Category:
Created:
Updated:
தெரணியகல, உடமாலிபொட பிரதேசத்தில் தீயினால் எரிந்து நாசமான சனுகி விஹங்கா என்ற சிறுமிக்கு புதிய வீடொன்றை நிர்மாணிக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் செவன நிதியிலிருந்து ஏழரை இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கேகாலை மாவட்ட முகாமையாளரிடம் அறிக்கை பெற்றுள்ளதாக அதன் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி கூறுகிறார். அதன்படி, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சிறுமிக்கு புதிய வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.