
மக்களுக்கு சேவையாற்றிய ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே - சஜித் பிரேமதாச
டீசல் முதல் எரிவாயு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வரை அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தி, மின் கட்டணத்தை 250 சதவீத்தால் உயர்த்தி, வட்டி விகிதத்தையும் அதிகரித்து, நாட்டு மக்களின் வாழ்க்கையை அழிக்கும் யுகத்தையே தற்போதைய அரசாங்கம் உருவாக்கி வருவதாகவும், சகலத்தையும் வெட்டி வீழ்த்தும் தற்போதைய அரசாங்கம் விரட்டப்பட்டு, சாதாரன மனிதனும் கோலோச்சும் யுகம் உருவாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களைப் பற்றி சிந்திக்காமல் தங்களைப் பற்றியும் தங்களின் இருப்பு, பிழைப்பு மற்றும் தங்களின் நண்பர்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பதாகவும், நாட்டை வங்குரோத்தாக்கி ஜனாதிபதியை நியமித்த 134 எம்.பி.க்களை பற்றி தான் நினைக்கிறார்கள் எனவும், அவர்களுக்கு சலுகைகள் மற்றும் சிறப்புரிமைகளை வழங்குவதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கையை சுகபோகமாக கழித்து வருவதாகவும், பதவிக்காலம் முடியும் வரை ஜனாதிபதி தேர்தலை நடத்த மாட்டேன் என தற்போதைய ஜனாதிபதி மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.