சினிமா செய்திகள்
உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜியை படித்து வந்தார் என்பதும், அவருடைய அடுத்த படத்தில் ஏஐ டெக்னாலஜி ச
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
Ads
 ·   ·  8182 news
  •  ·  5 friends
  • I

    9 followers

முறை தவறிய உறவால் பிஞ்சு குழந்தை படுகொலை

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷகீனா பேகம். 22 வயதான இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரகடம் பகுதியில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுமன் என்ற 25 வயது வாலிபருக்குமிடயே காதல் மலர்ந்திருக்கிறது.

ஷகீனா பேகத்தை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரிடம் நெருக்கமாக இருந்திருக்கிறார் சுமன். இதன் காரணமாக ஷகீனா பேகம் கர்ப்பமடைந்துள்ளார்.

கர்ப்பமடைந்த விஷயத்தை காதலன் சுமனிடம் தெரிவித்திருக்கிறார் ஷகீனா பேகம். ஆனாலும் சுமன், பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என காலம் கடத்தி வந்திருக்கிறார். ஷகீனா பேகத்திடம் பேசுவதை தவிர்த்து வந்த அவர் தமிழகத்திலிருந்து தலைமறைவாகி இருக்கிறார்.

தனது காதலனை தேடி அசாம் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார். அங்கும் சுமனை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் மீண்டும் தமிழகத்திற்கு வந்து செங்கல்பட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கி பணியாற்றி வந்திருக்கிறார் ஷகீனா.

விடுதியில் உள்ள அனைவரும் வேலைக்குச் சென்ற நிலையில் தனியாக இருந்திருக்கிறார் ஷகீனா. அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்படவே விடுதியில் யாரும் இல்லாததால் தனக்குத்தானே பிரசவம் பார்திருக்கிறார்.

அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. பிரசவத்தின் போது ஏற்பட்ட உதிரப் போக்கை தொடர்ந்து மயங்கி விழுந்துள்ளார்.

குழந்தையின் அழு குரல் கேட்கவே சுயநினைவிற்கு திரும்பிய ஷகீனா என்ன செய்வது என்று தெரியாமல் தனது குழந்தையை தூக்கி அருகே உள்ள குளத்தில் வீசி இருக்கிறார்.

விடுதியில் வேலைக்குச் சென்றவர்கள் மாலை திரும்பி வந்ததும் தனக்கு நடந்த விஷயங்களை அவர்களிடம் விவரித்து இருக்கிறார் ஷகீனா. குளத்தில் வீசப்பட்ட குழந்தையை மீட்டு பரிசோதித்துப் பார்த்தபோது குழந்தை இறந்து விட்டது.

இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு ஷகீனா பேகத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதிக ரத்தப்போக்கு காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஷகினா பேகத்தின் அனுமதியுடன் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஷகீனா கொடுத்த புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள அவரது காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குழந்தை கொல்லப்பட்டது தொடர்பாக தாய் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • 1428
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads