சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8216 news
  •  ·  5 friends
  • I

    9 followers

அரசியலமைப்பை மீறியிருப்பின் சட்ட நடவடிக்கை எடுங்கள் ; மத்திய வங்கியின் ஆளுநர் அறிவிப்பு

இலங்கையை கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடன் செலுத்த முடியாத நாடாக அறிவித்தமை அரசியலமைப்பை மீறும் செயல்பாடு என பல்வேறு தரப்பினரும் விமர்சனங்கள் முன்வைக்கின்றனர். அவ்வாறு மத்திய வங்கியோ அல்லது அப்போதைய அரசாங்கத் தலைவர்களோ அரச அதிகாரிகளோ அரசியலமைப்பை மீறியிருந்தால் அதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். அந்த நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக இருக்கின்றேன் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

எந்த ஒரு விடயத்தையும் வன்முறைகளினால் தீர்க்க முடியாது. மாறாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். ஆனால் கடந்த காலங்களில் துரதிஷ்டவசமாக சில மக்கள் பிரதிநிதிகள் வன்முறையை ஊக்குவிக்கும் கருத்துக்களை வெளியிட்டனர். எனவே, பிரதிநிதிகளை தெரிவு செய்யும்போது மக்கள் இந்த விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


பொருளாதார ஊடகவியலாளர் ஷ்யாம் நுவன் கனேவத்த எழுதிய பொருளாதாரக் கொலை என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று திங்கட்கிழமை (25) கொழும்பு பண்டநாயக்க ஞாபகப்படுத்த சர்வதேச மாநாடு மண்டப வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டார்.


நிகழ்வில் கல்விமான்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மத்திய வங்கியின் முன்னாள் அதிகாரிகள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள். சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.


‘’ 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையை வங்குரோத்து நாடாக அதாவது சர்வதேச கடன்களை செலுத்த முடியாத நாடாக பிரகடனப்படுத்தியமையை அரசியலமைப்பு மீறும் செயற்பாடு என பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த விடயத்தில் எனக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அவ்வாறு நாங்கள் அரசியலமைப்பை மீறி இருந்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் பிரதிநிதிகள் ஆகிய நாங்கள் என யாராவது இந்த விடயத்தில் அரசியலமைப்பை மீறி இருந்தால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்ல முடியும். சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு எந்தவொரு சட்ட நடவடிக்கைக்கும் நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன். எமது மத்திய வங்கி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். திறைசேரி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று நான் நம்புகிறேன் ‘’ என்று மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

  • 315
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads