சினிமா செய்திகள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
Ads
 ·   ·  7916 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மிஹிந்தலை மகாநாயக்க தேரர் சஜித்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்

நாட்டின் 220 இலட்சம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றாலும் கடந்த காலங்களில் விஷத்தன்மை வாய்ந்த மருந்துப் பொருட்கள் பாவனையால் பலர் உயிரிழந்துள்ளனர் என்றும், காலங்காலமாக மருத்துவமனைகளுக்கு முன்பாக மலர்சாலைகள் உள்ளன என்றாலும், அதன் நோக்கம் மருத்துவமனைக்கு வரும் அனைவரும் இறந்துபோக வேண்டும் என்ற எதிர்பார்பிலல் என்றும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் மகாநாயக்க தேரர் தெரிவித்தார்.தற்போது வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதுடன் அதிகமான புத்திஜீவிகளும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என்றும், இதற்கு காரணமான ஒருவரைக் கூட இப்போது கண்டுபிடிக்க முடியாதுபோயுள்ளதாகவும், மக்களின் வரிப்பணத்தால் நடத்தப்படும் சில அமைச்சர்கள் மருந்து மாத்திரைகளில் கூட இலஞ்சம் வாங்குகிறார்கள் என்றும், சிலர் மதுபான சாலைகளைக் கூட வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.கடந்த காலங்களில் மிஹிந்தலை நகரைச் சுற்றி மதுபானசாலைகள் இல்லை என்றாலும், 8,000 மாணவர்கள் கல்வி கற்கும் ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு முன்னால் அரசாங்கத்தின் பலம் வாய்ந்த இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பியர் பார் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஒரு மதுபான சாலை, ஒரு இறைச்சிக்கடை கூட இல்லாத நகரமாக இருந்த மிஹிந்தலை நகரில் தற்போதைய அரசாங்கம் அந்த சாதனையை முறியடித்துள்ளதாகவும், இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கவனம் செலுத்துமாறும் மிஹிந்தலை ரஜமாஹா விகாரையின் மகாநாயக்க தேரர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வேண்டுகோள் விடுத்தார்.நாட்டில் எண்ணற்ற பிரச்சினைகள் இருந்தாலும் அது குறித்து பேசுவதற்கு ஜனநாயக ரீதியிலான சுதந்திரமோ பேச்சு சுதந்திரமோ இல்லை என்றும், பலவிதமான விதிகள் மற்றும் சட்ட ஒழுங்குமுறைகள் கொண்டுவரப்பட்டு மக்களை சிறையில் அடைத்துள்ளதுடன், இவ்வாறான பிரச்சினைகள் இருந்தும் அஸ்வெசும மூலம் மக்களை ஏமாற்றி வருவதாக மகாநாயக்க தேரர் மேலும் தெரிவித்தார்.நாட்டில் எல்லா இடங்களிலும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த கால அமைச்சர்களுடன் ஒப்பிடும் போது இன்றைய நபர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும், சிலர் ஓய்வுபெறும் வயதில் இருந்தாலும் பதவிக்கு பேராசையில் உள்ளனர் என்றும், இந்நிலை மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் பௌத்த ஆலோசனைக் குழுவின் ஊடாக அடுத்த வருடம் நடைபெறவுள்ள மிஹிந்தலை பொசோன் பெரஹெரா, சதிபிரித மற்றும் அலோக பூஜை ஆகியவற்றிற்கு பங்களிக்கத் தயார் என்றும்,கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவி வகித்த போது மிஹிந்தலை புனித தலத்தில் 3,200 இலட்சம் ரூபா செலவில் பல்வேறு பணிகளை ஆற்றியதாகவும், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இந்த செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) மிஹிந்தலை விகாரைக்கு விஜயம் செய்ததோடு, மிஹிந்தலை புனித தலத்தின் பல குறைபாடுகள் நிலவுவது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது கவனம் செலுத்தினார்.

  • 331
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads