Category:
Created:
Updated:
இலங்கையில் நோய்வாய்ப்பட்ட நிலையில் உள்ள சக்சுரின் யானை கிசிச்சைக்காகவும் புனர்வாழ்விற்காகவும் அடுத்தமாதம் தாய்லாந்திற்கு கொண்டுசெல்லப்படும் என பாங்கொக்போஸ்ட் தெரிவித்துள்ளது.
யானையின் நிலை அது பயணம் செய்யக்கூடிய நிலையில் உள்ளதா போன்ற விடயங்களை ஆராய்வதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்ட விலங்குவைத்தியர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் அடுத்தமாதம் யானை தாய்லாந்திற்கு கொண்டுவரப்படும் என தாய்லாந்தின் தேசிய பூங்காக்கள் வனவிலங்கு தாவரபாதுகாப்பு திணைக்களத்தின் பிரதிபணிப்பாளர் நாயகம் அட்டபோல் சரோன்சன்சா தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து யானையை கொண்டுவர ரக விமானம் அனுப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நோய்வாய்ப்பட்ட யானையை மீண்டும் தாய்லாந்திற்கு கொண்டு செல்வதற்காக விமானமொன்றையும் யானைபாகன்களையும் தாய்லாந்து இலங்கைக்கு அனுப்பவுள்ளது.