாடலாசிரியர் குருமூர்த்தி குற்றச்சாட்டு
திருவண்ணாமலையில் கலன் திரைப்பட போஸ்டரை பட குழுவினர் இன்று வெளியிட்டனர். இந்த படத்தை வீர முருகன் இயக்குயுள்ளார், ராம லட்சுமி நிறுவனம் மற்றும் குருமூர்த
Ads
 ·   ·  7979 news
  •  ·  5 friends
  • I

    9 followers

அரசியலமைப்பை மீறியிருப்பின் சட்ட நடவடிக்கை எடுங்கள் ; மத்திய வங்கியின் ஆளுநர் அறிவிப்பு

இலங்கையை கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடன் செலுத்த முடியாத நாடாக அறிவித்தமை அரசியலமைப்பை மீறும் செயல்பாடு என பல்வேறு தரப்பினரும் விமர்சனங்கள் முன்வைக்கின்றனர். அவ்வாறு மத்திய வங்கியோ அல்லது அப்போதைய அரசாங்கத் தலைவர்களோ அரச அதிகாரிகளோ அரசியலமைப்பை மீறியிருந்தால் அதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். அந்த நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக இருக்கின்றேன் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

எந்த ஒரு விடயத்தையும் வன்முறைகளினால் தீர்க்க முடியாது. மாறாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். ஆனால் கடந்த காலங்களில் துரதிஷ்டவசமாக சில மக்கள் பிரதிநிதிகள் வன்முறையை ஊக்குவிக்கும் கருத்துக்களை வெளியிட்டனர். எனவே, பிரதிநிதிகளை தெரிவு செய்யும்போது மக்கள் இந்த விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


பொருளாதார ஊடகவியலாளர் ஷ்யாம் நுவன் கனேவத்த எழுதிய பொருளாதாரக் கொலை என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று திங்கட்கிழமை (25) கொழும்பு பண்டநாயக்க ஞாபகப்படுத்த சர்வதேச மாநாடு மண்டப வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டார்.


நிகழ்வில் கல்விமான்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மத்திய வங்கியின் முன்னாள் அதிகாரிகள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள். சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.


‘’ 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையை வங்குரோத்து நாடாக அதாவது சர்வதேச கடன்களை செலுத்த முடியாத நாடாக பிரகடனப்படுத்தியமையை அரசியலமைப்பு மீறும் செயற்பாடு என பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த விடயத்தில் எனக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அவ்வாறு நாங்கள் அரசியலமைப்பை மீறி இருந்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் பிரதிநிதிகள் ஆகிய நாங்கள் என யாராவது இந்த விடயத்தில் அரசியலமைப்பை மீறி இருந்தால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்ல முடியும். சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு எந்தவொரு சட்ட நடவடிக்கைக்கும் நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன். எமது மத்திய வங்கி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். திறைசேரி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று நான் நம்புகிறேன் ‘’ என்று மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

  • 241
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads