Category:
Created:
Updated:
ரஷிய ராணுவம் பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், "பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் ரஷியா செயல்பட்டு வருகிறது. அவர்களின் திட்டம் பலனளிக்காது. தங்கள் செயல்களுக்கு ரஷியா பதில் சொல்லியே தீர வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த நிலையில் உக்ரைனில் இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் ரஷிய ராணுவம் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக உக்ரைனின் முக்கிய நகரங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு அணுமின் நிலையத்தின் மின்பகிர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.