சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போனார் நடிகர் ஸ்ரீ
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்,
ரெட்ரோ … தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித்
அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ
கைதி படத்தில் கொடூரமான வில்லனாக நடித்தன மூலம் ரசிகர்கள் மனதில் அர்ஜுன் தாஸ், அதன் பின்னர் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அ
ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்
பாலிவுட் திரைப்படமான ‘ரெய்டு 2’ படத்தில் தமன்னா ஒரு தனி பாடலுக்கு கிளாமரான நடனத்துடன் கலக்க உள்ளார். இந்த பாடலுக்கான புரோமோ வீடியோவை அவர் தனது சமூக வல
வைரலாகும் ஒடேலா 2 டிரெய்லர்
அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஒடேலா 2 (Odela 2) திரைப்படம், ரசிகர்களை கவரும் வகையில் தயாராக உள்ளது. அசோக் தேஜா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில்
மேடையில் உண்மையை போட்டுடைத்தார் நடிகர் சிவகுமார்
சில உண்மைகளை அந்த மேடையில் படார் படார் என போட்டு உடைத்தார் நடிகர் சிவகுமார்.அது கதாசிரியர் கலைஞானம் அவர்களுக்கான பாராட்டு விழா.2019 ல் நடந்தது.சிவகுமா
நடிகர் வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை
ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், வடிவேலு தனக்கு இன்னும் ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் தரவேண்டுமென்றும், அவரது படத்தில் நடிக்க வடிவேலு சம்மதித்தால் நன்றாக
கமல்ஹாசன் செய்த உதவி - இயக்குநர் மகேந்திரன்
"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது."கமல் செய்த உதவி சிறியதுதான். ஆனால் இயக்குநர் மகேந்திரன் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற
Good Bad Ugly - சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து தயாராகியுள்ள படம் குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜ
Ads
 ·   ·  8170 news
  •  ·  5 friends
  • I

    9 followers

முறை தவறிய உறவால் பிஞ்சு குழந்தை படுகொலை

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷகீனா பேகம். 22 வயதான இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரகடம் பகுதியில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுமன் என்ற 25 வயது வாலிபருக்குமிடயே காதல் மலர்ந்திருக்கிறது.

ஷகீனா பேகத்தை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரிடம் நெருக்கமாக இருந்திருக்கிறார் சுமன். இதன் காரணமாக ஷகீனா பேகம் கர்ப்பமடைந்துள்ளார்.

கர்ப்பமடைந்த விஷயத்தை காதலன் சுமனிடம் தெரிவித்திருக்கிறார் ஷகீனா பேகம். ஆனாலும் சுமன், பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என காலம் கடத்தி வந்திருக்கிறார். ஷகீனா பேகத்திடம் பேசுவதை தவிர்த்து வந்த அவர் தமிழகத்திலிருந்து தலைமறைவாகி இருக்கிறார்.

தனது காதலனை தேடி அசாம் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார். அங்கும் சுமனை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் மீண்டும் தமிழகத்திற்கு வந்து செங்கல்பட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கி பணியாற்றி வந்திருக்கிறார் ஷகீனா.

விடுதியில் உள்ள அனைவரும் வேலைக்குச் சென்ற நிலையில் தனியாக இருந்திருக்கிறார் ஷகீனா. அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்படவே விடுதியில் யாரும் இல்லாததால் தனக்குத்தானே பிரசவம் பார்திருக்கிறார்.

அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. பிரசவத்தின் போது ஏற்பட்ட உதிரப் போக்கை தொடர்ந்து மயங்கி விழுந்துள்ளார்.

குழந்தையின் அழு குரல் கேட்கவே சுயநினைவிற்கு திரும்பிய ஷகீனா என்ன செய்வது என்று தெரியாமல் தனது குழந்தையை தூக்கி அருகே உள்ள குளத்தில் வீசி இருக்கிறார்.

விடுதியில் வேலைக்குச் சென்றவர்கள் மாலை திரும்பி வந்ததும் தனக்கு நடந்த விஷயங்களை அவர்களிடம் விவரித்து இருக்கிறார் ஷகீனா. குளத்தில் வீசப்பட்ட குழந்தையை மீட்டு பரிசோதித்துப் பார்த்தபோது குழந்தை இறந்து விட்டது.

இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு ஷகீனா பேகத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதிக ரத்தப்போக்கு காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஷகினா பேகத்தின் அனுமதியுடன் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஷகீனா கொடுத்த புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள அவரது காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குழந்தை கொல்லப்பட்டது தொடர்பாக தாய் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • 1422
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads