சினிமா செய்திகள்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
Ads
 ·   ·  7914 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தப்பியோடியவர்களுக்கு நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பேச எந்த உரிமையும் இல்லை - செஹான் சேமசிங்க

கடந்த கால ஆட்சியில் நடந்ததை விடுத்து தற்போதைய ஆட்சியில் ஏதாவது குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் அது தொடர்பில்  கவனம் செலுத்த நாம் தயார். 

மாறாக பொறுப்பற்று, சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாது தப்பியோடிய தரப்பினர் தற்போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான  வினாக்கள் வேளையில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் எதிர்க்கட்சி எம்பி சமிந்த விஜேசிறி  எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

சமிந்த விஜேசிறி எம் பி தமது கேள்வியின் போது, கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மத்திய வங்கியானது எந்த அமைச்சின் கீழ் இயங்கியது என்றும் அந்த சந்தர்ப்பத்தில் அந்த அமைச்சுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர்  மற்றும் செயலாளரின் பெயரை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அது தொடர்பில் தொடர்ந்தும் பதிலளித்த இராஜாங்க அமைச்சர், சபாநாயகரினால் தெரிவிக்கப்படும் விதிமுறைகளுக்கு இணங்க நாம் சபையில் செயற்படுவதற்குத் தயார். ஆனால் பிணைமுறி மோசடி நல்லாட்சி அரசாங்கத்தில் நடைபெற்ற போது அதனைப் பாதுகாத்து, தற்போது எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு சபையில் அது தொடர்பில் தெளிவில்லாத கேள்விகள் எழுப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்த சம்பவம் இடம்பெற்ற போது அதற்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் யார் என அவர் கேள்வி கேட்டுள்ளார். அதனை அவர் மறந்துவிட்டாரா என நான் கேட்க விரும்புகின்றேன். அத்துடன் கடந்த கால ஆட்சியில் நடந்ததை விடுத்து தற்போதைய ஆட்சியில் ஏதாவது குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் அது தொடர்பில்  கவனம் செலுத்த நாம் தயார். மாறாக. பொறுப்பற்று, சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாது தப்பியோடிய தரப்பினர் தற்போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது 

அவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்து அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தயார்.  திருடர்கள் தொடர்பில்  பேசக்கூடிய உரிமை எதிர்க்கட்சியினருக்கு உள்ளதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. எனினும் இந்தப் பிரச்சினை தற்போது எழுப்பப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நாட்டில் இருந்த நிலைமை மற்றும் தற்போதுள்ள நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு பெரும் ஆதங்கம் உள்ளது என்பதை சபையில் குறிப்பிட்டாக வேண்டும் என்றார்.

  • 226
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads